Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nooru Varushathu Bommai
Nooru Varushathu Bommai
Nooru Varushathu Bommai
Ebook88 pages32 minutes

Nooru Varushathu Bommai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நீதிக் கதைகள் பலதரப்பட்டவை. பெரியவர்களுக்கு நீதி போதியது ஒரு வகை. சிறுவர்களுக்கு நீதி புகட்டுவது ஒருவகை. அதனை மிகச் சிறப்பாக, குழந்தைகளின் உள்ளங்களைப் புரிந்து கொண்டு, அவர்கள் விரும்பிப் படிக்கும் வண்ணம் நீதியைப் போதிக்கும். கதைகளை ஒன்று சேர்த்து 'நூறு வருஷத்து பொம்மை' என்ற தலைப்பில் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது? என்பதை, ஆர்.வி.பதி அவர்களின் இந்நூலின் வாயிலாகக் காணலாம்...!

Languageதமிழ்
Release dateApr 22, 2023
ISBN6580138809323
Nooru Varushathu Bommai

Read more from R.V.Pathy

Related to Nooru Varushathu Bommai

Related ebooks

Reviews for Nooru Varushathu Bommai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nooru Varushathu Bommai - R.V.Pathy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நூறு வருஷத்து பொம்மை

    Nooru Varushathu Bommai

    Author:

    ஆர். வி. பதி

    R.V.Pathy
    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இனி வரும் பக்கங்களில்

    1. உதவும் மனம் வேண்டும்

    2. நூறு வருஷத்து பொம்மை

    3. வாசுவின் நண்பர்கள்

    4. எங்க சிங்க ராஜா

    5. பொறாமை வேண்டாமே!

    6. பிறந்த நாள் பரிசு

    7. யார் பலசாலி?

    8. மனதில் உறுதி இருந்தால்...

    9. தனக்கு வந்தால் தெரியும்

    10. தொலைந்து போன பேனா

    11. மனமாற்றம்

    12. உழைத்தால் உயரலாம்...

    13. உதவு நண்பா உதவு...

    14. கேலி

    15. மனதில் உறுதி பிறந்தாச்சு

    16. சூப்பர் திட்டம்

    17. அலட்சியம் ஆபத்தானது

    18. ராஜாவின் சாமர்த்தியம்

    19. பிறர் பொருள் நாடாதே!

    20. வெளிநாட்டு பேனா

    21. ஒற்றுமையாக இருப்போம்

    1. உதவும் மனம் வேண்டும்

    ஜான் பள்ளிக்கூடத்திற்குப் போகக் கிளம்பிக்கொண்டிருந்தான். ஆண்டுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்ததால் காலை எட்டு மணியிலிருந்து சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வகுப்பு ஆசிரியை எல்லோரும் சிறப்பு வகுப்பிற்குத் தவறாமல் கட்டாயமாக வரவேண்டும் என்று சொல்லியிருந்தார். ஜானுக்கு அம்மா மட்டுமே இருந்தாள். அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார் நன்றாகப் படித்து அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்பதே ஜானின் இலட்சியமாக இருந்தது. நன்றாகப் படித்தான். தன்னால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்வான்.

    ஜான் பள்ளிக்கூடத்திற்குச் சென்றுகொண்டிருந்தான். வழியில் தன்னுடன் படிக்கும் வாசு வரவே இரண்டு பேரும் சேர்ந்து பள்ளிக்கூடத்திற்குச் சென்றார்கள்.

    வாசு நன்றாகப் படிக்கமாட்டான். அதிகம் பொய் சொல்லுவான். பொய் சொல்வதினால் மற்றவர்களுக்கு நேரும் துன்பத்தைக் கண்டு மகிழ்வான். ஜான் நன்றாகப் படிப்பதால் வாசுவிற்கு அவனை அவ்வளவாகப் பிடிக்காது.

    சிறிது தூரம் சென்றார்கள். அப்போது ஒரு பெரியவர் ரோட்டைக் கடந்து அந்தப் பக்கம் செல்ல முயன்று கொண்டிருந்தார். அவருக்குப் பார்வை சரியாகத் தெரியாததால் அவரால் அந்தப் பாதையைக் கடக்க முடியவில்லை. அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இதைக் கவனித்த ஜான், வாசுவிடம் வாசு கொஞ்சம் உதவி செய்யறியா? நாம இரண்டு பேரும் அந்தப் பெரியவருக்கு உதவலாம் என்றான்.

    அதற்கு வாசு போடா உனக்கு வேறே வேலையே கிடையாது. என்னாலே உதவமுடியாது. ஸ்பெஷல் கிளாசுக்கு நேரமாச்சு என்று சொல்லிவிட்டு வேகமாகப் பள்ளிக்கூடம் நோக்கிப் போய்விட்டான். ஆனால் ஜான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

    ஜான் அந்தப் பெரியவரின் கையைப் பிடித்துக்கொண்டு பாதையைக் கடக்க உதவினான். அவரது முகவரியைக் கேட்டான். அந்த வீடு அருகில் இருந்ததால் பெரியவரை அவர் வீடுவரை சென்று அவர் மகளிடம் ஒப்படைத்துவிட்டுப் பள்ளிக்கூடம் வந்து கொண்டிருந்தான்.

    ஆனால் பள்ளிக் கூடத்தில்,

    சிறப்பு வகுப்பிற்கு ஜானைத் தவிர எல்லோரும் வந்திருந்தார்கள். வகுப்பு ஆசிரியை ஜான் ஏன் வகுப்பிற்கு வரவில்லை? யாருக்காவது தெரியுமா? என்று கேட்டார்.

    உடனே வாசு எழுந்து டீச்சர், ஜான் அவங்க வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பார்க்கில் விளையாடிக்கிட்டு இருந்தான். நான் வரும்போது பார்த்தேன்... என்று பொய் சொன்னான்.

    ஜான் பெரியவரை வீட்டில் விட்டுவிட்டு வந்ததால், அரை மணி நேரம் தாமதமாகப் பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தான். வகுப்பிற்குள் நுழைய டீச்சரிடம் அனுமதி கேட்டான்.

    ஜான் ஏன் வகுப்பிற்கு இவ்வளவு நேரம் தாமதமாக வருகிறாய்? என்றார் ஆசிரியை.

    ஜான் நடந்ததைச் சொன்னான்.

    அதற்கு ஆசிரியை தாமதமாக வந்ததுமில்லாமல் பொய்யா சொல்றே, நான் அனுமதிக்கும் வரை வகுப்பிற்கு வெளியே நில் என்றார் கோபத்துடன். ஜான் வகுப்பிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தான். இந்தத் தண்டனைக்குக் காரணம் வாசுதான் என்பதையும் உணர்ந்தான்.

    அன்று அந்தப் பள்ளிக்கூடத்தில் புதிதாக ஒரு தலைமை ஆசிரியை பொறுப்பேற்றார். அவர் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று பார்த்துக் கொண்டிருந்தார். ஜான் படித்துக்கொண்டிருந்த வகுப்பிற்கு வந்தார்.

    அவர் ஜானிடம் தம்பி நீ இந்தப் பள்ளிக் கூடத்திலேயா படிக்கிறே? என்றார்.

    Enjoying the preview?
    Page 1 of 1