Suttuvida Suttuvida Thodarum
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsOru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Suttuvida Suttuvida Thodarum
Related ebooks
Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsThappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Puthithu, Puthithu, Kutram Puthithu! Rating: 0 out of 5 stars0 ratingsRajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsIni Nee Irakkalaam Rating: 5 out of 5 stars5/5January Maranangal Rating: 4 out of 5 stars4/5Samaathi Aagivida Sammathama Rating: 5 out of 5 stars5/5Thappu Thaarani Thappu Rating: 0 out of 5 stars0 ratingsCriminal University Rating: 0 out of 5 stars0 ratingsNeethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Aasaikal Rating: 0 out of 5 stars0 ratingsSathamillatha Samuthiram! Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5Suttu Vida Suttu Vida Thodarum Rating: 4 out of 5 stars4/5Oru Roja Ithazh Erigirathu Rating: 5 out of 5 stars5/5Iruttuku Irandu Niram Rating: 0 out of 5 stars0 ratingsMathumithaavin Manjal Pakkangal Rating: 5 out of 5 stars5/5Vaikarai Nila Rating: 0 out of 5 stars0 ratingsSnehavin Sivappu Diary Rating: 0 out of 5 stars0 ratingsPagai Enakku Pagai Rating: 0 out of 5 stars0 ratingsJannalkal Thirakkinrana Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kanavugal Rating: 5 out of 5 stars5/5Thee. Deepaa.. Deepaavali... Rating: 0 out of 5 stars0 ratingsEndrendrum Un Ethiri Rating: 5 out of 5 stars5/5Naalaiya Vaanam Rating: 5 out of 5 stars5/5Julaiyil Oru Kolai Rating: 5 out of 5 stars5/5Theera Visaarippathey Poi! Rating: 3 out of 5 stars3/5Poi Satchi Rating: 0 out of 5 stars0 ratings5am to 5pm Rating: 0 out of 5 stars0 ratingsPavala Pallathakku Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Suttuvida Suttuvida Thodarum
0 ratings0 reviews
Book preview
Suttuvida Suttuvida Thodarum - Rajeshkumar
21
1
"போன வாரம் என்னாச்சு தெரியுமா அன்பு..." வசீகரன் தன்னுடைய இன்னொரு மூட்டைச் சரக்கை அவிழ்ப்பதற்குள் - டைரக்டர் குமாரராஜன் குரல் கொடுத்தார்.
அன்பரசன்...
ஸார்...
அன்பரசன் எழுந்து ஓடினான்.
ஜெயதாராவுக்கு இன்னொருவாட்டி போன் பண்ணு...
சரி ஸார்...
அன்பரசன் செட்டின் கோடியில் இருந்த ஆபிஸ் அறையை நோக்கிப் போனான். செட் பூராவும் ஜிகினாத் தாள்கள் விதவிதமான நிறங்களில் வழிய கலர் பல்புகள் ஆயிரக்கணக்காய் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. குறைவான மார்புக் கச்சைகளில் சதை பாகம் பிதுங்க எக்ஸ்ட்ரா நடிகைகள், லல்லாலலா... லல்லா... பாட காத்திருந்தார்கள். டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் கழுத்தில் விசிலை கட்டிக் கொண்டு டான்ஸ் மூவ் மெண்ட்களை சிரத்தையாய் பண்ணிக் காட்ட - ஷூட்டிங் பார்க்க வந்தவர்கள் சிரிப்போடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். லைட் பாய்கள் ஷெல்டரின் விட்டங்களில் பசியோடு உட்கார்ந்து மின் இணைப்புகளை சரி செய்து கொண்டிருந்தார்கள். அடுத்த அறை ரிக்கார்டிங் ரூமிலிருந்து எஸ்.பி.யின் குரல் இனிமையாய் ‘அடிக்கடி தரிசனம் அவசியம் குடுக்கணும்’ என்று பாடலாய் பீறிட்டது.
அன்பரசன் ஆபீஸின் கண்ணாடி அறைக்குள் நுழைந்து டெலிபோனை ஆக்ரமித்தான். ஜெயதாராவின் போன் நெம்பரை உதட்டில் முனகி டயல் செய்தான்.
மறுமுனையில் ரிங் போயிற்று.
ஒரு நிமிஷம் கழித்து எழுந்தார்கள்.
எஸ்... யாரது...?
ஆண் குரல் கேட்டது. ஜெயதாராவின் பி.ஏ.
நான் அன்பரசன் பேசறேன்... அம்மா வந்துட்டாங்களா...?
இன்னும் வரலையே...
