Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panthaya Paavai
Panthaya Paavai
Panthaya Paavai
Ebook163 pages1 hour

Panthaya Paavai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580100905569
Panthaya Paavai

Read more from Pattukottai Prabakar

Related to Panthaya Paavai

Related ebooks

Related categories

Reviews for Panthaya Paavai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panthaya Paavai - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    பந்தயப் பாவை

    Panthaya Paavai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    கட்டில் மேல் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு ஜன்னலுக்கு வெளியே ஒரு முதலிரவுப் பெண்ணின் சிணுங்கலைப் போலத் தூறிக்கொண்டிருந்த மழையைப் பார்த்துக்கொண்டிருந்த கிரிஜாவை முழம் முழமாக வர்ணிக்க வார்த்தை தேட வேண்டிய அவசியம் இல்லை.

    கிரிஜாவை உங்களுக்குத் தெரியும். அவளைப்பற்றி கேட்டிருக்கிறீர்கள்; படித்திருக்கிறீர்கள்; பார்த்துமிருக்கிறீர்கள்!

    நினைவுபடுத்திக் கொள்வதற்கு வேண்டுமானால் உங்கள் வீட்டுக் கதவருகில் சுருண்டிருக்கும் இன்றைய செய்தித்தாளையெடுத்து அதில் ஸ்போர்ட்ஸ் பக்கம் புரட்டுங்கள்.

    கிரிஜாவின் புகைப்படம் வெளியாகியிருக்கிறதா? என்ன எழுதியிருக்கிறது? - படிப்போமா?

    ‘விக்ரம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஓட்டப்பந்தய வீராங்கனை கிரிஜாவை விளையாட்டுக் குழு தேர்வு செய்திருக்கிறது.’

    சர்வதேச அளவில் மிக பிரம்மாண்டமான அளவில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்.

    இதற்கான ஒத்திகைப்போல, தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு நாடுகள் மட்டும் இணைந்து தங்களுக்குள் நடத்த உள்ள விளையாட்டுப் போட்டிகளுக்கு ‘விக்ரம் விளையாட்டுப் போட்டிகள்’என்று பெயர் சூட்டியுள்ளன.

    இந்தப் போட்டிகளுக்கான பொறுப்பை சிங்கப்பூர் அரசு ஏற்றுள்ளது. இந்த விக்ரம் போட்டிகள் அடுத்த மாதம் சிங்கப்பூரில் துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகின்றன.

    இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை இந்த விக்ரம் போட்டிகளில் வெற்றிவாகை சூடும் வீரர்களை வீராங்கனைகளை ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் செய்யும் யோசனை உள்ளது.

    இரண்டு, மூன்று வருடங்களாக மாநில அளவிலான போட்டிகளில் துவங்கி, தேசிய அளவில் ஓட்டப் பந்தயங்களில் குறிப்பிடுமளவிற்குப் பல சாதனைகளைச் செய்துவரும் தமிழக வீராங்கனை கிரிஜாவுக்கு, அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்துகொண்டு சர்வதேச அளவில், தன் திறமையை நிரூபித்து, தாய்நாட்டிற்கு தங்கங்களைக் குவிக்கவேண்டும் என்கிற துடிப்பு உள்ளது.

    ஆனால் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ‘அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா?’என்று ஒரு கேள்வி இருந்து வந்தது தற்போது சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் விக்ரம் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட கிரிஜா தேர்வுசெய்யப்பட்டிருப்பது ஓட்டப்பந்தய ரசிகர்களை எல்லாம் உற்சாகப்படுத்தியுள்ளது.

    விக்ரம் போட்டிகளில் கிரிஜா தன் திறமை முழுவதையும் காட்டி நிச்சயம் வெற்றிவாகை சூடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வென்றால், வருகிற ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு இந்தியா சார்பாக அவர் அனுப்பப்படுவதும் நிச்சயம்!’

    நைட்டி அணிந்திருந்த கிரிஜா கட்டிலை விட்டு எழுந்து ஜன்னல் அருகில் வந்து நின்றாள். கண்ணாடிக் கதவைத் தள்ளித் திறக்க... இவ்வளவு நேரம் ஊமையாகப் பெய்து கொண்டிருந்த மழையின் ஒலியையும், காற்றின் ஈர கிச்சுக்கிச்சுவையும் ரசித்தாள்.

    ஆறரை மணிக்கான நியாயமான வெளிச்சம் பதுங்கியிருந்தது. வானத்தில் கறுப்பு மேகங்கள் இணைந்து ஒரு இடுக்கில்லாமல் பந்தல் போட்டிருந்தன. துடைத்த பீங்கான் போல பளிச்சென்றிருந்த மரங்கள் துளித்துளியாய் குளித்து சொட்டிக் கொண்டிருந்தன.

