Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Roja Ithazh Erigirathu
Oru Roja Ithazh Erigirathu
Oru Roja Ithazh Erigirathu
Ebook100 pages41 minutes

Oru Roja Ithazh Erigirathu

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Roja Ithazh Erigirathu

Read more from Rajeshkumar

Related to Oru Roja Ithazh Erigirathu

Related ebooks

Related categories

Reviews for Oru Roja Ithazh Erigirathu

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Roja Ithazh Erigirathu - Rajeshkumar

    25

    1

    குருபாதசாமி டெலிபோனை ஒரு கையிலும் ஒயரை இன்னொரு கையிலும் பிடித்துக் கொண்டு அபிநயாவின் அறைக்குள் நுழைந்தபோது - அவள் ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னாடி உட்கார்ந்து - உதட்டில் லிப்ஸ்டிக் தீற்றிக் கொண்டிருந்தாள்.

    அபி...! உனக்கு டெலிபோன்...

    லைன்ல யார் ஸார்...?

    கிரிஜா கிரியேஷன்ஸ்... அப்பாதுரை...

    நான் வீட்ல இருக்கேன்னு சொல்லிட்டீங்களா...?

    ஆமாம்மா...! பாவம் நொந்து போன மனுஷன். காலையிலிருந்து இதுவரைக்கும் மனுஷன் ஏழாவது தடவையா போன் பண்ணிட்டான். ஒவ்வொரு தடவையும் இல்லே... இல்லே...’ன்னு சொல்ல மனசுக்கு கஷ்டமாயிருந்தது. அதான் இருக்கேன்னு சொல்லிட்டேன்...

    அவர் தன்னோட படத்துல நடிக்கச் சொல்லி என்னோட உயிரை வாங்கிடுவாரே ஸார்...

    இதமா பேசி தட்டிக் கழிச்சிடும்மா...

    ட்ரஸ்ஸிங் டேபிளிலிருந்து திரும்பி - ரிஸீவரை வாங்கி - ஸ்டட்கள் அசையும் தன் காதுக்குக் கொடுத்தாள் அபிநயா.

    ஹலோ...

    ஹி... ஹி... ஹி... ஹி...அபிநயாவா...? நான் அப்பாதுரை பேசறேன்...

    சொல்லுங்க...

    என் படத்துல நீ நடிக்கணும்ன்னு ரொம்ப ஆசைப்படறேன். போன வாரம் ஏ.வி.எம்மில் பார்த்தப்ப ரெண்டு வாரம் கழிச்சு பதில் சொல்றேன்னு சொன்னே...?

    இன்னும் ரெண்டு வாரம் ஆகலையே...?

    இப்படி சொல்லி தட்டிக் கழிக்காதே அபிநயா... உன்னோட சம்மதம் வாங்கின பின்னாடிதான் தினந்தந்தி, தினகரன்ல முழு பக்க விளம்பரம் தரணும்...

    என்னோட முடிவான பதிலைச் சொல்லட்டுமா?

    சொல்லு...

    இன்னும் ஒரு வருஷத்துக்கு யாருக்குமே நான் கால்ஷீட் கொடுக்க முடியாது... எல்லா டேட்ஸும் டைட்டா இருக்கு...

    அப்படி சொல்லாதே அபிநயா... அட்ஜஸ்ட் பண்ணிப்பாரு...

    ‘அட்ஜஸ்ட் பண்றதா...? அதெப்படிங்க முடியும்...? ஏற்கெனவே லட்ச லட்சமா அட்வான்ஸ் வாங்கி... காண்ட்ராக்ட்ல கையெழுத்து போட்டு - டேட்ஸை ஒதுக்கி குடுத்தவங்களுக்கு நா... என்ன பதிலைச் சொல்ல முடியும்...? இந்த படத்தை வேற யாரையாவது போட்டு முடிங்க... அடுத்த வருஷம் பார்க்கலாம்..."

    இப்ப எடுக்கப் போகிற கதை அம்சமான கதை... ஹீரோயின் சப்ஜெக்ட். கண்ணில்லாத பொண்ணு கேரக்டர்...

    ஸாரி! என்னை வற்புறுத்தாதீங்க... இப்ப இருக்கிற நிலைமையில் ஒரு நாளைக்கு நான் பதினெட்டு மணி நேரம் நடிக்கணும். உங்க அடுத்த படத்துல கண்டிப்பா நான் நடிக்கிறேன்... ரிஸீவரை வைத்துவிட்டு - மறுபடியும் ட்ரஸ்ஸிங் டேபிள் பக்கம் திரும்பினாள் அபிநயா.

