Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolai, Innoru Kolai!
Kolai, Innoru Kolai!
Kolai, Innoru Kolai!
Ebook82 pages28 minutes

Kolai, Innoru Kolai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனைத்து கெட்ட பழக்கங்கள் உடைய விக்கிரமனை திருமணம் செய்யும் அப்பாவியான அஞ்சலி. விக்கிரமன் அஞ்சலியுடன் சேர்ந்து வாழ்ந்தானா? அஞ்சலிக்கும் வசந்திற்கும் என்ன தொடர்பு? விக்கிரமன் தன் ஆசைநாயகிக்காக செய்த செயலால், அவனுக்கு நேர்ந்த நிலையை வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580140608572
Kolai, Innoru Kolai!

Read more from R. Manimala

Related to Kolai, Innoru Kolai!

Related ebooks

Reviews for Kolai, Innoru Kolai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolai, Innoru Kolai! - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொலை, இன்னொரு கொலை!

    Kolai, Innoru Kolai!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    கெட்டிமேளம்… கெட்டிமேளம்… ஐயர் ஓங்கி குரல் கொடுத்ததுதான் தாமதம்… மண்டபமே அதிரும்படி மங்கள வாத்தியம் இசைக்கப்பட… மணமக்கள் மீது பூக்களும், அரிசி மணிகளும் மழையாய் பொழிந்த அந்த விநாடியில் அஞ்சலியின் கழுத்தில் மூன்றாவது முடிச்சை போட்டான் விக்கிரமன்.

    அஞ்சலி குனிந்ததலை நிமிரவில்லை. நெய் ஊற்றி, வளர்த்த ஹோமப் புகையோடு… மனதின் புகைச்சலும் சேர்ந்துக்கொண்டு கண்களோரம் துளிர்த்த முத்துக்களை நாசூக்காய்… துடைத்துக்கொண்டாள்.

    ஓய்… ஐயரே… ஒரேயடியாய் புகையவிடாதேயும்! ஒரு பெரியவர் குரல் கொடுத்தார்.

    மணவறையை வலம் வந்தபோது நிமிர்ந்துப் பார்த்தாள்.

    அங்கவஸ்திரத்தால் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்! தர்மலிங்கம்.

    ‘அப்பா… அழுகிறாரா?’

    ‘ஏன்?’

    கடைசி மகளையும் கரை சேர்த்துவிட்ட களிப்பில் துளிர்த்த ஆனந்த கண்ணீரா? இல்லை. இவளும் தன்னை விட்டுப்போகப் போகிறாளே… என்கிற சுயபச்சாதாபத்தில் எழுந்த அன்புக் கண்ணீரோ?

    ‘எப்படியோ அப்பா! உங்கள் சுமை இறங்கிவிட்டது. என் இதயத்தில் ஏறிவிட்டது.’

    மாமனார் புண்ணியகோடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சேரில் அமர்ந்தபடியே மணமக்களை ஆசீர்வதித்தார்.

    நல்லா இருங்க… அஞ்சலி, என் பையன் பார்க்கத்தான் வாட்டசாட்டமா ஆம்பளை மாதிரி வளர்ந்திருக்கான். ஆனா, ரொம்ப பிடிவாதம் பிடிக்கிற சின்னப் பையனாத்தான் இன்னமும் இருக்கிறான். நீ வந்துட்டேயில்ல… இனி உன் பொறுப்பு! சிரித்தபடி சொன்னார் புண்ணியகோடி.

    ஒரு சின்னப் புன்னகையுடன் மெதுவாய் பக்கவாட்டில் தலை உயர்த்திப் பார்த்தாள்.

    அப்பாவை நேர்பார்வை பார்த்தபடி நின்றிருந்த விக்கிரமனின் முகம் இறுகிக் கிடந்தது.

    ‘ஏன்?’

    ‘தன்னோட அப்பா எல்லார் முன்னிலையிலும் தன்னை சின்னப்பிள்ளை என்று சொல்லிவிட்டதாலா?’ தப்புதானே? இப்படியா எல்லாரும் இருக்கும்போது சொல்வார்கள்?

    அந்த கண நேரத்தில் விக்கிரமனின் மீது புதிதாய் ஒரு அன்பு பிறந்தது.

    அஞ்சலியின் இதயமும் கொஞ்சம் தெளிந்தது.

    ‘பழசை மறக்கணும். இனி இவர்தான் எனக்கு சகலமும்! திருமணம் என்பது வாழ்க்கையின் கடைசி சந்திப்பல்ல, ஒரு பிரயாணத்தின் துவக்கம். பிரயாணம் நல்லபடி அமைய டிரைவரும், வண்டியும் சிறப்புற அமைந்திருப்பது அவசியம். இல்லறவண்டி தடங்கலில்லாமல் ஓட… என் மனம் சுத்தப்படுதல் மிக அவசியம்’ பொங்கி வந்த பாலில் தண்ணீர் தெளித்ததுப்போல் இதுவரை ஆர்ப்பரித்த மனது சுத்தமாய் அடங்கியிருந்தது.

    ***

    முதலிரவு!

    அந்த வீட்டில் பெண்கள் யாருமில்லை. வேலைக்காரி பொன்னம்மா தவிர! அவள்தான் அஞ்சலிக்கு அலங்கரித்து கையில் பால் சொம்பு கொடுத்து அனுப்பி வைத்தாள்.

    அஞ்சலிக்கு உள்ளங்கை வியர்த்து பிசுபிசுத்தது. சொல்ல முடியாத ஒரு பயம் தொண்டைக் குழிக்குள் சிக்கிக்கொண்டு… அவஸ்தையாய் இருந்தது.

    கால்கள் தடுமாற… கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.

    ஆச்சர்யத்தால் விழிகள் விரிந்தன.

    ‘அவர் எங்கே?’

    மனதை போலவே கண்களும் அலைபாய திரும்பிப் பார்த்தவள்… இறுதிக்கட்ட அதிர்ச்சியில் சிலைபோல் நின்றுவிட்டன.

    அங்கே…

    பிரம்மாண்டமான சைஸில் என்லார்ஜ் செய்யப்பட்ட பெரிய கலர் போட்டோ… படுக்கைக்கு நேர் எதிர் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது. ஒயிலாக சிரித்தபடி ஒரு அழகி கண்ணடித்து, உதடு சுளித்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்பெண்ணின் உதடு

    Enjoying the preview?
    Page 1 of 1