Mudhal Parisu!
()
About this ebook
குழந்தைகளுக்கு நீதியை போதிக்கும் 20 கதைகள். குழந்தைகளிடையே காணப்படும், சோம்பல், பொறாமை, கோபம், ஏமாற்றுதல் போன்றவற்றை நீக்கி பிறர்க்கு உதவும் குணம், அன்பு, நேர்மை போன்ற நல்ல குணங்களை ஊட்டும் கதைகள்.
Read more from Natham S. Suresh Babu
Arakkanai Vendra Kullan Rating: 0 out of 5 stars0 ratingsKullanariyin Vivasayam Rating: 0 out of 5 stars0 ratingsNodi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsThavalai Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Pencil! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mudhal Parisu!
Related ebooks
Mugizh Nagai Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar! Rating: 3 out of 5 stars3/5பூ ஒன்று புயலாகிறது! Rating: 0 out of 5 stars0 ratingsMana Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsKaal Rasi Rating: 0 out of 5 stars0 ratingsTharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsதராசு முள்! Rating: 0 out of 5 stars0 ratingsChutti Poonaiyum Kutti Pettiyum Rating: 0 out of 5 stars0 ratingsசிம்ம சொப்பனம்..! Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsஇலக்கு! Rating: 0 out of 5 stars0 ratingsIlakku Rating: 0 out of 5 stars0 ratingsநதிமூலம் Rating: 0 out of 5 stars0 ratingsPanama... Pasama... Rating: 0 out of 5 stars0 ratingsSiragukal Rating: 0 out of 5 stars0 ratingsPerapillai Rating: 5 out of 5 stars5/5Ava(l) Thaaram Rating: 0 out of 5 stars0 ratingsIranduadukku Aagayam Rating: 0 out of 5 stars0 ratingsAmma Endral Anbu Rating: 0 out of 5 stars0 ratingsPaadu Pappa Rating: 0 out of 5 stars0 ratingsஅதிகாரப் பிச்சை..! Rating: 0 out of 5 stars0 ratingsஅன்றொரு நாள் Rating: 0 out of 5 stars0 ratingsAndroru Naal Rating: 0 out of 5 stars0 ratingsKurai Ondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsNenjirukkum Varaikkum! Rating: 1 out of 5 stars1/5Rewa Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Koil Sirpam Rating: 0 out of 5 stars0 ratingsVaanathai Thottavan Rating: 0 out of 5 stars0 ratingsNesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Mudhal Parisu!
0 ratings0 reviews
Book preview
Mudhal Parisu! - Natham S. Suresh Babu
https://www.pustaka.co.in
முதல் பரிசு!
Mudhal Parisu!
Author:
நத்தம் எஸ். சுரேஷ்பாபு
Natham S. Suresh Babu
For more books
https://www.pustaka.co.in/home/author/natham-s-suresh-babu
பொருளடக்கம்
1. சர்வம் சக்தி மயம்!
2. புத்திசாலி ஆமை
3. தகுதிக்கு மீறினால்!
4. பூனையும் எலியும்
5. மரியாதையாக் கொடுத்திடு!
6. நம்பிக்கை வைத்தால்!
7. உழைப்பே உயர்வு!
8. நான் தரமாட்டேன்!
9. டேய் குண்டு பூசணி!
10. யார் பெரியவன்?
11. முதல் பரிசு!
12. தோல்விக்கு காரணம்!
13. காக்கை கேட்ட வரம்!
14. எறும்புகளும் சிலந்தியும்!
15. குரங்கின் சின்ன புத்தி!
16. களை!
17. கோபம் நம் எதிரி!
18. சலவைத்தொழிலாளியும் கழுதையும்!
19. முதல் ரேங்க்!
20. குணம்!
1. சர்வம் சக்தி மயம்!
தும்பிக்கை ஆண்டவன் விநாயகரை அறிந்திராத குழந்தைகளே இருக்க முடியாது. பால பருவத்தில் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த கடவுள் பிள்ளையாரும் கண்ணனும் தான். இருவருமே குறும்பு செய்வதில் வல்லவர்கள்!
கண்ணன் கோகுலத்தில் செய்யாத குறும்புகளே இல்லை எனலாம். மண்ணைத்தின்று வாயைத்திறந்து உலகத்தையே அதனுள் காட்டியவன் அல்லவா கண்ணன். விநாயகரும் அம்மை அப்பனே உலகம் என்று உண்மையை உலகினுக்கு தந்தவர்.
இந்த பிள்ளையார் சின்ன பிள்ளையாக இருக்கும் போது நிகழ்ந்த ஒரு நிகழ்வைத்தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். சின்ன பிள்ளையாக இருக்கும் நீங்கள் எல்லோரும் ஏதாவது ஒரு பிராணியை வளர்ப்பீர்கள். அது நாய், பூனை, முயல், கிளி,அல்லது மீன் போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம். ஓய்வு நேரத்தில் அதனுடன் விளையாடுவதில் உங்களின் பொழுது கரைந்து போகும் அல்லவா? அப்படி விளையாடும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? பூனையின் காதை பிடித்து திருகுவீர்கள் நாயின் வாலைப் பிடித்து இழுப்பீர்கள் இப்படி ஏதாவது குறும்பு பண்ணி விளையாடுவது ஒரு பொழுது போக்கு
பிள்ளையாரும் அப்படித்தான் ஒரு நாள் விளையாடச் சென்றார். அப்போது அந்த வழியே பூனையொன்று வந்துகொண்டிருந்தது. உடனே பிள்ளையார் அந்த பூனையை பிடித்து வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்படி விளையாடும்போது விநாயகரின் கை நகங்கள் அந்த பூனையின் முகத்தில் பட்டு இரண்டு மூன்று நகக் கீறல்கள் உண்டாகி விட்டது. பொழுது சாய்ந்ததும் பிள்ளையார் பூனையை விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பினார்.
அம்மா! அம்மா! எனக்கு பசிக்கிறது! உணவு தருகிறாயா? என்றபடி வீட்டினுள் நுழைந்த பிள்ளையாருக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அவரது அன்னையின் முகத்தில் இரண்டு மூன்று நகக்கீறல்கள் இருப்பதை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்காதா பின்னே! உலகிற்கே அன்னையான தன் அம்மாவின் முகத்தில் இப்படி நகக்கீறல்களை உண்டாக்கியது யாராக இருக்கும்? அந்த அளவுக்கு தைரியம் உடையவர் யார்? என்று நினைத்துக் கொண்டே அன்னையிடம் கேட்டார்.
அம்மா! முகத்தில் என்ன காயம்? இது எதனால் ஏற்பட்டது? யார் ஏற்படுத்தியது? என்று கோபமாக கேட்டார்.
அன்னை பார்வதி தேவி சிரித்துக் கொண்டே! மகனே விநாயகா இது நீ ஏற்படுத்தியதுதான் என்றார்.
பிள்ளையாருக்கு கோபம் அதிகமாகிவிட்டது! அம்மா! நான் வெளியே விளையாடிவிட்டு இப்போதுதான் வருகிறேன்! அதுவும் இல்லாமல் அன்னையின் முகத்தில் நான் இப்படி கீறுவேனா? உண்மையைக் கூறுங்கள் தாயே! விளையாடாதீர்கள் என்று கேட்டார்.
உண்மையைத்தான் கூறுகிறேன் மகனே!
இது எப்படி உண்மையாகும்? செய்யாத ஒன்றை செய்ததாக கூறுகிறீர்களே?
மகனே! இன்று காலையில் நீ பூனை ஒன்றை பிடித்து விளையாடினாய் அல்லவா?