Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Endrendrum Un Ethiri
Endrendrum Un Ethiri
Endrendrum Un Ethiri
Ebook96 pages42 minutes

Endrendrum Un Ethiri

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateFeb 1, 2018
ISBN9781043466374
Endrendrum Un Ethiri

Read more from Rajeshkumar

Related to Endrendrum Un Ethiri

Related ebooks

Related categories

Reviews for Endrendrum Un Ethiri

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Endrendrum Un Ethiri - Rajeshkumar

    15

    1

    "வணக்கம்"

    குரலைக் கேட்டு முன்னறையில் உட்கார்ந்து டைப் மெஷினைத் தட்டிக் கொண்டிருந்த லலிதா தலை நிமிர்ந்தாள். பளிச்சென்ற ஜிப்பா வேஷ்டியில் அந்த இளைஞன் நின்றிருந்தான். கையில் ஒரு லெதர் பேக். உதட்டில் தீவிரமாய் ஒரு புன்னகை.

    லலிதா கேட்டாள்.

    யார் நீங்க...?

    ரேடியோ ஸ்டேஷனிலிருந்து வர்றோம். எழுத்தாளர் ஆகாயதீபனோட வீடு இதுதானே...?

    ஆமா...

    அவரைப் பார்க்கணும்

    முன்னாடியே லெட்டர் போட்டு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கீங்களா...?

    இல்லை...

    சரி... என்ன விஷயமா வந்திருக்கீங்க...?

    ரேடியோ நிகழ்ச்சிகளில் இப்போ ‘உரைகல்’ன்னு புதுசா ஒரு பகுதி ஆரம்பிச்சிருக்கோம். வாரம் ஒரு எழுத்தாளரைபேட்டி கண்டு அவரோட பேட்டியை ஒலிபரப்பிட்டு வர்றோம்... அது விஷயமா அவரைப் பார்க்கணும்...

    ஒரு நிமிஷம் இருங்க... அவரை கேட்டுட்டு வந்துடறேன் லலிதா நாற்காலியைத் தள்ளிக் சொண்டு எழுந்து திரைச்சீலையைத் தள்ளிக் கொண்டு பக்கத்து அறைக்குள் நுழைந்தாள்,

    சதுரமான கண்ணாடி மேஜைக்குப் பின்னால் உட்கார்ந்துமும்முரமாய் மாத நாவல் ஒன்றுக்கு கதை பண்ணிக் கொண்டிருந்த ஆகாயதீபன் நிமிர்ந்தான்.

    என்ன லலிதா தொடர்கதை அத்தியாயத்தை அடிச்சு முடிச்சுட்டியா? அதை முடிச்சிருந்தா இதை டைப் பண்ண ஆரம்பிச்சுடேன்...

    இல்ல சார் இன்னும் அந்த தொடர்கதை அத்தியாயத்தையே அடிச்சு முடிக்கலை உங்களைப் பார்க்கிறதுக்காக ஒருத்தர் வந்திருக்கார்

    வாசகரா…?

    நோ... ரேடியோ ஸ்டேஷனிலிருந்து ‘உரைகல்’ என்கிற பகுதிக்காக பேட்டி எடுக்க வந்திருக்காங்க...

    வரச் சொல்லு

    ஆகாயதீபன் பேனாவை மூடி வைத்துவிட்டு கைகளை உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டான். பக்கத்திலிருந்த பாக்கு டப்பாவைத் திறந்து வாசனை பாக்குத் தூளை சிட்டிகை அள்ளி வாய்க்கு கொடுத்த போது அந்த இளைஞன் உள்ளே நுழைந்தான்.

    வணக்கம் ஸார்

    வணக்கம் வாங்க...

    நான் கமலநாதன். ரேடியோ ஸ்டேஷன்ல டெக்ஸா இருக்கேன் ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் ராத்திரி ஒன்பதரை மணிக்கு ‘உரைகல்’ன்னு ஒரு நிகழ்ச்சியை ஒலி பரப்பறோம். நீங்க கேட்டிருக்கலாம்...

    ஸாரி... நான் கேட்டதில்லை...

