Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Priya Ennai Piriyaathe
Priya Ennai Piriyaathe
Priya Ennai Piriyaathe
Ebook92 pages31 minutes

Priya Ennai Piriyaathe

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சோம்நாத் அந்த ஊரில் ஒரு பெரிய தொழிலதிபர். அவரது ஒரே மகள் ப்ரியா. சோம்நாத் தன் மகளுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்து, பிரகாஷ் என்னும் தன் நண்பனின் மகனை முடிவு செய்கிறார். பிரகாஷ் சோம்நாத்தின் நிறுவனத்தில் இருந்து நிறைய பணத்தை சுருட்டுகிறான்.

அந்த திருட்டு பழியை அங்கேயே வேலை பார்க்கும் நேர்மையான சரவணன் மீது சுமத்த, அவன் சிறைக்கு தள்ளப் படுகிறான். இதனால் கோபம் அடைந்த சரவணன் அவர்களை பழி வாங்க ஒரு முடிவு செய்தான். அது என்ன முடிவு? அதில் யார் வாழ்க்கைப் பறி போனது? அவன் வாழ்க்கையே என்ன ஆனது?

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580100705943
Priya Ennai Piriyaathe

Read more from Indira Soundarajan

Related to Priya Ennai Piriyaathe

Related ebooks

Reviews for Priya Ennai Piriyaathe

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Priya Ennai Piriyaathe - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    பிரியா என்னை பிரியாதே

    Priya Ennai Piriyaathe

    Author:

    இந்திரா சௌந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    'புதிர்கள் நிரம்பியது இவ்வுலகம் எண்கணிதம், நட்சத்திர சாஸ்திரமும் அதில் மிகப்புதிரானவை. சக எண் கொண்டவர்களோ, சக நட்சத்திரமுடயவர்களோ எங்காவது ஒரு புள்ளியில் சந்தித்துக் கொண்டால் அவர்கள் சந்திப்பு தொண்ணூறு சதம் நல்ல நட்பு, கல்யாண உறவு என்று விரிவடைகிறது. நம் வாழ்நாளில் நாம் மிக நேசிக்கும் நாம் சந்திரத்தேயிராத மனிதர்கள் கூட நம் எண்ணோடும், நட்சதிரமோடும் ஒதுப்போவது ஒரு மிகப்பெரிய அதிசயம்!'.

    -ஜோதிட ஆரய்ச்சி நிபுணர் ஆராவமுத ஐய்யங்கார்.

    அற்புதமான காலை பொழுது!

    மார்கழி வானம் பனியை உலுப்பிக் கொண்டிருக்கிறது. கிழக்குச் சூரியன் ஜீராவில் நனைந்த குலாப்ஜாமூனாக செம்மஞ்சளில் டாலடிக்கிறாள்

    மரத்துப் பறவைகள் விதவிதமான அரட்டையில் ஈடுபட்டிருக்கின்றன. குளித்து முடித்து ஈரம் சொட்டும் தலையை அள்ளி முடியாதபடி நுனி பாகத்தில் ஒரு ரப்பர் பான்ட் மட்டும் போட்டு கட்டிக்கொண்டு மாடிப்படி இறங்குகிறாள் ப்ரியா. காலில் சலங்கை கொஞ்சுகிறது.

    மணி ஏழு தான் ஆகிறது.

    ஹாலில் ஹிண்டுவை மேய்த்துக் கொண்டிருக்கும் சோமநாதன் சலங்கை சப்தம் கேட்டு திரும்புகிறார்.

    எதிரில் மகள்.

    தேவதை ரூபத்தில்… லட்சுமிகடாட்சத்தில்…!

    அவர் முகத்தில் ஷணத்தில் மாறுதல்கள். பரவச மின்னல்கள்.

    எங்கடா கோவிலுக்கா?

    ஆமாம்ப்பா…

    டிரைவர்… உக்கார்ந்த இடத்தில் இருந்தபடியே உச்சஸ்தாயியில் குரல் கொடுக்கிறார்.

