Karuppatti
()
About this ebook
தன் மகனின் பிரிவால் வாடும் பெற்றோர்களின் நிலைமை பற்றியும், உறவுகள் குன்றி இவ்வுலகம் இயங்காது என்பதையும், உழைப்பே உயர்வு தரும் என்னும் பலதரப்பட்ட கருத்துக்களை கொண்டு உருவானதே இச்சிறுகதை தொகுப்பு ஆகும்
Read more from Tamilselvan Ratna Pandian
Veduk Veduk Vekulamba Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Bothai Rating: 0 out of 5 stars0 ratingsAlaiyathikaadu Rating: 0 out of 5 stars0 ratingsOru Mazhainaal Pagalil Rating: 0 out of 5 stars0 ratingsOlirum Thiramaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaathini Rating: 0 out of 5 stars0 ratingsThanda Soru Rating: 0 out of 5 stars0 ratingsOru Pakka Iru Pakka Kurunkathaigal Rating: 0 out of 5 stars0 ratingsJananamum Maranamum Rating: 0 out of 5 stars0 ratingsMugam Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Uruvaagiral Rating: 0 out of 5 stars0 ratingsVaasamillaa Paasam Rating: 0 out of 5 stars0 ratingsKurunkathaigal 40 Rating: 0 out of 5 stars0 ratingsVairal Rating: 0 out of 5 stars0 ratingsT.R.vin Thernthedukkappatta Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAsanam Rating: 0 out of 5 stars0 ratingsThannambikkai Kathaigal 22 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Karuppatti
Related ebooks
Kannadi Konangal Rating: 4 out of 5 stars4/5வசந்தம் வருமா..? Rating: 0 out of 5 stars0 ratingsArunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Poonthottathil Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Malavika!! Rating: 5 out of 5 stars5/5Manal Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsAnbe, Kannaley Kollathey! Rating: 0 out of 5 stars0 ratings'Nesippaya Nenjamey...!' Rating: 0 out of 5 stars0 ratingsMathana Moga Rooba Sundara!! Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsParapatharke Siragugal... Rating: 0 out of 5 stars0 ratingsRathidevi Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalukku Vilangidu Rating: 3 out of 5 stars3/5Iniyavaley Iranthu Po! Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Bungalow! Rating: 0 out of 5 stars0 ratingsAndha Naalum Vandhitatho? Rating: 5 out of 5 stars5/5Antha Violet Kangal Rating: 0 out of 5 stars0 ratingsபோய் வா சினேகிதி..! Rating: 0 out of 5 stars0 ratingsPoi Vaa Snegithi Rating: 0 out of 5 stars0 ratingsகாத்திருந்த கண்களே... Rating: 0 out of 5 stars0 ratingsSwarangal Rating: 0 out of 5 stars0 ratingsAasai Konda Devathai Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagavey Naan... Rating: 5 out of 5 stars5/5சந்தன மின்னல்... Rating: 0 out of 5 stars0 ratingsSanthana Minnal Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Mozhi Ketuvittal…! Rating: 4 out of 5 stars4/5Kaanamal Pona Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Karuppatti
0 ratings0 reviews
Book preview
Karuppatti - Tamilselvan Ratna Pandian
https://www.pustaka.co.in
கருப்பட்டி
(சிறுகதைகள்)
Karuppatti
(Sirukadhaikal)
Author:
தமிழ்செல்வன் ரத்னபாண்டியன்
Tamilselvan Ratna Pandian
For more books
https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1) கண்ணழகி
2) பெற்றோர் வேண்டாம்
3) மீண்டும் ஒரு காதல் கதை
4) கிராமத்தில் ஒரு நாள்
5) மகள் கிடைப்பாளா?
6) சில்லறை
7) ஒரு கோடியே பத்து இலட்சம்
8) மீசை
9) காதலே சுகம்
10) உழைப்பே துணை
11) அவனும் அவளும்
12) மீண்டும் மாமியார்
13) பற்று
14) மூன்றாம் மனிதர்
15) பேரழகி
16) இனி என்றும் சந்தோஷமே
17) கருப்பட்டி
18) உதவிக்கு...
19) சேலை
20) போனி டெய்ல்
21) ஜோதியும் ஜோதிடமும்
22) பசி
23) அவளும், மாமியாரும் மற்றும் ஃபேஸ்புக்கில் பார்த்திராத நண்பியும்.
24) இவர் ஏன் இப்படி ?
