Thavalai Ilavarasi
()
About this ebook
சிறுவர்கள் கற்பனைத்திறன் மிக்கவர்கள், ஃபேண்டசி வகை கதைகள் சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த நூலில் அத்தகைய ஃபேண்டசிக் கதைகள் இடம்பெற்றுள்ளது. சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் இந்த நூல் கவரும். இதில் இடம்பெற்ற கதைகள் சில இந்து தமிழ்திசை மாயாபஜார் நாளிதழ், பொம்மி சிறுவர் இதழ் போன்றவற்றில் பிரசுரமாகி பெரும் வரவேற்பை பெற்றது.
Read more from Natham S. Suresh Babu
Arakkanai Vendra Kullan Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Parisu! Rating: 0 out of 5 stars0 ratingsKullanariyin Vivasayam Rating: 0 out of 5 stars0 ratingsNodi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Pencil! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thavalai Ilavarasi
Related ebooks
Puzhuthiyum Pattu Kuruviyum Rating: 0 out of 5 stars0 ratingsVaarangal Valartha Nila Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsகொஞ்சிப் பேசக் கூடாதா Rating: 0 out of 5 stars0 ratingsKonchi Pesak Koodaathaa Rating: 0 out of 5 stars0 ratingsPadikka... Rasikka... Sirikka... 200 Kubeer Jokkugal Rating: 0 out of 5 stars0 ratingsKannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratingsDheetchanya Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Ragangal Rating: 0 out of 5 stars0 ratingsNilavey Mugam Kattu Rating: 5 out of 5 stars5/5Alamu Paattiyum Koushikum Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Periya Thambi Rating: 0 out of 5 stars0 ratingsAppalakacheri Rating: 2 out of 5 stars2/5Yeidhavanai Thedi... Rating: 5 out of 5 stars5/5Theruvil Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsதெருவில் ஒருவன் Rating: 0 out of 5 stars0 ratingsMazhaiveli Thanile Rating: 0 out of 5 stars0 ratingsBrindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Uravadum Neram! Rating: 0 out of 5 stars0 ratingsAnge Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsUyirgalidathu Anbu Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsVittal Rao Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsZen Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsSagaram Rating: 0 out of 5 stars0 ratingsMr. Vedantham Rating: 5 out of 5 stars5/5Oru Paravai Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Thirai Rating: 4 out of 5 stars4/5Netru Varai Nee... Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsOru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5
Reviews for Thavalai Ilavarasi
0 ratings0 reviews
Book preview
Thavalai Ilavarasi - Natham S. Suresh Babu
http://www.pustaka.co.in
தவளை இளவரசி
சிறுவர் கதைகள்
Thavalai Ilavarasi
Siruvar Kathaigal
Author:
நத்தம் எஸ். சுரேஷ்பாபு
Natham S. Suresh Babu
For more books
https://www.pustaka.co.in/home/author/natham-s-suresh-babu
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. கோச்சடையான்!
2. பூமிக்கு வந்த நட்சத்திரம்!
3. தவளை இளவரசி!
4. ரத்ன மாலா!
5. குளவி நண்பன்!
6. தவளைகளின் கச்சேரி!
7. தங்க மீன்!
8. அரக்கனை வென்ற குள்ளன்!
9. எலி தந்த பரிசு!
10. பேயை விரட்டிய பெண்மணி!
11. நரி ருசித்த ஆப்பம்!
12. எழிலி!
13. பட்டுச் சட்டை!
14. ஈர்க்குச்சி மனுசன் கதை!
15. பூதத்தை வென்ற புத்திசாலி!
16. அம்மா விரட்டிய பூதம்!
அன்பார்ந்த வாசகப் பெருமக்களே! வணக்கம்! குழந்தைகளுக்கான கதைத்தொகுதி வரிசையில் இது என்னுடைய நான்காவது தொகுப்பு. இந்த தொகுப்பில் அமைந்துள்ள 16 கதைகளில் பெரும்பாலான கதைகள் ஃபேண்டசி என்று சொல்லக்கூடிய மாயாஜாலக் கதைகள்.