    ஓடிவருகிறான் டிரைவர் சீனிப்பாண்டி.

    நீ போப்பா… நானே இன்னைக்கு கார் ஓட்டப்போறேன் என்று அவனை கத்திரிக்கிறாள் ப்ரியா.

    நோ… நோ… நீ ஓட்டக்கூடாது. ஒருத்தருக்கு நாலு டிரைவர் இருக்கும் போது நீ எதுக்குமா கார் ஓட்டணும், சோமனாதன் பவுசு காட்டிப் பேசுகிறார்.

    நாப்பது பேர் இருந்தாலும் நான் தான் ஓட்டுவேன், -அவள் சொல்லிக்கொண்டே அவன் எதிரில் கை நீட்டுகிறாள் கார் சாவிக்காக…

    அவன் சோம்நாத்தை ஒருமாதிரி பார்க்கிறான்.

    அவர் பருவம் வளைய முகம் சற்று சாய்ந்து அசைந்து சம்மதம் தர சாவி கைமாறுகிறது அவளும் கிளம்புகிறாள்.

    சந்தோஷப் பெருமூச்சுடன் திரும்பவும் ஹிண்டுவுக்குள் நுழைகிறார். சற்றைக்கெல்லாம் தொலைபேசி அழைப்பு.

    டேபிள் மேல் கிடக்கும் கார்ட்லெஸ் காதுக்கு வருகிறது.

    யெஸ் சோம்நாத் ஹியர்!

    நான் பார்க்கவா பேசறேன் சோம்நாத்.

    சொல்லுங்க ஜீ.

    என்னத்த சொல்லுங்க… வெளியில போயிருந்தேன். வழியில் ப்ரியாவை பார்தேன். செல்ஃப் டிரைவிங்ல எங்கையோ போய்க்ட்டிருக்கா. தனியா அனுப்பக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.

    … … …

    என்ன சோம்நாத் பேச்சக் காணோம். என்னடா இவ்வளவு உரிமை எடுத்துப் பேசறேன்னு நினைக்காதே உன் நல்லதுக்குத்தான் சொல்லுறேன். பார்க்கவன் சொன்னா அந்த பரந்தாமனே சொன்ன மாதிரின்னு எல்லோரும் சொல்லுறதையும் ஞாபகப்படுத்த விரும்புறேன். – மறுமுனை அறுபட கார்ட்லெஸ்ஸை கீழே வைக்கிறார் சோம்நாத், முகத்தில் அளவான கலவர உணர்சிகள்!

    காரை ஆஞ்சனேயர் கோவில் முன் நிறுதுகிறாள் ப்ரியா பக்கத்து ஆசனத்தில் அதுவரை அமர்ந்து வந்த அர்ச்சனைக் குடலையை எடுத்துக் கொள்கிறாள்.

    ஆர்க்கண்டி சேலையை உடுத்தியிருக்கிறாள், சந்தண வண்ணம் அவள் தேகம் போலவே… நடக்கும் போது சரசரக்கிறது. கூடவே இலைகிறது கொழுசு!

    அந்த சங்கீதம் கோவிலுக்கு வந்தவர்களையும் சுண்டி இழுக்கிறது.

    சன்னதி பட்டர் ஆஞ்சனேயர் முன் காலையில் உட்கார்ந்தால் மதியம் வரை எழுந்திருக்க மாட்டார். உட்கார்ந்தபடி தேங்காய் உடைத்து கற்பூர ஆராத்தி காட்டி தட்டை நீட்டி வந்தவர்களை வழியனுப்புவார்.

    ப்ரியா வரவும் எழுந்து நிற்கிறார்.

    அதற்கு முன்பாக ஒரு முக்கிய விஷயம்.

    அவர் அப்ப்டி உக்கார்ந்த ஜோரில் அர்ச்சனை செய்து கற்பூர தட்டை நீட்டியதற்காக சண்டை

    Enjoying the preview?
    Page 1 of 1