Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veera Sudhandhiram!
Veera Sudhandhiram!
Veera Sudhandhiram!
Ebook54 pages20 minutes

Veera Sudhandhiram!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803462
Veera Sudhandhiram!

Read more from Maharishi

Related to Veera Sudhandhiram!

Related ebooks

Reviews for Veera Sudhandhiram!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veera Sudhandhiram! - Maharishi

    http://www.pustaka.co.in

    வீர சுதந்திரம்!

    Veera Sudhandhiram!

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    நமது நாடு சுதந்திரம் அடையும்போது எனக்கு வயது பதிமூன்று என்று நினைக்கிறேன்.

    எனது வாழ்வில் சுதந்திரத்திற்கு முன் நிகழ்ந்த வாழ்க்கைச் சம்பவங்கள் என்னால் மறக்க முடியாதவை.

    ஒரத்த நாடு (தஞ்சை மாவட்டம்) சர்வமான்ய அக்கிரஹாரம்-மற்றும் அதை ஒட்டிய சன்னிதித் தெரு மற்றும் யானைக்காரத் தெரு ஆகியவைகளில் இருந்த சிறுவர்களுக்கு நானே தலைவன். எனது கட்டுப்பாட்டில் சுமார் இருபது சிறுவர்கள் என் வயதுகளில் இருப்பார்கள்.

    விடுதலைப் போராட்ட காலத்தில் எங்களுக்கான தோஷங்கள்;

    அன்னையின் அடிமை விலங்கருப்போம்.

    வெள்ளையனே வெளியேறு.

    வேண்டும் வேண்டும் சுதந்திரம் வேண்டும்.

    கள் ஒழிப்போம்.

    கயமை ஒழிப்போம்

    இந்த கோஷங்கள் அனைத்தும் நானே எழுதிக்கொண்டவை.

    எங்களை வழி நடத்தி எங்கள் நடவடிக்கைகளுக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தியவர்கள்:

    பஞ்சு மாமா

    கூனிப்பாட்டி பேரன் விஸ்வனாதன்

    ஆறா அமுதன்

    பழனி

    சீனிவாசன்

    குருசாமி

    என் சிறுவர் அணியில் இருந்த முக்கியமானவர்களின் நினைவிருப்பவர்கள் பெயர்கள் குருக்கள் கணேசன், விசு, பிச்சுமணி, ஜெயம் என்கிற ஜெயராமன்.

    நேதாஜி வாலிபர் சங்கம், காந்திஜி வாலிபர் சங்கம், ராஜாஜி வாலிபர் சங்கம், இவைகள் நாங்கள் அவ்வப்பொழுது ஆரம்பித்து நடத்திய சங்கங்கள்.

    பட்டுக்கோட்டையில் நாடிமுத்துப்பிள்ளை ஆர். வெங்கடராமன், பட்டுக்கோட்டை வேதாசலம் ஸ்ரீனிவாச முடிபூண்டார், தேசிய இயக்கத்தில் எங்கள் பகுதியில் என் நினைவில் நிற்கும் பெயர்கள்.

    குளக்கரைக்கு எதிரே உள்ள மகிழமரத்தடியில் தலைவர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதமிருப்பது, உள்ளூரில் தேசிய போராட்டத்தில் ஈடுபட்டிருப்போருக்கு உதவிகளைச் செய்வது, இரவோடு இரவாக வாசக சாலை அமைப்பது, தலைவர்களிடமிருந்து வரும் கட்டளைகளை உடனுக்குடன் மேற்கொள்வது, தெருவில் கொடி பிடித்து தேசிய கோஷங்களை எழுப்புவது, மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கோஷம் போடுவது (முன்பெல்லாம் தேர்தலின்போது சின்னங்கள் கிடையாது. காங்கிரஸ் மஞ்சள், பச்சை, ஆரஞ்சுக் கோடிட்டு நீலம் சுயேச்சை... இப்படித்தான் இருக்கும்)

    உண்ணாவிரதம் இருக்கும் உள்ளூர் தலைவர்களுடன் உண்ணாவிரதம் இருப்பது, சத்திர வாசலில் நடக்கும் தேசிய காங்கிரஸ் பொதுக் கூட்டங்களைப் பற்றிய தகவலை பொனல் போன்ற மைக் மூலமாக (மின்சாரமோ, பாட்டரியோ இல்லாமல்) தெருத் தெருவாகப் போய் கூட்டம் சேர்ப்பது.

    இப்படி எனது

    Enjoying the preview?
    Page 1 of 1