Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mandhira Pencil!
Mandhira Pencil!
Mandhira Pencil!
Ebook112 pages43 minutes

Mandhira Pencil!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுவர் இலக்கிய வரிசையில் நான் நிறைய சிறுகதைகள் எழுதி இருப்பினும் நாவல் எழுதியதில்லை. சங்கப் பலகை முகநூல் குழுமத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஏழைச்சிறுவன் ஒருவனுக்கு எது வரைந்தாலும் கிடைக்கும் மந்திரப் பென்சில் கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்தான் என்பதுதான் கதை. சங்கப்பலகை குழுமத்தால் சிறப்பு பரிசுக்கு இந்த நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது கூடுதல் மகிழ்ச்சி. பிரபல நாவலாசிரியர் ராஜேஷ்குமார் சாரும் இந்த தொடர் சங்கப்பலகையில் வருகையில் வாசித்து கருத்திட்டது எனக்கு பெருமிதம்.

Languageதமிழ்
Release dateJan 7, 2022
ISBN6580160809437
Mandhira Pencil!

Read more from Natham S. Suresh Babu

Related to Mandhira Pencil!

Related ebooks

Reviews for Mandhira Pencil!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mandhira Pencil! - Natham S. Suresh Babu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மந்திரப் பென்சில்!

    (சிறுவர் தொடர்கதை)

    Mandhira Pencil!

    Author:

    நத்தம் எஸ். சுரேஷ்பாபு

    Natham S. Suresh Babu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/natham-s-suresh-babu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பகுதி 1

    பகுதி 2

    பகுதி 3

    பகுதி 4

    பகுதி 5

    பகுதி 6

    பகுதி 7

    பகுதி 8

    பகுதி 9

    பகுதி 10

    பகுதி 11

    பகுதி 12

    பகுதி 13

    பகுதி 14

    பகுதி 15

    பகுதி 1

    வீராபுரம் என்ற சிற்றூரில் விக்ரம் என்ற சிறுவன் தன் பெற்றோர்களுடன் வசித்து வந்தான். அது ஒரு குக்கிராமம். சுற்றி வயல்களும் ஓர் பெரிய மலை சூழ்ந்த காடுகளும் நிறைந்த ஒரு கிராமம். விக்ரம் இயற்கையிலேயே இரக்க குணம் மிக்கவன். தனக்கு கிடைத்ததை பிறருக்கு பகிர்ந்து கொடுக்கும் மனம் கொண்டவன். அவன் தினமும் அந்த ஊரில் இருந்து அடுத்துள்ள கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிக்கு சென்று படித்து வருவான்.

    அவனுடைய அம்மா காலையில் ஏதாவது ஒரு உணவு தயாரித்துக் கொடுத்து அவனை பள்ளிக்கு அனுப்புவாள். அந்த காலத்தில் இன்றுள்ளது போல மதிய உணவு ஏதும் பள்ளிகளில் வழங்கப்பட மாட்டாது. பிள்ளைகள் அவர்களாகவேத்தான் மதிய உணவு எடுத்து வர வேண்டும். விக்ரமின் தாய் மதிய உணவும் கட்டிக்கொடுத்து விக்ரமை பள்ளிக்கு அனுப்புவாள்.

    விக்ரமுடன் படிக்கும் பல மாணவர்கள் மதிய உணவு எடுத்துவர வசதி இல்லாதவர்கள். தன்னுடைய உணவை அவர்களுடன் பங்கிட்டு உண்பான் விக்ரம். இதை அறிந்த விக்ரமின் தாய் கூடுதலாகவே உணவு சமைத்து அனுப்பி வைப்பாள்.

    அன்று விடுமுறை தினம். விக்ரம் அருகில் இருந்த மலைக்காட்டில் வீட்டிற்கு விறகு பொறுக்கிவர கிளம்பினான். வீடு திரும்ப நேரம் ஆகும் என விக்ரமின் அம்மா சிறிது உணவு சமைத்து ஒரு தூக்கில் அதை போட்டுக் கொடுத்து அனுப்பினாள். விக்ரமும் அதை எடுத்துக்கொண்டு தன் வயதொத்த நண்பர்களுடன் காட்டிற்கு கிளம்பினான்.

    காட்டில் ஒவ்வொருவரும் ஒரு திசையில் நாலாபுறமும் பிரிந்து சுள்ளி பொருக்க ஆரம்பித்தனர். நல்ல உச்சி வெயில் வேளையில் ஒரு குறிப்பிட்ட மரத்தின் அடியில் அனைவரும் ஒன்று கூடுவது என அடையாளம் வைத்துக் கொண்டனர். விக்ரமும் காய்ந்த சுள்ளிகளை விரைவாக பொறுக்க ஆரம்பித்தான். நேரம் கடந்துகொண்டிருந்தது. பசி அவனது வயிற்றைக் கிள்ளியது. சூரியன் நடுவானில் சுட்டெரிக்கத்தொடங்கி இருந்தான். விறகு சேகரித்தது போதும் என்று அதுவரை சேர்த்த விறகுசுள்ளிகளை கட்டிக்கொண்டு கிளம்பினான் விக்ரம். அந்த மரத்தை அடைந்து அங்கே நண்பர்களோடு சாப்பிட்டு பசியாறலாம் என்று நினைத்தான் அவன்.

