Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirgalidathu Anbu Vendum!
Uyirgalidathu Anbu Vendum!
Uyirgalidathu Anbu Vendum!
Ebook135 pages52 minutes

Uyirgalidathu Anbu Vendum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வித்யா என்னும் அந்தச் சிறுமியின் ஒரு கால் சூப்பையாகிப் போனதில் விந்தி விந்தி நடக்கும் பிறவியாகிப் போனாள். ஒரு நாள் பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில் சாக்கடையில் ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி நாயை எடுத்து வந்து குளிப்பாட்டி வயிற்றுக்கு உணவளிக்கிறாள். அது உயிர் பிழைத்து வளர்கின்றது. காலில் அடிபட்டு விட்ட காரணத்தினால், அதுவும் விந்தி விந்தி நடக்கின்றது.
ஊனமுற்ற நாயாய் இருந்த போதிலும் அறிவில் சிறந்து விளங்கி ஒரு பெரிய மனிதரின் உயிரைக் காப்பாற்றுகிறது, வித்யாவின் தாயை ஒரு காமுகனிடமிருந்து காக்கின்றது.
பள்ளிக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பாமை காவல்துறை மோப்ப நாய்கள் கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஊனமுற்ற நாய் அதைக் கண்டு பிடித்து வாயால் கவ்விச் செல்கின்றது.
அந்த பாம் வெடித்ததா?...அந்த நாய் இறந்து போனதா?...உயிர் பிழைத்ததா?
நாவலின் முடிவு நெகிழச்சியூட்டும் நிகழ்வு.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130004995
Uyirgalidathu Anbu Vendum!

Read more from Mukil Dinakaran

Related to Uyirgalidathu Anbu Vendum!

Related ebooks

Reviews for Uyirgalidathu Anbu Vendum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirgalidathu Anbu Vendum! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    உயிர்களிடத்து அன்பு வேண்டும்!

    Uyirgalidathu Anbu Vendum!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    மாலை நான்கு மணி.

    வெயில், இன்னும் கடுமை மாறாமலிருந்தது. மதிய நேரத்து உஷ்ணத்தை வகையாய் தன்னுள் தேக்கி வைத்திருந்த பூமி, மாலை நேரத்தில் அதை வெக்கையாய் வெளியிடத் துவங்கியது.

    உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்

    தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும்

    வயிர முடைய நெஞ்சு வேணும் - இது

    வாழும் முறைமையடி பாப்பா!

    ஏதோ ஒரு வகுப்பறையிலிருந்து பாரதியார் பாடல் குழந்தைகள் குரலில் கோரஸாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

    ஆண்கள் கழிப்பிடத்தின் மறைவில் நின்று, பீடியை உறிஞ்சிக் கொண்டிருந்த காக்கி உடுப்பு பியூன் பெருமாள், நிதானமாய் மணிக்கட்டை உயர்த்திப் பார்த்து விட்டு, அடக் கெரகமே... மணி நாலுக்கு மேலாயிடுச்சு! என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, அவசர அவசரமாய் பீடியை ரெண்டு இழுப்பு இழுத்து விட்டுத் தூர எறிந்து விட்டு வேக வேகமாய் ஓடிப் போய் மணியடிக்க,

    எப்போதுடா மணியடிக்கும்?... வெளியே ஓடலாம்! என்று காத்துக் கொண்டிருந்த சிறுவர்களும் சிறுமிகளும், ஹேய்ய்ய்ய்ய் எனக் கத்தியபடியே, கையில் புத்தக மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு, வகுப்புகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

    வந்தவர்களில் சிலர் காத்திருந்த அப்பாக்களுடன் சைக்கிளில் ஏறிப் பறக்க,

    சிலர் கால்நடையாய் தத்தம் வீட்டை நோக்கி நடக்க,

    சில தின்னிப் பண்டார மாணவர்கள் பக்கத்துக் கடைக்குச் சென்று, கண்ணில் பட்ட தீனிகளையெல்லாம் வாங்கி விழுங்க,

