Padi Paranthaval
By Maharishi
()
About this ebook
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.
தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.
தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.
Read more from Maharishi
Sabthapathi Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Thuliyil Kadalosai Rating: 0 out of 5 stars0 ratingsBhadrakali Rating: 0 out of 5 stars0 ratingsSpatikam Rating: 0 out of 5 stars0 ratingsIppadiye Oru Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsVilayada Vanthaval Rating: 0 out of 5 stars0 ratingsPattu Kudai Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Parisu Rating: 0 out of 5 stars0 ratingsJothi Vanthu Piranthal Rating: 0 out of 5 stars0 ratingsOru Devathaiyin Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsThattaamaalai Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsIraval Karu Rating: 0 out of 5 stars0 ratingsParvaiyile Sevaganai..! Rating: 0 out of 5 stars0 ratingsMohanasthiram Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Pugai Rating: 0 out of 5 stars0 ratingsManthira Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsYaagam Rating: 0 out of 5 stars0 ratingsTharaiyil Piditha Meen Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Poo Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Odiyavan! Rating: 0 out of 5 stars0 ratingsKalaintha Suruthi Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Mithantha Padagu Rating: 0 out of 5 stars0 ratingsVeera Sudhandhiram! Rating: 0 out of 5 stars0 ratingsJwalai Rating: 0 out of 5 stars0 ratingsGarudanai Kaditha Paambu Rating: 0 out of 5 stars0 ratingsSnehamai Oru Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsIlaiuthir Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Kozhi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Padi Paranthaval
Related ebooks
Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Sorgathiley Idhu Mudivaanathu Rating: 0 out of 5 stars0 ratingsKungumam Rating: 5 out of 5 stars5/5Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsVerillatha Marangal Rating: 5 out of 5 stars5/5Perarignar Annavin Kurunavalgal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Koyil Rating: 4 out of 5 stars4/5Devathaigal Thoonguvathillai Rating: 0 out of 5 stars0 ratingsUnakkenava Naan Piranthean? Rating: 0 out of 5 stars0 ratingsVennilave… Vennilave! Rating: 0 out of 5 stars0 ratingsAdhu Mattum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsIraval Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Pookkal Rating: 5 out of 5 stars5/5Naathamenum Kovilile… Rating: 0 out of 5 stars0 ratingsNesa Nadhikaraiyil Rating: 3 out of 5 stars3/5Nallathor Veenai Seithe… Rating: 2 out of 5 stars2/5Uravugal Thodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsMoondravathu Kan! Rating: 5 out of 5 stars5/5Unarvin Vizhippu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsThevar Koyil Roja! Rating: 0 out of 5 stars0 ratingsRudhra Veenai - Part 3 Rating: 4 out of 5 stars4/5Ivanum Oru Parasuraman Rating: 0 out of 5 stars0 ratingsVazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Krishnai Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsGramathu Nila Rating: 0 out of 5 stars0 ratingsIrandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratingsSoundarya... Rating: 0 out of 5 stars0 ratingsMaanasa Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Padi Paranthaval
0 ratings0 reviews
Book preview
Padi Paranthaval - Maharishi
http://www.pustaka.co.in
பாடிப் பறந்தவள்
Padi Paranthaval
Author:
மகரிஷி
Maharishi
For more books
http://www.pustaka.co.in/home/author/maharishi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
1
பஸ் ஏற்காடு மலையின் வளைவுகளில் நிதானமாக ஏறிக்கொண்டிருந்தது.
தூரத்தில் கீழே தரையில் சுண்ணாம்பு கொட்டின மாதிரி மாக்னெஸைட். ஆங்காங்கு திட்டுத்திட்டாகத் தெரியும் க்வாரிகள். மொசைக் தொழிற் சாலை.
அறுபதடி பாலம் தாண்டியவுடன் தான் சீதோஷ்ண நிலையில் லேசான மாறுதலை கொஞ்சமாக உணர முடிந்தது.
பாகேஸ்வரி பஸ்ஸின் இரண்டாவது வரிசையில் ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்தாள்.
