Chennai Azhagiyum Settai Gopiyum!
5/5
()
About this ebook
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Read more from Pattukottai Prabakar
September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Mazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsOru Koodai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsIni... Iniya... Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsTick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Ner Meley Nila Rating: 5 out of 5 stars5/5Ithuvarai… Rating: 0 out of 5 stars0 ratings
Related to Chennai Azhagiyum Settai Gopiyum!
Related ebooks
En Peyar Dhayalan Rating: 0 out of 5 stars0 ratingsJanuary February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsThodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsOru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Devathai Punnagaikkiral Rating: 5 out of 5 stars5/5Andha Moondru Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Ini Idhu Porkalam Rating: 0 out of 5 stars0 ratingsBrindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Atho Ange Aarambam Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Ippadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsL Board Murder Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mattean Malini Rating: 0 out of 5 stars0 ratingsAvan Thappa Koodathu Rating: 0 out of 5 stars0 ratingsSirithu Sirithu Ennai... Rating: 5 out of 5 stars5/5Villan Engira Kadhanayagan Rating: 0 out of 5 stars0 ratingsPoo Mattum Puyalodu... Rating: 5 out of 5 stars5/5Piragu Oru Maalaiyil... Rating: 3 out of 5 stars3/5Uyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Ithu Puthu Sugam Rating: 5 out of 5 stars5/5Vettai Rating: 5 out of 5 stars5/5Ayiram Muthangaludan Rating: 5 out of 5 stars5/5Iniyavaley Iranthu Po! Rating: 0 out of 5 stars0 ratingsSithainthavan Varugai Rating: 5 out of 5 stars5/5Ore Oru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsIranthavane, Vanakkam Rating: 5 out of 5 stars5/5Sollungal Seyyapadum Rating: 0 out of 5 stars0 ratingsInnum Sila Nimidangalil... Rating: 5 out of 5 stars5/5Kadaisi Aayutham Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Chennai Azhagiyum Settai Gopiyum!
1 rating0 reviews
Book preview
Chennai Azhagiyum Settai Gopiyum! - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
சென்னை அழகியும் சேட்டை கோபியும்!
Chennai Azhagiyum Settai Gopiyum!
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
முன்னுரை
உங்களுக்கு வணக்கம்!
'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்பார்கள். 'ஒரு தரமான தயாரிப்பில் மாத நாவலைத் தர வேண்டும்- இந்தியா டுடே, இண்டு. ஃபெமினா இவற்றுடன் 'பாக்கெட் புக்ஸ்' ஒவ்வொரு வீட்டு வரவேற்பு அறையிலும் இருக்க வேண்டும்" என்று நாம் பட்டுக்கோட்டை பிரபாகர் (அலைஸ்) பி.கே.பி.-யும் முடிவு செய்தோம்.
முதல் இதழ் முத்தான இதழாக உங்களைத் தழுவியது எங்களின் புதிய முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.'
சில முகவர்கள்மாத நாவல் என்றால் பத்து ரூபாய்க்குள் தான் இருக்கும். இது என்ன இருபது ரூபாய்.... இவ்வளவு தரமான காகிதம் வேண்டாம், மட்டமான பேப்பரில் இருந்தாலும் பரவாயில்லை. விலையைக் குறைக்கக் கூடாதா?
என்ன கேட்டார்கள்.
வெளியாகும் பதிப்பக வெடுகள்- உலகத் தரத்தை மிஞ்சும் அளவிற்கு வருகிறது. ஓர் இலக்கிய எழுத்தாளன் மகா பெரிய வெளியீடு ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளது. அதுவும் இரண்டாம் பதிப்பு. மூன்றாம் பதிப்பு எனப் பல படிப்புகளை நோக்கிச் செல்கிறது. உண்மையில் அந்தப் பதிப்பக வெளியிடு சாதாரணமாக வெளியிட்டால் இருநூறு, முந்நூறு, ரூபாய்க்குத்தான் வெளியிடலாம். இருந்தாலும் அந்த விலை உயர்ந்த வெளியீடு வீற்பனையில் சளைக்கவில்லை
அப்படித்தான்பாக்கெட் புக்ஸ்
தயாரிப்பும், பி.கே.பி.வில் தரமான நாவலும் - 'மேட் ஃபார் ஈச் அதர்' என்பது போல்
இருக்கிறது.
தகரத்தைத் தங்க முலாம் பூசிக் கொடுக்கலாம். தங்கத்தைக் தகரமாக்க முடியாது.
