Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Putham Puthu Malai!
Putham Puthu Malai!
Putham Puthu Malai!
Ebook98 pages33 minutes

Putham Puthu Malai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுதந்திரப் போராட்ட குடும்பத்தில் பிறந்த பல் மருத்துவர் விஷ்ணு. இலவச மருத்துவ சேவை புரிபவன். மருத்துவ ஆராய்ச்சியில் மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்கிறான், அதில் அவனது உரிமையை இழக்க நேரிடுகிறது. இவனது பள்ளி நண்பன் நடராஜன், அரசியல்வாதியின் சதியில் ஏமாற்றப்பட்டு கனவை தொலைத்தவன். தற்கொலை வரை சென்ற நடராஜனுக்கு விஷ்ணு உதவி புரிவானா? இந்த இருவரின் உரிமையையும், கனவையும் கலைத்தது யார்? அவனது முகத்திறையை கிழித்து, அவர்களது வாழ்வில் வெற்றி அடைந்தார்களா? நாமும் புத்தம் புது மாலையில்...

Languageதமிழ்
Release dateMar 5, 2022
ISBN6580132407641
Putham Puthu Malai!

Read more from Nc. Mohandoss

Related to Putham Puthu Malai!

Related ebooks

Reviews for Putham Puthu Malai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Putham Puthu Malai! - NC. Mohandoss

    https://www.pustaka.co.in

    புத்தம் புது மாலை!

    Putham Puthu Malai!

    Author:

    என்.சி. மோகன்தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    விஷ்ணு பல் மருத்துவமனை.

    இந்த போர்டுக்கும், இருப்பிடத்துக்கும் சம்பந்தமில்லாதபடி, பத்தடிக்கு பத்து சதுரத்தில் அந்தக் கட்டிடம்! சுற்றிலும் கம்பிவேலி. முன்பக்கம் ஆஸ்பெஸ்டாஸ்! கொஞ்சம் நடுவில் கான்கிரீட் உட்புறம், பின்புறம் கூரை!

    வெயில் தாக்கத்திற்கு ஈடுகொடுக்க சற்று அங்கங்கே மரங்கள். கட்டிடத்தின் தலையில் காய்கறி, பூச்செடி, கொடிகள்!

    அறைக்குள் இரண்டு நாற்காலி, பல் சீக்காளியை பழுது பார்க்கும் உபகரணங்கள் மற்றும் படுக்கை வசதி கொண்ட ஆசனம்.

    நெட், கேபிள் என ஆரம்பித்து பிஸா வரை வளர்ந்துள்ள அந்த கிராமத்தில் விஷ்ணு கிளினிக் வைக்க கிடைத்தது இக்கட்டிடம் மட்டுமே. இதுவும் அரசாங்க இலவச வீட்டுமனை திட்டத்தில் கட்டப்பட்டு, விரிசலும் காரை பெயர்ந்து கறையுமாய், பூனை, ஆடு, மாடு, நாய்களுக்கு அடைக்கலம் தந்து கொண்டிருக்க,

    இவன் வந்து செப்பனிட்டான். மராமத்துக்கு பேசாமல் புதிதாகவே கட்டியிருக்கலாம் என அலுப்பாயிற்று.

    அப்போது பெரியவர் ஒருவர் நரை, கண்களில் புரையுமாய் அமர்ந்திருக்க,

    ஆ... காட்டுங்க!

    அ இல்லை. ஆ ஆ ஆ...!

    அவர் திறந்ததும் பற்களுக்கு பதில் காவி கப்படித்தது. கடவாப்பல்லுல ஒரே வலி தம்பி.

    அவன் கடைவாய் பல்லை... தேடி சுரண்டி, கழுவி, சந்து பொந்துகளை அடைப்பதற்குள் களைப்பாயிற்று. வியர்த்து கை கால்களில் அலர்ச்சி.

    இந்த வலி ஏன் தம்பி...?

