Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

I Am Tired!
I Am Tired!
I Am Tired!
Ebook136 pages48 minutes

I Am Tired!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு திரைப்படத்திற்காக எழுதப்பட்ட திரைக்கதையை நாவல் வடிவில் தந்துள்ளேன். பணப் பற்றாக்குறையால் இத் திரைப்படம் தற்போதைக்கு ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நாவலை வாசித்துவிட்டு, தங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள். உங்கள் திறனாய்வுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி!

Languageதமிழ்
Release dateNov 29, 2021
ISBN6580150007719
I Am Tired!

Read more from Kavani

Related to I Am Tired!

Related ebooks

Related categories

Reviews for I Am Tired!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    I Am Tired! - Kavani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஐ யம் டயர்ட்!

    I Am Tired!

    Author:

    கவாணி

    Kavani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    குறிப்பு

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    குறிப்பு

    ஒரு திரைப்படத்திற்காக எழுதப்பட்ட திரைக்கதையை நாவல் வடிவில் தந்துள்ளேன். பணப் பற்றாக்குறையால் இத்திரைப்படம் தற்போதைக்கு ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நாவலை வாசித்துவிட்டு, தங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள். உங்கள் திறனாய்வுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி!

    ***

    மக்கள் அதிகமாகக் கூடும் மால், மார்க்கெட் போன்ற பல இடங்களையும், சிவப்புச் சட்டை அணிந்த சில குழுக்கள் ஆக்கிரமித்திருந்தன. அவர்கள் போவோர் வருவோர் எல்லாரையும் பிடித்து, கோவில்களில் மந்திரித்துக் கட்டும் தாயத்துடன் கூடிய சிவப்புக் கயிற்றை, மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறி இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தனர். ‘ப்ரீ’தானே என்று மக்களும் சிரித்த முகத்துடன் தங்களது கைகளை நீட்டி கட்டிக்கொண்டனர். அதில் ஒரு சிலர், எங்க வீட்டில் நாலுபேர். எல்லாருக்கும் தனித் தனியாகக் கொடுங்க என்று நான்கு கயிறுகளை வாங்கித் தங்களது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு சென்றனர்.

    1

    கொஞ்சமும் கசங்காத புதுப் புடவையைக் கட்டிக்கொண்டு, ‘அட்டென்சனில்’ அமர்ந்து, தொலைக்காட்சியில், ஸ்ட்ரெஸ், டிப்ரசன் மற்றும் மனநலக் குறைபாடுகள் அனைத்தையும் போக்கும் என்று கூறிச் சில அமைப்புகள் தாயத்துடன் கூடிய சிவப்பு நிறக் கயிறுகளை ரோட்டில் போவோர் வருவோருக்கெல்லாம் கட்டிவிடும் சம்பவம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. என்று தலைப்புச் செய்திகள் வாசித்துக்கொண்டிருந்தாள் ஒரு கிராப் வைத்த பெண்மணி.

    தொலைக்காட்சி அந்தப் பெண்மணியை முழுங்கிவிட்டு, அவரது கண்கள் காட்டிய பத்திரிகையாளரை மைக் சகிதம் காட்சிப்படுத்தியது.

    அந்தப் பத்திரிகையாளர், சிவப்புக் கயிறுகளைக் கையில் ஏந்தி, நின்றுகொண்டிருந்த சிவப்புச் சட்டை நபர்களில் ஒருவரின் வாயின்முன் மைக்கை நீட்டிக்கொண்டு கேள்விகளைப் பாய்ச்சினார்.

    நீங்க சொல்றதெல்லாம் நம்பலாமா? இந்த தாயத்தில் உண்மையாகவே சக்தி இருக்கா?

    இது எல்லாம் எங்க விஜயானந்தா சித்தர் மந்திரிச்சுக் கொடுத்த தாயத்துகள். பயங்கற சக்தி இருக்கு. நீங்களே கட்டிப் பாருங்க. கட்டின உடனே உங்க உடம்பிலும், மனசிலும் மாற்றம் தெரியும். என்று அந்த நபர் கூலாக பதில் கூறினார்.

    பத்திரிகையாளர் அடுத்த கேள்வியைத் தொடுத்தார், அவ்வளவு சக்தி இருந்தா இதை நீங்க நல்ல விலைக்கு விக்கலாமே?

    பாத்தீங்களா; நம்ப மக்கள்கிட்ட இதுதான் பிரச்சனை. விலை அதிகமா இருந்தாதான் தரம் நல்லா இருக்கும்னு அப்பாவித்தனமா நம்புறாங்க. ஆக்சுவலி, இத வச்சு நாங்க நினச்சா காசு பண்ணலாம். ஆனா எங்க விஜயானந்தா சித்தரோட விருப்பம், இலவசமாதான் கொடுக்கணும்னு. என்று அந்த நபர் செயற்கையாக ஒரு சிரிப்பை உதிர்த்து வைத்தார்.

