Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pavala Pallathakku
Pavala Pallathakku
Pavala Pallathakku
Ebook174 pages50 minutes

Pavala Pallathakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Pavala Pallathakku

Read more from Rajeshkumar

Related to Pavala Pallathakku

Related ebooks

Related categories

Reviews for Pavala Pallathakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pavala Pallathakku - Rajeshkumar

    28

    1

    ஜனாதிபதி மாளிகையின் பிரதான ஹாலில் அந்த விருதுகள் வழங்கும் விழா ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.

    ஏற்கெனவே ரிகர்சல் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாதலால் எல்லோருமே ஸ்விட்ச் போட்ட மாதிரி செயல்பட்டார்கள். மேடையின் மேல் இருந்த பிரதான நாற்காலியில் எண்பது வயது ஜனாதிபதி பல்செட் உபயத்தில் புன்னகை புரிய, மேடையின் முன்வரிசையில் எழுபது வயது பிரதமர் சி.பி.ஐ. விசாரணைகளில் மாட்டிக் கொண்டிருக்கும் தன் மகன்களை எப்படி காப்பாற்றப் போகிறோம் என்ற கவலையோடு உட்கார்ந்திருந்தார். பிரதமர்க்கு பின்புற வரிசையில் பல்வேறு ஊழல்களில் சிக்கியிருக்கும் மந்திரிகள் வெளிநாட்டு பேங்க்களில் போட்டுள்ள பணத்தை மனசுக்குள் எண்ணியபடி சாய்ந்திருந்தார்கள்.

    அவர்களுக்கு பின்னால் வி.வி.ஐ.பி.க்கள்

    அதற்கடுத்த வரிசையில் வி.ஐ.பி.க்கள். பக்கவாட்டில் போடப்பட்டிருந்த நாற்காலியில் விருதுகளை வாங்க வந்தவர்கள் பிரமிப்போடு தெரிந்தார்கள்.

    மேடையில் பளபளக்கும் வழுக்கை மண்டையுடன் அரசு அதிகாரி ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். பாதி ஹிந்தி. பாதி ஆங்கிலம்.

    இந்த 47-வது விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைத்து பிரமுகர்களுக்கும் விழா கமிட்டியின் சார்பாக வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைக்கு இந்தியா இவ்வளவு பெரிய வளர்ச்சியை தொழில் துறையிலும் விவசாயத்துறையிலும் கண்டிருப்பதற்குக் காரணம் நமது நாட்டின் அறிவியல் வல்லுநர்களின் சேவைதான். இந்த சேவையைப் பாராட்டித்தான் ஒவ்வொரு வருடமும் சிறந்த சேவை புரிந்த பலதரப்பட்ட வல்லுநர்களை அரசாங்கம் தேர்ந்தெடுத்து கெளரவம் செய்கிறது. இந்த வருடம் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வல்லுநர்களின் பட்டியலை இப்போது படித்துக் காண்பிக்கப் போகிறேன்.

    அரங்கத்தில் மெலிதாய் கைத்தட்டல் எழுந்தது.

    அரசு அதிகாரி கம்ப்யூட்டர் தாள்களை கையில் வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தார்.

    மிஸ்டர் மலானி சுரங்கத்துறை, மிஸ்டர் வாத்வா தொழில்துறை, டாக்டர் சிவசங்கரமேனன் மருத்துவம், பேராசிரியர் சூர்யநாராயணன் நுண்ணுயிர்ப் பிரிவு. இங்கே பேராசிரியர் சூர்ய நாராயணனைப் பற்றி ஒரு சிறு குறிப்பு சொல்ல வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில் மைக்ரோ பயாலஜி பேராசிரியராக பணிபுரிந்து இப்போது ஓய்வு பெற்று - ஓய்வு பெற்ற பின்பும் நுண்ணுயிர் ஆராய்ச்சியை கைவிடாமல் சொந்தமாய் லேப் நிர்மாணித்து அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருப்பவர். ஆறு மாதங்களுக்கு முன்பு இவர் கண்டுபிடித்த ஒருவகை நுண்ணுயிர் பாக்டீரியாவை விவசாய நிலங்களில் பயன்படுத்தியதில் மகசூல் இருபது சதவீதமாக உயர்ந்துள்ளது.

    அரங்கில் அப்போது பலத்த கைத்தட்டல் எழுந்து முப்பது விநாடிகளுக்குப் பின் அடங்கியது.

    அரசு அதிகாரி தொடர்ந்தார்.

    அவர் கண்டுபிடித்த புதுவகை நுண்ணுயிர் பாக்டீரியாவுக்கு BAC -SN என்று பெயரிடப்பட்டுள்ளது. SN என்றால் சூர்யநாராயணன் என்று பொருள். இதை சர்வதேச நுண்ணுயிர் ஆராச்சியாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்தியாவில் பெருகிவரும் ஜனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அந்தக் கட்டாயத்தை உணர்ந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மைக்ரோ பயாலஜிஸ்ட் பேராசிரியர் சூர்யநாராயணன் பாராட்டுக்குரியவர்.

    அரங்கில் மறுபடியும் கைத்தட்டல்.

