Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poovizhi Vaasalile!
Poovizhi Vaasalile!
Poovizhi Vaasalile!
Ebook133 pages59 minutes

Poovizhi Vaasalile!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வீடு வீடாக சென்று பொருட்களை விற்கும் சேல்ஸ் கேர்ள் மதுமிதா. வெளியூரிலிருந்து வந்து நகரத்தில் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியுள்ளாள். அவளது சேல்ஸ் டீம் லீடருக்கு அவள் மீது ஒரு கண். பலமுறை அவளிடம் அசிங்கமாய் வழிந்து அவமானப்பட்டிருக்கிறான். அதன் காரணமாய் அவளைப் பழி வாங்கும் நோக்கத்தோடு மோசமான கல்லூரி மாணவர்கள் அதிகம் தங்கியிருக்கும் தெருவிற்கு அவளை வியாபாரம் செய்ய அனுப்புகிறான். அவள் மறுக்க, “அப்படியென்றால் என்னைக் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு” என்கிறான்.
அவனை முறைத்து விட்டு, தைரியமாய் அந்த தெருவிற்குச் செல்கிறாள். அங்கு ஒரு வீட்டில் இருந்த நடுத்தர வயதுக்காரர், தன் மனைவியிடம் கேட்க, “அவள் மொத்தப் பொருட்களையும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்கிறாள். அவரும் அதே போல் செய்கிறார். அவள் மேற் கொண்டு எந்த வீட்டிற்கும் செல்லாமல் திரும்புகிறாள். டீம் லீடர் தொடர்ந்து அவளை அதே தெருவிற்கு அனுப்ப ஒவ்வொரு முறையும் அந்த நடுத்தர வயதுக்காரர் மனைவியின் சம்மதத்தோடு மொத்தப் பொருட்களையும் வாங்கிக் கொள்கிறார்.
ஒரு நாள் வேறொருத்தர் மூலமாக அந்த நடுத்தர வயதுக்காரரின் மனைவி இறந்து ஒன்றரை வருடமாகிறது, என்னும் தகவலைத் தெரிந்து கொண்டு கோபமாக வருகிறாள் மதுமிதா. அடுத்த நடந்த அனைத்துமே படிப்பவர்களை புருவம் உயர்த்தச் செய்யும்.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580130005256
Poovizhi Vaasalile!

Read more from Mukil Dinakaran

Related to Poovizhi Vaasalile!

Related ebooks

Reviews for Poovizhi Vaasalile!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poovizhi Vaasalile! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    பூவிழி வாசலிலே!

    Poovizhi Vaasalile!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    மாலை ஏழு மணி.

    தான் தங்கியிருக்கும் வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டல் கேட்டைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் மதுமிதா. வாட்ச்மேன் கூண்டுக்குள் அமர்ந்து மொபைலைக் குடைந்து கொண்டிருந்த செக்யூரிட்டி தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு, எழுந்தோடி வந்து அசிங்கமாய்ச் சிரித்தபடி குட் ஈவினிங் மேடம் என்றான். இளம் வயதுக்காரனான அவன் கண்களிலும், சிரிப்பிலும் ஒளிந்திருக்கும் கள்ள எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடியாதவளா என்ன அவள்?

    பதிலுக்கு குட் ஈவினிங் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு உள்ளே போனாள்.

    தான் நடந்து வரும் போது அவன் நிச்சயம் தன் பின்னழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பான் என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்த மதுமிதா பத்தடி நடந்ததும் சட்டென தலையைத் திருப்பிப் பார்த்தாள்.

    அவள் நினைத்ததுதான் நடந்து கொண்டிருந்தது. விழிகளில் உஷ்ணத்தை நிறைத்துக் கொண்டு அவனை எரிப்பது போல் அவள் பார்க்க,

    ஹி...ஹி...ஹி.. அசடு வழிந்தான்.

    உன்னோட கண்ணில் கொள்ளிக்கட்டையைச் செருகணும்டா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு, சத்தமில்லாமல் அவனைக் காறி உமிழ்ந்து விட்டு, மாடிப் படியேறி தன் அறைக்குள் வந்த மதுமிதா கைப்பையை டீப்பாயின் மீது வெறுப்போடு எறிந்தாள். நாட்டுல ஒரு பயல் யோக்கியனில்லை

    ஏதோ மாத நாவல் புத்தகத்தில் மூழ்கிக் கிடந்த அவளது அறைத்தோழி வித்யா, வாசிப்பை நிறுத்தி விட்டு, என்னடி வரும் போதே சூடா வர்றே?... என்னாச்சு? கேட்டாள்.