    வித்யா தோளில் புத்தகப் பையைச் சுமந்து கொண்டு, வலது காலை இழுத்து இழுத்து நடந்தபடி, வகுப்பறையை விட்டு நிதானமாய் வெளியே வந்தாள். சிறு வயதில் அவளைப் பாதித்த மர்மக் காய்ச்சல் அவளுக்கு அளித்து விட்டுப் போன மாபெரும் பரிசு வலது கால் ஊனம். இடது கால் நல்ல சதைப் பிடிப்போடுஜம்மென்றிருக்க, வலதுகால் மட்டும் சூம்பிப் போய் பிஞ்சு வெள்ளரிக்காய் போல் வளைந்திருந்தது. அவளது நடையை மேலோட்டமாய்ப் பார்த்தால், வித்தியாசமான... அசிங்க நடைதான், ஆனாலும் அவள்தான் சகமாணவிகளுக்கு ராணி. தனக்குள் தாழ்வு மனபான்மை சிறிதுமில்லாத சிட்டுக்குருவி அவள். அவள் வருகைக்காகவே காத்திருந்த, தோழிகள், வித்யா வந்தாச்சு... இனி கிளம்ப வேண்டியதுதான் என்று சொல்லியபடி நடக்க ஆரம்பிக்க, வழக்கமாய் செல்லும் குறுக்குச் சந்தில் எல்லோரும் நுழைந்தனர்.

    வீடு சென்று சேரும் வரை ஒரே கொண்டாட்டம்தான். குதியாட்டம்தான்.

    ஏய்... இன்னிக்கு போற வழில அந்தக் கடைசி வீட்டுல கொய்யாப் பழம் அடிக்கலாமா?... மரத்துல கொய்யாய்ப் பழம் பழுத்துத் தொங்கறதைப் பார்த்தா நாக்குல ஜொள்ளு ஊறுதுடி இரட்டை ஜடை கோமளா சொல்ல,

    ஆமாம்டி... அதுவும் உள்ளார ரோஸ் கலர்ல இருக்கும் கொய்யாடி அது? என்றாள் இன்னொரு சிறுமி.

    அய்யோ வேண்டாம்டி... அந்த வீட்டுல இருக்கற கெழவன் இருக்கான்!... பயங்கரமான ஆளி!... அவன் தடி எடுத்திட்டு துரத்திட்டு வருவான்! என்றாள் வித்யா. முந்தைய அனுபவம் பேசியது.

    வரட்டுமே?... அவனே கிழவன்... அவனால நடக்கவே முடியாது!... அப்புறம் அவன் எப்படி ஓடி வந்து நம்மைப் பிடிக்க முடியும்?

    அது செரி!... உங்கள்ல யாரையும் பிடிக்க முடியாதுடி... ஏன்னா நீங்க எல்லோருமே ரெண்டு கால் பிறவிக!... ஆனா நான்?... ஒத்தைக்கால் பிறவி... நான் அந்த ஒத்தைக் காலை இழுத்து இழுத்து நடக்கறதுக்குள்ளார அவன் வந்து என்னை ஈஸியாப் பிடிச்சிடுவான்!... பிடிச்சு... எங்க வீடு எங்கே?ன்னு கேட்டு கூடவே வீடு வரைக்கும் வந்து...  எங்க அம்மா கிட்டச் சொல்லிடுவான்!... அவ்வளவுதான் எங்கம்மா விறகுக் கட்டையை எடுத்திட்டு துரத்தித் துரத்தி அடிக்கும்! வித்யாவின் நினைவில் முன்பொரு முறை பெற்ற அம்மாவின் விறகுக்கட்டை அடி வந்து போக, மேனி சிலிர்த்துக் கொண்டாள். அவள் கை அனிச்சையாய் அந்தக் கெண்டைக்கால் தழும்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது.

    அப்போது, சாலையோரமிருந்த சாக்கடையை ஒட்டி நடந்து வந்து கொண்டிருந்த ஜோதிமணி, திடீரென்று கூவினாள். ஏய்... ஏய்... இங்க வந்து பாருங்கடி... இந்த சாக்கடைக்குள்ளார... என்னமோ ஒண்ணு நெளியுது!

