Pencil Meesai
5/5
()
About this ebook
வணக்கம்.
இன்றைய தேதியில் தமிழகத்தின் கிராமத்திற்கும் பெரிய நகரத்திற்குமான நாகரிக இடைவெளி வெகுவாக குறைந்து போயிருக்கிறது. கிராமங்களில் வயதுக்கு வந்து பத்து நாட்களுக்குள் பரிசம் போட்டு பதினைந்து வயதுக்குள் ஒரு குழந்தைக்கு தாயாக்கும் வழக்கமெல்லாம் மலையேறி விட்டது. கிராமத்துப் பெண்கள் டவுன் பஸ் பிடித்து நகரத்திற்கு வந்து கல்லூரிகளுக்குப் போகிறார்கள்.
கடைகளில், அலுவலகங்களில் கல்வித் தகுதிக்கேற்ப வேலை பார்த்து சம்பாதிக்கிறார்கள். பாவாடை - தாவணி காணாமல் போய் அதை பாரதிராஜாவின் பழைய படங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. சுடிதார், நைட்டி போன்ற நகரத்து சமாச்சாரங்கள் கிராமங்களிலும் நுழைந்து பல காலமாகி விட்டது. வயல் வரப்பில் நின்று கொண்டு செல்போனில் புண்ணாக்கு விலை விசாரிக்கிறார்கள்.
சிறு நகரங்களில் ஒன்றுக்கு நான்காக கம்ப்யூட்டர் கற்றுத் தரும் மையங்கள் இயங்குகின்றன. பள்ளித் தேர்வின் முடிவுகளை இண்ட்டெர்நெட் மையங்களுக்கு வந்து பார்க்கிறார்கள். திருமணம் என்றால் மணமகளை அழகு நிலையத்திற்கு அனுப்பி அலங்கரிக்கிறார்கள். நகரத்தின் எந்த சௌகரியங்களும் கிராமங்களை நோக்கி துரிதமாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால்....
இன்றைக்கும் பெரும்பாலான கிராம மனிதர்களின் மனங்கள் அசுத்தமாகாமல் விருந்தோம்பலும், அன்பும், கருணையும், இரக்கமும், மனிதாபிமானமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது என் கருத்து. இவையனைத்தும் நகரத்து மனிதர்களின் மனங்களில் குறைந்து கொண்டிருப்பது கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம்.
இந்த கிராம, நகர மனங்களின் வேறுபாட்டுச் சிதறல்களை ஒரே கதையில் பதிவு செய்ய விரும்பி எழுதியதே இந்த நாவல்.
கிராமத்தில் வேர்களை வைத்துக் கொண்டு கிளை பரப்ப நகரத்திற்கு கல்லூரிப் படிப்புக்காக வருகிற ஒரு மாணவ இளைஞனே இதில் நாயகன். கல்லூரியை பின்னணி களமாகக் கொண்டிருந்தாலும் கிராமத்து காதல் நகரத்து காமம் என்று வேறுபட்ட விஷயங்களைச் சந்திக்கிற அவன் மன உணர்வுகளில் எனது உணர்வுகள் ஆங்காங்கே ஒளிந்திருக்கின்றன. ஏனென்றால் பட்டுக்கோட்டை என்கிற சிறிய நகரத்திலிருந்து சென்னை என்கிற பெரிய நகரத்திற்கு கலை உலக வாழ்க்கைக்காக வந்தவன்தானே நானும்?
பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்
Read more from Pattukottai Prabakar
Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsSeptember, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Vaa! Theerpai Thaa! Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsPushpa Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsNer Meley Nila Rating: 5 out of 5 stars5/5
Related to Pencil Meesai
Related ebooks
En Priya Preethikku Rating: 0 out of 5 stars0 ratingsIndhu Maha Sarithram Rating: 0 out of 5 stars0 ratingsInnum Sila Nimidangalil... Rating: 5 out of 5 stars5/5Meendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5December Punnagai Rating: 5 out of 5 stars5/5Devathai Punnagaikkiral Rating: 5 out of 5 stars5/5Vithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Irappathu Sugam... Rating: 5 out of 5 stars5/5Ippadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsChennai Azhagiyum Settai Gopiyum! Rating: 5 out of 5 stars5/5Brindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Andha Moondru Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Thinnai Vaitha Veedu Rating: 5 out of 5 stars5/5Poo Mattum Puyalodu... Rating: 5 out of 5 stars5/5Oru Kappal Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Kalaikindrana Rating: 0 out of 5 stars0 ratingsNaankadi Savukku Rating: 5 out of 5 stars5/5Panthaya Paavai Rating: 5 out of 5 stars5/5Ilamaiyil Kol Rating: 5 out of 5 stars5/5Madiyil Sayum Neram Rating: 5 out of 5 stars5/5Nizhal Mudichu Rating: 5 out of 5 stars5/5Pavala Pallathakku Rating: 0 out of 5 stars0 ratingsThottu Vaa Thendraley Rating: 5 out of 5 stars5/5January February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsJackpot Raathiri Rating: 5 out of 5 stars5/5Maandavan Kattalai Rating: 3 out of 5 stars3/5Oru Nijam Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Kavalai Neram Kaalai 10 Mani Rating: 5 out of 5 stars5/5Miss India Missing Rating: 5 out of 5 stars5/5
Reviews for Pencil Meesai
1 rating0 reviews
Book preview
Pencil Meesai - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
பென்சில் மீசை
Pencil Meesai
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
முன்னுரை
அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம்.
இன்றைய தேதியில் தமிழகத்தின் கிராமத்திற்கும் பெரிய நகரத்திற்குமான நாகரிக இடைவெளி வெகுவாக குறைந்து போயிருக்கிறது. கிராமங்களில் வயதுக்கு வந்து பத்து நாட்களுக்குள் பரிசம் போட்டு பதினைந்து வயதுக்குள் ஒரு குழந்தைக்கு தாயாக்கும் வழக்கமெல்லாம் மலையேறி விட்டது. கிராமத்துப் பெண்கள் டவுன் பஸ் பிடித்து நகரத்திற்கு வந்து கல்லூரிகளுக்குப் போகிறார்கள்.
கடைகளில், அலுவலகங்களில் கல்வித் தகுதிக்கேற்ப வேலை பார்த்து சம்பாதிக்கிறார்கள். பாவாடை - தாவணி காணாமல் போய் அதை பாரதிராஜாவின் பழைய படங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. சுடிதார், நைட்டி போன்ற நகரத்து சமாச்சாரங்கள் கிராமங்களிலும் நுழைந்து பல காலமாகி விட்டது. வயல் வரப்பில் நின்று கொண்டு செல்போனில் புண்ணாக்கு விலை விசாரிக்கிறார்கள்.
சிறு நகரங்களில் ஒன்றுக்கு நான்காக கம்ப்யூட்டர் கற்றுத் தரும் மையங்கள் இயங்குகின்றன. பள்ளித் தேர்வின் முடிவுகளை இண்ட்டெர்நெட் மையங்களுக்கு வந்து பார்க்கிறார்கள். திருமணம் என்றால் மணமகளை அழகு நிலையத்திற்கு அனுப்பி அலங்கரிக்கிறார்கள். நகரத்தின் எந்த சௌகரியங்களும் கிராமங்களை நோக்கி துரிதமாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால்....
இன்றைக்கும் பெரும்பாலான கிராம மனிதர்களின் மனங்கள் அசுத்தமாகாமல் விருந்தோம்பலும், அன்பும், கருணையும், இரக்கமும், மனிதாபிமானமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது என் கருத்து. இவையனைத்தும் நகரத்து மனிதர்களின் மனங்களில் குறைந்து கொண்டிருப்பது கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம்.