    ஆவேசமோ, சீறலோ இல்லாமல்; இடியோ, மின்னலோ இல்லாமல் பூவாளியில் இருந்து ஊற்றுவதுபோல இதமாகப் பெய்து கொண்டிருந்த மழை அவளுக்குள் கவிதையைத் தூண்டியது.

    மேஜைக்குச் சென்று தன் டைரி எடுத்து பக்கம் புரட்டி, நின்றபடி அவசரமாக எழுதினாள் கிரிஜா.

    ‘என்ன சாதித்ததிந்த

    பூமியென்று இந்த

    பன்னீர் தெளிப்பு? இல்லை,

    நெருப்பாகப் பரவுகின்ற

    வன்முறை நெஞ்சங்களில்

    குளிரூட்ட ஒரு தீயணைப்போ?’

    தன் கவிதையைத் தானே இரண்டு தரம் வாசித்துப் பார்த்தாள். மூடி வைத்தாள். ஒலித்த போனை எடுத்தாள்.

    ஹலோ... என்றாள்.

    என்னாச்சு? இன்னும் புறப்படவே இல்லையா ஸ்டேடியத்திலேர்ந்து பேசறேன். அரைமணி நேரமா வெய்ட் பண்ணிட்டிருக்கேன்!கிரிஜாவின் டிரெய்னர் இளங்கோவின் குரல் கேட்டதும் பதட்டமடைந்தாள்.

    மாஸ்டர், மழைபேஞ்சிட்டிருக்கு, நீங்களே வந்திருக்க மாட்டீங்கன்னு தான் நான் புறப்படலை.

    நீ ஒண்ணும் வெல்லக்கட்டி இல்லை கிரிஜா. கரைஞ்சிட மாட்டே! இங்கே டிராக்குல சேறு இல்லை; ஓடலாம். மழை, வெயில்னு எதாச்சும் சாக்கு சொல்லிட்டு தங்க நினைக்கிற உன் சோம்பேறித்தனத்தை முதல்ல துரத்தியடி! இன்னும் பதினைஞ்சு நிமிஷத்தில நீ இங்கே இருக்கணும் கிரிஜா!

    படக்கென்று எதிர்முனையில் போனை வைத்துவிட்டார் இளங்கோ.

    கிரிஜா அவசரமாகக் குளியலறைக்குள் நுழைந்தாள். பரபரவென்று பல் தேய்த்தாள். குளிர்ந்த நீரை முகத்தில் அடித்துக்கொண்டாள். துடைத்து, நடந்தபடி விரல்களாலேயே கூந்தலைக் கோதி ஸ்ட்ரெச்பாண்டை சரியாகப் போட்டுக்கொண்டாள்.

    கப்போர்டில் இருந்து டிராக்கிங் சூட் எடுத்து அணிந்தாள். சாக்ஸ் அணிந்து ஸ்போர்ட்ஸ்‘ஷூ’ அணிந்தாள்.

    அறையை விட்டு வெளிப்பட்டாள். ஏறக்குறைய எதிரே வந்த தன் அண்ணன் பாண்டியன் மேல் மோதிக்கொள்ள இருந்து, பிரேக் அடித்தாள்.

    என்ன கிரிஜா, மழை பெய்யறது கூடத் தெரியலையா? நீ பாட்டுக்குப் புறப்பட்டுட்டே?

    மாஸ்டர் போன் செஞ்சார். ஸ்டேடியத்தில எனக்காக அரைமணி நேரமா வெய்ட் பண்றாராம். இன்னும் பதினைஞ்சு நிமிஷத்தில நான் அங்கே இருக்கணும்னு கண்டிப்பா சொல்லிட்டார்.

    அந்தாளுக்குப் பைத்தியம்தான் பிடிக்கப் போகுது! இப்படி மழை பேஞ்சிட்டிருக்கிறப்ப எப்படி ஓடுவே?

    டிராக் நல்லா தான் இருக்காம்.

    நனைஞ்சிட்டே ஓடி பிராக்டீஸ் பண்ணணுமா? ஏதாச்சும் வேண்டுதலா?

    உங்கிட்ட பேசிட்டிருந்தா எனக்கு நேரமாய்டும். நான் போய்ட்டு வந்துடறேன்.

    இரு கிரிஜா, விக்ரம் கேம்சுக்கு நீ செலக்ட் ஆனதை பேப்பர்ல போட்டுருக்காங்க. படிச்சிப் பார்த்துட்டுப் போ. என்று நியூஸ் பேப்பரைப் புரட்டி பாண்டியன் காட்ட...

    அங்க போய் படிக்கறேன்... என்று பேப்பரை அவனிடமிருந்து பறித்துக்கொண்டு வாசலுக்குவந்து தனது பச்சை நிற ஃபியட்டில் அமர்ந்து புறப்பட்டாள் கிரிஜா.