விஜயா கார்டன்ல எல்லாரும் காத்திட்டிருக்காங்க... ப்ரொட்யூஸர் நாயுடுவும், டைரக்டர் குமாரராஜனும் டென்ஷனோட இருக்காங்க... பத்து மணிக்குள்ளே பூஜையைப் போட்டுட்டு டான்ஸ் ஷெட்யூலை இன்னிக்கு ஷூட் பண்ணியாகணும்...
அம்மா வந்ததும் வரச் சொல்றேன்...
எங்கே போயிருக்காங்கன்னு சொல்ல முடியுமா...?
நான். பங்களாவுக்கு வர்றப்பவே அம்மா இல்லை... வாட்ச்மேன்கிட்டே விசாரிச்சேன். எட்டு மணிக்கே காரை எடுத்துட்டு வெளியே போயிட்டாங்களாம்... இன்னிக்கு வெள்ளிக்கிழமை. அம்மா ஒருவேளை திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு போயிருக்கலாம்... நான் வந்ததும் விஷயத்தைச் சொல்லி அனுப்பி வைக்கிறேன்...
அன்பரசன் எரிச்சலாய் ரிஸீவரை வைத்தான்.
டைரக்டர் குமாரராஜனிடம் வந்தான். குமாரராஜனின் அருகே இருந்த நாற்காலியில் ப்ரொட்யூஸர் நாயுடு ஏகப்பட்ட கலோரி கோபத்தில் உட்கார்ந்திருந்தார். அன்பரசனிடம் படபடத்தார்.
என்ன வர்றாளாமா...?
வீட்ல இல்லையாம்... பி.ஏ. சொன்னார்...
எங்கே போயிருக்காளாம்...?
இன்னிக்கு வெள்ளிக்கிழமை... திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு போயிருக்கலாம்ன்னு பி.ஏ. சொன்னார்...
இவளோட பவிஷுக்கு கோயில் ஒண்ணுதான் குறைச்சல்...
நாயுடு எரிச்சலாய் சொல்ல டைரக்டர் குமாரராஜன் விருட்டென்று அவரை ஏறிட்டார்.
நாயுடு ஸார்... ஒரு நடிகையை நீங்க இவ்வளவு கேவலமா பேசக்கூடாது. கோயிலுக்குப் போற உரிமையில நாம யாரும் குறுக்கிட முடியாது... ஜெயதாராவைப் பத்தி எனக்குத் தெரியும்... மத்த நடிகைகளை பேசற மாதிரி இவளையும் நீங்க பேசிடக் கூடாது...
அட டைரக்டர் ஸார்! உங்களுக்கு ஏன் அவ்வளவு கோபம் வருது...? நாலையும் விட்ட பின்னாடிதான் எவ ஒருத்தியும் நடிகையாக வரமுடியும்... ஜெயதாராவோட பழைய கதையை நீங்களும் நானும் எத்தனையோ பேர்கிட்டே கேட்டிருக்கோமே...! அதையெல்லாம் ஒரு வாட்டி நினைச்சு பாருங்க. இவெல்லாம் கோவில் படி ஏறலாமான்னு அப்புறம் சொல்லுங்க...
குமாரராஜன் நாயுடுவை உஷ்ணமாய் பார்த்தார்.
நாயுடு ஸார்... நான் பழைய ஜெயதாராவைப் பற்றி பேச விரும்பலை... இந்த ஒரு வருஷ காலமா என் கண்ணுல படற ஜெயதாராவைப் பத்திதான் பேசறேன். ஒரு நடிகையின் பழைய கால சங்கதிகள் மோசமானதா இருக்கலாம். அவ வளர்ந்த பின்னாடி அதைப் பத்தி விமர்சனம் பண்றது வாந்தி பண்ணினதையே மறுபடியும் எடுத்து சாப்பிடற மாதிரிதான்...
குமாரராஜன் பேசப் பேச - நாயுடுவின் கண்களில் லேசாய் கோபச்சாயல், ஆத்திரமாய் ஏதோ பேச வாயைத் திறந்தவர் - செட்டின் வாசலில் ஒரு அசாதாரணமான பரபரப்பு தென்பட்டதும் பார்வையை அந்தப் பக்கமாய் திருப்பினார்.
சாக்லட் நிற மாருதி காரினின்றும் பாலீஷ் ஏற்றப்பட்ட சிம்லா ஆப்பிள் மாதிரி இறங்கி செட்டுக்குள் வந்து கொண்டிருந்தாள் ஜெயதாரா.