    ரொம்பவும் இண்ட்ரஸ்டிங்கான நிகழ்ச்சி ஸார். ரேடியோ ப்ரோக்ராம்ஸ்லேயே இது தான் பாப்புலர் இதுவரைக்கும். சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி, அனுராதா ரமணன், பிரபஞ்சன், புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார் அவங்களோட பேட்டிகளை ஒலி பரப்பியிருக்கோம். ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் பேட்டியை ஒலிபரப்பப் போறோம்

    என்னோட ஞாபகம் இப்பத்தான் வந்ததாக்கும்

    ஸாரி... ஸார்... நீங்க ரொம்பவும் பிஸி எழுத்தாளர். உங்களுக்கு சிரமம் கொடுக்க வேண்டாமேன்னு நினைச்சுத்தான்...

    சமாளிக்காதீங்க! உங்க பேர் என்ன சொன்னீங்க?

    கமலநாதன்

    இதோ... பாருங்க கமலநாதன்... நான் செக்ஸையும், மன விகாரங்களையும் அடிப்படையா வெச்சு கதைகளை எழுதறவன். எழுத்துலகில் என்னை எல்லோரும் தீண்டத் தகாதவன் மாதிரி ட்ரீட் பண்றாங்க. உங்க ரேடியோ ஸ்டேஷன் பீப்பிளுக்கும் என்மேல ஒரு அவர்ஷன் வந்திருக்கும்... அதான் லேட்டா என்கிட்டே வர்றீங்க...?

    நோ... அப்படியெல்லாம் ஒரு காண்ட்ரோவர்ஷியல் திங்கிங் எங்களுக்கு இல்லை. இந்த சமுதாயத்துல நீங்களும் ஒரு எழுத்தாளர். உங்க கருத்துகளுக்கும் நிச்சயம் வரவேற்பு உண்டு... பேட்டி தர விரும்பறீங்களா?

    ஷ்யூர்...

    தாங்க் யூ... சொன்ன கமலநாதன், தான் கையோடு கொண்டு போயிருந்த லெதர் பேக்கைப் பிரித்து உள்ளேயிருந்த டேப் ரிக்கார்டரை எடுத்து மேஜையின் மேல் வைத்தான். ஒயரோடு கூடிய உருண்டை மைக்கை எடுத்து அதற்குரிய இணைப்பைக் கொடுத்து விட்டு பேட்டியை ஆரம்பிக்கலாமா... ஸார்?" என்று கேட்டான்.

    தலையாட்டினான் ஆகாயதீபன்.

    டேப் ரிக்கார்டர் சுழல கமலநாதன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு முதல் கேள்வியைக் கேட்டான்.

    உங்க சொந்த பேரே ஆகாயதீபன் தானா?

    நோ... என்னோட பேர்... குழந்தைசாமி. கதை எழுதறதுக்காக ஒரு புனை பேர் தேவைப்பட்டது. ஆகாயதீபன்னு வெச்சுகிட்டேன்...

    சொந்த ஊர்...?

    இதே நாகர் கோவில்தான்

    கல்யாணம் ஆனவரா...?

    இன்னும் இல்லை...! கல்யாணத்தை பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்த அம்மா... அப்பா...யாரும் உயிரோட இல்லை.

    இந்த வீட்ல நீங்க மட்டும் தான் தனியா இருக்கீங்களா?"

    ஆமா...

    உங்க எஜுகேஷனல் க்வாலிபிகேஷன்?

    ஸ்கூல் பைனல்

    இந்த எழுத்துத் துறைக்கு எப்படி வந்தீங்க...?

    "ஸ்கூல் பைனலை முடிச்சுட்டு வேலைக்காக அலைஞ்சுட்டிருந்தபோது ஒரு புஸ்தகக் கடையில் வேலை கிடைச்சுது அங்கே வேலை நேரம் போக மீதி நேரங்கள்ல... கிடைச்ச புஸ்தகத்தையெல்லாம் படிச்சேன். எழுத்து மேல தானா ஒரு பிடிப்பு வந்தது... என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையே கருவா வெச்சு... ஒரு சிறுகதையை எழுதி – ‘ஆகாய தீபம்’ன்னு தலைப்பு வெச்சு ‘சந்தனம்’ வார இதழுக்கு அனுப்பிச்சு வெச்சேன். பத்தே நாள்! அந்த ஆகாய தீபம் கதை ஜெயராஜோட வண்ண ஓவியத்தோடு சிறப்புச் சிறுகதையாக சந்தனத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1