Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Antha Ratha Naatkal
Antha Ratha Naatkal
Antha Ratha Naatkal
Ebook96 pages52 minutes

Antha Ratha Naatkal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Antha Ratha Naatkal

Read more from Rajeshkumar

Related to Antha Ratha Naatkal

Related ebooks

Related categories

Reviews for Antha Ratha Naatkal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Antha Ratha Naatkal - Rajeshkumar

    23

    1

    இந்தியாவின் தலைநகரம்.

    காலை ஆறுமணி, பிப்ரவரி மாத குளிரில் உறைந்து போயிருந்த தெருக்களில் - தொப்பைகள் ஜாக்கிங்கிலும் வாக்கிங்கிலும் இருக்க - கிழக்கு திசையை சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் பிறாண்டிக் கொண்டிருந்தான்.

    ஆங்காங்கே துளியூண்டு ரத்த வெளிச்சம். ஜஹாங்கீர் பாதுஷா ரோட்டின் வளைவில் - பிரம்மாண்டமாய் - உட்கார்ந்திருந்த பிரதமரின் வீட்டுக்கு முன்னால் NSF (நேஷ்னல் செக்யூரிடி ஃபோர்ஸ்) காக்கி பச்சை யூனிஃபார்ம் அணிந்த டைகர் சோல்ஜர்ஸ் ஏகே47 இயந்திர சங்கதிகளோடு நின்று கொண்டிருக்க - உ...ள்...ளே... இருந்த பெரிய புல்வெளி பரப்பில் பிரதமர் ஆகாஷ் குர்தா போன்ற உடைக்குள் நுழைந்து - மெல்ல நடை பயின்று கொண்டிருந்தார். பக்கத்திலேயே உல்லன் சால்வையை போர்த்திக் கொண்டு அவருடைய மனைவி செளரபா..

    ஆகாஷ் நாற்பத்தைந்து வயதில் - செர்ரி பழ நிறத்தில் - அளவாய் சதை போட்டிருந்தார். தொப்பை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஏறிய நெற்றியில் மெலிதாய்ப் ரெளன்நிற ரோமம். பின்மண்டையில் கையளவு வழுக்கை. காதோர கிருதாக்களில் பளீர் பளீர் என்று கண் சிமிட்டும் சில்வர் ரோமங்கள். தினசரி ஷேவிங்கில் முகம் மழமழ. உச்ச பட்ச தீட்சண்யக் கண்களுக்கு கீழே கூர்ந்த நாசியும் அளவான உதடுகளும் - அவருடைய முக வசீகரத்துக்கு ‘ஜே’ போட்டன. பல்வரிசை ரெண்டு ‘ஜே’ போட்டது.

    சௌரபா கணவரின் நிறத்துக்கு ஈடு கொடுத்தாள். அவருடைய தோள் உயரத்துக்கு செழிப்பாய் இருந்தாள். முப்பத்தேழு வயது. பதினைந்து வயதிலும், பனிரெண்டு வயதிலும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்பதை சற்றே தளர்ந்த உடற்கட்டு சொல்லியது. நேற்று மாலை நெற்றி வகிட்டில் வைத்த குங்குமம் அந்த காலை நேரத்திலும் அப்படியே இருந்தது.

    இருவரின் உதட்டிலும் ஆக்ஸ்போர்ட் யூனிவர்ஸிடியின் ஆங்கிலம் உரையாடலில் இருந்தது. செளரபா கேட்டாள்.

    "என்ன இன்றைக்கு பலமான யோசனை...?’’

    பாராளுமன்றத்தில் இன்றைக்கு கொண்டு வரப்போகும் மசோதா சட்டமாக்கப்பட ஆதரவு கிடைக்குமா... என்று சந்தேகமாக இருக்கிறது...

    "ஏன்... ஆளும் கட்சி எம்.பி.க்கள் அத்தனை பேரும் மசோதாவுக்கு ஆதரவாக வோட்டுப் போட்டால் தீர்ந்தது...’’

    "போட்டால்தானே...?’’

    "என்ன சொல்கிறீர்கள்...?’’

    "இது ரகசிய ஓட்டெடுப்பு... நம் கட்சி எம்.பிக்களில் ஒரு சாரார் இதை மறைமுகமாக எதிர்க்கிறார்கள்... அவர்களின் ஒட்டு விழாவிட்டால் மசோதா தோற்றுவிடும்...’’

