Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuzhanthaiyai Kappatrungal
Kuzhanthaiyai Kappatrungal
Kuzhanthaiyai Kappatrungal
Ebook97 pages36 minutes

Kuzhanthaiyai Kappatrungal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னையில் 1943 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் எஸ்.கோபாலன் என்றாலும் பாட்டியின் பெயர் தாங்கிய தன் வீட்டின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து பாமா கோபாலன் ஆனார்.

பி எஸ் ஸி பட்டதாரி. தான் படித்த ஏ எம் ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப்பிரவில் பரிசோதனைச் சாலையில் மூன்றாண்டுகள் உதவியாளராகப் பணி புரிந்தார். குரோம்பேட்டை எம் ஐடியில் ஒரு வருடம் அக்கவுன்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு கட்டுமானக் கம்பெனியில் 20 வருடங்கள் பணி.

1963 ஆம் ஆண்டு பேராசிரியர் நாரண துரைக் கண்ணன் அவர்களால் ‘பிரசண்ட விகடன்‘ பத்திரிகையில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகம், பின்பு அமுதசுரபியிலும் குமுதத்திலும் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார்.

குமுதத்தில் 13 வருடங்கள் பணி செய்து சுமார் 4000 பேட்டிக் கட்டுரைகள், 700 சிறுகதைகள், 11 நாவல்கள் மற்றும் பொதுக்கட்டுரைகள், துணுக்குகள், மற்றும் ஜோக்குகள் எழுதினார்.

தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். நகைச்சுவையும் கிரைம் எழுத்தும் இவரின் சிறப்பம்சங்கள்.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580128504593
Kuzhanthaiyai Kappatrungal

Read more from Bhama Gopalan

Related to Kuzhanthaiyai Kappatrungal

Related ebooks

Related categories

Reviews for Kuzhanthaiyai Kappatrungal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuzhanthaiyai Kappatrungal - Bhama Gopalan

    http://www.pustaka.co.in

    குழந்தையைக் காப்பாற்றுங்கள்

    Kuzhanthaiyai Kappatrungal

    Author:

    பாமா கோபாலன்

    Bhama Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    சில்லென்று காற்று வீசும் விடியற்காலை நேரம். பால் லாரிகள் வரும் சப்தம். தலையில் முண்டாசாகத் துண்டைக் கட்டிக்கொண்டு, தூங்கி வழியும் குடும்பஸ்தர்கள் கையில் பால் கார்டுகள்.

    ஏதோ ஒரு வீட்டில் சின்னக் குழந்தை வீறிட்டு அழும் ஒலி. மாட்டுத் தொழுவத்திலிருந்து (அம்மா) குரல் கொடுக்கும் பசு.

    அந்த உருவம் மெல்ல மெல்ல நடந்து வந்தது. கண்களை மறைக்கும்படி தலையில் டவலால் கட்டிக் கொண்டிருந்தது. கால்களில் செருப்பு கிடையாது.

    ஆனால் தோளில் ஒரு குழந்தையை மூடியபடி அதிராமல் நடந்தது.

    விருகம்பாக்கம் மார்க்கெட் அருகே ஒரு தெருவில் நுழைந்து, யாராவது பின்தொடர்கிறார்களா என்று பயத்துடன் பார்த்தது.

    ஒரு சைக்கிள்காரர் பெல் அடித்துக்கொண்டே போனார். காரியரில் செய்தித்தாள்கள்.

    சற்று வேகமாக நடை போட்டது அந்த உருவம். தோளில் குழந்தை சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது.

    அடுத்த சில நிமிஷங்களில் என்ன நடக்கப் போகிறது என்று அதற்குத் தெரியாது.

    'சாரதா அனாதைக் குழந்தை இல்லம்' என்று ஆர்ச் போல் இருந்த அந்த போர்டில் ட்யூப்லைட் வெளிச்சம் இருந்தது.

    வாசல் கேட் பூட்டப்படவில்லை. வழக்கம் இல்லை.

    அதை லேசாகத் திறந்து உள்ளே போனது அந்த உருவம்.

    வாசலிலேயே ஒரு ஆலமரம், அகலமாய் கிளைகளைப் பரப்பிக் கொண்டு.

    விழுதுகள் தொங்குகின்றன.

    அவற்றின் நடுவே சங்கிலியால் பிணைக்கப்பட்ட தொட்டில் ஒன்று காலியாக இருந்தது. சின்ன மெத்தை மட்டுமே.

    வந்த உருவம். குழந்தையை, மெதுவாகத் தொட்டிலில் கிடத்திவிட்டு, லேசாக ஆட்டிவிட்டு, ஆசையாய்ச் சின்ன முத்தம் இட்டது.