    எல்லோரும் அவள் காட்டிய இடத்தில் வந்து நின்று பார்த்தனர்.

    அய்யய்ய... இது குட்டிப் பூனை... சேத்துல சிக்கிடுச்சு! ஓட்டை டிரவுசர் முருகன் சொல்ல,

    போடா... இது பூனையல்ல... நாய்!... அதுவும் குட்டி நாய்! என்றாள் கோமளா.

    தூக்கி வெளிய போட்டுப் பார்ப்போமா? தலையை ஆட்டியபடி எலோரையும் பார்த்து வித்யா கேட்டாள்.

    அய்ய... நான் தொடமாட்டேன்... வ்வேய்ய்ய்! ஒரு சுத்தக்கார மாணவி விலகி நின்றாள்.

    நீ எடுக்காட்டி போ!... நான் எடுக்கறேன்! வித்யா துணிந்தாள்.

    எதைப் பற்றியும் கவலைப்படாமல், புத்தகப் பையை சக மாணவியிடம் தந்து விட்டு, இழுத்து இழுத்து நடந்து, அந்தச் சாக்கடையை நெருங்கி, குனிந்து தன் கையை நீட்டி அவள் அந்த நாய்க் குட்டியைத் தொட எத்தனிக்க, அது எட்டவில்லை. இன்னும் கொஞ்சம் சாக்கடைக்குள் அவள் செல்ல முற்பட,

    ஏய் ரொம்ப பக்கத்துல போகாதடி... நீ வழுக்கி உள்ளார விழுந்துடுவேன்! ஒருத்தி எச்சரித்தாள்.

    சரிடி... சரிடி... நீ கத்தாதடி... என்று சொல்லிக் கொண்டே, இன்னும் கொஞ்சம் முன்னேறிய வித்யா அந்த நாய்க்குட்டியைத் தொட்டே விட்டாள். அதன் மீதிருந்த சாக்கடைச் சேறு தன் கையில் ஒட்டுவதைப் பற்றிக் கவலைப் படாமல் அதைத் தூக்கினாள்.

    ஹேய்ய்ய்ய்ய் என்று மற்ற மாணவிகள் கூச்சல் போட, அதைக் கொண்டு வந்து தெருவில் மத்தியில் போட்டாள்.

    பார்த்தீங்களா?... நான் அப்பவே சொன்னேன் அல்ல இது நாய்க்குட்டின்னு! என்ற வித்யா, சுற்றும் முற்றும் பார்த்தாள். சற்றுத் தள்ளியிருந்த தெரு பைப்பில் லேசாய்த் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது. ஏய்... இதைத் தூக்கிட்டுப் போய் அந்த பைப் தண்ணீல கழுவலாமா?

    எல்லோரும் சரியென்று ஒப்புக் கொள்ள, தானே அதை மறுபடியும் இரண்டு கைகளால் தூக்கிச் சென்று பைப்பிற்கு அடியில் வைத்தாள். தண்ணீர் லேசாக ஒழுகிக் கொண்டிருந்த காரணத்தால் அந்த நாய்க் குட்டி அமைதியாய் நின்று கொண்டது.

    அதன் மீதிருந்த சேறு கொஞ்சம் கொஞ்சமாய் கரைய, தான் செந்நிற நாய்க் குட்டி என்பதை அது அடையாளம் காட்டி நின்றது. சிறிது நேரத்தில் மொத்தச் சேறும் கரைந்த பின்புதான் தெரிந்தது, அதன் முதுகுப் பகுதியின் ஆங்காங்கே சேற்றுப் புண்கள் இருப்பது.

    ஏய்... அதோட முதுகைப் பாருடி... சொறி பிடிச்ச நாயாட்டம் இருக்குதுடி! ஒருத்தி சொல்லி விட்டு முகத்தைச் சுளிக்க,

    "முதுகை ஏண்டி பார்க்கறே?... அதோட முகத்தைப் பாருடி... எத்தனை அழகா இருக்குன்னு!... இந்தக் குட்டி

    Enjoying the preview?
    Page 1 of 1