Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninaivugal Nenjoduthaan...
Ninaivugal Nenjoduthaan...
Ninaivugal Nenjoduthaan...
Ebook91 pages28 minutes

Ninaivugal Nenjoduthaan...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெற்றோர்களின் விருப்பத்திற்காக அருணா, சந்திரசேகரனை மணந்து கொண்டாள். சந்திரசேகரனால் அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்ன? அதன் பின், டிஸ்பென்சரி வைக்க வரும் ரவீந்திரனின் செயல் அவர்களின் வாழ்க்கையே எப்படி புரட்டிப் போட்டது? சந்திரசேகரன் எடுத்த முடிவு என்ன? என்பதை, 'இந்துமதி'யின் நினைவுகள் நெஞ்சோடு தான் கதையில் காணலாம்...!

Languageதமிழ்
Release dateMay 27, 2023
ISBN6580123909409
Ninaivugal Nenjoduthaan...

Read more from Indhumathi

Related to Ninaivugal Nenjoduthaan...

Related ebooks

Reviews for Ninaivugal Nenjoduthaan...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ninaivugal Nenjoduthaan... - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நினைவுகள் நெஞ்சோடுதான்...

    Ninaivugal Nenjoduthaan...

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    தரையில் இறங்கும் விமானங்கள் எனும் நாவல் மூலம் புகழ்க் கொடி நாட்டியவர் திருமதி இந்துமதி. மத்தியதர மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளை படம் பிடித்துக் காட்டுவது. இவரது சமத்துவம் ததும்பும் நடை. ‘சக்தி 81’ நாவலில் வரும் புதுக்கவிதைகள் அவருடைய கவிதை மனத்துக்கு சாட்சி சொல்வன.

    - கலைஞன்

    1

    எதிரில் பெரிதாக வைக்கோற் போர் மண்டியிட்டுக் கிடந்தது. குனிந்து கை கூப்பி நமஸ்கரித்தது. ரொம்பவும் பணிவாக அடக்கமாக. இது எதற்காகத் தன்னை இப்படி நமஸ்கரிக்கிறது...? தனக்குக் கை கூப்புகிறது...? எதிரில் திண்ணையில் உட்கார்ந்திருப்பதாலா...? இல்லை. வேஷம் அத்தனையும் வேஷம்.

    இந்தப் பணிவு, அடக்கம், கை கூப்புதல், எல்லாமே வேஷம்தான், வெறும் ராத்திரி நேரங்களில் மட்டும்தான் காலையில் எல்லாம் மறந்து போகும். வெளிச்சத்தில் கம்பீரமாக எழுந்து நின்று கொண்டுவிடும். ஆஹா, நானா ராத்திரி உனக்கு நமஸ்காரம் பண்ணினேன்... நானா குனிந்து வணங்கிக் கைகூப்பிறனேன்...? இல்லையே... இப்போது பாரேன்... இப்படி நிற்கிற நானா அப்போது உனக்கு அப்படி நமஸ்காரம் பண்ணியிருப்பேன்... என்கிற மாதிரி நிமிர்ந்து நின்றுவிட்ட மாதிரி, பூதாகாரமாய், நீளமும், உயரமுமாய்...

    இந்த வைக்கோற் போருக்குக் கூட பாவனைகள் தெரிந்திருக்கிறது பகலில் ஒரு மாதிரியும், ராத்திரிகளில் வேறு மாதிரியும் நடந்துகொள்ளத் தெரிகிறது. தன் உருவத்தை மாற்றிக் காட்டத் தெரிகிறது. தன்னுடைய கம்பீரம் அத்தனையையும் ஒடுக்கிக்கொண்டு குனிந்து மண்டியிட்டு நமஸ்கரித்து...