    ஆனால் பசியின் மயக்கத்தில் அவன் வழி தவறிவிட்டான். அடர்ந்த காட்டினுள் சென்றுவிட்டான். அவர்கள் பேசி வைத்த மரம் அவனுக்கு தென்படவே இல்லை. பசி மேலும் வயிற்றைக்கிள்ளவே அருகில் இருந்த ஒரு மரத்தினடியில் அமர்ந்தான். சாப்பிட்டால் கொஞ்சம் தெம்பு வரும். பிறகு வழி கண்டுபிடித்துச் சென்றுவிடலாம் என்று தூக்கை திறந்தான். ஒரு கவளத்தை எடுத்து வாயில் வைக்க போன சமயம் அந்த பக்கமாக ஒரு மூதாட்டி வந்தாள்.

    தம்பீ! பசிக்கிறது ஒரு கவளம் சோறு தருகிறாயா? என்று கேட்டாள்.

    தாராளமாக பாட்டி! வாருங்கள் இப்படி அமருங்கள் என்று கூறி முதல்கவளத்தை பாட்டியின் கையில் கொடுத்தான். பாட்டிக்கு மிகுந்த பசி போலும். மீண்டும் கையை நீட்டினாள். விக்ரமும் மீண்டும் ஒரு கவளம் எடுத்துக் கொடுத்தான். இப்படி அந்த தூக்கில் இருந்த சோற்றில் ஒரு கவளம் தவிர அனைத்தும் உண்டு முடித்துவிட்டாள் பாட்டி! கூஜாவில் இருந்த தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டு தம்பி! நல்ல நேரத்தில் என் பசி போக்கினாய்! அடடா! உனக்கு ஒரு கவளம்தான் மிஞ்சியது போலிருக்கிறதே! என்றாள்.பரவாயில்லை பாட்டி! எனக்கு இது போதும்! உங்கள் பசி நீங்கியதா?என்றான் விக்ரம். அந்த கடைசி கவளம் உண்ண எடுத்த போது ஒரு நாய்க் குட்டி வந்து வாலாட்ட, ஓகோ! உனக்கும் பசிக்கிறதா? இந்தா என்று அதையும் அந்த குட்டிக்கு போட்டுவிட்டான்.

    என்னப்பா! இப்படி செய்துவிட்டாய்! கடைசி கவளத்தையும் நாய்க்குட்டிக்கு போட்டுவிட்டாயே! நீ எப்படி பசி ஆறுவாய்? என்றாள் பாட்டி!

    பரவாயில்லை பாட்டி! அருகில் உள்ள கிராமத்தில்தான் என் வீடு இருக்கிறது. காட்டில் சுள்ளிபொறுக்க வந்து வழி தவறிவிட்டது! காட்டை கடந்துவிட்டால் போதும். அங்கு போய் சாப்பிட்டுக் கொள்வேன்! என்றான்.

    ஓகோ! வழி தவறி இங்கு வந்துவிட்டாயா? இந்த பகுதிக்குள் மனிதர்களே வரமாட்டார்களே நீ எப்படி வந்தாய் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சரி உனக்கு நான் வழிகாட்டுகிறேன்! என்று அந்த பாட்டி வழி காட்ட சிறிது தண்ணீர் மட்டும் அருந்தி தாகம் தணிந்து அந்த சுள்ளிக்கட்டையை சுமந்துகொண்டு கிளம்பினான் விக்ரம். காட்டின் இறுதியில் அந்த மரத்தின் அருகில் கொண்டுவந்து விட்ட அந்த பாட்டி, விக்ரம்! தக்க நேரத்தில் எனக்கு பசி போக்கினாய்! உனக்கு ஒரு பரிசு தர விரும்புகிறேன். இதோ பார் இந்த மந்திர புத்தகத்தையும் பென்சிலையும் தருகிறேன். இந்த புத்தகத்தில் இந்த பென்சிலால் நீ வரையும் பொருள் உண்மையாக மாறி உனக்குக் கிடைக்கும். இதை நீ உன் அத்தியாவசியத்திற்கும் பிறருக்கு உதவி தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறாக பயன் படுத்தினால் மீண்டும் என்னிடம் வந்து சேர்ந்துவிடும். இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. சொல்லினால் மந்திரம் பலிக்காது. என்ன புரிகிறதா? அதோ உன் நண்பர்கள் உன்னை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் கிளம்பு! என்று சொல்லி விட்டு திரும்பி காட்டினுள் மறைந்தாள்.

    அந்த நாய்க்குட்டி மட்டும் விக்ரமோடு வாலாட்டிக் கொண்டு இருந்தது."ஓ! நீ என் கூட வருகிறாயா?

    Enjoying the preview?
    Page 1 of 1