    குருபாதசாமி கேட்டார்.

    என்னம்மா... இப்படி சொல்லிட்டே?

    ஏன்... ஸார்...?

    அடுத்த மாசம் ஒரு பத்து நாள் கால்ஷீட் ஃப்ரியாத்தானே இருக்கு?

    அது எனக்குத் தெரியும். ஆனா... அப்பாதுரை படத்துல நடிக்க நான் விரும்பலை... இதுவரைக்கும் அவர் எடுத்த மூணு படங்களோட டைட்டில்ஸை சொல்லுங்க பார்க்கலாம்...

    குருபாதசாமி சில விநாடிகள் யோசித்து விட்டு சொன்னார். ராத்திரி பசி, சதி செய்வாள் சாந்தா, கன்னியின் காமம்...

    இண்டஸ்ட்ரியில் அவர்க்கு என்ன பேரு...?

    ராத்திரி நேர டைரக்டர்...

    ஃபீல்டுல எனக்கு இருக்கிற இமேஜுக்கு. அப்பாதுரை படத்துல நடிச்சா ரசிகர்கள் ஒத்துக்குவாங்களா...?

    நீ சொல்றது சரிதாம்மா... ஒண்ணுக்கு ரெண்டா பணம் கிடைக்குமே?

    குரு ஸார்... என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியும்... நடிக்க வந்த ஆரம்ப காலத்திலேயும் சரி... வளர்ந்துட்ட இந்த நிலையிலும் சரி... பணம் எனக்கு ரெண்டாம் பட்சம்தான்... அப்பாதுரை மாதிரியான ஆட்களாலே... சினிமா தொழிலோட பேரே கெட்டும் வருது... சென்ஸார்ல அவர் படம் எவ்வளவு வெட்டு வாங்குதுன்னு உங்களுக்குத்தான் தெரியுமே?

    குருபாதசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போதே - கையிலிருந்த டெலிபோன் மறுபடியும் கனைத்தது. அவரே ரிஸீவரை எடுத்துக் கேட்டார்.

    ஹலோ... செவிமடுத்தவர் ரிஸீவரையும் டெலிபோனின் மிச்சங்களையும் - அபிநயாவிடம் கொடுத்தபடி புன்னகைத்தார்.

    உன்னோட கோபி...

    மலர்ந்து போய் ரிஸீவரை வாங்கினாள் அபிநயா.

    இரும்மா... நான் வெளியே போயிடறேன். கட்டிக்கப் போறவனோட பேசப்போறே... நான் ஏன் இருக்கணும்...

    சொல்லிக் கொண்டே குருபாதசாமி அறையை விட்டு வெளியே வந்து ஹாலுக்குள் நுழைந்தார். ஹால் சோபாவில் - ஜோல்னா பையும் காமிராவுமாய் ஒரு இளைஞன் உட்கார்ந்து நகம் கடித்துக் கொண்டிருந்தான். குருபாதசாமியைப் பார்த்ததும் எழுந்தான்.

    வணக்கம் ஸார்...

    யார் நீங்க...?

    வெள்ளித்திரை பத்திரிகையிலிருந்து வர்றேன் ஸார்...

    நிருபரா...? போட்டோகிராபரா?

    நிருபர் கம் போட்டோகிராஃபர் ஸார்...

    என்ன விஷயம்?

    என்ன ஸார்... மறந்துட்டீங்களா? அபிநயாவோட பேட்டி வேணும்ன்னு போன்ல கேட்டப்ப... இன்னிக்கு வரச் சொல்லியிருந்தீங்களே...?

    பேட்டிதானே...?

    ஆமா ஸார்...

    கேள்வியெல்லாம் ப்ரிப்பேர் பண்ணி கொண்டாந்துட்டியா?

    கொண்டாந்திருக்கேன் ஸார்...

    குருபாதசாமி நிருபர் இளைஞனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் சாய்ந்து கொண்டார். சரி... பேட்டியை ஆரம்பி...

    ஸ...ஸார்...

    ம்...

    அபிநயா...?

    "அபிநயாவுக்கு பேட்டி குடுக்க

    Enjoying the preview?
    Page 1 of 1