25) உப தேவதை
26) பாரபட்சம்
27) காசு பணம் அப்பா
28) அலைகள் திரும்பத் தருமா?
29) தாயம்மா
30) உனக்கு என்ன பிடிக்கும்?
31) ரயிலும் போதி மரமும்
32) அழுக்குச் சட்டை
33) ஏன் விலகி இருக்கிறாள்?
34) யார் அவன்?
35) அப்பா அப்பாதான்
36) சைக்கிள் ரிக்ஷா
37) மருமகள்
38) தில்லை
39) ஷாலினி
40) நல்லா இருக்கியா
1) கண்ணழகி
அவசர அவசரமா ஆடை அணிந்து அடைகளை அசைபோட்டு அதன் சுவையில் மூழ்கி.. முழுங்கிட்டு ஷுக்குள் கால்களை நுழைத்தேன்.
இன்னிக்கு மனித வள மேலாளர் உஷா மற்றும் பொது மேலாளர் ராதா கூட இன்டெர்வ்யூ போர்ட்ல உக்காந்து எங்க விற்பனைப் பிரிவுக்கு ஒரு ஆள தேர்ந்தெடுக்கணும்.உள்ளே போகும்போதே பார்த்தேன் சுமாரா முப்பதுபேர் உட்கார்ந்திருந்தனர். அவங்களுக்கெல்லாம் காஃபி கொடுக்கச் சொல்லிவிட்டு
தயாராயிருந்த மூணு லிஸ்ட் காப்பிகளை ஒன்னு உஷா மேம்க்கும் இன்னொன்னு ராதா மேம்க்கும் கொடுத்தேன்.போலாமான்னு பொது மேலாளர்ட்ட அனுமதி கேட்டேன். சரின்னாங்க தனது ஓவர்கோட்டைச் சரி பண்ணிக்கொண்டே... ஒவ்வொருத்தரா உள்ளே வந்தாங்க... நிறைய பேருக்கு ஸேல்ஸூக்கும் மார்க்கெட்டிங்குக்கும் கூட வித்தியாசம் தெரில. அவர்களையெல்லாம் முதலிலேயே கழித்து விட்டோம். நேர்முகம் முடிந்தவுடன் அனைவரையும் காக்க வைத்து விட்டு அறைக்குள் நாலுக்குள் ஒன்னு விவாதம் நடந்தது... அந்த ஒன்னுதான் நம்ம ஹீரோயின் வானதி.அடுத்த நாளே வேலையில் சேரச்
சொல்லி விட்டோம். கண்ணைப்பற்றி வர்ணனையில் மீன், மீனா கண் , கண்ணில் ஸெட் போட்ட வித்யா... ஆ... ஊ... என்பர் வானதி கண் நோக்காதவர். ராதாவும் உஷாவும் பொறாமைப்பட்டார்கள் எனில் பார்த்துக்கொள்ளுங்கள். என்னிடம் வேறு... லக்கி பாஸ்
னு கமெண்ட் பண்ணினர் இருவரும்.அடுத்தநாள்... குட் மார்னிங் பாஸ்ஸ்னு உள்ளே வந்தாள் வானதி. அவள் கண்களைப் பார்த்து புன்னகைத்தேன்.
உன் கண்கள் ஸோ ப்யூடிஃபுல்
போங்க பாஸ்னு நெளிந்தாள் வானதி. ஆனால் அவள் கண்கள் என்னிடம் பேசுவது போல தோன்றியது. அவள் கண்களிடம் இனம் புரியாத பாசம்… லவ்... எப்படின்னாலும் வைத்துக் கொள்ளுங்கள். அவளுக்கு செய்ய வேண்டிய வேலைகளைச் சுருக்கமாக சொன்னேன். தினமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் முந்தைய நாளுக்கான விற்பனையை எக்ஸெல்ல போட்டு க்யுமுலேடிவ், டார்கெட் இடைவெளி எல்லாம் எனக்கு மெயில் பண்ணனும் பதினோர் மணிக்குள்ள. சரின்னு புன்னகைத்து அவளது இருக்கைக்குப் போனாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்...
தப்புதானோ... இப்படிப் பார்ப்பது? அடுத்த நாள் வேலை முடிந்ததும் வானதியிடம் என் வீட்டுக்கு வருகிறாயா... அம்மா நல்லா சமைப்பாங்க.... சூடா ரெண்டு அடை காஃபி.... நம்ம எம்டி கூட எங்க வீட்டு அடைக்கு அடிமை. ஒரு வேளை அடை நல்லா இருந்ததனால்தான் நான் ப்ரமோஷன் வாங்கினேனோ என்னவோ.