இந்த கிராம, நகர மனங்களின் வேறுபாட்டுச் சிதறல்களை ஒரே கதையில் பதிவு செய்ய விரும்பி எழுதியதே இந்த நாவல்.
கிராமத்தில் வேர்களை வைத்துக் கொண்டு கிளை பரப்ப நகரத்திற்கு கல்லூரிப் படிப்புக்காக வருகிற ஒரு மாணவ இளைஞனே இதில் நாயகன். கல்லூரியை பின்னணி களமாகக் கொண்டிருந்தாலும் கிராமத்து காதல் நகரத்து காமம் என்று வேறுபட்ட விஷயங்களைச் சந்திக்கிற அவன் மன உணர்வுகளில் எனது உணர்வுகள் ஆங்காங்கே ஒளிந்திருக்கின்றன. ஏனென்றால் பட்டுக்கோட்டை என்கிற சிறிய நகரத்திலிருந்து சென்னை என்கிற பெரிய நகரத்திற்கு கலை உலக வாழ்க்கைக்காக வந்தவன்தானே நானும்?
பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்
1
தஞ்சாவூர். மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் நிறைமாத கர்ப்பத்துடனிருக்க.... ரயில் புறப்படும் நேரம் என்று அறிவித்தார்கள். ஒரு சிலர் மட்டும் பரபரப்பாக ஏறிக் கொள்ள, பலர் சிக்னல் போட்டு, நகரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று அரட்டையைத் தொடர்ந்தார்கள்.
மொத்தம் ஆறு உருப்படிதானே?
என்றார் அப்பா.
ஆமாம்ப்பா
என்றான் பிரசன்னா.
வழியனுப்ப வந்த மாமா ரகசியம் பேசும் விருப்பத்தில் பிரசன்னாவைச் சற்றே விலக்கி அழைத்து வந்து, இதோ பாருப்பா, உன் குடும்பமே உன்னை நம்பித்தான் இருக்குது. கடனை, உடனை வாங்கி இவ்வளவு பெரிய படிப்பு உன்னைப் படிக்க வைக்கிறாரு உங்கப்பாரு. அதை மனசுல வெச்சுக்கோ
என்றார்.
தெரியும் மாமா
என்றான்.
மெட்ராசுக்கு நீ போறது படிக்கிறதுக்குத்தான். வேற எதுக்குமில்லை. கவனம் பூரா படிப்பிலேதான் இருக்கணும். மூணு வருஷத்துல நீ ஒரு என்ஜினியர்!
மூணு வருஷம் இல்லை, நாலு வருஷம்!
பி. ஏ., பி. எஸ். சி. எல்லாம் மூணு வருஷம்தானே?
அதெல்லாம் மூணு வருஷம்தான். என்ஜினியரிங் கோர்ஸ் எல்லாம் நாலு வருஷம்.
நீ படிச்சு முடிக்கிறதுக்குள்ளேயே வேலை கிடைச்சிடுமாமே. அமெரிக்காகாரன் கொத்திக்கிட்டுப் போயிடுவானாமே.
கடைசி வருஷப் படிப்பு படிக்கிறப்ப கேம்ப்பஸ் இன்ட்டர்வியூன்னு வருவாங்க. அதில செலக்ட் ஆனா, வேலை கிடைக்கும். படிப்பை முடிச்சுட்டுதான் சேர முடியும். ஆனா, எல்லா காலேஜுக்கும் இந்த மாதிரி கேம்ப்பஸ் இன்ட்டர்வியூக்கு வரமாட்டாங்க.
நீ படிக்கப் போறது எந்த காலேஜ்?
மெட்ராசுக்கு பக்கத்தில் கேளம்பாக்கம்னு ஒரு ஊர்ல பிரைவேட் என்ஜினியரிங் காலேஜ்.
மெட்ராஸ்லயே நூறு காலேஜ் இருக்கே. அதெல்லாம் விட்டுட்டு ஏன் இப்படி...?
