Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ashokavanam
Ashokavanam
Ashokavanam
Ebook106 pages41 minutes

Ashokavanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘அசோகவனம்’ என்னும் இந்நாவலில், பெண்ணின் நல்ல வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்து கொடுக்கப்படுகிற கல்யாணம் என்பது பெற்றோர்களின் பொறுப்பற்றதனத்தினாலும், தீர விசாரிக்காத தவற்றினாலும் எவ்வாறு சீர் கெட்டுப் போகிறது என்பதைப் பற்றி வாருங்கள் வாசித்து தெரிந்துக்கொள்வோம்…!

Languageதமிழ்
Release dateJan 20, 2024
ISBN6580123909388
Ashokavanam

Read more from Indhumathi

Related to Ashokavanam

Related ebooks

Reviews for Ashokavanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ashokavanam - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அசோகவனம்

    Ashokavanam

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. காணாமல் போன கன்னுக்குட்டி!

    2. சம்மதமா?

    3. அவசரம்!

    4. என் மனசு அங்கேதான்!

    5. மாமாவும் மருமகனும்

    6. இப்போது வேண்டாம்!

    7. புதிய உலகம்

    8. வீடு பார்க்கலாம்!

    9. விலைக்கு வாங்கிட்டேன்!

    10. பணிந்து விடு

    11. அக்கா பட்டணம் போயிருக்குது!

    12. வேறு வழியில்லை!

    முன்னுரை

    ‘அசோகவன’த்தில் பெண்ணின் நல்ல வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்து கொடுக்கப்படுகிற கல்யாணம் என்பது பெற்றோர்களின் பொறுப்பற்றதனத்தினாலும், தீர விசாரிக்காத தவற்றினாலும் எவ்வாறு சீர் கெட்டுப் போகிறது என்பதுதான் நான் சொல்ல வந்த விஷயம்.

    ‘கனகாம்பரப் பூக்கள்’ என்ற இரண்டாவது நாவலும் பெண்ணை அதிலும் வலிப்பு நோய்க்கு ஆளாகி அடிக்கடிக் கீழே விழுந்து மணிக்கணக்கில் நினைவற்றுக் கிடக்கும் பெண்ணை கல்யாணமோ, தாம்பத்திய உறவோ கூடாது என்கிற டாக்டரின் எச்சரிக்கையை மீறி, தங்களின் பாரத்தையும், பொறுப்பையும், கழித்துக்கொள்ள உண்மையை மறைத்து மணமுடித்துக் கொடுத்து விடும் மனசாட்சியை அடகுவைத்த பெற்றோர்களின் பாதகத்தைச் சொல்வது.

    இவை இரண்டிலும் வெளிப்படுபவை நம் தேசத்தின் சாதாரண வர்க்கத்து, பெற்றோரைச் சார்ந்து நிற்கிற தைரியமற்ற பெண்களின் நிலை. பொருளாதாரத்தில் மேம்பாடடைந்த பெண்களுக்கு அனேகமாக இக்கதி ஏற்படுவதில்லை. பொருளாதார சுதந்திரம் நிறைய விஷயங்களில் அடிமைக் கதவுகளைத் திறந்து விடுதலையை ஏற்படுத்துகிறது. பொருளாதாரத்தினால் நெருக்கப்பட்டு, பெற்றோர்களாலும் ஒடுக்கப்பட்டு, சமூகத்து நான்கு பேரின் எட்டுக் கண்களுக்கும் நான்கு வாய்களுக்கும் பயப்படும் அவல நிலையில் திருமணம் என்கிற சிறைக் கூடத்திலும் மாட்டிக்கொண்டு தவிக்கிற இன்றைய பெண்களின் கதியை வெளிப்படுத்துகிற நோக்கத்தில் எழுதப்பட்டவை. வயது வந்த பெண் பாரமாகக் கருதப்படுகிற காரணத்தினால் ‘ஏதோ கல்யாணம் என்று ஒன்று நடந்தால் போதும் என்கிற மனப்பான்மையில் பெண்ணைக் கைகழுவி விட நினைக்கிற பெற்றோரின் எண்ணத்தில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்கிற ஆதங்கத்திலும் எழுந்தவையே அசோகவனமும், அவற்றோடு பூத்திருக்கும் கனகாம்பரப் பூக்களும்.

    இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதே ‘திசை தேடும்...’ நாவல். ஜோதி என்கிற அந்தப் பெண் பெற்றோரின் இந்த வற்புறுத்தல்களுக்குப் பணிபவள் இல்லை. வரதன் தகுதிக்கும், எண்ணத்திற்கும், கற்பனைக்கும், ஏற்ற ஒருவனைக் கணவனாக அடைகிற முயற்சியின் தேடலில் கல்யாணம் என்பது தள்ளித் தள்ளிப் போடப்பட்டு கடைசியில் உடன் பிறந்தவர்களோ, பெற்றோரோ இவளது கல்யாணத்தைப் பற்றிப்படும் கவலையைக் கைவிட்ட நிலைமையில் இவள் விழித்துக் கொள்கிறாள். கல்யாண வீதிக்கான திசையைத் தேடத் தொடங்குகிறாள்...

    மறுக்கிற காரணத்தினாலேயே இந்த ஜோதி மறுதளிக்கப்படுகிறாள். தன் மனத்திற்கு ஏற்ற விதத்தில் ஒருவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற நினைப்பே இங்கு குற்றமாக்கப்படுகிறது. அதுவே அடியாக விழுந்து எழமுடியாமல் செய்து விடுகிறது.