    வேகமாய் நடந்து, கேட்டைத் திறந்து, வெளியே போய்விட்டது.

    தொட்டில் ஆடினவுடன் போட்டிகோ லைட் எரிந்தது. வயதான பெண்மணி, வாசல் பக்கம் பார்த்துவிட்டு தொட்டில் குழந்தையை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

    2

    இனிமேல் கடன் கிடையாது. இது தான் கடைசி கிளாஸ் என்றபடி சாராயத்தை ஊற்றினான் வேலாண்டி.

    அண்ணே ரொம்ப துக்கமாயிடுச்சி. பணம் கிடைச்சவுடனே முதல்லே உங்க கடனைதான் அடைப்பேன். உளறலுடன் கூறிக் கொண்டே ஆதிமூலம் கிளாஸை ஆவலுடன் பற்றி அப்படியே வாயில் ஊற்றிக் கொண்டான், வேகமாக.

    காரமான ஊறுகாய்க்காக நாக்கு ஏங்கியது. சிங்காரம் ஏன் வரல்லே? ஏதோ பெரிய தொகை புரளப் போவதுன்னு பினாத்தினானே? ஆள் அனுப்பிக் கூப்பிடுவான். வரட்டும்.... கொலை பண்ணிடறேன். மூணு மாசமா இரு நூறு ரூபா தர்றேன் தர்ரேன்னு எங்கிட்டேயே டபாய்ச்சிக்கினு இருக்கானே... மூதேவி...

    சாராயக் கடை பெஞ்சிலேயே லேசாகச் சரிந்தான் ஆதிமூலம். சிங்காரத்தின் ஆள் ஒருவன் வந்து கொண்டிருந்தான்.

    அந்த நீல நிற பங்களாவில்-

    நீலப்படம் பார்த்துக் கொண்டிருந்த மைனர் மகேஷ் சற்றும் எதிர்பாராமல், தீடீரென்று பிரசன்னமானான் பாஸ்கரன்.

    டேய் மகேஷ்...

    திடுக்கிட்டுத் திரும்பினான் மகேஷ். அவன் எதிரே பாஸ்கரின் கையில் இருந்த கத்தி பளபளத்தது.

    ரிமோட் கண்ட்ரோல் நீலப்படத்தை மறைத்தது.

    எ...ன்...ன... பாஸ்... நடுங்கினான் மகேஷ்.

    ராஸ்கல்.... என் ஆட்கள் மூலம் கடத்தல் காரியம் செய்து கொள்ளை அடிச்சிருக்கே... என் பங்குப் பணம் தரல்லே... சீறினான்.

    வந்து பாஸ்..... நான்..... உங்க ஷேர் ... என்று இழுத்தபடி சோபாவின் குஷன் கீழே இருந்த துப்பாக்கியை எடுத்தான்.

    'சதக்' பாஸ்கரனின் கையில் இருந்த கத்தி, மகேஷின் வலது மணிக்கட்டில் இறங்கியது. துடித்தான். வலது கை தனியாகத் தொங்கித் துடித்தது. சட்டென்று வலது காலைத் தூக்கினான் மகேஷ் ஆவேசமாய். சரேலென நகர்ந்த பாஸ்கரன், நேரடியாக மகேஷ் மார்பில் கத்தியைச் செருகினான். 'ஹக்' சில வினாடிகளில் தலை தொய்ந்தது.

    காவல் இருந்த சிங்காரம், கத்தியை எடுத்து, கர்ச்சீப்பால் பாடியிலிருந்த கைரேகைகளைத் துடைத்துவிட்டு, பாஸ்... நீங்க ஓடிடுங்க. எனக்கு வேண்டாத ஆதிமூலத்தை இங்கே வரவழைச்சு, அவனை மாட்டி விட்டுர்றேன்... பாஸ்கரன் ஓடிவிட, ஆதிமூலம் அவசரமாய்த் தள்ளாடியபடி பங்களாவுக்குள் வந்தான்.

    கீழே கிடந்த கத்தியை எடுத்தான். ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. சோபா அருகே போனான். திடுக்கிட்டான்.

    வாசலுக்கு ஓடி வந்தபோது, போலீஸின் கைகளில் சிக்கினான். ஜீப்பில் ஏறினபோது, காம்பவுண்ட் அருகே சிங்காரத்தையும் சைக்கிளையும் பார்த்தான்.

    3

    ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து...

    தொட்டுத் தொட்டு எண்ணினான் ஆதிமூலம். இந்த இரும்புக் கம்பிகளை எவ்வளவு தடவைகள் எண்ணியாயிற்று.

    எண்ணிக்கை மாறாத இரும்புக் கம்பிகள்.

    Enjoying the preview?
    Page 1 of 1