குழந்தைகளை கற்பனை உலகத்தில் சஞ்சரிக்க வைத்து கதாபாத்திரங்களாக மாறி பயணிக்கச் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த கதையோடு ஒன்றிப்போதலை சிறுவயதில் என் பாட்டிக் கதை சொல்லும்போது நான் அனுபவித்திருக்கின்றேன். அத்தகைய ஓர் அனுபவத்தை இந்த கதைகள் கொடுக்கும்.
கற்பனை கதையாக இருப்பினும் ஒவ்வொரு கதையிலும் ஓர் நீதியும் என் கதைகளில் இடம்பெற்றிருக்கும். பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் குறைந்துவிட்ட இந்த சமயத்தில் குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்களை கற்பிப்பது பெற்றோர் மற்றும் கற்றோரின் கடமையாகும். இந்த கதைகளை குழந்தைகள் வாசிக்கையில் அவர்கள் மனதில் நல்ல சிந்தனைகள் பெருகும். அவர்களின் போக்கில் நல்லதொரு மாறுதல்கள் ஏற்படும்.
புஸ்தகாவில் என்னுடைய படைப்பை வெளியிட வேண்டும் என்ற ஆவல்நெடுநாளாய் இருந்தது.எழுத்துலகபெரும்ஜாம்பவான்களின் புத்தகங்களோடு என் புத்தகமும் இடம்பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இந்த வாய்ப்பினை வழங்கிய திரு. புஸ்தகா ராஜேஷ் அவர்களுக்கும். புஸ்தகா நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்த திருமதி.செல்லம்ஜெரினா அவர்களுக்கும் என் அன்பு நன்றிகள்.
இந்த சிறுவர் இலக்கிய நூலை வாசித்து உங்கள் சுற்றங்களுக்கும் அறிமுகம் செய்து குழந்தை இலக்கிய வளர்ச்சியில்உங்கள் பங்களிப்பையும் தாருங்கள்!
அன்புடன்
நத்தம் எஸ். சுரேஷ்பாபு.
1. கோச்சடையான்!
வெகு காலத்திற்கு முன்னே விக்கிரமபுரி என்ற நாட்டிலே ஒரு வயதான தம்பதிகள் வசித்து வந்தார்கள். அவர்களது மகன் மருமகள் இறந்துவிடவே அவர்களின் பேரன் மட்டும் அவர்களுடன் வசித்து வந்தான். இளவயதுக்காரனான அவன் இரக்க குணம் மிக்கவன். அந்த வயதான தம்பதிகளால் வேலை எதுவும் செய்ய முடியாது. பேரனோ வேலை செய்யும் அளவிற்கு வளர வில்லை. அதனால் அவர்கள் அன்றாடப் பொழுது கழிவதே பிரம்ம பிரயத்தனமாக இருந்தது.
வயதான தம்பதிகள் பக்கத்து வீட்டில் வசதியான பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் சொல்லும் எடுபிடி வேலைகள் ஏதாவது பேரன் செய்வான். அதற்கு அவர் தரும் சப்பாத்தி துண்டுகள் அல்லது வீணான பழங்கள் ஏதாகிலும் அவர்களின் அரைவயிற்றை கழுவ உதவியது. மூதாட்டி சில சமயம் அவர்கள் வீட்டு தோட்டத்தில் விளையும் சில கீரைகள் பழங்கள் ஆகியவற்றை வீதியில் கடைபரப்பி விற்பாள். அப்படியும் அவர்களுக்கு எந்த நிரந்தர வருமானம் கிடையாது.
ஆனாலும் பேரன் கோவிந்துவிற்கு மிகுந்த இரக்க குணம். தனக்கு கிடைக்கும் உணவையும் பிறருக்கு பகிர்ந்து கொடுத்து உண்பான். தோட்டத்தில் மேயும் பறவைகள், அணில்கள் போன்றவற்றிற்கு ஏதாவது தீணி போட்டுக்கொண்டிருப்பான். அவனது பாட்டியோ புலம்பிக் கொண்டிருப்பாள். இருக்கும் தானியங்களையும் இப்படி பறவைகளுக்கும் அணில்களுக்கும் இரைத்துவிட்டால் நம் பிழைப்பு என்னாகும்? நாம் என்ன அவ்வளவு பணக்காரர்களா? என்பாள்.