ஒரு நகரத்திற்கு அருகாமையில் உள்ள சுற்றுலாமையமாக இருந்தபோதிலும் கூட, அவளால் அங்கே அடிக்கடி வர முடிவதில்லை. பள்ளிக் கூடத்தில் படித்தபோது உல்லாசப்பயணம் என்கிற பெயரில் ஓரிருமுறை வந்திருக்கிறாள். அவளுடன் படித்த நெருங்கிய தோழி ஒருத்தியின் திருமணத்திற்கு ஏற்காட்டில் உள்ள வாணியூர் கிராமத்திற்கு ஒருமுறை வந்திருக்கிறாள். எனவே, எப்பொழுது வந்தாலும் அவனைப் பொறுத்த வரையில் ஏற்காடு அவளுக்கு அவள் வருகின்ற நேரங்களில் எல்லாம் புது இடமாகவே தோன்றும்
ஆனால் இப்பொழுது... பஸ் மலைப்பாதையில் ஏறிக் கொண்டிருந்தது. மலைச் சரிவுகளின் வனப்பில் அவள் பார்வை லயித்துப் போயிருந்தாலும், மனம் தன் ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையின் பாரமான நினைவுகளில் அழுந்திப் போயிருந்தது.
எஸ். எஸ். எல். சி வரை படித்தாள். டைப்பில் இரண்டு தேர்வுகள் எழுதி பாஸ் செய்தாள். ஆரம்பத்திலிருந்தே சங்கீத சிட்ஷை உண்டு. அது அவளுடைய பரம்பரைக் கலை. அந்த பரம்பரைக் கலையால் அவளுடைய குடும்பத்தில் யாரும் ஓஹோவென்று வரவில்லை.
பலருக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்ததுடன் ஒதுங்கி ஒடுங்கிப் போய்விட்ட குடும்பமாகவே அவள் குடும்பமும் ஷீணமடைந்து விட்டது.
அதேபோலத்தான் பாகேஸ்வரியும் கர்நாடக மற்றும் லலித சங்கீதங்களின்பேரில் ஆர்வம் ஏற்பட்டு நிறையகற்றுத் தெரிந்து கொண்டாள். நவீன வாழ்க்கைச் சூழலின் பாதிப்பினால் மெல்லிசைகளிலும் ஆர்வம் ஏற்பட்டது.
இந்த ஆர்வம் கூட அவளுடைய வாழ்க்கையை அப்படியே ஒரேயடியாக மாற்றி விடவில்லை.
பாட்டும் நானே, பாவமும் நானே திருவிளையாடலில் வரும் இந்த பாடல் கெளரி மனோகரி ராகம். சிந்து பைரவியில் வரும் பாடறியேன், படிப்பறியேன் சாருமதி என்று விமரிசனம் பேசி ஆத்மதிருப்தியடைய மட்டுமே பயன்பட்டது.
வாய்க்கு ருசியாக நன்றாகச் சமைப்பாள். அவ்வப் பொழுது பத்திரிக்கைகளில் வரும் புதுப்புது சமையல் மற்றும் பதார்த்த வகைகளைச் செய்து செய்து அந்த அந்த வகையில் அவளுடைய திறமை வளர்ந்து விட்டது.
அவள் படிப்போ, அவளுடைய ஆராய்ச்சி அறிவோ, சங்கீத ஞானமோ எதுவுமே பயன்படாமற் போய் ஏதோ ஒரு குருட்டாம் போக்கில் அவளுடைய சமையல் திறமை மட்டுமே அவளுக்குக் கைகொடுப்பதாக அமைந்து விட்டது.
மலய பர்வதத்திலிருந்து வரும்
மந்தமாருதம், லவங்க கொடி
களைலேசாக அசைகிறது
தேனீக்களும், குயில்களும்
கீதம் போல ஒலிக்கின்றன.
