Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Eera Vizhigal
Eera Vizhigal
Eera Vizhigal
Ebook92 pages32 minutes

Eera Vizhigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803064
Eera Vizhigal

Read more from Maharishi

Related to Eera Vizhigal

Related ebooks

Reviews for Eera Vizhigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Eera Vizhigal - Maharishi

    http://www.pustaka.co.in

    ஈர விழிகள்

    Eera Vizhigal

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    கோமதி கொடுத்த அவள் படிப்பு மற்ற தகுதிகளுக்கான குறிப்புகளைப் பார்த்துவிட்டு தன் அருகில் உட்கார்ந்திருக்கும் ராஜதுரையிடம் அவைகளை அப்படியே நகர்த்தினார் ஸ்ரீனிவாசன்.

    பெரிய பரப்பளவுள்ள வழவழப்பான மேஜைமுன்னே கோமதி மெளனமாக நின்று கொண்டிருந்தாள்.

    நர்சரிப் பள்ளியுடன் இணைப்பாக உள்ள செகண்டரி கல்வி நிலையம்.

    'பயிற்சி பெற்ற ஆசிரியையாகவும் வேலையில் ஓர் அர்ப்பணிப்பு மனப்பான்மையும் உள்ளவர்கள் நேரில் வரவும்' என்கிற விளம்பரத்தைப் பார்த்துவிட்டு கோமதி அங்கே நேர்முகப் பேட்டிக்கென வந்திருந்தாள்.

    அவள் பி. எஸ். சி. படித்துவிட்டு ஆசிரியைப் பயிற்சிப் பள்ளியில் படித்துத் தேறியுமிருந்தாள்.

    பெரிய கம்பெனிகளில் அமர்ந்து வேலை செய்வதை விட இம்மாதிரி கல்வி நிறுவனங்களில் பணியாற்ற அவள் விரும்பினாள்.

    அப்பள்ளியின் நிர்வாக இயக்குனரும், நிர்வாகியுமான ராஜதுரையும் அங்கே இருந்தார்.

    அகலமான முகம். நடுவாந்திரமான வளர்ச்சி. முகத்தில் அடர்த்தியான மீசை. இளமையான தோற்றம். அகலமான கண்கள். கூர்பத்தில் குங்குமமும், அதற்கு மேலே ஒற்றைப் பட்டையாக விபூதியும் இருந்தது.

    இந்தச் சின்ன வயதிலேயே சேலத்தில் பிரபலமான கிரிமினல் லாயர் என்று பெயர் எடுத்திருந்தார்…

    ராஜதுரைக்கு உதவியாக சீனிவாசன் அவளை இண்டர்வியூ செய்தார். சீனிவாசன் ராஜதுரையின் சீனியர்.

    ராஜதுரைக்கு பதிலாக ஸ்ரீனிவாசன் தான் கேள்வி கேட்டார்.

    பேர் என்னம்மா?

    கோமதி

    எந்த ஊர்?

    இதே ஊர்தாங்க.

    எங்கே இருக்கீங்க?

    மரவனேரி நாலாவது கிராஸ்.

    அவளுடைய சர்ட்டிபிகேட்டைப் பார்த்துவிட்டு அவளிடமே கொடுத்தார்.

    ஆரம்பத்தில் சம்பளம் குறைவாகத்தான் கிடைக்கும்.

    பரவாயில்லே ஸார்

    விவாகமாகி விட்டதா?

    அவள் பதில் சொல்லாமல் மெளனமாக தலையைக் குனிந்து கொண்டாள். சிறிது நேர மௌனத்திற்குப் பின்.

    நான்...நான்...இல்லை

    இல்லையென்றால்...

    அவரிடமிருந்து பிரிந்து விட்டேன்.

    சொந்த விஷயமாக இருந்தாலும் மேலும் ஏதேனும் விவரம் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்.

    சொல்லும் படியாக ஒன்றுமில்லை. அவர் என்னை ஒதுக்கிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்கிறார்-அவருடன் சண்டையிட எனக்குச் சக்தியில்லை. ஒதுங்கி விட்டேன்.

    இதற்குமுன் எங்கே வேலை செஞ்சீங்க...?

    படிப்பு முடிச்சவுடன் சித்தர பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரியில் டைப்பிஸ்டாக வேலை செஞ்சேன்… அங்கே வேலை செஞ்சபோதே திருமணமாயிட்டுது. ஓரிரு வருஷம்தான் என்னோட லைப் ஸ்மூத்தா போச்சு. அப்பறம் சரியில்லே, கணவனிடமிருந்து பிரிஞ்சு வந்துட்டேன். அவர் கிட்டேயிருந்து பிரிஞ்சு வந்தப் பின்னால் டீச்சர் ட்ரெயினிங் சேர்ந்தேன். பாஸ் பண்ணினேன். நான் கணக்கு பட்டதாரியாக இருந்தாலும் மானேஜ்மெண்ட் கோர்ஸ் தபாலில் படிச்சு பாஸ் பண்ணினேன். சமீபத்தில் ஒரு மில்லில் நிர்வாகப் பிரிவில் வேலை செஞ்சேன். ஒரு வேலை நிறுத்தத்துக்குப் பின்னால அத மூடிட்டாங்க.

    ரெண்டு வருஷம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் வேலை செய்திருக்கிறேன். ரிஸர்வேஷன் பாலிசியில் என் இடத்திற்கு ஆள் வந்தவுடன் என்னை வெளியே தள்ளிட்டாங்க.

    எந்தப் பிரிவில் இருந்தீங்க?...

    கிராமக் கல்விக் கூடங்கள் முன்னேற்றம். ஆசிரியர் நியமனம், இந்த சீட்டைக் கவனிச்சுட்டிருந்தேன்.

    டீச்சிங் ப்ரபஷன் எடுத்துப்பீங்களா?

    தாராளமா, எதாக இருந்தாலும் ஏத்துப்பேன். எனக்கு ஸ்கூல் மானேஜ்மெண்ட் அன்ட் அட்மினிஸ்ட்ரேஷன் தெரியும். சம்மந்தப்பட்ட இலாக்காவுடன் நமது தொடர்புங்க எப்படி இருந்தா நிர்வாகம் நல்லாப் போகும்ங்கற உத்தியும் தெரியும்... இதுக்குப் பின்னாலதான் எனக்கு இந்த எஜுகேஷன் சம்பந்தப்பட்ட விஷயத்திலே டேஸ்ட்வந்தது. இந்த உத்தியோகம் கிடைச்சா சந்தோஷப்படுவேன்.

    ஸ்ரீனிவாசன் ராஜதுரைக்காக அவளை இன்டர்வியூ. செய்துக் கொண்டிருந்தார்.

    ராஜதுரை அவளையே கவனித்துக் கொண்டிருந்தான் அவள் பெருவாரியான சமயங்களில் ஆங்கிலத்திலேயே பேசினாள்.

    அழகாக இருந்தாள். அவள் பேச்சில் தெளிவு இருந்தது… தீர்மானமான எண்ணங்களும் இருந்தன.

    அவளைப் பற்றினதொரு அபிப்ராயம் முதன்மை பெற்று ராஜதுரையின் மனதில் உட்கார்ந்து விட்டது. அவளுக்கு அங்கே வேலை கொடுப்பது என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள்.

    ஏற்கெனவே இருந்த பெண், தான் ராஜினாமா செய்யப்போவதை முன்கூட்டியே சொல்லி

    Enjoying the preview?
    Page 1 of 1