Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manthira Pushpam
Manthira Pushpam
Manthira Pushpam
Ebook116 pages45 minutes

Manthira Pushpam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'மந்திர புஷ்பம்' அதே சேலம் மாவட்ட கிராமங்களையே கதைக்களமாகக் கொண்டிருந்தாலும், முற்றிலும் வேறான சூழ் நிலை ஒன்றை நம் கண் முன் விரிய வைக்கிறது.

சித்த சுவாதீனமில்லாத நர்மதாவுக்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்கிறான் காசி. அவனுக்கு வித்தை ஏதும் சொல்லித் தராமல், தன் வீட்டு வேலைக்காரன் போலாக்கிவிட்டு உயிர் துறக்கிறார் சேஷாத்ரி இருந்தாலும் மன்த்தை நெருடவைக்கும்- நெகிழ வைக்கும் பாத்திரமாக இருக்கிறார் இவர்.

வைதீக வாழ்வு எவ்வளவு பின்னடைந்து போயுள்ளது என்னும் ஆதங்கத்தை இந்தக் கதையில் மகரிஷி துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.

உற்றுழி உதவவேண்டிய உறவுகள் எப்படி அவசியமான தருணங்களில் உதறி ஒதுங்குகின்றன என்பது உருக்கமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது இந்தக் கதையில்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803427
Manthira Pushpam

Read more from Maharishi

Related to Manthira Pushpam

Related ebooks

Reviews for Manthira Pushpam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manthira Pushpam - Maharishi

    http://www.pustaka.co.in

    மந்திர புஷ்பம்

    Manthira Pushpam

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    மகரிஷி- தரமான நல்ல கதைகளை எழுதும் மிகச் சிறந்த படைப்பாளி என்று பெயரெடுத்தவர்.

    நான் 'தீபம்' இலக்கிய மாத இதழில் பணியாற்றிய காலங்களிலேயே அதில் வெளியான அவரது 'வட்டத்துக்குள் சதுரம்' போன்ற பல நல்ல குறுநாவல்களை வாசித்திருக்கிறேன். மூத்த எழுத்தாளரான அவரது நூலுக்கு முன்னுரை எழுதுவது எனக்குக் கிடைத்த ஓர் அரிய நல்வாய்ப்பு.

    எழுத்தில் வெற்றி பெற்ற பலரும் திரையுலகில் பிரவேசிக்க முடியவில்லையே என்று எண்ணுவதுண்டு. ஆனால், அந்த நாட்களிலேயே மகரிஷி திரையுலகிலும் கால்பதித்து, வெற்றியும் கண்டவர். அவரது பல நல்ல கதைகள் திரைப்படமாகியுள்ளன. 'பத்ரகாளி,' 'நதியைத் தேடிவந்த கடல்' போன்ற படங்களை மக்கள் நன்கறிவர்,

    'மந்திர புஷ்பம்' அதே சேலம் மாவட்ட கிராமங்களையே கதைக்களமாகக் கொண்டிருந்தாலும், முற்றிலும் வேறான சூழ் நிலை ஒன்றை நம் கண் முன் விரிய வைக்கிறது.

    சித்த சுவாதீனமில்லாத நர்மதாவுக்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்கிறான் காசி. அவனுக்கு வித்தை ஏதும் சொல்லித் தராமல், தன் வீட்டு வேலைக்காரன் போலாக்கிவிட்டு உயிர் துறக்கிறார் சேஷாத்ரி இருந்தாலும் மன்த்தை நெருடவைக்கும்- நெகிழ வைக்கும் பாத்திரமாக இருக்கிறார் இவர்.

    வைதீக வாழ்வு எவ்வளவு பின்னடைந்து போயுள்ளது என்னும் ஆதங்கத்தை இந்தக் கதையில் மகரிஷி துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.

    உற்றுழி உதவவேண்டிய உறவுகள் எப்படி அவசியமான தருணங்களில் உதறி ஒதுங்குகின்றன என்பது உருக்கமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது இந்தக் கதையில்.

