Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maatti Yosi
Maatti Yosi
Maatti Yosi
Ebook118 pages44 minutes

Maatti Yosi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு இளைஞன். ஐ.டி துறையில் வேலை பார்ப்பவன். தெரியாத்தனமாக ஒரு கிராமத்தில் மாட்டிக் கொள்கிறான். அவனை நாட்டாமை ஆக்கி தீர்ப்பு எல்லாம் சொல்லச் சொல்கிறார்கள். மாட்டிக் கொண்ட கிராமத்திலிருந்து எப்படித் தப்பிப்பது? யோசிக்கிறான். அதை செயல்படுத்தும் போது வேறு சில சிக்கல்கள் உருவாகின்றன. அவன் எப்படித் தப்பிக்கிறான்? அதை நகைச்சுவையாய் சொல்கிறது கதை. படியுங்கள். மனம் விட்டுச் சிரிக்கலாம்.

Languageதமிழ்
Release dateMar 2, 2024
ISBN6580141510733
Maatti Yosi

Read more from Nandhu Sundhu

Related authors

Related to Maatti Yosi

Related ebooks

Related categories

Reviews for Maatti Yosi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maatti Yosi - Nandhu Sundhu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாட்டி யோசி

    (நகைச்சுவை நாவல்)

    Maatti Yosi

    Author:

    நந்து சுந்து

    Nandhu Sundhu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nandhu-sundhu

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    ஸ்வர்ணகமலம் மாத இதழுக்காக எழுதப்பட்ட கதை இது.

    முழு நீள நகைச்சுவைக் கதை.

    மாட்டி யோசி

    ஐ.டி யில் பணி புரியும் ஒரு ஹை டெக் இளைஞன் ஒரு கிராமத்தில் ஒரு நாட்டாமையிடம் மாட்டிக் கொள்கிறான். அடுத்த நாட்டாமை அவன் தான் என அறிவித்து விடுகிறார்.

    அவன் தீர்ப்பெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

    அந்த கிராமத்திலிருந்து தப்பிவிட அவன் யோசிக்கிறான்.

    தப்பித்தானா?

    அது தான் ‘மாட்டி யோசி’ கதை.

    நந்து சுந்து

    போன்: 94431 81615

    1

    அப்பா ஊரிலிருந்து வந்து விட்டார்.

    டேய்... வினய் இங்கே வாடா என்று அழைத்தார்.

    நான் பிசியா இருக்கேன். ஆபீஸ் வேலை இருக்கு என்றான் வினய்.

    அடச்சீ வாடா என்று கத்தினார் அப்பா சிவராமன்.

    அவருடைய அறைக்குப் போனான் வினய்.

    என்னடா இது? நம்ம வீட்டு ஃப்ரிட்ஜை திறந்த மாதிரி உடம்பு கப்படிக்குது?

    நம்மூர் வியர்வைக்கு கப்படிக்கத் தான் செய்யும். என் உடம்புலேந்து கமகமன்னு வாசனை வரனும்னா வினய்னு பேர் வைச்சதுக்கு பதிலா ஆவின் நெய்னு பேர் வைச்சிருக்கனும்

    வொர்க் ப்ரெம் ஹோம் செய்யறதுன்னா இப்படியாடா? குளிச்சிட்டு ஆபிஸ் ரூமுக்குள்ளே போக மாட்டியா?

    சும்மாயிரு. என் ப்ராஜக்ட் மேனேஜர் பல் கூட தேய்க்கறதில்ல்லே. பிரதோஷம் அன்னைக்கு மட்டும் தான் பிரஷ்ஷை எடுக்கறாரு

    சரி... சரி... உன் பிரதாபம் போதும். ஒரு சின்ன வேலை செய்யனும்

    என்ன?

    இந்த சொம்பைப் பாரு

    அப்பா கையில் ஒரு சொம்பு இருந்தது. ஒரு சிறிய பப்பாளிப் பழ சைஸுக்கு இருந்தது. மேலே பெப்சி கேன் மாதிரி தகர மூடி போட்டிருந்தது.

    இதென்ன தெரியுமாடா?

    ஏதோ ஓசி சொம்பு மாதிரி இருக்கே!

    ஓசிச் சொம்பு இல்லே. காசிச் சொம்பு. இதுக்குள்ளே காசி கங்கா ஜலம் இருக்கு. காசிலேந்து கொண்டு வந்தது

    காசியா? இந்த வாரணாசிக்குப் பக்கத்துல இருக்கே அதுவா?

    ரெண்டும் ஒன்னு தான்டா. காசிக்கு வேற பேர் வாரணாசி

    ஓ... ரெண்டும் ஒன்னு தானா? நான் வாரணாசி வேறணாசின்னு நினைச்சேன். ஆமா. நீ எப்போ காசிக்குப் போனே?

    நான் போகல்லே. பரந்தாமன் தெரியுமில்லையா?

    சட்டை கூட போட்டுக்காம பெரிய மார்பை காட்டிகிட்டு தெருவுல அலைவாரே. அவர் தானே. அவருக்கு பரந்தாமன்கறதுக்கு பதிலா பரந்த மார்பன்னு பேர் வைச்சிருக்கலாம். எக்ஸ் ரே எடுத்தா கூட பாதி மார்பு தான் விழுதுன்னு ராயல் லேப் காரன் கோபிச்சுகிட்டான்

    அந்த பரந்தாமன் தான் இந்த சொம்பை கொண்டு வந்தார். நமக்கு ரெண்டு சொம்பு கொடுத்திருக்காரு

    சொம்ப முக்கியம் இந்தக் கதை

    இதுல ஒரு காசிச் சொம்பு தான் நமக்கு சொந்தம்

    ரொம்ப தூரத்து சொந்தமா இருக்கே?