    ஹூம்...உலகத்துல எந்த வேலைக்கு வேணாலும் போகலாம்!... ஆனா வீடு வீடாய்ப் போய் பொருட்களை விற்பனை செய்யும் சேல்ஸ்கேர்ள் வேலைக்கு மட்டும் போகவே கூடாது சாமி..!... அப்பப்பா...நாம கொண்டு போற பொருட்களுக்கு விலை கேட்கறானுகளோ இல்லையோ...நம்மோட விலை என்ன?ன்னு மொதல்ல கேட்கறானுக!... ச்சை...லோகத்துல ஒரு ஆம்பளை கூட யோக்கியன் இல்லை!... அட...இந்த செக்யூரிட்டி...பார்க்கிற பார்வையிலேயே என் கூட குடித்தனம் நடத்தி...புள்ளைகுட்டிகளைப் பெத்துடறான்!... கண்ணா அது?... தீவட்டி பொரிந்து தள்ளினாள்.

    ஆஹா...நீ சொல்றது இந்த நாவலை விட சுவாரஸ்யமாயிருக்கே? என்றபடி கையிலிருந்த நாவல் புத்தகத்தை கீழே வைத்து விட்டு மதுமிதாவிடம் வந்தாள் வித்யா.

    மொத்த ஆண் இனத்து மேலேயே கோபம் கோபமாய் வருது வித்யா!

    என்னாச்சு இன்னிக்கு?... ஸம்திங்...ஏதோ நடந்திருக்கு...அதான் நீ இந்த வெடி வெடிக்கறே! மதுமிதாவின் தோளில் கை போட்டவாறே கேட்டாள் வித்யா.

    அந்த டீம் மேனேஜர் கருங்குரங்கு இன்னிக்கு நேரடியாவே கேட்டிடுச்சு!... அதான் உடம்பெல்லாம் எரியுது! என்றாள் மதுமிதா.

    அடப்பாவி...இத்தனை நாளு ஜொள்ளு மட்டும் விட்டவன் இன்னிக்கு நேரடியாவே விஷயத்துக்கு வந்துட்டானா?... பலே...பலே...நல்ல முன்னேற்றம்தான்

    ஆமாம் வித்யா!... இன்னிக்கு காலேஜ் புதூர்ல ஃபீல்ட் வொர்க்!... சோப்புத் தூள் சேல்ஸ்!... அந்த ஏரியாவுல இருக்கற மூணாவது தெருவிலும்...நாலாவது தெருவிலும்..முழுக்க முழுக்க காலேஜ் பசங்கதான் தங்கியிருக்காங்க!... உண்மையைச் சொல்லணும்னா...அவனுக எல்லோருமே ரவுடிப் பசங்க!... .ஒண்ணு காலேஜ் ஹாஸ்டல்ல இருந்து துரத்தி விடப்பட்டவனுகளா இருப்பானுக!... இல்லை ஹாஸ்டலோட கண்டிஷன்ஸ் பொறுக்க முடியாம வந்தவனுகளா இருப்பானுக!...

    சரி...அதுக்கென்ன? வித்யா விஷயம் புரியாமல் சாதாரணமாய்க் கேட்க,

    அதுக்கென்னவா?... கடந்த ஆறு மாசத்துல எங்க டீம் பொண்ணுக மூணு பேர் மேலே அந்தத் தெருப் பசங்க கை வெச்சிட்டானுக!... ஒருத்தி...தப்பிச்சோம்...பொழைச்சோம்னு ஓடி வந்திட்டா!... ஒருத்தி அவனுகளைச் சமாளிக்க முடியாம பலியாயிட்டா!... மூணாவது பொண்ணு என்ன ஆனாள்!ன்னே தெரியலை...ஆளும் திரும்பி வரலை...பொருட்களும் திரும்பி வரலை!...

    அடப்பாவிகளா...கொன்னு கின்னு போட்டுட்டானுகளோ என்னவோ? வித்யா அங்கலாய்த்தாள்.