இரண்டாவது நாவலில் நமது சூப்பர் ஸ்டார் பரத் நாவல் என அறிவித்து இருக்கார் நாவலின் ஆசிரியர் பட்டுக்கோட்டையார். நானும் உங்களை மாதிரித்தான் ஆவலுடன் காத்திருந்தேன். பிரபாகர் அவர்களிடம் இருந்து நாவல் வந்தது. நாவலின் தலைப்பு வேராக இருந்தது. ஒருவேளை நாவலை மாற்றி அனுப்பி விட்டாரோ....? ' என்று குழப்பத்தில் பிரபாகரைத் தொடர்பு கொண்டேன்.
அப்போது அவர் என்னிடம் , அசோகன்ஜி, நீங்க ரசித்த என் நாவல்களில் ஒன்றைச் சொல்லுங்கள்
என்றார்."
எனக்கு அவரது நாவல்களில் மிகவும் பிடிக்க நாவல்களில் ஒன்று 'பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்' - 'பக்கத்துக்குப் பக்கம் -வரிக்கு வரி சிரிப்பு மயம்.
'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படம் பார்த்தபோது எனக்கு பிரபாகர் எழுதிய 'பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்' தான் டாப் ஆப் த மைண்டில் வந்தது.
எனக்கு திரைப்படம் எடுக்கும் - வாசகர்களே! 'இயக்கும் அல்ல!’ 'எடுக்கும்’ வாய்ப்பு – வந்தால்’பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்' படத்தைத் தான் எடுப்பேன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக - எந்தக் காலத்திற்கும் ஏதாக இருக்கும். அந்த வரிசையில் மேலும் ஒரு வைரம்தான் இந்த நகைச்சுவை நாவல். இதை இப்ப படிங்க- பரத் நாவல் ஜனவரி முதல் தேதி அன்று? சந்திக்க வரும்.
அதுவரை....
அன்புடன்,
ஜி.அசோகன்
என்னுரை
அன்புள்ள உங்களுக்கு....
வணக்கம்.
தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகள் கடந்து போய் அவற்றின் வாசனை இன்னும் மிச்சமிருக்கின்றன.
பாக்கெட் புக்ஸ்
முதல் இதழை வாங்கிப் படித்த, வாங்காமல் படித்த அத்தனை பேரும் சொல்லி வைத்துக் கொள்ளாமல் தெரிவித்திருக்கும் முதல் கருத்து:
இதழ் சிறப்பாய் அமைந்திருக்கிறது. மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, நன்றி!
வந்த கடிதங்களில் இரண்டு பேர் மட்டும் இருபது ரூபாய் விலையா என்று கொஞ்சம் ஆச்சரியப்பட்டிருப்பதால்.... ஒரு விளக்கம்!
இந்தப் புத்தகம் வழக்கமான நியூஸ் பிரிண்ட் காகிதத்தில் அச்சிடப்படவில்லை. மேப்லித்தோ நேச்சுரல் ஷேட் என்கிற உயர்ந்த ரக காகிதத்தில் அச்சிடப்படுகிறது. புத்தகப் பதிப்பாளர்கள் கூட இந்தக் காகிதத்தை அதிகம் உபயோகிப்பதில்லை. காரணம்- அடக்க விலை அதிகமாகும் என்பதே. ஆனால் நமது ஆசிரியரும், பதிப்பாளருமான திரு. ஜி.அசோகனும் நானும் தரம் ஒன்றே குறியாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்து, எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் முடிவுகள் எடுத்தோம். புத்தகக் கடைகளில் இதேப் போன்ற காகிதத்தில், இதேப் போன்ற அட்டையுடன் இதே 96 பக்கங்களுக்கு ரூபாய் இருபதுக்கு ஏதாவது ஒரு புத்தகம் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்று விசாரித்துப்பார்த்தால் , "பாக்கெட் புக்ஸ் இதழின் தரம் தெளிவாகப் புரியும்.
அடுத்து.... நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதிய"மீண்டும் தொடரும்' நாவலில் மூன்று டிராக்குகளில் கதையை அமைத்து, இறுதியில் ஒரே கதைக்குள் அவற்றைக் கொண்டு வந்ததைக் குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறீர்கள். நன்றி!
இந்த இதழில் இடம் பெற்றுள்ள சென்னை அழகியும், சேட்டை கோபியும்' நகைச்சுவை நாவல் உங்களுக்கு கிச்சு கிச்சு மூட்டியதா என்று படித்து விட்டு எழுதுங்கள். தற்சமயம் தனது துப்பாக்கிக்கு எண்ணெய் போட்டு ரிப்பேர் செய்து கொண்டிருக்கும் பரத் அடுத்த இதழில் துப்பறிவார் என்று தெரிகிறது.காத்திருங்கள்.