கவுன்சிலிங்ல எனக்கு அங்கதான் கிடைச்சுது மாமா. நான் ஆசைப்பட்டது அண்ணா யுனிவர்சிடிலதான். எனக்கு அதிஷ்டமில்லை.
ஏண்டா, அங்கன்னா பணம் அதிகமா கட்டணுமா?
அப்படி இல்லை மாமா. கவுன்சிலிங்கல நம்ம கட் ஆஃப் மார்க் வெச்சுதான் வாய்ப்பு. ரொம்ப விபரமா சொன்னாதான் உனக்குப் புரியும்.
சரி, விடு! ஏதோ ஒரு காலேஜ்! நம்ம குடும்பத்துல பள்ளிக்கூடத்தைத் தாண்டி நீதான் போறே. நீ தலையெடுத்து உன் குடும்பத்தை உசத்தணும். உன் தம்பி, தங்கச்சிங்களைக் கரையேத்தணும். அதை கருத்தா வெச்சிக்கணும்.
புரியுது மாமா.
நல்ல பசங்களா பாத்துப் பழகு. சேர்மானம் சரியா இருந்தாத்தான் புத்தி ஒரு நிலையில் இருக்கும். புரிஞ்சுதா பிரசன்னா?
சரி மாமா.
அதற்குமேல் வேறு எந்த கோணத்தில் புத்தி சொல்லலாமென்று மாமா யோசிக்க, பிரசன்னா டி.வி.யில் பொன்வண்டு சோப் விளம்பரம் பார்த்தான். ஜன்னல் ஜன்னலாய் இட்லி, வடை, தயிர்சாதம் துரிதகதியில் விற்றுக் கொண்டிருக்க, நகரும் வண்டிகளில் மாலை செய்தித்தாள்கள், புத்தகங்கள், சிப்ஸ், பிஸ்கெட்ஸ், குளிர்பானங்கள்..... ஆனால், மினரல் வாட்டர் என்று சொல்லப்படும் மினரல் வாட்டர்தான் அதிகம் வாங்கினார்கள்.
பிரசன்னா, சிக்னல் போட்டாச்சு, வா
என்றார் அப்பா.
மாமா அவசரமாக இரண்டு நூறுரூபாய் நோட்டுக்களை எடுத்து, செலவுக்கு வெச்சுக்கோ
என்றார்.
பரவாயில்லை மாமா
என்றும் கேட்காமல் உரிமையாக அவன் பாக்கெட்டில் செருகி, அடிக்கடி தபால் போடு. அப்பா எப்போ திரும்பறாரு?
என்றார் மாமா.
காலேஜ்ல சேர்ந்ததும் ஹாஸ்டலுக்குப் பணம் கட்டி என்னைத் தங்கவெச்சிட்டு நாளைக்கு ராத்திரியே புறப்பட்டுடுவாரு.
பிரசன்னாவை ஏறச் சொல்லி, பிறகு அப்பா ஏறிக் கொண்டார்.
ஜன்னல் வழியாகக் கையைப் பிடித்துக் கொண்ட மாமா இந்த முறை அட்வைஸாக இல்லாமல், நீ நல்லா வருவடா! எனக்கு நம்பிக்கை இருக்கு. நம்ம பேச்சியம்மன் அருள் எப்பவும் இருக்கும். தினம் சாமி கும்புடு!
என்றார் ரயில் நகரநகர கூடவே வந்து, என்ன நினைத்தாரோ மறுபடி ஒரு நூறு ரூபாய் நோட்டை அவன் கையில் திணித்து, இதையும் வெச்சுக்கோ
என்றார்.
ரயில் வேகம் பிடித்ததுமே அப்பா சட்டையைக் கழற்றி மடியில் போட்டுக் கொண்டார்.
ரயிலு இன்னிக்கு பதினஞ்சி இருபது நிமிஷம் லேட்டாத்தான் எடுத்தான். இப்படீன்னு தெரிஞ்சிருந்தா கோயிலுக்குப் போய் பூசாரி கையால விபூதி வெச்சி விட்டிருப்பேன்
என்று அப்பா சத்தமாகப் பேசியது பிரசன்னாவுக்கு பிடிக்கவில்லை.
