Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaasamillaa Paasam
Vaasamillaa Paasam
Vaasamillaa Paasam
Ebook86 pages29 minutes

Vaasamillaa Paasam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு, பாசம், இல்லற மேன்மை, குடும்ப ஒற்றுமை, அறம் உண்மை காதல் போன்ற உன்னத பண்புகளின் மேன்மையை சித்திகரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு.

Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580154009165
Vaasamillaa Paasam

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Vaasamillaa Paasam

Related ebooks

Reviews for Vaasamillaa Paasam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaasamillaa Paasam - Tamilselvan Ratna Pandian

    http://www.pustaka.co.in

    வாசமில்லா பாசம்

    சிறுகதைகள்

    Vaasamillaa Paasam

    Sirukathaigal

    Author:

    தமிழ்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. புதுமைப்பெண்

    2. மசாலா வடை நேர்மை

    3. அலமேலு

    4. உயிர் காக்கும் செவிலியர்

    5. தம்பதியர் தினம்

    6. ஷூ(சப்பாத்து)

    7. பத்து வரிக் கதை

    8.புதுமைப்பெண்

    9. பால்கோவா

    10. திருவிழா

    11. அமானுஷ்யம்

    12. தங்கத் தொட்டில்

    13. தனுஷ்கோடி

    14. அந்த ஆறு பேர்...

    15. பகல் பிச்சை

    16. சொன்னது நடக்கும்

    17. நகைக்கடை

    18. கணவன் மனைவி

    19. வாடிக்கையாளர்

    20. 2057 ஜூன் 6ந்தேதி

    21. கண்ணே காதலி

    22. சுண்டல்

    23. ராசி

    24. காகம்

    25. இரு வல்லவர்

    26. கப்பல் மாதா

    27. பழிக்குப்பழி

    28. வாசமில்லா பாசம்

    29. காஃபி

    30. தொடுதல்

    1. புதுமைப்பெண்

    மயிலாப்பூர் கச்சேரி சாலையிலிருந்த அந்த அரசு வங்கிக் கிளை திங்கள் கிழமை காலையில் நகரப் பேருந்தில் நெருக்கடித்துப் பயணிப்பது போல பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. எல்லா கவுண்டர்களிலும் வரிசை. பணம் வாங்க நீண்ட வரிசை அனுமன் வாலை வெட்கப்படச் செய்யும்.

    கேஷ் கவுண்டரிலிருந்த சுபாவுக்கு சீராக மூச்சு விட நேரமில்லை; தண்ணீர் குடிக்க மறந்தே போய்விட்டாள். மனம் முழுதும் பத்தாயிரம் ரூபாய், ஐம்பதாயிரம், லட்சங்கள்தாம். வந்த மொபைல் அழைப்புகளைப் பேரைப் பார்த்து விட்டு அணைத்துக் கொண்டிருந்தாள். அவசரமெனில் இரண்டாவது அழைப்பு வரும் என்கிற சமாதானத்தில் வேலையில் கவனமாயிருந்தாள்.

    கிளையில் பத்து பணியாளர்கள். ஆறு ஆண்கள்; நாலு பெண்கள். எல்லோரும் கல்யாணமானவர்கள். சுபாவைத் தவிர அனைவரும் ஒருவருக்கொருவர் சகஜமாகப் பேசுபவர்கள். சுபா பெண்களிடம் மட்டும் பேசுவாள். ஆண்களை வேற்று கிரகவாசி போல ஒதுக்கி விடுவாள். ஆண்கள் அனைவரும் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்கள், எல்லோரும் குடிகாரர்கள், மனைவியை சமமாக நடத்தாதவர்கள் என முழுதும் தவறாக கருதும் சில பெண்களில் ஒருத்தி. அவள் சொந்த வாழ்க்கையில் அப்பாவின் குடி, அடி மற்றும் முழு அதிகாரம் சிறு வயதிலிருந்து பார்த்து பார்த்து எல்லா ஆண்களையும் தவறாக நினைக்க வைத்தது. தன் கணவனும் சகோதரனும் அவளிடம் எவ்வளவு அன்பாக இருக்கின்றனர் என்பதையெல்லாம் அவள் மறந்து விட்டாள்.

    மற்றவர்களுக்கு சுபாவின் சுபாவம் ஆச்சரியமாக இருக்கும். மற்ற பெண்கள் அவளிடம் தங்கள் வாழ்க்கையில் தந்தை, கணவன் சகோதரன் நண்பர்கள் எல்லாரும் எப்படி அன்பாக அனுசரணையாக இருக்கிறான் என்று சொன்னாலும் தன் நினைப்பே சரி.... முயலுக்கு ஐந்து கால் என தன்னையே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்தாள் சுபா. சாதாரணமாக ஆண்கள் யாரும் பேசினாலும் அதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் மனிதர்களில் ஒருத்தி சுபா. அவளது தவறான எண்ணங்கள் அவளின் வாழ்க்கையை குறுகிய வட்டத்தில் பிரயாணிக்க வைத்தது.

    அன்று திங்கள்கிழமை கூட்டத்தில் பத்தாயிரம் ரூபாய் அதிகமாக யாருக்கோ கொடுத்து சாயந்தரம் எப்படி கேஷை முடிப்பது.... பத்தாயிரம் தனது கணக்கில் கூட இல்லையே என்று மனம் தன்னிரக்கத்தில் மெழுகுவர்த்தியாய் உருகும்போது அவளின் நிலை கண்ட மற்ற ஒன்பது பேரும் உதவ ஓடோடி வந்தார்கள். அதில் மூன்று ஆண்கள் சந்தேகப்பட்ட வவுச்சர்களின் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பண்ணியும் ஒன்றிரண்டு இடங்களுக்கு நேரில் போயும் கடைசியில் பத்தாயிரத்தை மீட்டெடுத்தனர்.

    பணம் வந்து சேர்ந்த பின்தான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

    மற்ற பெண்களும் சுபாவிடம் தங்கள் கஷ்ட காலங்களில் மற்றும் கொரோனா நேரங்களில் பக்கத்து வீட்டு ஆண்கள் எப்படியெல்லாம் உதவி பண்ணினார்கள் என

    Enjoying the preview?
    Page 1 of 1