    அவள் காரில் புறப்பட்டுப் போவதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு உள்ளே வந்த பாண்டியன், ஒலித்த போனை எடுத்தான்.

    ஹலோ பாண்டியன்...

    குட்மார்னிங் பாண்டியன், நான் தான் வினோத் பேசறேன். சிஸ்டர் கிட்ட பேசமுடியுமா! தூங்கினா எழுப்ப வேணாம்!

    தூங்கறதா? பிராக்டீஸ் பண்றதுக்குப் புறப்பட்டுப் போயிட்டா.

    இந்த மழையிலயா?

    இளங்கோ போன் பண்ணி வரச் சொன்னதால போயிருக்கா.

    பேப்பர்ல நியூஸ் பார்த்தேன். கங்கிராஜுலேட் பண்ணலாம்னுதான் கூப்புட்டேன். அப்போ நான் ஸ்டேடியத்துக்குப் புறப்பட்டுப் போனா கிரிஜாவைப் பார்க்கலாம்.

    பார்க்கலாம். அத்தனை அர்ஜெண்ட்டா வாழ்த்துச் சொல்லணுமா?

    என் வாழ்த்து அவளுக்கு முதல் வாழ்த்தா இருக்கணும்னுதான்.

    இந்த வாரம் ‘வண்ணம்’ பத்திரிகை பார்த்தியா வினோத்?

    ஓட்டப்பந்தய வீராங்கனை கிரிஜா காதல் வலையில் விழுந்திருக்கிறார். இவர் மனதைக் கவர்ந்த அந்தக் காதலர் ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மானேஜராகப் பணிபுரிகிறார். ஒரு ரசிகராக அறிமுகமாகி, காதலராக அந்தஸ்து உயர்வு பெற்றுள்ள இவர் பெயர் வினோத்!- இந்த செய்தியைத் தானே சொல்றே?

    ஆமாம். கொஞ்ச நாளைக்கு ரகசியமா இருக்கட்டும். ஒரு பிரஸ் மீட் வெச்சி முறையா அறிவிக்கலாம்னு நான் சொன்னேன். நீங்க ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டீங்க, எப்படி நியூஸ் லீக் ஆச்சி வினோத்?

    பாண்டியன், என்னை சந்தேகப்படறியா? நான் கூப்புட்டு செய்தி கொடுத்துப் போடச் சொல்லலைப்பா.

    சேச்சே! நான் அப்படிச் சொல்லலை. நடிகர், நடிகைக்குத்தான் இந்த மாதிரி கிசுகிசு எழுதிட்டிருந்தாங்க. இப்ப ஸ்போர்ட்ஸ் ஸ்டார்சுக்கும் எழுத ஆரம்பிச்சுட்டாங்க. எனக்குப் புரியலை. பாபுலர் பர்சனாலிட்டீசுக்கெல்லாம் ஒரு பர்சனல் லைஃப் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்களா?

    அப்படி இல்லை பாண்டியன், பாபுலர் பர்சனாலிட்டியோட பர்சனல் லைஃபைத் தெரிஞ்சுக்க மக்கள் ஆர்வப்படறாங்க. இவங்க அதை வியாபார அம்சங்கள்ல ஒண்ணா எடுத்துக்கறாங்க.

    வினோத், கிரிஜாவை உனக்கு எப்பலேர்ந்து அறிமுகம்.

    ரெண்டு வருஷமா.

    எனக்கு எப்பலேர்ந்து அறிமுகம்?

    இது என்ன கேள்வி?

    அட! சொல்லேன்?

    அவ பொறந்ததிலேர்ந்து.

    விளையாட்டு வீராங்கனை கிரிஜாவுக்கு சின்ன வயதிலேயே தாய், தந்தையர் இறந்துவிட, அண்ணன் பாண்டியன்தான் வளர்த்து, ஆளாக்கி, படிக்க வைத்து, விளையாட்டுத் துறையில் கிரிஜாவுக்கு இருந்த ஆர்வத்தை ஊக்கம் கொடுத்து வளர்த்தார். இவர் ஒரு பிரபல உரக் கம்பெனியின் லீகல் அட்வைசராகப் பணிபுரிகிறார் - இப்படி என்னைப் பத்தி எவனாச்சும் ஒருத்தன் எழுதறானாய்யா?

    உன்னோட கோபம் அதுதானா?

    "சும்மா கிண்டலுக்குச் சொன்னேன்... ஒரு விஷயம் சொல்லணும்னு இருந்தேன் வினோத். எனக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தன், உங்க கம்பெனி வேலைக்கு அப்ளை பண்ணியிருக்கான். வந்து பார்க்கச் சொல்லட்டுமா உன்னை? எதாச்சும் செய்ய முடிஞ்சா செய்யேன். பாவம்

    ஆறு வருஷமா வேலை கிடைக்காம அல்லாடறான்."

    "அனுப்பி

    Enjoying the preview?
    Page 1 of 1