    கல்யாணம் என்பதே நடுத்தரவர்க்கத்துப் பெண்களின் அவலமாகத்தான் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிப் படம் பிடித்து வாசகர்களின் முன் வைக்கிற ஒரே நோக்கம் தவிர இம்மூன்று நாவல்களின் ஜனனத்திற்கு வேறு காரணமில்லை. இக்காரணம் நியாயமான உத்வேகக் காரியங்களைச் செய்யத் தூண்டுமானால் எழுத்தினால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் ஏற்படும்.

    சென்னை-14

    18-11-85

    அன்புடன்

    இந்துமதி

    1. காணாமல் போன கன்னுக்குட்டி!

    கன்னுக்குட்டி தும்பை அறுத்துக்கொண்டு ஓடிற்று. குடிசையின் பின்பக்கம் வரட்டி தட்டிக் கொண்டிருந்த யசோதம்மா மணிச் சத்தம் கேட்டு குரல் கொடுத்தாள்.

    லட்சுமி... ஏ லட்சுமி கன்னுக்குட்டி அறுத்துக்கிட்டு ஓடுது போல இருக்கு. ஊட்டிடப் போவுதுடி. அப்புறம் சாயந்திரம் வாடிக்கைக்காரங்களுக்குப் பால் ஊத்த முடியாது. ஓடுடி...

    அடுப்பில் சோறுபொங்கி காரக் குழம்பிற்கு வெண்டைக்காயும், வெங்காயமும் அரிந்து கொண்டிருந்த அந்தப் பதினெட்டு வயது லட்சுமிகரம் கால் கொலுசு சப்திக்க எழுந்து வந்து வெளில் எட்டிப் பார்த்துக் கேட்டது.

    என்னம்மா...?

    நான் பாட்டுக்குக் கத்தறேன், நீ என்னடான்னா நிதானமா வந்து என்னம்மான்னு எட்டிப் பார்க்கறே...? கன்னுக்குட்டி தும்பை அறுத்துக்கிட்டு மேயப் போன பசு மாட்டைத் தேடி ஓடிச்சுதுடி... ஊட்டிடுச்சானால் சாயந்திரம் முதலியாரம்மாவுக்குப் பால் ஊத்த முடியாது. அந்தம்மா கத்தும்...

    போம்மா... தினமும்தான் மனுசங்க பால் குடிக்கிறாங்க. ஒரு நாள் கன்னுகுட்டிதான் குடிச்சுட்டுப் போகட்டுமே. அவள் அலட்சியமாகப் பதில் சொல்ல யசோதம்மாவிற்குச் சுள் ளென்று கோபம் வந்தது.

    கன்னுக்குட்டி குடிச்சுட்டுப் போனா எனக்கொண்ணும். இல்லைடி... நாளைக்கு அடுப்புல உலை வேகணும். நாலஞ்சு வயிறு கஞ்சி குடிக்கணும். அது தவிர உங்கப்பன் வந்து சாராயக் கடைக்குப் போக காசு கேட்டுமல்லுக்கு நிற்கும். இல்லைன்னு சொன்னால் பொத்து, பொத்துன்னு போடும். இத்தனை நாள் தாங்கிக்கிட உடம்புல சக்தி இருந்துச்சு தாங்கிக் கிட்டேன். இனிமேல் சக்தியில்லடியம்மா... நம்ம வயிறு காஞ்சாலும் உங்கப்பனுக்கு தண்ணிதாகம் அடங்கிடணும், ஓடுடியம்மா... பால் இல்லேன்னா இன்னிக் காசு நிராசாப் போயிடும்மா... போயி, கன்னுக்குட்டிய பிடிச்சாந்து கட்டுடி... என் கண்ணு இல்லே... ராசாத்தி இல்லே...

    போம்மா நீ... அடுப்புல சோறு வேகுது... வெங்காயம் வதக்க கடாய் போட்டிருக்கேன்...

    நெருப்பைத் தணிச்சுட்டுப்போ... நான் பார்த்துக்கிறேன்.

    ஆமா... நீ பார்த்துப்ப... சாணியில கையை வச்சுட்டிருக்கியே... கடாயை இறக்கிட்டுப் போறேன்... சோத்தை மட்டும் பதம் பார்த்து வடிச்சுடு என்ன...?

    ராசாத்தி... ஓடுடியம்மா!

    ஆமா...பசுமாடு எங்க மேயுதோ...இது எங்க ஓடுச்சோ...? என்னைப் பார்க்கிற போதே இன்னும் துள்ளிக்கிட்டு ஓடப்போவுது... நல்ல வேலைம்மா... கயிற்றை இழுத்து நல்லா முடி போடுறதுக்கென்ன...?

    நல்லாத்தாண்டி முடிபோட்டேன். ஆனா கயிறு நஞ்சு போயிருச்சு. பேசிட்டு நிக்காம சீக்கிரம் ஓடுடி...

    இதோ அடுப்பைத் தணிச்சு கடாயை இறக்கிட்டுப் போறேன்...

    இரண்டே நிமிடங்களில் குடிசையை விட்டு வெளியில் வந்தாள் லட்சுமி. வெய்யிலில் அந்த முகமும் கைகளும் மின்னின. பளபளவென்று தேய்த்து வைத்த வெண்கலக் குத்துவிளக்கு மாதிரி இருந்தாள். நல்ல உயரம். ஒடிசலாய் வாகான உடம்பு. நிகுநிகுவென்றநிறம். தொட்டால் வழுக்கிக்கொண்டு போகிற மழமழப்பு.

    Enjoying the preview?
    Page 1 of 1