    இன்னொரு சொம்பை நம்ம நெருங்கிய சொந்தக்காரர் ஒருத்தருக்கு கொடுக்கப் போறோம்

    கொடு. என் கிட்டே ஏன் சொல்றே?

    நீ தான்டா போய்க் கொடுத்திட்டு வரணும்

    நானா? நான் ரொம்ப பிசி. நீ போயிட்டு வா

    போறேன். பெங்களூர் குளிரும்னு பார்த்தேன். போயிட்டு வந்துடறேன்

    பெங்களூர் என்ற பெயரைக் கேட்டதும் வினய்யின் முகம் மாறியது.

    மூன்று மாதங்கள் முன்பாகத்தான் அவனுக்குத் திவ்யாவுடன் திருமணம் ஆனது. திவ்யா பெங்களூரைச் சேர்ந்தவள்.

    பெண் பார்க்க பெங்களூருக்குப் போன போது கூட கேசரி வைக்கவில்லை திவ்யாவின் பெற்றோர். போளி தான் வைத்திருந்தார்கள்.

    கேசரி செய்யல்லியா? என்று கேட்டார் வினய்யின் அம்மா மஞ்சுளா.

    இங்கே போளி தான் ஃபேமஸ். இந்த ஊர்ல இதுக்கு பேர் ஒப்பிட்டு என்றார் திவ்யாவின் அப்பா.

    அந்த வீட்டில் அனைவரும் போளியோ டயட்டில் இருக்கிறார்கள் என்று வினய்க்குப் புரிந்தது.

    திவ்யா அழகாய் வந்தாள். அனைவருக்கும் வணக்கம் சொன்னாள்.

    அம்மா... எனக்கு அரை போளி தான் வைச்சிருக்காங்க என்றான் வினய்.

    முட்டாள். போளியை ரெண்டா மடிச்சிருக்காங்கடா

    பேசிக் கொண்டிருக்கும் போதே திவ்யா இரண்டாக மடிந்து மஞ்சுளாவை நமஸ்கரித்தாள்.

    அவளின் மடியலை நோக்கிக் கொண்டிருந்தான் வினய். இந்த சம்பிரதாயங்களைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது.

    கிரிக்கெட் மேட்சில் டிரிங்க்ஸ் கொடுத்து முடித்த ட்வெல்த் மேன் மாதிரி கொஞ்ச நேரத்தில் திவ்யா உள்ளே போய் விட்டாள்.

    சாப்பிட்டு முடித்ததும் பொண்ணு பிடிச்சிருக்கா? என்று கேட்டார் திவ்யாவின் அப்பா.

    போளி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சூசகமாக சொன்னான் வினய்.

    டேய். என்னடா இப்படி சொல்றே? டைரக்டா சொல்லுடா என்றார் அப்பா.

    அப்பா. சும்மாயிரு. இது ஒரு குறியீடு. டைரக்டோரியல் டச்

    மாப்பிள்ளையின் இந்த சமயோசிதம் சம்பந்தி நரசிம்மனுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. திவ்யாவை ஒப்பிட்டுவுடன் இணைத்துப் பேசிய ஒப்பீட்டு இலக்கணத்தை வெகுவாக ரசித்தார்.

    அப்புறம் என்ன? பேசி முடிச்சிடலாம் என்றார்.

    எல்லாவற்றையும் பேசி முடித்தார்கள். பேசினில் இருந்த பலகாரங்களையும் தின்று முடித்தார்கள்.

    திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு வெளியில் சந்தித்த போது மெதுவாக ஆரம்பித்தாள் திவ்யா.

    ஏங்க நமக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னா உங்க அப்பா அம்மா சேர்ந்து தான் இருப்பாங்களா?

    ஆமா... நமக்கு கல்யாணம் ஆனதுக்காக அவங்க டைவர்ஸ் பண்ண முடியுமா?

    "ஐயோ. அதில்லே. அவங்க நம்ம கூடத் தான் இருப்பாங்களா?’

    ஆமா... எங்களைப் பிரிக்க முடியாது. நாங்க வேளச்சேரியும் வெள்ளமும் போல

    ஐ யாம் வெரி ஹேப்பி வினய். உங்க அப்பா அம்மா நம்ம கூடத் தான் இருக்கனும். எனக்கு தனிக் குடித்தனமே பிடிக்காது

    எனக்கும் அப்படித்தான் திவ்யா. ஜாய்ண்ட் தான் பிடிக்கும். இஞ்னீரிங் காலேஜ் கூட ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதி தான் சேர்ந்தேன்

    க்ரேட். நானும் அப்படித்தான். புடவை வாங்கினா கூட ப்ளவுஸ் ஜாயிண்டா இருக்கற புடவை தான் வாங்குவேன். தனிமையே எனக்குப் பிடிக்காது. அதனால தனி ஒருவன் படம் கூடப் பாக்கல்லே

    "சூப்பர். கல்யாணம் ஆனவுடனே நாம

    Enjoying the preview?
    Page 1 of 1