Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naankadi Savukku
Naankadi Savukku
Naankadi Savukku
Ebook84 pages1 hour

Naankadi Savukku

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஊரில் பெரிய மனிதராக வலம் வரும் துரைசாமி, அவரின் தந்தையின் மறுமணத்தால் அவர் வாழ்க்கையில் என்ன நிகழ்ந்தது? விலைமாதுக்களின் வாழ்க்கையில் என்ன பாதிப்புகள் ஏற்பட்டாலும், அதை கேட்க யாரும் இல்லை என்ற தைரியத்தில் அவர்கள் வாழ்க்கையில் ஊறுவிளைவித்தவர்கள் யார்? நான்கடி சவுக்கு யாருக்கு யார் கொடுத்தார்கள்? என்பதை பரத், சுசீலாவுடன் தேனை தேடும் வண்டுகள் போல நாமும் தேடுவோம்…

Languageதமிழ்
Release dateJun 4, 2022
ISBN6580100908115
Naankadi Savukku

Read more from Pattukottai Prabakar

Related to Naankadi Savukku

Related ebooks

Reviews for Naankadi Savukku

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

Naankadi Savukku - Pattukottai Prabakar

C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

https://www.pustaka.co.in

நான்கடி சவுக்கு

Naankadi Savukku

Author:

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

1951

1990

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

1951

அந்த கிராமத்தின் நடுவில் அரண்மனை போல இருந்தது அந்த பண்ணை வீடு. கற்கோட்டை. தரை மட்டமாக்க பீரங்கி தான் வந்தாக வேண்டும். தோற்றத்திலேயே லாரியின் முகப்பு போல ஒரு பயங்கரம், வீட்டைப் பார்த்தாலே மடக்கின வேட்டியை கை அவிழ்த்து விடும்.

ஒரு பக்கம் மாட்டுத் தொழுவம். ஒரு மாட்டை அழித்து ஒரு கிராமத்துக்கே விருந்து வைக்கலாம். மற்றொரு கிராமத்துக்கு செருப்பு தைக்கலாம். கொம்புகளை பண்ணை வீட்டின் சுவற்றில் பூண் போட்டு பதித்து வைக்கலாம். தந்தமா, கொம்பா? சந்தேகம் வரும். அப்படி எட்டு பசுக்கள். எட்டு ஊருக்கு பால் சப்ளை.

இரண்டு குதிரைகள் பூட்டின சாரட் வண்டிகள் இரண்டு. வெளியூர் சவாரிக்கு ஆஸ்டின் கார். அந்த டிரைவரின் வெள்ளை சட்டையில் என்றைக்கு லேசாக அழுக்கு இருக்கிறதோ, அன்றைக்கு அவனுக்கு வேலை நீக்க உத்தரவு.

அதிபதி தேவராஜன் பெயரில்தான் ராஜா. பெயருக்குத்தான் ராஜா, கோயில் திருவிழாவில் முதல் மரியாதை, தேரில் வடத்தை முதலில் தொட்டு இழுப்பவர். நூத்தி எழுபத்தி இரண்டு ஏக்கர் நிலத்தின் நாற்று நடுகையில் முதல் நாற்றை நடுவார். மல்யுத்தம், குத்துச் சண்டை ஊருக்குள்ளே நடக்கும் போது தலைமை தாங்கி ரோஜாப்பூ மாலை வாங்கிக் கொள்வார். வீட்டுக்குள்ளே நான்கு வேளை போஜனம் உண்பதும் நடுநடுவே பழச்சாறு அருந்துவதும், வைர மோதிரத்தை தேய்த்து விட்டுக் கொள்வதும் தவிர வேறு வேலை அவருக்கு இல்லை.

தர்மராஜனின் இரண்டாம் தர்மபத்தினி பத்மினியம்மா கொடுத்ததில்லை, சாவிக் கொத்து டிராக்டர் டயருடன் கூடிய அவள் இடுப்பில், யாராவது அந்த வீட்டில் தும்ம வேண்டுமென்றாலும் அவளிடம் முன் கூட்டி சொல்லி விட வேண்டும். நாய்க்கு சங்கிலி வாங்க வேண்டுமானாலும், தர்மராஜனின் சுருட்டுக்கு நெருப்புப் பெட்டி வாங்க வேண்டுமானாலும் பத்மினியம்மா தலையாட்டினால்தான் உண்டு.

தர்மராஜன் தன் மனைவி முன்னால் பெருக்கல் குறி போல கைகட்டி நிற்கக் காரணம் உண்டு. ஒரே ஒரு காரணம், அவர் அந்த ஊருக்கு அந்த வீட்டுக்கு வீட்டு மாப்பிள்ளையாக வந்தவர். அத்தனையும் பத்மினியின் அப்பா, தர்மராஜனின் மாமனார் சம்பாதித்த சொத்து. இவர் வந்து அது எவ்வளவு என்று கணக்கு பார்த்ததோடு சரி.

தாலி கட்டிய தினம் கழற்றி எறிந்த தன்மானத்தை அப்புறம் பல சமயங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவே இல்லை.

ஏற்கனவே திருமணமாகி துரைசாமி என்று பெயரிடப்பட்ட ஒரு ஆண் குழந்தையும் பெற்று, மனைவியை தவறவிட்டு இருந்த தர்மராஜனை, எதற்காக, ஏன் நேசித்தோம் என்று பத்மினியம்மாவுக்கு விடை சொல்லவே முடியாது. அவளப்பாவிடம் சொல்ல... அந்த அப்பா இவரை அழைத்து இரண்டே கேள்விகள்தான் கேட்டார்.

ஒன்று: என் பொண்ணை கல்யாணம் செய்துக்கறியா?

இரண்டு: இந்த வீட்டோட வந்துடறியா?

தர்மராஜன் இரண்டுக்கும் ‘சரி’ என்ற பதிலைச் சொல்லி தன் மகனோடு வலது காலெடுத்து ஜமீன் வீட்டிற்கு வந்த அன்றைக்கு ராத்திரியே சொல்லி விட்டாள் பத்மினியம்மா!

உங்களுக்கு மீசை வேணாம். நல்லா இல்லை. எடுத்துருங்க.

மறுநாளே மழித்துவிட்டார். நல்லா இல்லை என்று சொன்னதற்காக மட்டுமல்ல அது நியாயம் இல்லை என்றும் உள்ளுக்குள் உணர்ந்ததால், தர்மராஜன் ஒரு ஆம்பளை பொண்டாட்டி ஆனார். பத்மினியம்மா ஒரு பொம்பளை புருஷன் ஆனாள்.

பையன் துரைசாமிதான் ஒட்டவே இல்லை. விபரம் புரியாத ஏழு வயதில் தான் ஏதோ பொருந்தாத ஒரு இடத்தில் இருப்பதாக மட்டும் அவனால்

Enjoying the preview?
Page 1 of 1