    இப்போது மதிப்புக்குரிய அந்த விருதுகளை நம் கண்ணியத்துக்கு உரிய ஜனாதிபதி அவர்கள் வழங்கி கௌரவிப்பார்கள். முதலில் திரு. மலானி அவர்கள் சுரங்கத்துறையில் சிறப்பாய் சேவை புரிந்ததற்காக சேவா ரத்னம் விருது பெற வருகிறார்...

    கைத்தட்டல் எழ மலானி எழுந்து மேடையை நோக்கிப் போனார்.

    பக்கத்து சீட்டில் மனைவியோடு உட்கார்ந்திருந்த சூர்யநாராயணன் - தன் கழுத்து டையை இறுக்கிக் கொண்டு மனைவியிடம் கிசுகிசுத்தார்.

    லட்சுமி...

    என்னங்க...?

    நினைச்சாலே பிரமிப்பா இல்லை...?

    எதை...?

    ஜனாதிபதி கையாள பரிசும் விருதும் வாங்கப் போறதை நினைச்சாத்தான்...

    லட்சுமி சிரித்தாள்.

    இதுல என்ன பிரமிப்பு வேண்டியிருக்கு...? உங்க உழைப்புக்கும் அறிவுக்கும் கிடைக்க வேண்டிய விருதுதானே இது...?

    இருந்தாலும்..., பிரஸிடெண்ட் கையால ஒரு விருது வாங்கணும்ன்னா அதுக்கு எவ்வளவு ஃபார்மாலிடீஸ் இருக்கு... தெரியுமா?

    மேடையில் மலானிக்கு ஜனாதிபதி தங்கப்பதக்கம் ஒன்றை அணிவித்து பரிசுப்பணம் ஐந்து லட்சத்துக்குரிய செக் கவர் ஒன்றை கையில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

    கணவரிடம் லட்சுமி கேட்டாள்.

    "என்னங்க... ஃபங்ஷன் எப்படியும் ரெண்டு மணி நேரம் நடக்கும் போலிருக்கே...?

    அவ்வளவு நேரமெல்லாம் ஆகாது...! ஒரு மணி நேரத்துக்குள்ள முடிஞ்சுடும்...

    அடுத்தபடியா உங்களைத்தான் கூப்பிடுவாங்களா?

    இல்லை... நான் ஏழாவது ஆள்...

    லட்சுமி கணவரின் முகத்தைப் பார்த்துவிட்டு லேசாய் ஆச்சர்யப்பட்டாள்.

    என்னங்க... இது...?

    எது...?

    இது ஏ.ஸி. ஹால். ரொம்பக் குளிராயிருக்கேன்னு நானே பட்டுப்புடவையைப் போர்த்துகிட்டு இருக்கேன். உங்களுக்கு இப்படி வேர்க்குதே?

    என்னமோ தெரியலை... ரெண்டு நிமிஷமா இப்படித்தான் வேர்க்குது...

    விருது வாங்கப்போற டென்ஷனா...?

    அப்படியெல்லாம் எதுவுமில்லை... டையைக் கொஞ்சம் லூஸ் பண்ணிக்கிட்டா போதும்...

    டையின் முடிச்சைத் தளர்த்தினார் சூர்யநாராயணன்.

    மைக்கில் குரல் கேட்டது.

    திரு. வாத்வா அவர்களை விருது பெற மேடைக்கு அழைக்கிறோம்.

    வாத்வா கைத்தட்டலின் பின்னணியில் எழுந்து போக

    சூர்யநாராயணன் நெளிந்தார்.

    லட்சுமி...

    என்னங்க...?

    எனக்கு உடம்பை என்னமோ பண்ணுது...

    என்ன பண்ணுது...?

    தெரியலை... லேசா மூச்சையடைக்கிற மாதிரி இருக்கு. நெஞ்சில குத்தல்...

    எ... எ... என்னங்க... இது...? என்னென்னமோ சொல்லி பயமுறுத்தறிங்க...?

    குடிக்க கொஞ்சம் தண்ணி வேணும்...

    சூர்யநாராயணன் மார்பைத் பிடித்துக் கொண்டு தளர்வாய் சாய்ந்து உட்கார்ந்தார்.

    லட்சுமி பதட்டமாய் சுற்றும் முற்றும் பார்த்து சுவரோரமாக நின்றிருந்த சென்ட்ரியைக் கூப்பிட்டாள்.

    அவன் ஓடி வந்தான்

    என்ன மேடம்...?

    கிவ் ஹிம்... சம் வாட்டர்...

    அவன் தண்ணீர் கொண்டு வருவதற்குள் சூர்யநாராயணன் எக்கச்சக்கமாய் வியர்த்து வழிந்து கொண்டு மூச்சிரைக்க ஆரம்பித்தார். பேசத் திணறினார்.

    ல... ல.. லட்சுமி...

    அய்யோ! என்னங்க...?

    இ... இது ஹார்ட் அட்டாக்... மா... மாதிரி தெரியுது. சீக்கிரமா... ஹாஸ்... பிடலுக்கு...

    பேசிக் கொண்டிருக்கும் போதே -

    கண்கள் செருக லட்சுமி வீறிட்டு கத்த விழா மண்டபம் மொத்தமும் திரும்பிப் பார்த்து எழுந்தது.

    நான்கைந்து சென்ட்ரிகள் துப்பாக்கிகளோடு ஓடி வந்தார்கள்.

    என்ன... என்ன...?

    "ஸீம்ஸ் டு பி

    Enjoying the preview?
    Page 1 of 1