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்.
1
பெண்: டாக்டர், என் கணவர் எப்பவும் டிவி பாத்துக்கிட்டே இருக்காரு.
டாக்டர்: இது ஒண்ணும் தப்பில்லையே?
பெண்: கரண்ட் கட்டானாலும் டார்ச் அடிச்சி பார்க்கிறாரே......
என்ன, மேற்கண்ட துணுக்கைப் படித்து விட்டு புன்னகை செய்கிறீர்களாக்கும்? ஆனால், என்னால் புன்னகை செய்ய முடியாது. என் நிலைமை அப்படி....
சாதாரணமாகவே என் முகம் இ.தி. குரங்கு போல இருப்பதாக கோபமான சமயங்களில் அப்பா சொல்வார், இப்போது என் முகத்தைப் பார்த்தால் இஞ்சியோடு பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய் எல்லாம் சேர்ந்து தின்ற குரங்கு போல இருப்பதாகச் சொன்னார்.
நல்ல வேளையாக அவர் இப்போது சென்னையிலிருந்து முன்னூத்தி நாற்பது கிலோ மீட்டர் தள்ளி எங்கள் கிராமத்தில் இருக்கிறார்.
எங்கள் கிராமத்திற்கு தவிட்டுப்பட்டி என்று நாமகரணம் சூட்டிய புண்ணியவான் யார் என்று தேடிப் பிடித்து புளியமரத்தில் கட்டி வைத்து உதைக்க வேண்டும்,
நான்கு கி.மீ சைக்கிள் மிதித்து நகராட்சி பள்ளிக்குப் போனால் அங்கே அந்த செவிட்டு வாத்தியார் பேச்சுக்குப் பேச்சு தவிட்டுப் பசங்களா!" என்றுதான் திட்டுவார்.
தவிட்டுப் பட்டியில் என் அப்பாவுக்கு சொந்தமாக எட்டு முழ வேட்டியை தரையில் காய வைத்ததைப் போல கொஞ்சம் நிலமும், மினியேச்சர் செட் போட்டது மாதிரி குட்டியாய் ஒரு வீடும், கன்றுக் குட்டியா பசுமாடா என்று சந்தேகப்படும் சைசில் மூன்று மாடுகளும், எப்போதும் சீக்கிலேயே கிடக்கும் இரண்டு கோழிகளும், ஏழு குஞ்சுகளும் இருந்தன. போன வாரம் வரையில்.
அவை எல்லாம் இப்போது மயில் வாகனனிடம் போய் விட்டது. விற்பனை செய்யவில்லை. எடுத்துக் கொண்டார்கள், கந்து வட்டி பிரச்சினை இல்லை. ஆலமரத்தடியில் பிள்ளையார் உட்கார வேண்டிய இடத்தில் நாட்டாமை உட்கார்ந்து வெற்றிலை எச்சியை சிவப்பாய் துப்பிவிட்டு சொன்ன தீர்ப்பின் விளைவு!
உப விளைவாக தற்சமயம் அப்பா மயில்வாகனனிடம்
அடமானத்தில் வேறு இருக்கிறார். அவமானமல்ல, அடமானம்தான்,
புரியவில்லை இல்லையா? புரிய கொஞ்சம் பின்னோக்கிப் போக வேண்டும். கவலை வேண்டாம். என் தொப்புள் கொடி அறுபடும் ஜனனக் காட்சி வரை போக வேண்டியதில்லை. பத்தே பத்து நாள் முன்பாக போகிறேன். ஃபாலோ மி.
நான் பி.எஸ்.சி பட்டதாரி. எல்லோருக்கும் மூன்று வருடங்களில் கிடைக்கும் இந்தப் பட்டம் எனக்கு ஐந்து வருடங்களில் கிடைத்தது. இரண்டு வருட கால தாமதத்திற்கான காரணத்தை - உங்களால் புரிந்து கொண்டிருக்க முடியும்.
என் அப்பாவுக்கு மட்டும் புரியவில்லை. கடைசி வரை புரிய வைக்கவுமில்லை.
நான் பரிட்சை எழுதிய விடைத்தாள் காணாமல் போய் விட்டது. கம்ப்யூட்டரில் கோளாறு, ரெஜிஸ்டரார் வெளிநாடு சுற்றுப் பயணம் போயிருக்கிறார் என்று டிசைன் டிசைனாக பொய்கள். பாவம்!