பிரசன்னா முகத்தில் வீசிய குளிர் காற்றை ரசித்தான். எதிரே தன் தாயின் மடியில் சொகுசாக அமர்ந்து கொண்டு இவனுக்குக் கையாட்டி சிரித்த உல்லன் குல்லாய் வைத்த குழந்தைக்கு நாக்கைத் துருத்தி வேடிக்கை காட்டினான்.
டி.டி.ஈ. வந்ததும் அப்பா இடுப்பின் பச்சை பெல்ட்டின் ஜிப் இழுத்து டிக்கெட் எடுத்துத் தந்தார். அவர் போனதும், சாப்புட்டுடலாமா?
என்றார்.
அம்மாவும், அக்காவுமாக மந்தாரை இலையில் வைத்துக் கட்டித் தந்த புளியோதரையும், தயிர்சாதமும் அவனுக்குள் இறங்கவில்லை. மீதி வைத்தால் அப்பா ஒப்புக் கொள்ளமாட்டாரேயென்று முடித்தான்.
அப்பா லக்கேஜ் எண்ணிக்கையைச் சரி பார்த்துவிட்டு, செருப்புகளை உள்ளே மறைவாகத் தள்ளி, பணம் உள்ள பேகை தலைக்கு வைத்துக் கொண்டு லோயர் பெர்த்தில் படுத்துக்கொண்டு பத்தாவது விநாடியில் குறட்டைவிடத் துவங்கினார்.
அப்பர் பெர்த்தில் ஒரு சூட்கேசைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்த பிரசன்னாவுக்கு உறக்கம் வரவில்லை. மனதில் பாரமும் இருந்தது. நிறைவும் இருந்தது.
புறப்படும் போது தங்கை மலர்விழி அழுது, தானும் அழுததை நினைக்கும்போது இன்னொரு முறை அழுகை வந்தது. 'நானும் ஸ்டேஷனுக்கு வருவேன்' என்று தம்பி பிடிவாதம் பிடித்து, அப்பா அதட்டியதும் ஏமாற்ற முகத்துடன் அவன் கையைப் பிடித்து அழுத்தியதில் இப்போதும் பொங்கியது. அம்மா சாமி விளக்கை ஏற்றி அவனைக் கும்பிடச் சொல்லி நெற்றியில் குங்குமம் வைத்து விட்டபோது, அவள் விரலில் நடுக்கம் இருந்தது.
மாசத்துக்கு ஒரு தடவை ஊருக்கு வந்து எல்லோரையும் பார்த்துட்டுப் போ ராசா.
சைக்கிள்ல வந்துட்டுப் போற தூரத்துல இருக்கான் பாரு! மாசத்துக்கு ஒரு தடவை வர்றதாம்! அதெல்லாம் காப்பரிட்சை, அரைப் பரிட்சை லீவுக்குத்தான் வரமுடியும். இல்லடா?
அப்படியில்லைப்பா. செமஸ்டர் சிஸ்டம். வருஷத்துக்கு ரெண்டு பரீட்சைதான். நடுவுல மூணு, நாலு நாள் தொடர்ந்து லீவு வந்தா நான் வந்துடறேன். எனக்கும் உங்க எல்லோரையும் பார்க்கணும் மாதிரி இருக்காதா?
இங்கே பக்கத்துல தஞ்சாவூர், திருச்சி இப்படி ஏதாச்சும் காலேஜ்ல சேர்ந்திருக்கலாம் நீ. தினம் பஸ்சுல போய்ட்டு வர்ற மாதிரி பார்த்திருக்கலாம்.