    இந்த கதை நல்ல இலக்கிய அந்தஸ்துள்ளவை என்பதில் சந்தேகமில்லை. மகரிஷி தோட்டத்து மணமுள்ள மலர்கள் இவை.

    அன்புடன்

    கௌதம நீலாம்பரன்

    மந்திர புஷ்பம்

    அயோத்தியா பட்டணம் சேலத்திலிருந்து பதினொரு. கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓர் ஊர்.

    கிராமத்தின் பசுமை, நகரத்தின் இளம் நாகரீகப் பரவல், குடிசைகள் ஆங்காங்கு மறைந்து ஓடுகள் போட்ட வீடுகளுக்கு நடுவே விட்டலாச்சாரியார் ஜீபூம்பா அமைப்பு பங்களாக்களும் உண்டு.

    வாழப்பாடி வரை வாழப்பாடி சாலை, ஆத்தூர் போகிறவர்களுக்கு ஆத்தூர் ரோட், கடலூர் பாண்டிச்சேரி போகிறவர்களுக்கு கடலூர் பாண்டிச்சேரி சாலை. விழுப்புரம் சாலை... என்று பல முக்கியப் பெயர்களைக் கொண்ட அந்த பிரதான சாலையை நமது தேவையின் அளவை உத்தேசித்து ஆத்தூர் சாலை என்று அழைக்கலாம்.

    மிகப் பிரபலமான ஸ்கந்தகிரி ஸ்கந்த மாதா கோயில் கொண்டிருக்கும் உடையரப்பட்டி ஸ்கந்தகிரி மலை அருகில் இருக்கிறது.

    குண்டுக்கல் ஏரி... சுற்றிலும் ஏராளமான மலைக் குன்றுகள்...

    இந்த வெறும் மலைகள் உயிர்ப்புடன் திகழ வேண்டுமானால், ஏராளமான சாந்தானந்தாக்கள் அவதரிக்க. வேண்டும். எல்லா மலைகளும் ஸ்கந்தகிரியாகவும் குமரகிரியாகவும் பூர்ணத்துவம் பெற்றுவிடும்.

    ஸ்கந்தகிரி ஆஸ்ரமம் செல்லும் பிரிவு சாலைக்கு அப்பால் கொஞ்ச தூரத்தில் மாசி நாயக்கன்பட்டி கிராமம், அந்த கிராமத்தின் தொடக்கத்தில் அந்த பழைய வீடு ஆரம்பத்திலேயே இருந்தது.

    சிக்குப் பலகை முன் உட்கார்ந்திருந்தார் சேஷாத்திரி.

    சிகப்பு நிற பம்பரக் கயிற்றினால் காதுவளைவில் சுற்றப்பட்டிருந்த கண்ணாடி யை போட்டுக்கொண்டு, சங்கர பாஷ்யத்தின் சாரங்கள் அடங்கிய த்வாதசோ உபநிஷத்தை படித்துக் கொண்டிருந்தார் சேஷாத்ரி.

    அது—

    1914-ல் நா. சு. ராஜாராமய்யரால் பிரசுரிக்கப்பட்டது.

    செல்லரித்து ஓரங்களில் ஏராளமான ஓட்டைகள். மேலே மிக தடிமனான கான்வாஸ் அட்டைப் பதிப்பு. பிரகதாரண்ய உப நிஷத்தில் எட்டாவது பிரமாணத்தில் ஆழமாக உள்ளே சஞ்சரித்துக் கொண்டிருந்தார்,

    ஜனகர் கொண்டு வந்து கட்டிய ஆயிரம் பசுக்களை, பாக்யவல்லீகர் தன் சிஷ்யனை விட்டு தன் ஆசிரமத்திற்கு ஓட்டிச் செல்ல கட்டளையிடுகிறார். இதனால் அங்கிருத்த யோகிகளுக்கெல்லாம் அவர் மேல் ஒரு நிஷ்டூரம் ஏற்படுகிறது

    'பிரும்மத்தை பூரணமாக அறிந்தவர்கள் இங்கே யார் இருக்கிறார்களோ, அவர்கள் இப் பசுக்களை அழைத்துச் செல்லலாம் என்பது தானே நிபந்தனை- இங்கே இருக்கின்ற யாரும் இதை அவிழ்த்துக்கொண்டு போக முன் வரவில்லை. எனவே அதற்குத் தகுதி படைத்தவன் நான் என்பதால் இந்த ஆயிரம் பசுக்களையும் அழைத்துப் போகிறேன்' என்று மிகுந்த கம்பீரத்துடன் கூறுகிறார் யாக்யவல்லீகர்.