    ம்...? நா சொன்னா அனுசரிப்பீகளா...?

    சொல்லுங்க.

    முதல்ல இந்த வெத்திலை, புகையிலையை நிறுத்தணும். முறுக்கு, கடலைமிட்டாய், கறி எலும்புன்னு அலையப்படாது! தினம் ரெண்டு வாட்டி பல் விளக்கணும்! அவர் அதை காதில் வாங்கத் தயாரில்லாமல், பீசு எவ்ளோ?

    அம்பது!

    அம்பதா? என்று மயக்கமானார். ஏம்ப்பா... நீ டாக்டரு கண்ணபிரானோட மவனாம்மே... அவருல்லாம் பீசே வாங்க மாட்டார் தெரியுமில்லே...? அவரு பேரை காப்பாத்தாட்டியும் பரவாயில்லை... கெடுத்துராத. இந்தா வச்சுக்கோ! என்று கசங்கின பத்து ரூபாய் நோட்டை திணித்துவிட்டு அவர் பாட்டிற்கு நடந்தார்.

    விஷ்ணுவிற்கு குமட்டியில் குத்தினது போலிருந்தது. பத்து ரூவா!

    கஷ்டப்பட்டு, கொள்ளையர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கட்டி, MDS சீட் வாங்கிப் படித்து, வெளியே வந்தால் வேலை இல்லை. ஐயாயிரத்துக்கும், பத்தாயிரத்துக்கும் கூவி கூவி விரட்டுகிறார்கள்.

    எங்கே போனாலும் முன் அனுபவம் கேட்கிறார்கள். யாருமே வேலை தராமல் முன் அனுபவம் எப்படி வரும்? அடுத்தது கிராமத்தில் போய் சேவை செய்... பிறகு வேலை பற்றி யோசிப்போம் என்கிறது அரசாங்கம்.

    சரியென்றுதான் இந்த சுயதொழில்!

    இங்கே கிராமத்தில் உபகரணங்களுக்கும், மருந்துக்கும்கூட காசு பெயர்வதில்லை. இதற்கெல்லாம் காரணம் அவனது தந்தை டாக்டர் கண்ணபிரான்!

    அவர்தான் இவனுக்கு பலம். பலவீனமும் கூட!

    சுதந்திரப் போராட்ட தாத்தாவுக்குப் பிறந்த கண்ணபிரானால் தியாகி பட்டம் பெற முடிந்ததே தவிர பணம் பண்ண முடியவில்லை...

    தாத்தா தன் உயிலில் சொத்து, வீடு, வாசல் எழுதி வைத்தாரோ இல்லையோ... ‘மருத்துவம் படித்து பிறந்த கிராமத்திற்குத்தான் சேவை செய்யணும்’ என்று ஓலையில் ஆணி அடித்துவிட்டுச் சென்றுவிட்டார். கண்ணபிரானுக்கு அதை மீறமுடியவில்லை.

    கிராமத்து மக்கள் டாஸ்மாக், சினிமா, புகைக்கு அள்ளி வழங்கினாலும், இவரிடம் வரும்போது மட்டும் பரம ஏழையாகிவிடுவர். அதனால் அவர்கள் கொடுப்பதை வாங்குவதற்குக்கூட, உண்டியல் வைத்து அதில் போட்டுவிடச் சொல்வார்.

    அது அவர்களுக்கு இன்னும்கூட வசதியாயிற்று. கொஞ்சம்கூட சங்கோஜமோ, லஜ்ஜையோ இல்லாமல் சில்லரையோடு நழுவுவதும் உண்டு.

    மருத்துவம் படித்தால்தானே ‘உயிர்’ ஊசலாடும்? பேசாமல் பொறியாளர் ஆகி டவுனுக்கோ, வேறு மாநிலத்திற்கோ அல்லது நாடுவிட்டு நாடோ

    Enjoying the preview?
    Page 1 of 1