வித் ப்ளஷர்... வர்றேன்... தன் அம்மாக்கு ஃபோன் பண்ணி லேட்டா வருவதாகச் சொன்னாள். மொபைலில் அம்மாவிடம் வானதி வருகை பற்றி சொன்னேன்.
காரில் போகும்போது சினிமா ஸ்போர்ட்ஸ் என பேச்சு நீண்டது. வீடு வந்தவுடன் காரை லாக் பண்ணிட்டு இருவரும் உள்ளே போனோம். அம்மா எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். முதலில் கேசரி பிறகு அடை பிறகு காப்பி... வானதிக்கு அம்மா சமையல் பிடித்திருந்தது. வானளவு புகழ்ந்து கொண்டிருந்தாள்.நான் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாரேன்.. .நீங்க அம்மாவிடம் பேசிக் கொண்டிருங்கள்னு சொல்லிவிட்டு உள்ளறைக்குப் போனேன். அம்மா என் கதையை ஆரம்பிச்சிருப்பாங்க... இரண்டு வருடம் முன் கார் விபத்தில் என் அருமை மகள் மற்றும் சசி இறந்தது... மகளின் கண்ணாவது வாழட்டும்னு கண் தானம் பண்ணியது... சசி கண்தான் கொடுக்க முடியாதநிலை.வானதி கண்கள் கலங்கியிருந்தன. அம்மாவின் கண்களும்தான். இப்ப இருவரையும் நார்மலாக்கணும்.அம்மா.... என்ன... புராணம் பாடியாச்சா
ன்னு கிண்டல் பண்ணினேன். என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டார்கள் காற்றுப் புகாதவாறு. அம்மா... வானதியை கார்ல விட்டுட்டு வந்துடறேன்
.வானதியை டிராப் பண்ண அவள் வீட்டுக்குப் போனபோது வீட்டுக்குள் வர அழைத்தாள். இன்னொரு நாளில் என்றேன்.பக்கத்தில் வந்து.... கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள் ரோட்டிலேயே...
ஐ லவ் யூ மேம்.... நீங்க ரியலி க்ரேட். என் சேலை கசங்கியதையோ நடு ரோட்ல கட்டிப்பிடித்ததையோ நான் பொருட்படுத்தவில்லை.. இவ்வளவு பாசமா இந்த சின்னப் பொண்ணுக்கு இந்த 35 வயசு பொம்பளைகிட்ட? அதுவும் பார்த்த அடுத்த நாளே... குட்நைட் பரிமாறப்பட்டது. காரை ஸ்டார்ட் பண்ணினேன்.. என் மகள் கண்தான் வானதியிடம்னு தெரியாமலே.
2) பெற்றோர் வேண்டாம்
மாமியார் மருமகள் ஜோக் நூற்றுக் கணக்காகப் படிச்சிருந்தாலும் அவை எல்லாம் தன் வீட்டில் தனது கல்யாணத்துக்குப் பிறகு நடை முறையில் சந்திப்போம் என முருகன் கனவில் கூட நினைத்ததில்லை. கல்யாணமாகி அடுத்த வாரமே முருகனின் அம்மாவும் மனைவி தேவியும் இரண்டு கரண்டிகளைக் கைகளில் வைத்துக் கொண்டு எம்ஜியார் நம்பியார் போல நீட்டிக் கொண்டிருந்தனர். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை. முதல் வாரம் முருகன் தேவி கொடைக்கானல் தேன் நிலவு ஆதலால் வீடு தப்பித்தது. அந்த அபார்ட்மென்ட்டும்
தப்பித்ததுன்னுதான் சொல்ல வேண்டும். முருகன் அப்பா இதெல்லாம் எதிர் பார்த்த மாதிரி இரு பெண்களின் இடையே நுழைவதேயில்லை. முருகன் தெரியாத்தனமாக முதல் சண்டையில் புகுந்து இருவரிடமும் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டான். அன்றிரவு நிச்சயம் பட்டினிதான். அப்பாக்குப் பென்ஷன் வந்து கொண்டிருந்தது. ஃப்ளாட் அவர் பேரில்தானுள்ளது. முருகன்