    ‘‘நம் கட்சி எம்.பிக்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு அவர்களுடைய கருத்தை கேட்ட பிறகு அந்த மசோதாவை கொண்டு வந்திருக்கலாமே...?’’

    "சென்ற மாதம் கூட்டம் போட்டு பேசியாயிற்று. இந்த முக்கியமான மசோதாவை சட்டமாக்கினால்தான்... அடுத்த இரண்டு வருஷங்களில் வரப்போகும் பொதுத் தேர்தலில் மக்களை சந்தித்து - துணிச்சலாய் ஓட்டு கேட்க முடியும் என்று நான் சொன்னேன். நான் சொன்னதை அப்போது ஏற்றுக் கொண்டவர்கள் இப்போது லேசாய் சலசலப்பு காட்டுகிறார்கள்.’’

    "மசோதாவையே கொண்டு வராமல் இருந்து விட்டால்...?’’

    அது கோழைத்தனம்... கட்சிக்கும் நான் வகிக்கிற பிரதமர் பதவிக்கும் அது அவமானம்... ஆட்சிக்கு எதிராக இருக்கும் அனைத்து பத்திரிகைகளும் கட்டுரைகளை எழுதி கார்ட்டூன்களைப் போட்டு நார் நாராய் கிழித்து விடுவார்கள்.

    ‘‘மசோதா தோற்றுவிட்டால்... அது ஆட்சிக்கு ஆபத்து ஆயிற்றே இதை தவிர்க்கப் பாருங்கள்..."

    பிரதமர் ஆகாஷ் மேற்கொண்டு ஏதோ பேச முயற்சிப்பதற்குள் -

    பிரதமரின் இரண்டாவது நிலை பி.ஏ.கெய்க்வாட் வயர்லெஸ் டெலிபோனை தூக்கிக் கொண்டு வீட்டின் முகப்பிலிருந்து வெளிப்பட்டு வேகவேகமாய் பிரதமரை நோக்கி வந்தார்.

    "ஸார்...’’

    ‘‘எஸ்...’’

    "பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் காந்திலால் குளியலறையில் வழுக்கி விழுந்து பலத்த காயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்... அட்மினிஷ்ட்ரேஷன் சென்டரிலிருந்து உங்களுக்கு பிரதம செயலாளர் வாத்வா உங்களுக்கு போன் செய்தார்...’’

    இப்போது லைனில் இருக்கிறாரா...?

    ‘‘ஆமாம்...’’

    ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தார் பிரதமர்.

    ‘‘மிஸ்டர் வாத்வா...?"

    "ஸார்...’’

    "தகவல் கேள்விப்பட்டேன்... மிஸ்டர் காந்திலாலுக்கு என்னாயிற்று...?’’

    ‘‘காலையில் எழுந்ததும் குளியலறைக்கு குளிக்கப் போனவர் வழுக்கி விழுந்து அடிபட்டு விட்டார்...’’

    "பலத்த அடியா...?’’

    "ஆமாம்... இரும்பு பைப் குழாயின் முனை, நெற்றியில் பட்டு பலத்த காயம். ரத்தச் சேதம் அதிகம்...’’

    "உயிர்க்கு ஆபத்து இல்லையே...?’’

    ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். நிலவரம் தெரியவில்லை...

    எந்த ஹாஸ்பிடல்...?

    பாலகங்காதர திலகர் ஹாஸ்பிடல்...

    வாத்வா! நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும்

    "சொல்லுங்கள் ஸார்...’’

    "ஹாஸ்பிடலுக்கு போய் சீஃப் டாக்டரைப் பார்த்து மிஸ்டர் காந்திலாலுக்கு மிகுந்த கவனமுடைய ட்ரீட்மெண்ட்டை கொடுக்கச் சொல்லுங்கள்... உடனடியாய் ஒரு டாக்டர் குழுவை நியமித்து - வேண்டிய ஏற்பாடுகளை செய்யச் சொல்லுங்கள்.’’

    "எஸ்... ஸார்...’’

    "அவருடைய உடல் நிலை பற்றிய நிலவரம் அரைமணி நேரத்திற்கு ஒருதடவை எனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1