Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ullathai Kollathey!
Ullathai Kollathey!
Ullathai Kollathey!
Ebook127 pages1 hour

Ullathai Kollathey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

N.C. Mohandoss has written more than 300 novels, more than 500 short stories, 23 novelettes, more than 3000 articles and 4 TV dramas. He has written on social topics and has to his credit more than 100 books published which have appeared in all leading Tamil magazines and newspapers. His writings are dedicatd for the students of Annamalai university tamilnadu for reaserach to obtain Phd.

N.C.Mohandoss has been conffered with doctorate for community services by The world tamil university, Meryland.

Mohandoss attributes his inspiration to the popular "Thuglak" magazine and reveres "Saavi" who encouraged him to write more and more. His success is also due to the efforts of Mr Ramesh of 'DinaMalar' and the constant support and guidance of his friend, Mr Manohar.

N.C.Mohandoss as the Founder of INDIAN FRONTLINERS, KUWAIT, a SERVICE Organisation registered with the Indian Embassy, Kuwait, has pioneered a number of social service activities and extended financial help to several orphanages, hospitals, and senior citizen homes, poor students for their educational and also for the welfare of stranded Indian workers in Kuwait.

Awarded by Dr.Kalam :

At the diamond jubilee of Anbu Paalam service organization function held on 4th oct 2013 --In acknowledgement of the support and assistance extended by NC.Mohandoss to ‘Anbu Paalam’ for the past 20 years, Dr .Kalam felicitated Founder & Writer N.C.Mohandoss with a Momento and Gold Medal . (matter and photo attached).

Mohandoss has also compiled, edited and released 23 parts of FRONTLINERS book, on Talented Indians in Kuwait, India tourism, Indian Embassy services, Indian educational institutions in Kuwait ,community services,Indian Achievers Globally and about Enviroment protection.

Mohandoss hails from a remote village called Nambukuruchy in Tiruchi District, Tamil Nadu which still lacks the post office.

He is working for Kuwait National Petroleum Company . Mohandoss feels a sense of pride in owning that his success is due to the support, patience and guidance of his wife ARULMOZHI, and their only daughter VINU, who correctly reads his mind and reflects his ambitions and aspirations in every way

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580132405794
Ullathai Kollathey!

Read more from Nc. Mohandoss

Related to Ullathai Kollathey!

Related ebooks

Related categories

Reviews for Ullathai Kollathey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ullathai Kollathey! - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    உள்ளத்தைக் கொல்லாதே!

    Ullathai Kollathey!

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author//nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    ஜனவரி மாதத்தில் அப்படி ஒரு காற்று அடிக்கிறது. அப்படி ஒரு மழை பெய்கிறது என்றால் இயல்பு தவறுகிறது-எங்கோ-ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்றுதான் அர்த்தம்.

    அதுவும் மாலை ஆறு மணிக்கே கண்ணை மறைக்கும் இருட்டு. இருட்டின் இடையே புகுந்து விளையாடும் மின்னல்! மார்கழி எனும்போது தெருவில் பக்தி பரவசப்படும்.

    வாசல் நிறைய கோலங்களும், அதன் மேல் பரங்கிப் பூவும் அமர்க்களப்படும் கோவிலில் பஜனை! வாசக சாலையில் டிவியின் 'கந்தல்' படத்திற்காக ஒரு கும்பல் தலையில் முக்காடுடன் செருமிக் கொண்டிருக்கும்.

    அன்று எதுவுமே இல்லை. தெருவில் நடமாட்டமில்லாமல் வெறிச்! விளக்குகளுக்கும் பயம் தோன்றியிருக்க வேண்டும். அவைகளும் கண்களை மூடிக் கொண்டு நனைந்தன.

    அந்த வீட்டின் ஹாலில் டிவி ‘பார்ப்பாரற்று' விளம்பரம் பண்ணிக் கொண்டிருந்தது. விளம்பரங்களுக்கு ஒதுக்கின நேரம் போக, போனால் போகிறதென்று சீரியலும் அவார்டு படம் போல நகர்ந்து கொண்டிருந்தது.