    அப்படித்தான் நாங்க சந்தேகப்பட்டு போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்தோம்!... போலீஸ் விசாரிச்சதுல அந்தப் பொண்ணு சொல்லிக்காம கொள்ளாம சொந்த ஊருக்கே ஓடிப் போயிடுச்சாம்...அங்க போய் வயல்ல வேலை பார்க்குதாம்!

    சரி... இன்னைக்கு உனக்கு என்னாச்சு?ன்னு கேட்டா நீ ஏதேதோ கதை சொல்றியே?... என்ன நடந்தது?... அதை சொல்லு முதல்ல!... உன் மேலே எவனாவது கையை வெச்சிட்டானா?

    அப்படியெல்லாம் எதுவுமில்லை!... ..இன்னிக்கு காலைல எல்லோரும் குடோன்ல அசெம்பிள் ஆனதும் அந்த டீம் மேனேஜர்...எல்லோருக்கும் ஏரியா பிரிச்சுக் குடுத்தான்!... அப்படிப் பிரிக்கறப்ப எனக்கு வேணுமின்னே அந்த காலேஜ் புதூர் மூணாவது தெருவையும்...நாலாவது தெருவையும் குடுத்தான்! சொல்லும் போதே மதுமிதாவின் கண்கள் கலங்கிப் போயின.

    அடப்பாவிப் பயலே!

    நான் மாற்றிக் குடுக்கச் சொல்லிக் கேட்டேன்!... அதுக்கு அவன் அப்ப கொஞ்சம் வெய்ட் பண்ணு!... எல்லோருக்கும் பிரிச்சுக் குடுத்ததும் வேற ஏரியா ஏதாவது மீதமிருந்தா உனக்குப் போட்டுத் தர்றேன்னு சொன்னான்!... நானும் அவன் சொன்னதை நம்பி வெய்ட் பண்ணினேன்!... கடைசியில் எல்லோரும் போனதும்... நீ அந்த மூணாவது தெருவுக்கும்...நாலாவது தெருவுக்கும் போகாம இருக்கணும்னா...கொஞ்ச நேரம் என் கூட அட்ஜஸ்ட் பண்ணு!... .குடோன்ல இப்ப நானும் நீயும் மட்டும்தான் இருக்கோம்! ன்னான்!... நான் சட்டுன்னு கீழ் குனிஞ்சு செருப்பைக் கையில் எடுத்தேன்!... அதுக்கு ஓ...அவ்வளவு திமிரா உனக்கு!... அப்ப அந்த காலேஜ் பசங்க தெருவுக்கே போ...அவனுக நல்லாவே உன்னோட திமிரை அடக்குவானுக!... இங்க நான் ஒருத்தன்தான் உன்னை நோண்டுவேன்...அங்க போய்ப்பாரு...ஒரே சமயத்துல ஏழெட்டு பேர் நோண்டுவானுக!ன்னு சொல்லிட்டு விடு...விடுன்னு போயிட்டான்!...

    நீ செருப்பைக் காட்டியதோட நிறுத்தியிருக்கக் கூடாது!... ராஸ்கலை நாலு சாத்து சாத்தியிருக்கணும்!.என்றாள் வித்யா.

    என்னம்மா பண்றது?... அதைச் செய்திருந்தா என்னை வேலையிலிருந்து கழட்டி விட்டுடுவான்!... அப்புறம் நான் ஊர்ல இருக்கற அம்மாவுக்குப் பணம் அனுப்ப முடியாமப் போயிடுமே?... அதனால பல்லைக் கடிச்சுக்கிட்டு அந்த ஏரியாவுக்குப் போனேன்!... போய் என்ன பண்ணினேன் தெரியுமா?... என்னோட லிஸ்டிலேயே வராத ஒண்ணாவது தெருவிலும்...ரெண்டாவது தெருவிலும் சுத்திட்டு... அந்த மூணாவது தெருப்பக்கமே தலை வெச்சுப் படுக்காம.... சும்மா பேருக்கு ஏழெட்டு பாக்கெட்டுகளை வித்திட்டு... இன்னிக்கு இவ்வளவுதான் போணியாச்சுன்னு சொல்லிட்டேன்!

    கரெக்ட்.... அந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம்...இப்படித்தான் செய்யணும்! என்று வித்யா

    Enjoying the preview?
    Page 1 of 1