    'அப்படியானால் பிரும்மதத்துவம் பூராவையும் நீர் அறிவீரா...?'

    'கேள்விகளைக் கேளுங்கள். பதில் தருகிறேன். அதன் பின் எனக்கு பிரும்ப தத்துவம் தெரியுமா தெரியாதா என்பதை தெரிந்து கொள்வீர்கள்' என்கிறார்.

    அவரை கேள்விக் கணைகளால் துளைக்கிறார். எல்லா கேள்விக்களுக்கும் அவர் பதில் கூறுகிறார். கார்க்கி என்கிற ஒரு வேதமகளின் கேள்வி வியூகத்தில் யாக்ய வல்லீகர் சிக்கிக் கொண்டிருக்கும் போது..

    வாசலில் நிழல் தட்டியது.

    உப நிஷதத்தை விட்டு பார்வையை வெளியே கொண்டு வந்தார்.

    சித்திரை மாதத்தின் பிற்பகல் நேரம். வெய்யில் ஹோமகுண்டமாக தகித்தது

    பதினைந்து வயதுப் பையனுடன் அந்தப் பெண்மணி காமாட்சி அவருக்கு எதிரே மெளனமாக நின்றாள்.

    அவளை அவருக்குத் தெரியும்.

    இரண்டாண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்துவிட்டு ரொம்பவும் கஷ்ட ஜீவனம் நடத்துகிறாள் என்பதும் தெரியும். மூன்று பையன்கள் உண்டு. அதோ கையுடன் அழைத்துக்கொண்டு வந்து நிற்கிறாளே அவன் கடைசிப் பையனாக இருக்கவேண்டும்.

    மங்கிப்போன வெளிர் சிகப்பில் மடிசார் புடவை.

    போஷாக்கு இல்லாததால் வளர்ச்சி குன்றிப் போன உயரம், உருவம்...

    காமாக்ஷி...

    அவர் வைஷ்ணவ சபாவுக்கு அருகில் இருந்தபோது எதிர் வீட்டில் இருந்தாள். தாயை இழந்த பெண் நர்மதாவை ஓரளவு நன்றாக பார்த்துக் கொண்டவள் இவள் தான்.

    ஊரில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் நர்மதாவை கரித்துக் கொட்டும்போது, காமாக்ஷி அவளிடம் தாயன்புடன் நடந்து கொள்வாள்.

    சித்த சுவாதினமில்லாத அவள் செய்கையால் அண்டு அசலில் உள்ளவர்கள் நர்மதாவை திட்டித் தீர்க்கும்போது, காமாக்ஷி அவர்களிடம் சண்டைக்குப் போவாள்..

    அந்த வீட்டின் வாயிற்படியில் நர்மதா அசிங்கம் செய்து விட்டாள் என்பதற்காக, சேஷாத்ரி வீட்டில் இல்லாதபோது நர்மதாவை எதிர்வீட்டுக்காரி கரண்டிக் காம்பினால் அடித்து விட்டாள்,

    அடி தாங்க முடியாமல் நர்மதா அழுதாள். பயந்து போய் காமாக்ஷி வீட்டிற்குள் ஓடிவந்து புகுந்து விட்டாள்..

    அவளைத் துரத்திக் கொண்டு வந்தவள் இரும்புக் கரண்டியுடன் வீட்டினுள் புகுந்து விட்டாள்.

    "காமாக்ஷி, அவளை வெளியே வரச்சொல்லு.

    Enjoying the preview?
    Page 1 of 1