அப்படி இல்லை மலர்விழி. அங்கே ஸ்டாண்டர்ட் நல்லாருக்கும். காலேஜ் டைம் போக வெளில ஸ்பெஷலா சில கோர்ஸ் பண்ணலாம். என் ஃபிரண்டோட அண்ணன் ஒருத்தன் அந்தக் காலேஜ்ல படிப்பை முடிச்சுட்டு இப்ப லண்டன்ல பெரிய கம்பெனில இருக்கான்.
நீயும் அதே மாதிரி வெளிநாட்டுக்கு வேலைக்குப் போவியாண்ணா?
பார்ப்போம். முதல்ல கொஞ்ச நாளைக்கு வேலைக்குப் போயிட்டு, அப்புறம் சொந்தமாவே ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கணும்...... ஒரு பில்கேட்ஸ் மாதிரி வரணும். அதான் என்னோட லட்சியம்.
அது யாரு? நம்ம அனுசுயா மகனா?
அய்யோ! இல்லம்மா! கம்ப்யூட்டர் துறையில பில்கேட்ஸ் பெரிய ஆளு. அவர்தான் இப்போ உலகத்துலயே மிகப் பெரிய பணக்காரர்!
அவர் எந்த ஊரு? இந்தியாக்காரனா?
ஆமாண்டி! குலம், கோத்திரம் எல்லாம் விசாரி! நம்ம மலர்விழியைக் கட்டிப்பாரான்னு விசாரிச்சு கடுதாசி போடு!
என்று அப்பா சொல்ல, மலர்விழி சிணுங்க, மற்றவர்கள் சிரித்தது காதுக்குள் ஒலித்தது.
பிரசன்னா புரண்டு படுத்தான்.
கனவா, கற்பனையா என்று புரியாமல் பிரசன்னா டை கட்டிக் கொண்டு, கருநீல சூட்டில் சுற்றிலும் நான்கு செகரெட்டரிகள் தொடர நடந்து வந்து பூங்கொத்து மாதிரி செருகி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மைக்குகள் முன்னால் வந்து நின்று, புகைப்பட மின்னல்களுக்கு நடுவில் முப்பது நாப்பது டி. வி. கேமிராக்களில் பதிவானபடி, ஆங்கிலத்தில் நீளமாக ஏதோ சொல்ல, காது முழுக்க கை தட்டல்கள் நிறைந்து, இப்போது பார்த்தால் விமானத்தில் பிரசன்னா பணிப்பெண்ணிடம் ஜூஸ் வாங்கிக் குடித்துவிட்டு, லேப்டேப்பில் தட்டிக் கொண்டிருக்கிறான்.
இன்னும் இருட்டு விலகாத காலையில் எக்மோர் வந்து சேர்ந்தது எக்ஸ்பிரஸ். பயணிகள் ஓய்வு ஹாலுக்கு வந்து ஒருவர் லக்கேஜ்களைக் கண்காணிக்க மற்றவர் உள் சென்று காலைக் காரியங்களை முடித்துக் கொண்டார்கள். அப்போதும் விடிந்தபாடில்லை. காகிதக் கோப்பைகளில் காபி வாங்கிக் குடித்துவிட்டு உட்கார்ந்தார்கள்.
தனியா கூட்டிக்கிட்டுப் போயி நாராயணன் என்ன சொன்னான் நேத்து?
என்றார் அப்பா.
பொறுப்பா படிக்கணும்ன்னு புத்திமதி சொன்னாருப்பா. முன்னூறு ரூபா பணம் கொடுத்தாரு.
"ஒரு நாளுகூட நீ எங்களை விட்டுப் பிரிஞ்சி இருந்ததில்லை. நாலு வருஷம்னு சொல்றே! மலைப்பாதான்ப்பா இருக்கு. புத்தியில்லாத புள்ளையா இருந்தா, போதும்ப்பா, விவசாயத்தைப் பாருன்னு சொல்லியிருப்பேன். இப்பவே இங்கிலீஷ் பேசறியே! பெருமைதான்ப்பா! நீ என்ஜினியராயிட்டேன்னு