Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maathini
Maathini
Maathini
Ebook87 pages30 minutes

Maathini

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு, கல்வி, ஒற்றுமை, எளிமை, நேர்மை போன்ற உயர் குணநலன்களைச் சிறப்பிக்கும் குட்டிக் கதைகள். முதியோர் துயரம், கணவன் மனைவி இல்வாழ்க்கை, இந்த ஜெனரேஷன் பிரச்னைகள், போன ஜெனரேஷன் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதலைத் தொடும் வரிகள்.

Languageதமிழ்
Release dateJul 18, 2022
ISBN6580154008735
Maathini

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Maathini

Related ebooks

Reviews for Maathini

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maathini - Tamilselvan Ratna Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாதினி

    Maathini

    Author:

    தமிழ்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நாற்காலி

    2. தாயம்மா

    3. விபத்து

    4. அமராவும் பனை ஓலை விசிறியும்

    5. அகலக்கால்

    6. மகளும் அப்பாவும்

    7. யார் கொலையாளி

    8. ஆதவி

    9. மகள் வந்தாள்

    10. சொல்லத்தான் நினைக்கிறேன்

    11. இறுதி வாக்கு

    12. மாதினி

    13. பேச ஆள் இல்லை

    14. துரோகம்

    15. உயர்ந்த மனிதர்கள்

    16. பொறாமை

    17. வைராக்கியம்

    18. அம்மாவும் நீயே

    19. தயிர் சாதம்

    20. அம்மான்னா சும்மா இல்லை

    21. சவால்

    22. இருபது பவுன் நகையும் பூனையும்

    23. பசி... உடல்வலி... போதை.. ..

    24. மசாலா வடை நேர்மை

    25. சுமித்ரா

    26 கபாலீஸ்வரர்

    27. அம்மா எங்கே?

    28. மகளும் குடிமகளும்

    29. பள்ளிக்கூடம்

    30. வாழ்க்கை

    1. நாற்காலி

    போகிப் பண்டிகை... வீடு சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தோம் நானும் மனைவியும் மகளும். எக்கச்சக்க தேவையில்லாத காகிதங்கள், அட்டைப் பெட்டிகள், அந்தக் காலத்து ஸூட்கேஸ் பரத நாட்டிய போஸில் நெளிந்து ஸ்லாபில் கிடந்தது. எல்லாவற்றையும் குப்பையில் போட்டாச்சு.

    இனி தரையில் வேண்டாத சாமான்கள்... 32 வருடப் பழமையான கைப்பிடி இல்லாத மர மேசை, பழைய பெருக்குமாறு, பழைய பிளாஸ்டிக் வாளி எல்லாம் வெளியில் வைத்து பழைய பேப்பர்காரருக்கு மொபைல் போட்டேன்.

    அப்பா இந்த பழைய பிளாஸ்டிக் சேர்

    இருக்கட்டும்மா

    பத்து வருஷத்துக்கு மேலே பழசுப்பா... ஒரு கைப்பிடி லேசா உடைஞ்சு, கீறல் தடங்களோடு...

    இருக்கட்டும்மா... .அந்த பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தேன்... . அம்மாவே என்னை இடுப்பில் தூக்கிக் கொஞ்சிய குளுமை அதில் உணர்ந்தேன்... . மார்போடு அணைத்த அன்பு... இரண்டு வயதான சிறுவனாக பிரமை... அம்மாவின் கடைசிக் காலத்தில் இதில்தான் உட்கார்ந்து புத்தகம் படித்தார்கள். நடக்க முடியாத போது இதில் உட்கார வைத்துத்தான் தூக்கிக் குளியலறைக்குக் கொண்டு போனோம். அம்மா நினைவாக சில சேலைகளும், சாமிப் புத்தகங்களும் இந்த நாற்காலியுந்தான் இருக்கின்றன. என் காலம் வரை இதை எறிவதாக இல்லை. இந்த பிளாஸ்டிக் நாற்காலியின் ஒவ்வொரு சென்டி மீட்டரிலும் அம்மா வாசம், சட்டையில் பரவிய வாசனைத் திரவியம் போல பரவியிருந்தது.

    என் கண்களில் வழிந்த நீரைக் கண்டு மகள் ஆச்சரியப்பட்டாள். அப்பா இந்தளவு அழுவார்களா?

    2. தாயம்மா

    தாயம்மா தனது கணவனுக்குக் கைகால் செயலற்றுப் போனதிலிருந்து குடும்பத்தை ஒற்றை ஆளாக தூக்கிப் பிடிக்கிறார். மகனுக்கும் மகளுக்கும் பள்ளிக்கூட செலவுகள், துணிமணிகள் கணவனுக்கு மருத்துவச் செலவுகள் என ஏறிக் கொண்டே போகிறது. மகன் மகள் இருவரும் பள்ளிக்கூடம் போற நேரம் தவிர வீட்டிற்கு உதவி பண்ணுவதில் குறையில்லை... அவர்கள் உதவி இல்லையெனில் சமாளித்திருக்க முடியாது.

    சுற்றிலுமுள்ள அடுக்ககங்களில் நிறைய வீடுகளில் மத்தியான நேரத்திற்குக் குழம்பு மட்டுமோ, கூட்டுப் பொரியல்களோ, இல்லை இரண்டுமோ தாயம்மாவிடம் வாங்கத் தவறுவதில்லை. மதியமும் இரவுக்கடையிலும் நல்ல விற்பனை அவருக்கு.

    வேளச்சேரியில் வெள்ளம் வந்து வடியும் வரை ஒரு வாரத்திற்கும் மேலாக தாயம்மா செய்த சேவை யாரும் நினைத்துப் பார்க்க முடியாதது. பசித்த வயிறுகளுக்கு இலவசமாக மதிய உணவோ இரவு தோசையோ கொடுத்து இத்தனை வருடங்களும் தனக்கு வருமானம் கொடுத்த பகுதி மக்களுக்கு பசியறியா நாட்களைக் கொடுத்தார்.

    வெள்ள நாட்கள் முடிந்தவுடன் சமூக ஆர்வலர்களுக்கும் தாயம்மா போன்றோர்களுக்கும் ஒரு சிறிய பாராட்டு விழா நடந்தது. தாயம்மாவுக்கு சால்வையும் அணிவிக்கப்பட்டது. கூட்டத்திலிருந்த அவர் மகனும் மகளும் கூட்டம் கரவொலியை நிறுத்திய பிறகும்

    Enjoying the preview?
    Page 1 of 1