ஜெயதாராவின் உண்மையான வயது... நிஜமாகவே இருபதுதான். உண்மையான பெயர் மங்கையர்கரசி. மங்கையர்கரசியை ஜெயதாராவாக மாற்றியவர் குமாரராஜன். ஜெயதாராவுக்கு அபார அழகு. காமிராவின் எந்த கோணத்திலும் பார்க்கிற அபிநயங்களை துவம்சம் செய்தாள். கண்களில் மின்சாரம் வைத்திருந்தாள். சிரிப்பில் ஸ்காட்ச் முழு பாட்டிலில் போதையை கலந்திருந்தாள். உண்மையான மார்புகள் என்பது மேக்கப் மேனுக்கு தெரியும். எப்படி நடிக்க வந்தாள் என்பதெல்லாம் கசப்பான கேள்வி. உயிரோடு இருக்கிற அப்பா அம்மாவைப் பற்றி எந்தப் பேட்டியிலும் அவள் சொன்னதில்லை. அந்த இரண்டு வருட காலத்தில் இருபது படங்களை முடித்திருந்தாள். இதில் ஆறு வெள்ளி விழா படங்கள். பனிரண்டு நூறு நாள் படங்கள். ரஜினி கமலுக்குப் பிறகு விநியோகஸ்தர்கள் ஜெயதாராவைச் சொன்னார்கள்.
ஸாரி ப்ரொட்யூஸர் ஸார்... ஸாரி டைரக்டர் ஸார்...
நெற்றியில் வியர்வை மின்ன - கைகளை குவித்துக் கொண்டே நாயுடுவையும் குமாரராஜனையும் நோக்கி வந்தாள் ஜெயதாரா.
என்ன ஜெயா இப்படி பண்ணிட்டே...
குமாரராஜன் கேட்டார்.
கருமாரியம்மன் கோயிலுக்கு போயிருந்தேன் ஸார்... கோயிலுக்கு போயிட்டு திரும்பற வழியிலே ஏகப்பட்ட டிராபிக் ஜாம்... ஏதோ லாரி ஒன்னு கவுந்துடுச்சாம். ஒரு மணி நேரம் ஒரு வாகனமும் நகர முடியலை... போலீஸ் வந்த பின்னாடி தான் ட்ராபிக் ஒழுங்காச்சு... வெரி... வெரி... ஸாரி ஸார்...
சரி... சரி. பேசிக்கிட்டிருக்காமே... மேக்கப் ரூமுக்கு போய் ட்ரஸ்ஸை மாட்டிகிட்டு வா... பூஜை முடிஞ்சதுமே டான்ஸ் ஷெட்யூலை ஆரம்பிச்சுடணும்...
இதோ... இப்ப வந்துடறேன் ஸார்
மேக்கப் ரூமை நோக்கிப் போனாள் ஜெயதாரா. நாயுடுவுக்கு கோபம் இன்னமும் ஆறாமல் இருந்தது.
ஜெயதாரா மேக்கப் ரூமினின்றும் வெளிப்பட்ட போது ஒரு இளவரசியாய் மாறியிருந்தாள். உடம்பின் எல்லா அவயங்களிலும் தங்கத் துணுக்குகள் மாதிரி இமிடேஷன் சமாச்சாரங்கள். கட்டியிருந்த புடவையில் வெள்ளி ஜரிகை இழைகள்.
ரோஸ்நிற மார்புக் கச்சையில் மார்புகள் ஆபாசம் காட்டாமல் பதுங்கியிருக்க தொப்புளை காட்டாத வயிறு துளிர் வாழையிலையின் மென்மையோடு தெரிந்தது.
நாற்பது வயதான ஹீரோ கிருஷ்ணகுமார் ரோஸ் பௌடர் அப்பிய முற்றலான முகத்தோடு நாற்காலியில் காத்திருந்தான். நாயுடு அவனிடம் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார். ஜெயதாராவைப் பார்த்ததும் ‘வா’ என்பது போல் கையசைத்தார்.
ஜெயதாரா அவர்களை நெருங்கினாள். நாயுடு அவளை ஏறிட்டார்.
ஜெயா...! கிருஷ்ணகுமார் கூட கதாநாயகியாக நடிக்க ஒவ்வொரு நடிகையும் துடியா துடிச்சிட்டிருக்கிற நேரம் இது. உனக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு... அவர் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்க...
ஜெயதாரா புன்முறுவலோடு கை குவித்தாள். கிருஷ்ணகுமாரின் காலில் விழுந்த படியே சொன்னாள்.
"நான் ரொம்பவும் சின்னவ ஸார்... இந்த பீல்டுக்கு ஒரு மாணவி மாதிரி வந்திருக்கேன்... நான் ஏதாவது தப்பு பண்ணினா பொறுத்துக்கணும்... உங்க நடிப்பு வைரமா மின்னும்ன்னு எனக்கு