இந்த உலக மாயைகளைத்
துறந்த ஞானிகள் கூட இந்தச்
சூழ்நிலையில் தன் வசமிழந்து
விடும் இந்த மனோகரமான
வேளையில் யமுனை நதிக்
கரையில் பிருந்தாவனத்தில் கண்ணன்
அடியார்களின் கூட்டத்தில் ஐக்கிய
உணர்வினை தேடிக் கொண்டிருக்கிறான்.
என்று பொருள்படும் வஸந்தே வாஸந்தி என்று தொடங்கும் ஜெயதேவரின் அஷ்டபதியைப் பாடிக் கொண்டிருந்தபோது சுப்புடு வந்தான்.
நான்கு முழ வேஷ்டியும், அரைக்கை பனியனும், கழுத்தைச் சுற்றிக் கொண்டு கிடந்த வெளிரிய நீல வர்ண துண்டும், முழங்கால் வரை தெரிகிற மாதிரி வேஷ்டியை தட்டுச் சுற்றாக மடித்துக் கட்டிக் கொண்டு அருகில் வந்து நின்றான்.
தலைவோரங்களில் மட்டும் மயிர் இருந்ததற்கு அடையாளமாக பஞ்சு போல மயிர் ஒட்டிக் கொண்டிருந்தது.
அவனுக்கு இதுதான் உத்தியோகம் என்று ஒன்றுமில்லை. அந்த காலத்திய ஸ்கூல் ஃபைனல் எப்பொழுதோ சர்க்கார் உத்தியோக மொன்றில் இருந்ததாக எல்லோரிடமும் கூறுவான். வேலை பிடிக்காமல் விட்டு விட்டதாகக் கூறினதையும் எல்லோரும் நம்பினார்கள். அது பொய்யா நிஜமா என்று யாரும் ஆராயவில்லை.
தீவிரமான் அஞ்சுநேய பக்தன் சாலையோரத்துப் பிள்ளையாரை போகிறபோக்கில் வணங்கும்போது கூடஆஞ்சனேயா
என்று அவன் வாய் அவனையுமறியாமல் முணுமுணுக்கும்.
கல்யாண சீசன்களில் அவன் சமையற்காரன்.
பந்தல் போடும்போது பந்தல்காரன். பிறருக்காக வரன்களைத் தேடி அலையும் போது கல்யாண தரகன்.
மரண வீட்டில் யாரும் கூப்பிடாமலே வந்து பாடைக்குத்தோள் கொடுப்பாள். பிரேதத்தைத் தூக்க உதவுவதும் அதை தகனம் செய்ய உதவுவதும் ஒரு அஸ்வமேதயாக புண்ணியம் தரும் விஷயம் என்று கூறும்போது மனிதாபிமானமுள்ள ஒரு சனாதனி.
ஜெயதேவருடைய அஷ்டபதிங்கறது தெரியறது ஆனா ராகம்தான் தெரியல.
ஹுசேனி ராகம், நடபைரவி ஜன்யம் சில சஞ்சாரங்கள் மூலமாகத்தான் ராகத்தின் ரூபத்தைத் தெரிந்து கொள்ள முடியும்-
பாகேஸ்வரியின் தோளில் தம்பூரு இருக்க அதை மீட்டிக் கொண்டே பேசினாள். ரொம்ப பழமையான ராகம் எப்பொழுதும் பாடத்தக்க பாஷாங்க பாஷாங்க ரக்தி ஜாதிய சேர்ந்தது என்றவள்.
சுப்புடுன்னு பேரு ராகத்தைப் பற்றி ஒரு கத்துக்குட்டி கிட்டே கேக்கறே...
அந்த மேதையோட பேரால தானோ என்னமோ, பரம சங்கீத ரசிகனாகவாவது இருக்க முடியாது. போகட்டும். இப்ப உன்ன பாக்க வந்த ஜோலியே வேற...
உனக்கொரு வேலை தேடிக் கொண்டு வந்திருக்கேன்.
வேலையா.
ஆமாம்
எங்கே?