    சோபாவில் ஒருக்களித்து படுத்திருந்த வைதேகி, சட்டென வெட்டின மின்னலில் கரண்ட் போய்விட, இடுப்பைப் பிடித்தபடி எழுந்து விந்தி விந்தி நடந்து, பூஜை அறைக்குப் போய் தீப்பெட்டி தேடி குத்துவிளக்கில் முட்டிக் கொண்டு அம்மாடி! என்று தரையில் விழுந்தாள்.

    வைதேகி! என்னாச்சுடி?

    நமச்சிவாயம் இருட்டில் ஓடி வர, ஐயோ! நீங்களும் வேற எம்மேல விழாதீங்க. என்று அலறினாள்.

    இந்த வீடு எப்போதான் குணம் பிடிக்கப் போறதோ தெரியலே!

    கடவுளே! ஆரம்பிச்சுட்டியா நீ? இப்போ என்னாகிப் போச்சுன்னு இப்படி...?

    இன்னும் என்ன ஆகணும்? இந்த வீட்டில் என்ன நாதி இருக்கு? எல்லாத்துக்கும் நான் வேணும்! நான் போய்ச் சேர்ந்தாதான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்!

    சீ! ஏண்டி இப்படி பேசறே...?

    அப்புறம் என்னவாம்? அவனுக்கு முப்பதுக்கு மேலாவுது. கட்டிக்கன்னு சொன்னாக் கேட்டாதானே? வீட்டுக்கு ஒருத்தி விளக்கேத்த இருந்தால்...

    பிரகாசமாதானிருக்கும். அது நமக்குத் தெரியுது. ஆனா கண்ணனுக்குத் தெரியலியே! அவன் எதுக்காக இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறானோ யார் கண்டது!

    அவன் எப்படியோ போகட்டும். மகளையாவது வீட்டோட வச்சுக்கலாம்னு பார்த்தா - அவளையும் டெல்லி மாப்பிள்ளைக்குக் கொடுத்து விரட்டிட்டீங்க! அவ அங்கே தனியா என்ன கஷ்டப்படறாளோ!

    அவளுக்கென்ன கஷ்டம்! சாந்தி சொகுசாதான் இருக்கா!

    ஏங்க! அவகிட்ட பேசி நாலு நாளாச்சு. போன் போடுங்க!

    வேணான்டி! போன மாசமே இரண்டாயிரம் பில்லுன்னு சொல்லி கண்ணன் முறைச்சான்!

    அப்போ அவனை சீக்கிரம் கட்டிக்கச் சொல்லுங்க! எனக்கு பேச்சுத் துணைக்கு யார் இருக்காளாம்...?

    மறுபடியும் வைதேகி ஆரம்பித்து விட பக்கத்து அறையில் அமர்ந்திருந்த மூத்த மகன் கண்ணனுக்கு அதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சட்டையை மாட்டிக் கொண்டு கார் சாவியுடன் கிளம்பினான்.

    கண்ணா! எங்கே இந்த நேரத்துல...?

    ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு!

    இந்த மழையிலேயா?

    அவன் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் வாசலுக்கு ஓடி காரை ஸ்டார்ட் பண்ண, இப்போ திருப்தியாடி? என்று முணுமுணுத்தார்.

    நான் என்ன பண்னேன்!

    ஹும்! அவனுக்கு ஓடறதுக்கு ஒரு ஆபீஸ் இருக்கு! என்று முனகினவர், வைதேகியின் கோபத்துக்கு ஆளாக வேண்டாமென்று.

    சே! என்ன ஒரு காத்து... என்று ஜன்னலிடம் போனார்.

    தெருவில் மழைக்கீற்றுக்கள் சுழன்று சுழன்று விசிறிக் கொண்டிருந்தன. எதிர்த்த வீட்டு மரத்தடியில் நாய் முனகினபடி கொட்டாவி விட்டது. மின்சாரம் போனதால் தெருவெல்லாம் அமைதி! மழையின் சலசலப்பும், மரத்தின் சொட்டு நீரும் அந்த அமைதியை ஆக்ரமித்திருந்தன.

