Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sathi Seivai Sahothara
Sathi Seivai Sahothara
Sathi Seivai Sahothara
Ebook103 pages44 minutes

Sathi Seivai Sahothara

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அமர்நாத், சிவராஜ் என்ற இருவர் பரத்தை மிரட்டி தேச விரோத காரியத்தை செய்ய சொல்கிறார்கள். ஆனால் பரத் அதை மறுக்கிறார். பிறகு பரத்தை பயமுறுத்தி செய்ய சொல்கிறார்கள். பின்னர் வேறு வழியில்லை என்பதால் பரத் ஒத்துக்கொள்கிறார். அவ்விருவரும் பரத்தை செய்ய சொன்ன தேசவிரோத காரியம் என்ன? எதனால் பரத் அதை ஒப்புக்கொண்டார்? இறுதியில் என்ன ஆனது?

Languageதமிழ்
Release dateJul 23, 2022
ISBN6580100908092
Sathi Seivai Sahothara

Read more from Pattukottai Prabakar

Related to Sathi Seivai Sahothara

Related ebooks

Reviews for Sathi Seivai Sahothara

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sathi Seivai Sahothara - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சதி செய்வாய் சகோதரா

    Sathi Seivai Sahothara

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அவர் இந்திய சராசரி உயரத்திற்கு ஒரு இஞ்ச் குறைவாகத்தான் இருந்தார். சிவப்பென்றால் அப்படியொரு சிவப்பு. தலையில் டையடித்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. காது மடல்களில் சற்று அசிங்கமாய் ரோமங்கள். அதே போல மூக்குக்குள்ளிருந்து ஒரே ஒரு ரோமம் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, கோல்டு பிரேமில் கண்ணாடி. நெற்றியில் சந்தனம் வைத்திருந்தார். கண்களுக்குக் கீழே சதைப் பைகளில் நிழலடித்திருந்தது. அப்புசாமி போல லொடக் என்று வளைந்து தனிப் பிரதேசமாய் தெரியும் தாடை. கழுத்து வரை மூடிய நீளமான ஷெர்வானியின் பட்டன்கள் தங்கமாகத்தான் இருக்க வேண்டும். ஸாக்ஸ் அணிய அவசியமில்லாத கறுப்பு கட் ஷூ போட்டிருந்தார்.

    இந்த அத்தியாயத்திற்குப் பிறகு இடம் பெறாத மத்திய அமைச்சர் மிதுன் சால்வேயை இவ்வளவு வர்ணித்ததே யதேஷ்டம், கவர்னர் மாளிகையில் மாலை 4.30 மணிக்கு தேநீர் அருந்திக் கொண்டே உரையாடிக் கொண்டிருக்கும் அவரையும், கவர்னரையும் ஒரே ஃபிரேமில் - ஃப்ளாஷ், ஃப்ளாஷ், ஃப்ளாஷ் என்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    வெளியே புறப்படத் தயாராய் புல்லட் புரூஃப் கார் அதன் மூக்கில் சிறிய தேசியக் கொடியை பறக்க விட்டுக் கொண்டிருக்க... அந்தக் காரைத் தொடர்ந்து செல்லப் போகிற செக்யூரிட்டி ஜீப்களும், முக்கியப் பிரமுகர்களின் கார்களும் கார் பாஸ் ஒட்டிக் கொண்டு மரியாதையான தூரத்தில் காத்திருந்தன. இது இவ்வாறிருக்க...

    அந்தக் கல்லூரியின் பொன் விழா நிகழ்ச்சிகளில் அமைச்சர் மிதுன் சால்வே கலந்து கொண்டு தலைமையேற்க விருப்பதால்... கல்லூரியின் பரந்த மைதானத்தில் ஏழு தினங்களுக்கு முன்னால் துவங்கப்பட்டு காலையில்தான் முற்றுப் பெற்ற பெரிய மேடை ஒரு தனியார் நிறுவனத்தால் ஜக, ஜகாவென்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    எதிரே மர நாற்காலிகள் வரி வரியாய், வரி வரியாய்...

    அங்கங்கே அட்டைகளில் வி.ஐ.பி. பிரெஸ், எம்.எல்.ஏ. என்று அட்டைகள் நடப்பட்டிருந்தன. அனேகமாக முக்கால் வாசி நாற்காலிகள் நிறைந்திருந்தன.