    சரி… ப்ரீதானே. எனக்கும் ஒண்ணு கொடுங்க. என்று பத்திரிகையாளரும் வெட்கமே இல்லாமல் கை நீட்டினார்.

    அவரது கையிலும் கயிறு கட்டப்பட்டது.

    கண்களை மூடிப் பெருமூச்சு விட்ட பத்திரிகையாளர், ம்… ஆ… மனசு லைட் ஆனது மாதிரிதான் இருக்கு. நீங்களும் ஒரு தடவை டிரை பண்ணித்தான் பாருங்களேன். ‘ப்ரீ’தானே என்று நேயர்களைப் பார்த்துக் கண்ணடித்தபடி விடைபெற்றார்.

    இந்தக் கூத்தை எல்லாம் ஹாயாக சோபாவில் படுத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார் நடுத்தர குடும்பத் தலைவர் ஒருவர்.

    அவர் தன் மனைவியைப் பார்த்து, பவுனு! இது எங்க குடுக்குறாங்கன்னு பாரு. நம்ப பையனுக்கும் ஒண்ணு வாங்கி, கட்டிவிட்டுப் பார்க்கலாம். எப்பவும் ஏதோ மன அழுத்தத்தோடவே சுத்திட்டு இருக்கான். என்றார்.

    ஆமா! எப்ப பார்த்தாலும் அவனை திட்டிக்கிட்டே இருந்தா? அவன் என்ன, வேணும்னா வீட்டில் உட்காந்துட்டிருக்கான்? கொரோனா டைம்மில் வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க. அவனும் டிரை பண்ணிட்டுதான் இருக்கான். வேலைதான் கிடைக்க மாட்டீங்குதே! ம்ச்… ஏதோ நேரமே சரியில்லை… சும்மா இந்தக் கயிற்றைக் கட்டிட்டா மட்டும் எல்லாம் சரியாயிடுமா? எல்லாம் ஏமாத்து வேலை. என்றாள் பவுனு கடுப்புடன்.

    அந்த நேரம் பார்த்து, அவர்களது மகன் வீட்டிற்குள் நுழைந்தான்.

    அவனது தந்தை, என்னப்பா… ஏதாவது ஆச்சா? என்றார்.

    அவனோ சலிப்புடன், வேலை கிடச்சா நானே சொல்வேன். சும்மா தினம் அதையே கேட்டுட்டு இருக்காதீங்க? என்று கத்திவிட்டு, அவன் அறைக்குள் சென்று கதவை டமார் என்று மூடிவிட்டான்.

    மகனின் கோபத்தில் முகம் வாடிய அவனது தாயும், தந்தையும் ஏனோ அவன் கையில் கட்டியிருந்த சிவப்புக் கயிற்றைக் கவனிக்கவில்லை.

    2

    விஜய் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார். அந்த ஒற்றை அறையில் பல வகையான கணினிகள் இருந்தன. இரண்டுபேர் அதில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

    அதில் ஒருவன் விஜய்யிடம் சென்று, சில காகிதங்களை நீட்டியபடி, சார்… இப்போதைக்குப் பத்து டிஷ்ரிக்ட்ஸ் கவர் பண்ணியிருக்கோம். மொத்தம் 2 லட்சம் இருக்காங்க சார் என்று பவ்யமாகக் கூறினான்.

    விஜய் கண்களைத் திறக்காமல், பாட்டைக் கேட்டு தலையாட்டிக்கொண்டே, ஏஜ் வச்சு பில்டர் பண்ணுங்க. நம்ப டார்கெட் பத்து வயசு பொடுசுலயிருந்து ஐம்பது வயசு பெருசுங்க வரைக்கும்… என்றார்.

    அவன், ஓகே சார் என்று கூறிவிட்டு, அந்தக் காகிதங்களை எடுத்துக்கொண்டுத் திரும்பவும் கணினியில் அமர்ந்து கைகளுக்கு வேலை கொடுத்தான்.

    மற்றொருவன் எழுந்து விஜய் அருகில் வந்து, சார் என்று ஒருவித பயத்துடன் மெல்லிய குரலில் அழைத்தான்.

    விஜய் அவனைக் கண்டுகொள்ளாமல், தலையை ஆட்டிக் கண்களை மூடிப் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.

    அவன் திரும்பவும் ‘சார்’ என்று சத்தமாக கூப்பிட, விஜய் கண்களைத் திறந்து பார்த்தார்.

    அவரது கண்கள் மிகவும் கூர்மையாக இருந்தன. அவனை எரித்துவிடுவது போல் பார்த்தார். அவரது உடலும்கூட நன்கு இறுகிப் போயிருந்தது. மாநிறமாய் இருந்தாலும், நல்ல உயரத்துடன் பார்ப்பவர்களை மிரளச் செய்வதாக இருந்தது. அவருக்கு முன்னால் இரண்டுபேர் நின்றிருந்தனர். அவர்கள் சிங்கத்தின்முன் அமர்ந்திருக்கும் பூனைகளைப்போல் தென்பட்டனர்.

    Enjoying the preview?
    Page 1 of 1