    இது யாரைப் பார்த்து இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டது... ராத்திரி வேளைகளில் தங்களின் மனைவிகளைக் கெஞ்சுகிற கணவன்களைப் பார்த்து...? ஆமாம், அப்படிக்கூட கெஞ்சுவார்களா, என்ன...? அதற்கு மனைவிகள் அடங்கிப் போவார்களா...? அந்த அடக்கத்தில் சந்தோஷமும் பெருமையும்படுவார்களா? அது என்ன சந்தோஷம்...? அதில் என்ன பெருமை...?

    எதுவானால் என்ன...? அந்த சந்தோஷம், பெருமை எல்லாம் தனக்குப் புரியாத விஷயங்கள். கிடைக்காத விஷயங்கள். கல்யாணமான இந்த ஐந்து வருடத்தில் ஒரு நாள் கூட... ஒரு இரவு கூட...

    முதல் நாள் இரவே அவளுக்கு ஏமாற்றமான இரவுதான். அவளை ஒன்றுமில்லாமல் அடித்துப் போட்ட இரவு. சந்திரசேகரைப் பற்றி அவள் புரிந்துகொண்ட இரவு.

    எவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் உள்ளே நுழைந்தாள் அவள். எத்தனை திரைப்படங்கள் பார்த்து, எத்தனை புத்தகங்களைப் படித்து, கல்லூரியில் எத்தனை தோழிகளோடு பேசி...

    அவை அத்தனையையும் எதிர்பார்த்துக் கொண்டுதான் போனாள். அவன் தன்னை மென்மையாய் பார்வையால் அணைத்து பின் தன்தோளில் மெதுவாகக் கை போட்டுட்டு ‘அருணா லவ் யூ’ சொல்லி படுக்கைவரை நடத்திக்கொண்டு போய்...

    ஆனால் சந்திரசேகரன் அப்படி எதுவும் செய்யவில்லை. அவள் வந்ததும் மௌனமாகப் புத்தகம் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தான். ஒரு நிமிடத்திற்குப் பின்புதான் அவளைப் பார்க்கிற மாதிரி பார்த்தான். பின் நிதானமான குரலில்...

    உட்காரேன் அருணா என்றான். அப்போதே அவள் மனசில் சின்னப் பள்ளமாக ஒன்று விழுந்தது. ‘என்ன இவர்... ஏன் இப்படி நடந்து கொள்கிறார்...?’ என்று தோன்றியது. ஆனாலும் மெளனமாக உட்கார்ந்து கொண்டாள்.

    அவன் அப்போதும் சிறிது நேரம் பேசாமல் இருந்தான். பின் கரகரத்த குரலில் பேச ஆரம்பித்தான்.

    ஏன் அருணா. எல்லார் வாழ்க்கையின் ஆரம்பம் மாதிரி நம் வாழ்க்கையின் ஆரம்பம் இல்லையே என்று நினைக்கிறாயா?

    ‘ஏன், நம் வாழ்க்கையின் ஆரம்பத்திற்கு என்ன...? கேட்க நினைத்துக் கேட்காமல் அவனை மெதுவாக நிமிர்ந்து மட்டும் பார்த்தாள்.

    ஏன் அருணா, உன்ன ஒன்று கேட்கட்டுமா..? என்னைப் பற்றின உண்மையை தெரிந்துகொண்டு கூட நீ எப்படி என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சம்மதித்தாய்..? வாட் மேட்டு யூ டு கம் திஸ் டிவிஷன்..?

    உங்களைப் பற்றின உண்மையா? என்ன உண்மை...? முதல் தடவையாக வாயைத் திறந்து கேட்டாள் அவள்.

    என்ன உண்மையா...? என்ன அருணா இது..? தெரியாத மாதிரி கேட்கிறாய்...

    நிஜமாகத் தெரியாமல்தான் கேட்கிறேன்.

    உன் அம்மா அப்பா சொல்லவில்லை ...?

    என் அம்மா அப்பாவா...? இல்லையே...

    இல்லையா... நிஜமாகச் சொல்லலை...?

    இல்லை.

    அவன் அதிர்ந்து போனான். ஒரு வினாடி என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான். எப்படிச் சொல்வது? தன்னால்

    Enjoying the preview?
    Page 1 of 1