ஆனால் கோவிந்து அதை காதில் வாங்கிக்கொள்ளமாட்டான். வீட்டில் இருந்தால் இருக்கும் சில தானியங்களையும் பறவைகளுக்கு கொடுத்துவிடுவான். பக்கத்து வீட்டுக்காரன் தோட்டத்தில் ஒரு பறவைகளும் மேயாது. இவன் வீட்டிலோ கோவிந்தை கண்டாலே பறவைகள் மொய்த்துக் கொள்ளும். இதை பார்த்து வயிற்றெரிச்சல் படுவான் பக்கத்து வீட்டுக்காரன்.
ஒரு நாள் கோவிந்த் காலையில் விளையாடிவிட்டு திரும்பும்போது சாலையில் ஒரு குட்டி நாய் அடிபட்டுக் கிடந்தது. அதனருகே சென்ற கோவிந்த் அதை தூக்கி வந்து காயங்களை துடைத்து மருந்து இட்டான். பின்னர் அதை வீட்டிற்கு எடுத்துவந்துவிட்டான்.
வீட்டில் அவனது பாட்டி சத்தம் போட்டாள். ஏய்! கோவிந்த்! இங்கு நமக்கு சோற்றுக்கே வழியில்லை! இந்த ஜீவனை வேறு ஏன் கொண்டுவந்தாய்? இதை வளர்ப்பது நம்மால் ஆன காரியம் இல்லை! எங்காவது விட்டுவிட்டு வந்துவிடு என்றாள்.
இல்லை பாட்டி! இது மிகவும் சின்ன குட்டி! சாலையில் அடிபட்டு கிடந்தது. பார்க்க பாவமாக இருந்தது. நான் வளர்த்துக் கொள்கிறேனே! என்னுடைய உணவில் சிறிது இதற்கு கொடுத்துக் கொள்கிறேன். என்று வாதாடி அதை வளர்க்க ஒப்புதல் பெற்றுக் கொண்டுவிட்டான்.
இரண்டொரு நாளில் அந்த நாய்க் குட்டியின் காயங்கள் ஆறிவிட்டது. அதன் ரோமங்கள் பொன்னிறமாக பளபளத்தது. புசுபுசுவென அழகாக காட்சி அளித்தது.
கோவிந்த் எந்த நேரமும் அந்த நாய்க்குட்டியுடன் திரிந்தான். பக்கத்துவீட்டுக்காரன் இதை பார்த்ததும் அதிசயித்தான். அட இந்த நாய்க்குட்டி புசுபுசுவென அழகாக இருக்கிறதே! இது எப்படி உனக்கு கிடைத்தது? எனக்கு கொடுத்துவிடேன்! உனக்கு நிறைய தானியங்களும் பழமும் தருகிறேன் என்று கேட்டான்.
மாட்டேன்! இதை நான் வளர்க்கிறேன்! கொடுக்க முடியாது. இது என் உயிர் நண்பன்! யாருக்கும் தரமாட்டேன்! என்றான் கோவிந்த்.
சரி அப்படியா? உன் நண்பன் பேர் என்ன சொல்லு? என்றான் வேடிக்கையாக பக்கத்து வீட்டுக்காரன்.
அப்போதுதான் கோவிந்திற்கு நாய்க்குட்டிக்கு இன்னும் எந்த பெயரையும் வைக்க வில்லை என்று தோன்றியது. இதற்கு இன்னும் நான் பெயர் வைக்க வில்லை என்றான்.
அப்படியா? நான் ஒரு பெயர் சொல்லட்டுமா?
ம் சொல்லுங்கள்!
சடையன்! என்று வைத்துக்