Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sigappu Illadha Signal
Sigappu Illadha Signal
Sigappu Illadha Signal
Ebook99 pages38 minutes

Sigappu Illadha Signal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாவலைப் படிக்கப் போகும் உங்களுக்கு இடைஞ்சலாக பெரிய என்னுரை எல்லாம் வேண்டாம் என்று தோன்றுகிறது.

இது ஒரு முழு நீள நகைச்சுவை நாவல். ஒரு அதீத கற்பனை. கதையில் வரும் அத்தனை பாத்திரங்களும் காமெடி செய்வார்கள்.

இந்த கதையில் லாஜிக் தேட வேண்டாம். சிரிப்பு ஒன்றையே குறிக்கோளாக வைத்து எழுதப்பட்டது.

சங்கப் பலகை எனும் தனிப்பட்ட முக நூல் குழுவுக்காக எழுதப்பட்டு பலரும் பாராட்டியதால் இப்போது மின்னூலாக வெளியிடப் படுகிறது. ஆதரவு கொடுப்பீராக.

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580141506809
Sigappu Illadha Signal

Read more from Nandhu Sundhu

Related authors

Related to Sigappu Illadha Signal

Related ebooks

Related categories

Reviews for Sigappu Illadha Signal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sigappu Illadha Signal - Nandhu Sundhu

    https://www.pustaka.co.in

    சிகப்பு இல்லாத சிக்னல்

    Sigappu Illadha Signal

    Author:

    நந்து சுந்து

    Nandhu Sundhu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nandhu-sundhu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    என்னுரை

    நாவலைப் படிக்கப் போகும் உங்களுக்கு இடைஞ்சலாக பெரிய என்னுரை எல்லாம் வேண்டாம் என்று தோன்றுகிறது.

    இது ஒரு முழு நீள நகைச்சுவை நாவல். ஒரு அதீத கற்பனை. கதையில் வரும் அத்தனை பாத்திரங்களும் காமெடி செய்வார்கள்.

    இந்த கதையில் லாஜிக் தேட வேண்டாம். சிரிப்பு ஒன்றையே குறிக்கோளாக வைத்து எழுதப்பட்டது.

    சங்கப் பலகை எனும் தனிப்பட்ட முக நூல் குழுவுக்காக எழுதப்பட்டு பலரும் பாராட்டியதால் இப்போது மின்னூலாக வெளியிடப் படுகிறது.

    ஆதரவு கொடுப்பீராக.

    அன்பன்

    நந்து சுந்து

    அத்தியாயம் 1

    அப்பனே...விநாயகா..நீ தான் நல்ல வழி காட்டனும் – விநாயகர் முன் கை கூப்பி வேண்டினான் ஷ்ரவண்.

    கணபதி என்ன GPS ஆ வைச்சிருக்காரு? உன் வழிய நீ தான் பாத்துக்கனும் என்றார் அப்பா.

    எப்போப் பாத்தாலும் என்னை கரிச்சுக் கொட்டிகிட்டே இருக்கீங்க. என்னைக்காவது ஒரு நாள் இந்த வீட்டை விட்டு நான் ஓடப் போறேன். அப்போ  தெரியும்

    வீட்டை விட்டு ஓடினா எப்படித் தெரிவே?

    அதானே..பையனைத் தான் நான் பெத்தேன். கூடவே பைனாகுலரையுமா பெத்தேன்? என்றாள் அம்மா.

    ஒரு காரியம் ஜெயிக்கறதுக்கு துப்பில்லே. எது எடுத்தாலும் தோத்துகிட்டு வர்ரே. இது வரைக்கும் எதுலயாவது ஜெயிச்சிருக்கியா? என்றார் அப்பா.

    ஷ்ரவண் மெளனமானான். பதில் பேசவில்லை.

    அப்பா சொல்வது நிஜம் தான். அவன் இது வரை எதிலுமே வென்றதில்லை. எல்லாவற்றிலும் தோல்வி. வைகுண்ட ஏகாதசி அன்று பரம பதம் விளையாடினால் அதிலும் அரியர்ஸ். E.C.R ல் வேகமாகப் போகும் துப்பட்டா மூடிய பைக் போல பார்வதி பாட்டி விடு விடுவென கட்டங்களில் மேலே போய்க் கொண்டிருப்பார். இவன் மட்டும் தாயம் போட்டு பெரிய பாம்பில் பத்து முறை இறங்குவான்.