    கண்ணன் ஓடிப்போய் கதவைத் திறந்து காரில் ஐக்யமாகி ஸ்டார்ட் பண்ணினான். கண்ணாடிக்குள் வியர்த்திருக்க, துடைத்தான். வைப்பர் போட்டு, ஹெட் லைட்!

    ஜன்னலை மூட வேண்டி கொக்கியை விடுவித்த... நமச்சிவாயத்திற்கு காரின் பின் சீட்டில் என்னவோ வித்தியாசமாய் இருப்பது போலத் தோன்றிற்று.

    அது என்னவோவா இல்லை யாரோவா என்று யூகிக்கும் முன்பு கார் விருட்டென்று கிளம்பிப் போயிற்று.

    அவரால் அந்தக் காட்சியை ரீப்ளே செய்து பார்க்க முடியவில்லை. ஒரு நிழல்! ஆனால் அதனிடம் ஒரு அசைவு! அது நிழலா இல்லை, பெண்ணின் தலைமுடியா என்று அனுமானிப்பதில் குழப்பம் இருந்தது.

    பெண்ணா? அவனுடைய காரிலா...? அவரால் நம்ப முடியவில்லை.

    யோசிக்க யோசிக்க, சே! நம் பையன் அப்படிப்பட்டவனில்லை அவன் பக்கா ஜென்டில்மேன்! அது வெறும் பிரமையாயிருக்கும் அல்லது மழையின் காரணமாய் கண்ணாடியில் வழிந்த நீரில் அப்படித் தோன்றியிருக்கலாம்.

    ஏங்க! இன்னும் அங்கே என்ன பண்றீங்க!

    இதோ வந்துட்டேன் என்ன ஜன்னலை மூடி விட்டு, அந்த நிழலை மறந்து விட்டு நமச்சிவாயம் உள்ளே ஓடினார்.

    இரவு படுக்கப் போகும் போது வைதேகி, இந்த ஜெகனுக்கு எப்போ லீவு ஆரம்பிக்குது... என்றாள். அவள் சாமானியத்தில் தூங்க மாட்டாள்.

    தெரியல. இன்னும் ரெண்டு வாரத்துல வரேன்னு சொன்னதா ஞாபகம்!

    இப்போவாவது அவன் ஒழுங்கா படிக்கிறானோ என்னவோ!

    படிக்கலேன்னா போறான்! நம்மால அதுக்கு என்ன செய்ய முடியுமாம்! இன்ஜினியரிங் காலேஜ்ல பணம் கட்டி இடம் வாங்கித் தந்தாச்சு. மாசா மாசம் செலவுக்கு அனுப்பிட்டும் இருக்கோம். அதுக்கு மேலயும் அவன் படிக்கலேன்னா அது அவனோட தலையெழுத்து! நீ பேசாம தூங்கு!

    இந்த சாந்தி ஏன் போனே பண்ணலே...

    தெரியலே! என்று நமச்சிவாயம் இழுத்துப் போர்த்திக் கொண்டார்.

    ஆமா! எது கேட்டாலும் தெரியலே!

    அப்புறம் என்னை என்ன பண்ணச் சொல்றேடி! மூத்த மகன் கல்யாணம் வேணாம்னு அலையறான். இன்னொருத்தன் இன்ஜினியரிங்கில் அரியர்ஸை மூட்டை கட்டி வச்சிருக்கான். மகளை டெல்லிக்கு கட்டி அனுப்பி விட்டு - கொஞ்சங்கூட பொறுப்பில்லாம படுத்திருக்கீங்க! அவ போன் பண்ணி நாலு நாள் இருக்குமா?

    ஏன் ஒரு வாரமாச்சு...!

    ஒரு வாரமா ஏன் அவ பேசலே? அவளுக்கு என்ன ஆச்சோ என்ன உடம்புக்கோ! என்று அவசரமாய் படுக்கையை விட்டு எழுந்தாள். நா உடனே அவகிட்ட பேசியாகணும்!

    "வேணான்டி. காலைல பார்த்துக்கலாம்! இப்போ

    Enjoying the preview?
    Page 1 of 1