ஏற்காடு கோகுல் எஸ்டேட்ல, அவங்க பெரிய பணக்காரா. நிறைய தோட்டமெல்லாம் இருக்கு. அங்கேயே நூத்தம்பது, இருநூறு பேர் வேலை செய்யற பழரச பாக்டரி ஒண்ணு இருக்கு. உன்ன மாதிரி ஒரு படிச்சு பெண்ணாத்தான் வேணும்னு கேட்கறாங்க.
வேலை என்னன்னு சொல்லலையே?
"இன்னதுதான் வேலைன்னு சொல்ல முடியாது பாகி, சமையல் வேலையிலிருந்து வீட்டு வேலை அத்தனையும் கவனிக்கவேண்டியிருக்கும். எல்லாத்துக்கும் தனித்தனியா ஆள் இருக்கு. ஆனா சமையல் அறைவரையிலே உள்ளே புகுந்து வேலை செய்யற மாதிரியாரும் கிடைக்கமாட்டேங்கறாளாம். ஏதோ அப்பப்ப வராங்க. பிறகு ஏதேனும் காரணம் சொல்லிட்டுப் போயிடறா. வீட்டு நிர்வாகத்தைப் பொறுப்பா பார்த்துக்க ஆள் இல்லாம தவிக்கறா.
சம்பளத்தைப் பத்தி பிரச்னையே இல்லே என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கலாம்."
பாகேஸ்வரி தோளில சாய்த்துக் கொண்டிருந்த தம்புராவில் சுருதி மீட்டிக் கொண்டிருந்தாள். அந்த சுருதியைத் தான் மீட்டுகிற நினைவு கூட அவளுக்கு இல்லை. அந்த சுருதிலயத்துடனேயே சுப்புடுவின் பேச்சும் கலந்தே வந்தது.
திடீரென்று நினைத்துக்கொண்டு தோளில் சாய்த்திருந்த தம்பூராவை சுவரோரத்தில் சாய்த்து வைத்தாள்.
கல்யாணத்திற்கு உன் வயதில் ஒரு பெண் இருக்கா. மூத்த பையன் இருக்கிறான். அப்பா கிடையாது. படாடோபமான குடும்பம். வருகிறவர்களும் போகிறவர்களுமாக எப்பொழுதும் ஜே...ஜே... என்று இருக்கும். அந்த அம்மாவுக்கு கொஞ்சம் அதிகமாகவே படாடோபம். பெரிய எஸ்டேட் ஓனர். பணக்காரா... என்ன சொல்றே?
நான் என்ன சொல்ல இருக்கு? இங்கே இருக்கிற நிலைமையை நீ பார்த்துண்டு தானே இருக்கே!
நாலு பேருக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ரெண்டுபேர் திடீர்னு நின்னுட்டா. மீதி ரெண்டு பேர்ல ஒருத்திக்கு கல்யாணம் நிச்சயமாயித்து ஒருத்தி மட்டும் நிச்சயமா வருவா. ஏன்னா, அவளுக்கு நான் ஃப்ரியா டியூஷன் எடுக்கறேன். பாகி சிரித்துக்கொண்டாள்.
போதும், இதுக்கெல்லாம் முடிவுகட்டிட்டு என்னோட ஏற்காட்டுக்குவா. இப்ப நான் தலைவாசல் வரையில் போறேன். அப்படியே ராசிபுரம் ஒரு நாள். அப்பறம் நாமக்கல் அநுமாருக்கு வடைமாலை சாத்தி அபிஷேகம் செய்ய ஒரு நாள் குறிச்சிண்டு வரச்சொல்லியிருக்காங்க. இன்னிக்கு என்ன கெழமை சனியா, திங்கக்கிழமை காலமே வரேன் ஒரு நல்ல முடிவோட இரு நானே அழைச்சுகிட்டு போயி சேர்த்து விட்டுடறேன்
சுப்புடு கிளம்பினான்.
ஏதாவது சாப்பிட்டுட்டுப் போயேன்.
"வாண்டாம்.