    ரம்மி விளையாடினால் சீட்டு எதுவுமே செட் சேராது. எதிரே இருப்பவன் மட்டும் செட் தோசை மாதிரி மூன்று மூன்று கார்டாக அடுக்கிக் கொண்டிருப்பான்.

    போன வாரம் கூட ஓலா புக் செய்த போது O.T.P கொடுத்த  டிரைவர் கடைசி நேரத்தில் ஓடிப் போனான்.

    ஃபோரம் மாலில் ஃபிகரும் ஃபிகர் சார்ந்த இடத்திலும் சுற்றும் போது இவன் ஏறப்போகும் போது மட்டும் எஸ்கலேட்டர் எஸ்க்யூஸ் மீ என்று நின்று போகும். நண்பர்களுக்கு இவன் தான் கேலிப் பொருள். இவனைப் பற்றி அன் லிமிடெட் மீம்ஸ் போட்டு தாக்குவார்கள்.

    மேற்கண்ட காரணங்களுக்காக ஷ்ரவண் விரக்தியின் உச்சத்துக்கே போனான்.

    வீட்டை விட்டு வெளியேறி எங்கேயாவது கண் காணாத தேசத்துக்குப் போய் விடுவது என்று முடிவெடுத்தான்.

    முப்பது நாளில் வீட்டை விட்டு ஓடுவது எப்படி என்று ஒரு புத்தகத்தை ஆன் லைனில் ஆர்டர் செய்யப் போனான். Delivery after 31 days என்று அந்த இணைய தளம் சொன்னதால் ஆர்டரைத் தவிர்த்தான்.

    மரத்தடியில் ஒரு கிளி ஜோசியர் இருந்தார். அவரிடம் போனான்.

    ஐயா..நான் வீட்டை விட்டு ஓடுவேனா? கிளி கிட்டே கேட்டு சொல்லுங்க என்றான்.

    கிளி வந்தது. குடோனிலிருந்து பருத்தி மூட்டையை தூக்கி மறுபடியும் அதே இடத்தில் வைப்பது போல சீட்டுகளை கவ்வி மீண்டும் அதே இடத்தில் வைத்தது. கடைசியாக ஒரு சீட்டு எடுத்தது. அதைப் பிரித்தார் கிளி எஜமான்.

    அடடா...உங்களுக்கு விக்ரம் த்ரிஷா வந்திருக்காங்க. நீங்க கண்டிப்பா ஓடப் போறீங்க. போட்டோ ஷூட் முடிச்சிட்டு ஓடிப் போலாமா..இல்லே ஓடிப் போய் போட்டோ ஷூட் வைச்சிக்கலாமான்னு முடிவு பண்ணிக்கோ தம்பீ

    அட போய்யா.. ஒருத்தனே தோத்துகிட்டிருக்கேன். இதுல இன்னொருத்தியை இழுத்துகிட்டு ஓடனுமாம்

    அடுத்த நாள். அப்பாவிடம் பேசப் போனான். திடீரென அவன் செல்போன் ஒலித்தது.

    டேய்..என்னடா இது ரிங் டோன். சகிக்கல்லே. மாத்தித் தொலைடா என்றார் அப்பா. அந்த ரிங் டோன் தான் தன் மகனின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கப் போகிறது என அவருக்கு அப்போது தெரியவில்லை பாவம்.

    அப்பா...என் ஜாதகத்தைக் கொடுங்க

    எதுக்குடா?

    நான் எப்போ வீட்டை விட்டு ஓடுவேன்னு பாக்கனும்?

    அப்பா ஓடிப் போய் ஜாதகத்தை எடுத்து வந்தார். சீக்கிரமா போய்க் கேளுடா. நாலாவது தெருல நாதமுனின்னு ஒரு ஜோசியர் இருக்கார். அவர் கிட்டேயே போ. கரெக்டா சொல்லுவாரு. எதுக்கும் போறப்ப பைல நாலு துணி எடுத்துகிட்டு போ

    நாதமுனி வீடு தேடிப் போனான் ஷ்ரவண். அவருக்கு வாக்கு வலிமை அதிகம். கேதார் ஜாதவ் கேவலமாய் கிரிக்கெட் ஆடுவார் என்று ஐ.பி.எல் ஆரம்பிக்கும் முன்னமேயே கணித்து சொன்னவர் அவர்.

    "தம்பீ...சரியான ஜோசியர்

    Enjoying the preview?
    Page 1 of 1