Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

100%
100%
100%
Ebook107 pages39 minutes

100%

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'என் புருஷன்தான்... எனக்கு மட்டும்தான்! என்று பெண்கள் நினைப்பதில் தவறல்ல! தன் கணவன் உத்தமனாக இருப்பது மனைவிக்குப் பெருமைதான். ஆனால், அதையே விடாப்பிடியாக எடுத்துக்கொண்டு முரட்டுத்தனமாக ஒரு பெண் செயல்படத் தொடங்கினால்... அவளது நிலை என்ன?

அதிக பிடிவாதம் யாரையும் முறையாக வாழவிட்டதாக சரித்திரமே இல்லை. இது கசப்பான நிஜம்!

அன்புடன், தேவிபாலா

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603625
100%

Read more from Devibala

Related to 100%

Related ebooks

Reviews for 100%

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    100% - Devibala

    http://www.pustaka.co.in

    100%

    100%

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    நாவல் பற்றி...

    'என் புருஷன்தான்... எனக்கு மட்டும்தான்! என்று பெண்கள் நினைப்பதில் தவறல்ல! தன் கணவன் உத்தமனாக இருப்பது மனைவிக்குப் பெருமைதான்.

    ஆனால், அதையே விடாப்பிடியாக எடுத்துக்கொண்டு முரட்டுத்தனமாக ஒரு பெண் செயல்படத் தொடங்கினால்... அவளது நிலை என்ன?

    அதிக பிடிவாதம் யாரையும் முறையாக வாழவிட்டதாக சரித்திரமே இல்லை. இது கசப்பான நிஜம்!

    அன்புடன்,

    தேவிபாலா

    1

    எப்படிப்பட்ட புருஷன் உனக்கு வேணும் அனு?

    அப்பா இந்தக் கேள்வியைக் கேட்ட நாள் 'ஸ்ரீராம நவமி தினம்'! ஏப்ரல் 15ந்தேதி.

    திரும்பிப் பார்த்து அழகாகச் சிரித்தாள் அனு!

    அப்பா.... பொருத்தமான நாள்ல, கண்ணியமான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கீங்க...!

    அம்மா ஜானகி உள்ளே வந்தாள்.

    என்னங்க... நம்மப் பொண்ணுக்கு என்ன வேணும்ன்னு தீர்மானிக்கிற உரிமை பெத்தவங்களான நமக்கு இல்லையா?

    அதைக் கேட்டு வாசுதேவன் சிரித்தார்.

    இருக்கு ஜானகி! இப்ப அனுவுக்கு இருபத்தி நாலு வயசு. அவளை 'எம்.காம். படிக்க வச்சாச்சு. 'எம்.பி.ஏ.'வும் முடிச்சு, பெரிய உத்தியோகத்துல உட்கார்ந்திருக்கா. மாசம் எழுபதாயிரம் சம்பாதிக்கிறா. அழகா, புத்திசாலித்தனமா இருக்கா. சொந்தமா கார் வாங்கியாச்சு. குயில் மாதிரி பாடுறா... என்ன தகுதி இல்லை அவளுக்கு?

    அவர் குரலில் பெருமிதம் பொங்கி வழிந்தது!

    எல்லாத் தகுதிகளிலும் உள்ள ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையை அமைச்சுத் தரும்போது, அது அவளுக்குப் புடிச்சதா இருக்க வேணாமா? முழுக்க முழுக்க அவ தான் தீர்மானிக்கணும். அதான் கேட்டேன்...

    அனு அழகாக புன்னகைத்தாள்.

    சொல்லும்மா...

    அப்பா... படிப்பு, உத்தியோகம், அழகு, குடும்பப் பின்னணி எல்லாம் பார்த்துதான் நீங்க செய்வீங்க! எனக்கு அதுல சந்தேகமே இல்ல. நான் கேக்கற முதல் தகுதி, எனக்கு முழுமையா நூறு சதவீதம் கற்பு மேல நம்பிக்கை வச்ச 'அக்மார்க்' ஆம்பளைதான் புருஷனா வரணும்.

    சபாஷ்!

    நான் வணங்கற முதல் கடவுள் ராமன். இன்னிக்கு ஸ்ரீராம் நவமி! ராமர் கோவிலுக்குத்தான் இப்பக் கிளம்பறேன். இந்த நாள்ல என்னோட கல்யாணம் பற்றி நீங்க பேச்செடுத்தது சந்தோஷம். ராமன் ஏக பத்தினி விரதன். ஆண்களுக்கும் கற்பு பிரதானம்ன்னு சொன்ன ஆண் கடவுள்! எனக்கு வர்ற புருஷனும் அந்த அளவுக்கு சுத்தமாத்தான் இருக்கணும்.

