Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pen Paathal Oru Pethal
Pen Paathal Oru Pethal
Pen Paathal Oru Pethal
Ebook199 pages1 hour

Pen Paathal Oru Pethal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303159
Pen Paathal Oru Pethal

Read more from Bakkiyam Ramasamy

Related to Pen Paathal Oru Pethal

Related ebooks

Related categories

Reviews for Pen Paathal Oru Pethal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pen Paathal Oru Pethal - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    பெண் பார்த்தல் ஒரு பேத்தல்

    நகைச்சுவை நாடகங்கள்

    Pen Paathal Oru Pethal

    Nagaichuvai Nadakangal

    Author:

    பாக்கியம் ராமசாமி
    Bakkiyam Ramasamy
    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பெண் பார்த்தல் ஒரு பேத்தல்

    வருகிறார்கள் புது மணமக்கள் உஷார்!

    சில நேரங்களில் சில பொருத்தங்கள்

    வடாக் கல்யாணமே! வைபோகமே!

    ஓர் அப்பா, ஓர் அம்மா, ஒரு முதுகு

    ஒரு சாளக்ராமமும் இரு சகோதரர்களும்

    ஒரு நாள் எல்லாமே தலைகீழாக

    குடிகாரக் குதிரையும் சதிகார மாப்பிள்ளையும்

    ஒரு வாக்கிங்! ஒரு போக்கிங்!

    விழித்தால் மகாலக்ஷ்மி முகத்தில்...

    ஓ மை ஜிஞ்சார்மி-85!

    ஐஸ்கிரீம் மீது ஆணை

    ஒரு புயலால் பாதிக்கப்பட்டவரும் ஒரு பயலால் பாதிக்கப்பட்டவரும்

    சரிதான் வாயை மூடய்யா ஹெட் கிளார்க்!

    என் கட்சி

    பெண்ணைப் பெற்றவர்களுக்குப் பயப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாத காலம் அது.

    வருகிறவர்கள் இடம் தெரியாமல் விழிக்கலாகாதே என்று பையனின் வீட்டுக்குப் பெண் வீட்டிலிருந்து ஒரு பிரதிநிதி முன்னதாகப் போய்க் கைகட்டிக் காத்திருந்து மாப்பிள்ளையையும் அவனுடய கோஷ்டியினரையும் ஒரு டாக்ஸியிலோ அல்லது சமயங்களில் இரண்டு டாக்ஸியிலோ 'லோடு' அடிப்பது சம்பிரதாயம்

    எங்கள் குடும்பத்தில் எல்லாச் சகோதரர்களுக்குமாகச் சேர்த்துப் பதினொரு பெண்கள். கூட்டுக் குடும்பமாதலால் எல்லாரும் ஒன்றுகூடி ஓரொரு திருமணத் திருவிழாவையும் இயன்ற அளவு நன்றாகவே நடத்தினோம்.

    ஒரு சராசரி அறிவு படைத்த பையன்கூட பெண் பார்க்க வரும்போது நடந்து கொள்ளும் ஜபர் தஸ்து இருக்கிறதே, டூ மச். அவனுடன் வருகிறகூட்டம் செய்கிற அரட்டல் தாங்காது.

    உள்ளே வந்து பெண்ணருகில் கிசுகிசு என்று ஏதோ பேசி காது டெஸ்ட் செய்வார்கள்.

    சொந்த வீடா என்று உத்தரத்தைப் பார்ப்பார்கள்.

    கடைசியில் 'சகுனம் சரிப்படவில்லை' என்று ஒரு கற்பனைக் கிழம் மண்டையைப் போட்டு விட்டதாகச் சாக்குக் கூறுவார்கள்.

    இந்த மாதிரியாக ஏற்பட்ட எரிச்சலே 'பெண் பார்த்தல் ஒரு பேத்தல்' என்ற நாடகத்தை உருவாக்கியது. குங்குமம் வார இதழில் இது வெளியானதும்' என் மதிப்புக்குரிய ஆசான் குமுதம் ஆசிரியர் அவர்களால் பாராட்டப் பெற்றது என்ற முறையில் எனக்கும் இந்த நாடகத்தின் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் விழுந்தது. நாடகத்தை வெளியிட்டு என்னை உற்சாகப்படுத்திய மணிமேகலைப் பிரசுரத்திற்கும் சிரிக்கச் சிரிக்க ஓவியங்களை சிருஷ்டித்த ஓவியர் செல்லம் அவர்களுக்கும் என் நன்றி,

    இந்தத் தொகுப்பில் வேறு பல இதழ்களில் வெளியான எனது நாடகங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