    மேடையில் அமைச்சருக்கும், கவர்னருக்கும் மட்டும் விசேஷமான நாற்காலிகள். மற்றவர்களுக்கு ஒரே மாதிரியானவை. ஒரு ஓரத்தில் ஜரிகை மாலைகள் மாட்டி வைக்கப்பட்டிருந்தன. சஃபாரி அணிந்த கரெஸ்பாண்டெண்ட் ஊத்தப்பம் சைஸில் பாட்ச் அணிந்து கொண்டு மேடையில் இங்குமங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தார்.

    தமிழ்த்தாய் வாழ்த்து படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பெண் தன் அம்மாவின் பட்டுப்புடவையுடுத்தி, எக்ஸ்ட்ராவாய் மேக்கப் செய்து பதட்டமாய் கைக்குட்டையைக் கசக்கிக் கொண்டிருந்தாள்.

    மேடையின் அருகிலும், மற்றும் அனைத்து திசைகளிலும் போலீஸ் நின்றது. மேடைக்கு பின்புறம் ஜெனரேட்டர் இயங்கிக் கொண்டிருந்தது. இன்னும் பத்து நிமிடங்களில் மந்திரியும், கவர்னரும் வந்து விடுவார்கள் என்று பேசிக் கொண்டார்கள். இது இவ்வாறு இருக்க...

    அந்த லாட்ஜில் ரமணதாஸ் டைம் பார்த்துக் கொண்டான்.

    புறப்பட வேண்டிய நேரம். விஸ்கி பாட்டிலை மூடி வைத்தான். கிண்ணத்தில் இருந்ததைக் காலி செய்தான்.

    ரமணதாஸ் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான். வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, க்ளோஸான மிலிட்டரி கட்டிங், முறுக்கி விடப்பட்ட வளப்பமான மீசை, இடது புருவத்திற்கு சற்று மேல் லேசான தழும்பு.

    சி.பி.ஐ. அதிகாரி என்று எவனும் கேள்வி கேட்காமல் நம்புவான்.

    ரமணதாஸ் சூட்கேஸ் திறந்தான். தயாரிக்கப்பட்ட அந்த அடையாள அட்டையை சட்டைப் பாக்கெட்டில் செருகிக் கொண்டான். அடுத்து பொன் விழா நிகழ்ச்சிக்காக கல்லூரி தயாரித்திருந்த அதே மாதிரியான பேட்ச் எடுத்து சட்டை பட்டனின் காஜாவுக்குள் ஊக்கை நுழைத்து மாட்டிக் கொண்டான். ஷூ அணிந்தான். புறப்பட்டான்.

    டாக்ஸி அமர்த்திக் கொண்டான்.

    கல்லூரியின் வாசலில் இறங்கிக் கொண்டான். டாக், டாக் என்று தயக்கமே இல்லாமல் விழா நடக்கும் மைதானத்தை நோக்கி நடந்தான்.

    வழியில் எத்தனையோ போலீஸ்காரர்கள் அவனைப் பார்த்தார்கள். ஆனால் யாருமே கேள்வி கேட்கவில்லை. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மட்டும் சற்றுத் தயங்கவே, இப்படி அலர்ட்டாக இருப்பது நல்லதுதான், நான் உங்களைப் பாராட்டுகிறேன் என்று ஆங்கிலத்தில் சொல்லி விட்டு ஐடெண்ட்டிஃபிகேஷன் கார்டை இவன் எடுத்ததுமே... அதன் வெளியட்டையில் அசோகச் சின்னத்தை பார்த்த மாத்திரத்தில் அந்த எஸ்.ஐ. சல்யூட் அடித்து விட்டு வழி விட்டார்.

    இன்னும் அமைச்சர் வந்திருக்கவில்லை. மேடையில் மற்றவர்கள் நிறைந்திருக்க... ரமணதாஸ் ஒளி மங்கி இன்னும் சற்று இருட்டக் காத்திருந்தான். அதுவரை ஒரு வெளிச்சமற்ற மூலையில் நின்று கொண்டான்.

    சற்று நேரத்தில் அதிர் வேட்டுகள் போடப்பட்டன.

    மிதுன்சால்வேயும், கவர்னரும் அவர்களின் கார்களிலேயே மேடை வரை வந்தார்கள். இறங்கினார்கள். படிகளில் ஏறி மேடைக்கு வந்து அமர்ந்து கொண்டார்கள். அவர்களின் உதவியாளர்களும்,

    Enjoying the preview?
    Page 1 of 1