    ம்... 'சான்ஸே இல்லை!

    குரல் கேட்க மூவரும் திரும்ப...

    அனுவின் தங்கை ஆர்த்தி உள்ளே வந்தாள்.

    என்னடீ பேசற நீ?- அனு கேட்க,

    ஆம்பளைங்க தொண்ணூறு சதவீதம் அப்படி இப்படித்தான்! வேணும்ன்னா பத்து சதவீதம் தேறலாம்.

    போதும்... அந்தப் பத்துல ஒண்ணு எனக்குப் புருஷனா வாச்சாப் போதும்!

    அது எப்படி நிச்சயமா அமையும்?

    ஏண்டி அமையாது?

    அக்கா! படிப்பு, உத்தியோகம், சம்பளம், குடும்பப் பின்னணி... இது எல்லாத்துலேயும் ஒருத்தன் பொய் சொன்னா கிண்டிக் கிளறி நிஜத்தை வெளியில கொண்டு வந்து அவன் தோலை உரிச்சிடலாம். ஆனா, இது 'காரெக்டர்'! உள்ளே உள்ள குணம். ஒரு புத்திசாலி அதை சாதுரியமா மறைச்சு உன் கழுத்துல தாலியைக் கட்டிட்டா என்ன செய்வே?

    கடுப்பாகிவிட்டாள் ஜானகி! –

    ஏண்டி... நல்லதை பேசும்போது இப்படி எக்குத்தப்பா விமர்சனம் பண்ற?

    தப்பு இல்லைம்மா! இதுதான் எதார்த்தம்.

    உங்க அப்பாவைப் பக்கத்துல வச்சுக்கிட்டே... ஆம்பளைகளை விமர்சனம் பண்றது சரி இல்ல.

    ஆர்த்தி, அம்மாவிடம் வந்தாள்.

    அப்பாவுக்கு சபலமே இல்லையா? உன்னைத் தவிர வேற யாரையும் அவர் நெனச்சுக்கூட பார்த்ததில்லையா? உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லும்மா.

    வாயை மூடுடி.

    ஏன் கோவப்படுற? குழந்தைக் காலத்துல எங்களுக்குக்கூடத் தெரிஞ்ச கசமுசாவைச் சொல்லட்டுமா? நீ ஆத்திரப்பட்டு எங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு, பாட்டி வீட்டுல ஒரு வருஷம் தங்கலையா? அப்பா தன் ஆபீஸ்ல வேலை பார்த்த வைதேகிகூட....!

    நிறுத்து ஆர்த்தி!

    வாசுதேவன் கூச்சலிட,

    மன்னிச்சிடுங்கப்பா! உங்களைக் குத்திக் காட்டி நோகடிக்க இதை பேசல. இப்பவும் சொல்றேன்... அன்னிக்கு வைதேவி 'ஆன்ட்டி' கிட்ட நீங்க சபலப்பட்டது தப்புன்னு நான் சொல்ல மாட்டேன்.

    என்னடீ பேசற நீ... அதை நியாயம்ன்னு சொல்றியா?

    அம்மா! அஞ்சு விரல்களும் ஒரே மாதிரி இருக்காது. உன்னையாட்டம் ஒரு சோம்பேறி மனைவி இருந்தா, கலியுக ராமன்கூட அடுத்தப் பொம்பளையை நாடுவான்.

    ஆர்த்தி...

    "இரும்மா! நிஜத்தை பேசினா ஏன் கோபப்படுற? நீ பளிச்சுன்னு 'டிரஸ்' பண்ணமாட்டே... வாய்க்கு ருசியா சமைச்சுப் போட மாட்டே... வீட்டை சுத்தமா வச்சுக்கமாட்டே! எந்த நேரமும் உன் பிறந்த வீட்டுப் பெருமை தலை விரிச்சாடும்.

    அத்தை, பாட்டி யாரையும் நீ அன்பா நடத்தினது இல்ல. நம்மகூட இருக்க விடாம விரட்டி விட்டிருக்கே! எந்த நேரமும் அப்பாகிட்ட சண்டை. அவர் என்னிக்கு இந்த வீட்டுல நிம்மதியா இருந்திருக்கார்? ஆபீசுக்குப் போனா வைதேகி 'ஆன்ட்டி' அன்பா பேசுவாங்க.

    Enjoying the preview?
    Page 1 of 1