Kullanariyin Vivasayam
()
About this ebook
குழந்தைகளுக்கு தாத்தாப் பாட்டி சொல்லும் கதைகள் மிகவும் பிடிக்கும். தாத்தா பாட்டிகள் அவர்கள் வாசித்ததையோ அவர்களது முன்னோர்கள் வழிவழியாக சொன்ன கதைகளையோ தம் பேரக்குழந்தைகளுக்கு சொல்லி உறங்க வைப்பார்கள். இப்போது அந்த கதை சொல்லும் பழக்கமும் கதை கேட்கும் பழக்கமும் வழக்கொழிந்து போய்விட்டது. இந்த நூலில் அப்படி தாத்தா பாட்டிகள் சொன்ன செவிவழிக்கதைகளை தொகுத்து தந்துள்ளேன். உங்கள் குழந்தைகளுக்கு இக்கதைகளை சொல்லும் போது மிகவும் விரும்பி கேட்பார்கள்.
Read more from Natham S. Suresh Babu
Nodi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Pencil! Rating: 0 out of 5 stars0 ratingsArakkanai Vendra Kullan Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Parisu! Rating: 0 out of 5 stars0 ratingsThavalai Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kullanariyin Vivasayam
Related ebooks
Nyabagam Irukkiratha Kanne? Rating: 0 out of 5 stars0 ratingsIlavu Kaatha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratingsManathin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsமௌனம் பேசட்டும்! Rating: 0 out of 5 stars0 ratingsMounam Pesattum Rating: 5 out of 5 stars5/5Nandha Rating: 0 out of 5 stars0 ratingsSuttum Vizhisudarey! Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Nindrai Kaaviyamai! Rating: 0 out of 5 stars0 ratingsVaanathai Thottavan Rating: 0 out of 5 stars0 ratingsPaarkathey! Patharathey! Rating: 5 out of 5 stars5/5Paraloga Payanam Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsThelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Alamu Paattiyum Koushikum Rating: 0 out of 5 stars0 ratingskannak Kathuppil Oru Kavithai Rating: 5 out of 5 stars5/5Ange Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsUyir Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsUyirgalidathu Anbu Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsNetru Varai Nee... Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsUyire Nerungi... Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsதராசு முள்! Rating: 0 out of 5 stars0 ratingsTharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsCylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsVarathachanai Rating: 0 out of 5 stars0 ratingsசிம்ம சொப்பனம்..! Rating: 0 out of 5 stars0 ratingsKaattu Sirukki Rating: 0 out of 5 stars0 ratingsIndrum Theriyavillai Natchathirangal! Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye! Rating: 0 out of 5 stars0 ratingsசாரும்மா Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kullanariyin Vivasayam
0 ratings0 reviews
Book preview
Kullanariyin Vivasayam - Natham S. Suresh Babu
https://www.pustaka.co.in
குள்ளநரியின் விவசாயம்
(சிறுவர் செவிவழிக்கதைகள்)
Kullanariyin Vivasayam
Author:
நத்தம் எஸ். சுரேஷ்பாபு
Natham S. Suresh Babu
For more books
https://www.pustaka.co.in/home/author/natham-s-suresh-babu
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
சுண்டக்கா பேரன்
பாட்டி சுட்ட ரொட்டி!
ஏழு குடம் தங்கம்!
அறிவுள்ள வேலைக்காரன்!
நிழலை விற்றவன்!
எறும்புகளின் கோபம்!
கூடா நட்பு!
புலி மாப்பிள்ளையும்! நரி மாமாவும்!
சுறுக்குக்கு ஏற்ற கழுத்து!
சூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்!
பணியார மழை!
தடி கொடுத்த பரிசு!
கழுதையான மாமியார்!
குள்ளநரியின் விவசாயம்!
அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
வணக்கம். சிறுவர்களுக்கான கதைகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றது. குழந்தைகளுக்கு கதை சொல்லும் தாத்தா பாட்டிகள் மறைந்துவிட்டனர். இத்தகைய ஓர் அபாயகரமான சூழலில் குழந்தைகள் வெறும் பாடங்களை மட்டும் படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாய் கருதி வருகின்றார்கள்.
இத்தகைய சூழல் விலக வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல நல்ல கதைகளைக் கூறி நல்வழிப்படுத்தவேண்டும் என்பதன் விளைவே இந்த செவிவழிக்கதைகளின் தொகுப்பு. இந்த நூலில் உள்ள கதைகள் என்னுடைய மொழி நடையில் சொல்லப்பட்டுள்ளதே தவிர கதைகள் அனைத்தும் எனக்குச் சொந்தமானவை அல்ல.
