Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Garudanai Kaditha Paambu
Garudanai Kaditha Paambu
Garudanai Kaditha Paambu
Ebook83 pages27 minutes

Garudanai Kaditha Paambu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803256
Garudanai Kaditha Paambu

Read more from Maharishi

Related to Garudanai Kaditha Paambu

Related ebooks

Reviews for Garudanai Kaditha Paambu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Garudanai Kaditha Paambu - Maharishi

    http://www.pustaka.co.in

    கருடனைக் கடித்த பாம்பு

    Garudanai Kaditha Paambu

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    பிற்பகல் இரண்டு மணி

    மதிய உணவு இடைவேளைக்கு பின் ஊழியர்கள் தங்கள் இருக்கைகளுக்கு இன்னும் வரவில்லை.

    டைப்பிஸ்ட் நளினி அமைதியின்றி தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தாள்.

    டெலிபோன் மணியொளித்தது ஒரு பெண் உதவியாளர் ரிசிவரை எடுத்தாள்.

    'நளினி டெலிபோன் உங்களுக்குத்தான்'

    'யார் கூப்பிடறது'

    குரலைப் பார்த்தா பாஸ் குரல் மாதிரி இருக்கு பரபரப்புடன் எழுந்து ரிசிவரை வாங்கிக் கொண்டாள்.

    'நளினி பேசறேன்'

    ‘நான் தான் மோகனசுந்தர்’ ரிசிவரைப் பிடித்திருந்தும் அவள் கரம் லேசாக நடுங்கியது.

    நெஞ்சு வரண்டு, உதடுகள் ஈரப்பசையற்றுப் போயின. முகம் கழுத்து எங்கும் வியர்க்க முதுகுத்தண்டிலும் வழிந்தது.

    மோகன் உங்களை பத்து நாளா பார்க்க முடியலேயே ஏன், பங்களாவுக்கு டெலிபோன் செய்தாலும் ‘அவர் இல்லை' என்ற பதில்தான் வருகிறது. பத்து பேர் பார்க்கிற மாதிரி அலுவலகத்தில் சந்திக்க வேண்டாம். என்று நீங்க ஆரம்பத்திலேயே சொல்லிட்டதுனால...

    எதிர் முனையில் மெளனம்

    'மோகன் உங்களை நான் உடனே பார்க்கணும், பேசனும் ரொம்ப அவசரம். என்ன மோகன் பதிலே வரமாட்டேங்குது'

    'ஒரு காரணத்தோடதான் நான் உன்னை சந்திக்க முயற்சிக்கல் அதுமட்டுமில்லே...'

    நாம் இனிமே எப்பவுமே பாக்க முடியாது. ஒரு சாதாரண நண்பர்கள் என்ற முறையில் எப்பவேணாபார்க்கலாம்,பேசலாம், ஆனா பழைய நிலையிலே இனி நாம பழகறது முடியாது.

    ‘மோகன்’ - அவள் உதடுகள் துடித்தன.

    ஆமாம் நளினி. நாம் பல விஷயங்கள் பற்றி பேசியாக வேண்டும். ஆனா முடிவா ஒன்றை சொல்லிடறேன்.

    உன்னை என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது எனக்கு வேற இடத்திலே கல்யாணம் நிச்சயமாகப் போவுது.

    மோகன்... மோகன்... அவள் டெலிபோனில் அழுதாள்.

    மற்ற இரு ஊழியர்களும் தன்னை கவனிக்கிறார்கள் என்பதைப் பார்த்தவுடன் ஓரளவு தன்னைக் கட்டுப்படுத்தி கொண்டு.

    'நாம் மாலையில் சந்திப்போம்...'

    'தாரளமாக சந்திப்போம்...

    ஆனால் இப்பொழுது நான் சொன்னது முடிவானது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. நாம் சந்திப்போம். :உனக்கு வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன். உன் வழியைப் பார்த்துக்கொண்டு நீ போகலாம்’ - அவன் முன் அறிவிப்பின்றி டெலிபோனைக் கீழே வைத்து விட்டான்.

    இரண்டு முறை டெலிபோன் பொத்தானை அழுத்தி வீட்டு கண்களில் கண்ணீர் வழிய அதை அதன் யதாஸ்தானத்தில் வைத்தாள்.

    ஒரு வாரம் முன்பு வரை இருந்த அவளுடைய ஆனந்தக்கனவுகள் நொறுங்கிக் கொண்டிருந்தன.

    ஒரு வாரம் முன்பு வரை திறந்திருந்த அவளுடைய சொர்க்கலோக கதவுகள் வேகமாக மூடி தாழிட்டுக்கொண்டு விட்டன

    ஒரு வாரம் முன்பு வரை அவளது காதல் நந்தவனத்தில் பூத்திருந்த ரோஜா மலர்கள் அத்தனையும் காய்ந்து உதிர்ந்து சருகாகிப் போய்க்கொண்டிருந்தன.

    போன வாரம் வரை நீலவானமாக நிர்மலமாக இருந்து அவள் காதல் வானம் திடீரென்று கறுத்து விட்டது.

    மேஜைமேல் தலையைக் கவிழ்த்துக்கொண்டு உடல் குலுங்க அழுதாள்.

    அவளுக்கு டெலிபோன் அழைப்பு வந்து, அவள் மிகுந்த பதட்டத்துடன் பேசி முடித்தவரை பார்த்துக் கொண்டிருந்த மற்ற இரண்டு பெண் ஊழியர்களும் அவள் அருகில் வந்து நின்று அவளைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தனர்.

    மேஜையைத் திறந்து

    Enjoying the preview?
    Page 1 of 1