இதில் உள்ள கதைகள் அனைத்தும் என்றோ எப்போதோ எந்த தாத்தா பாட்டிகளோ தன் பேரன் பேத்திகளுக்குச் சொன்ன செவிவழிக் கதைகள். அதை என் பாணியில் கொஞ்சம் சுவைபட எடுத்து பரிமாறியிருக்கிறேன். அவ்வளவே என் பணி.
இந்த தொகுப்பில் மொத்தம் 14 கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வாசித்து முடிக்கையில் ஓர் நல்ல போதனையை நல்லதொரு நீதியை உணர்த்தும். இதை உங்கள் பிள்ளைகளுக்கு இரவு உறங்கும் முன் சொல்லும் பெட் டைம் ஸ்டோரிஸ்களாக சொல்லி மகிழ்விக்கலாம்.
உங்கள் அன்பான ஆதரவினை இந்த நூலுக்கு தந்து உதவுங்கள்! குழந்தை இலக்கியம் வளர உரமிடுங்கள்!
அன்பு நன்றிகள்.
அன்புடன்.
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.
சுண்டக்கா பேரன்
ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஊர்ல ஒரு பாட்டி குழம்பு வைக்கிறதுக்கு சுண்டக்கா பறிச்சிக்கிட்டு இருந்தாங்க. அப்போ அவங்க அழ ஆரம்பிச்சாங்க. கண்ணுல இருந்து விழுந்த தண்ணி சுண்டக்கா ஒண்ணுமேல விழுந்துச்சு. அதுக்கு உடனே குட்டியா கையும் காலும் முளைச்சிருச்சு. அது அப்படியே பாட்டி மேல குதிச்சு தாவி அவங்க கண்ணீரை துடைச்சி விட்டது.
இதைப் பார்த்து பாட்டிக்கு அதிசயமா போயிருச்சு! சுண்டக்காயே உனக்கு எப்படி கை காலு முளைச்சுது?
அப்படின்னு கேட்டாங்க.
நான் ஒரு வன தேவதை, ஒருசாபத்தினாலே இப்படி சுண்டக்காயா மாறிட்டேன். நீங்க ஏன் அழறீங்க? என்று சொன்னது சுண்டக்காய்.
அப்படியா? என்னோட கவலை தீராது! அதனால நான் அழறேன்!
னாங்க பாட்டி.
"அப்படியென்ன கவலை? ன்னு கேட்டுச்சு சுண்டக்கா.
எனக்கு பிள்ளையில்லை! என் புருஷன் வயசான காலத்துல வயல்ல ஏர் ஓட்டி கஷ்டபட்டுகிட்டு இருக்காரு. கஞ்சி கொண்டுபோய் கொடுக்க கூட ஆளில்லை! பிள்ளையிருந்தா இப்போ அவருக்கு உதவியா இருப்பான். அத நினைச்சேன் அழுகை வந்திருச்சு!
அப்படின்னாங்க பாட்டி.
பாட்டி இனிமே நீ கவலைப்படாதே! நான் இருக்கேன் உனக்கு உதவி செய்ய என்னை உன் பிள்ளையா நினைச்சுக்கோ! இல்லைன்னா பேரனா நினைச்சுக்க நான் தாத்தாவுக்கு கஞ்சி கொண்டு போய் கொடுக்கிறேன்!
னுச்சு சுண்டக்கா.
பாட்டியும் சுண்டக்கா கிட்ட கஞ்சி கொடுத்து அனுப்பிச்சாங்க. வயல்ல உழுதுட்டிருந்த தாத்தா பசியோட உழுதுகிட்டு இருந்தாரு. அவரு முன்னாடி போய் கஞ்சியோட நின்னுது சுண்டக்கா.
என்னடா இது பாட்டியை காணலை கஞ்சி கலயம் மட்டும் வந்து இருக்குது! அப்படின்னு ஆச்சர்யத்தோட பார்க்க கலயத்துக்கு கீழே சுண்டக்காயை பார்த்து வாயைப் பிளந்து நின்னாரு.
சுண்டக்கா, தாத்தாகிட்ட ஆச்சர்யபடாதீங்க! உங்க கவலையை தீர்க்கறதுக்காக வந்திருக்கிற பேரன் நான். நீங்க கஞ்சியை குடிங்க நான் மாடுங்களை பார்த்துக்கறேன்
னு சொல்லுச்சு.
தாத்தாவும் பக்கத்து மர நிழல்ல உக்காந்து கஞ்சியை குடிச்சாரு. உண்ட மயக்கம் கண்ணை அசத்த அப்படியே கண்ணசந்துட்டாரு.
அப்ப பார்த்து அந்த பக்கம் போன திருடனுங்க ஆளில்லாம நடு வயல்ல ரெண்டு மாடு நிக்கவும் வயல்ல இறங்கி மாட்டை