    பாக்கியம் ராமசாமி

    19-2-94

    சேத்துப்பட்டு, சென்னை-31

    ***

    பெண் பார்த்தல் ஒரு பேத்தல்

    சிறிய ஹால், பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்குத் தயாராக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. பழைய மேஜைக்கு மேக்கப்பாக டேபிள் கிளாத். ஒரு ஸ்பெஷல் நாற்காலி கிழக்கைப் பார்த்துப் போடப்பட்டிருக்கிறது- வருகிற பையன். அமர்வதற்காக இன்னும் அரை வட்டவடிவில் சில பல நாற்காலிகள், கை வைத்தவை, வைக்காதவை, கால் வைத்தவை, சுமாராகக் கால் வைத்தவை, டான்ஸ் தெரிந்தவை, தெரியாதவை, பிளாஸ்டிக் நாற்காலி, டில்லி மோடா (ராயப்பேட்டை தயாரிப்பு) சர்வ கட்சிக் கூட்டம் போல.

    ஆசனங்களின் கலவையான சூழ்நிலை. ஊதுவத்திகளில் புகை மட்டுமே (அட்டையில் மட்டும் வாசனை தேய்க்கப்படும் ரக ஊதுவத்தி). கும்பலாக ஆண்களும், பெண்களுமிருந்தாலும், மிக்ஸரில் போட்ட முந்திரிப் பருப்புமாதிரி பெண் பார்த்தலுக்குரிய பெண் பளிச்செனத் தனியாகத் தெரிந்தாள்.

    மகாதேவன்: (பெண்ணின் அப்பா)- இவள் தான் பெண்.

    சுரேஷ்: (பெண் பார்க்க வந்தவன்) -அப்போ மத்தவங்க அத்தனைபேரும் ஆண்களா என்ன? ஹ ஹ!

    மகாதேவன்: ஹ ஹ! (மனசுக்குள்) சரியான உளறல் கேஸாக இருக்கும் போலிருக்கே. அசடோ? (வெளிப்படையாக) ஒரு இதுக்குச் சொல்றேன். என்னைச் சரியா மடக்கிட்டீங்க.

    ராமபத்ரன்: (சுரேஷின் அப்பா)- எப்பவுமே இவன் பேசினால் வேடிக்கைதான். சுத்திப் பத்துப்பேர் ஆன்னு கேட்டுக்கொண்டிருப்பாங்க.

    மகாதேவன்: (மனசில்) பதினொண்ணாவதாக நம்ம வத்சலாவும் போய்ச் சேரப் போகிறதா? ஹும், துரதிருஷ்டம்தான். (வெளிப்படையாக) லாஃப்ட்டர் இஸ் த பெஸ்ட் மெடிஸின். ஹி... ஹூ... லாஃப்ஸ் லாஸ்ட்ஸ். எனக்கும் ஜோக்குன்னா ரொம்பப் பிடிக்கும்.

    சுரேஷ்: சிலபேர் ஜோக் அடிச்சால் கேட்கிறவங்களுக்குப் பைத்தியமே பிடிச்சிரும். ஹஹஹ! என் ஜோக்கும் அப்படீன்னு சொல்லிவிடாதீங்க, எனக்கே பைத்தியம் பிடிச்சிடும்! ஹ்ஹஹ!

    மகாதேவன்: (மனசில்) சரியான கிராக் போலிருக்கு. (வெளிப்படையாக) ஐயோ. நீங்க பேசறதைக் கேட்டுச் சிரிச்சுச் சிரிச்சு என் வயிறு அறுந்திடும் போலிருக்கு.

    சுரேஷ்: அப்போ, நீங்க எதுவும் சாப்பிடாதீங்க. வயிறு அறுந்திடும் போலிருந்தால் ஜாக்கிரதையாக இருக்கணுமில்லையா? ஹஹஹ!

    ராமபத்ரன்: டேய் சுரேஷ்! நீ என்னடா ஜோக்கா அடிச்சுண்டு போறே? மாமாவுக்குப் பொறை ஏறிண்டுடப் போறது.

    சுரேஷ்: பொறை ஏறிண்டா, மடால்னு தட்டறதுக்கு நீங்கதான் பக்கத்திலேயே இருக்கீங்களே. ப்ளீஸ், டோன்ட் மிஸ்ட்டேக் மி மிஸ்டர் மகாதேவன், நான் உங்க தலையைத் தட்டி வைக்கணும்னு அப்பா, கிட்டே சாடையாச் சொல்றேன்னு நினைச்சுடாதீங்க.

    ராமபத்ரன்: லெட் அஸ் கம் டு பிசினஸ்.

    சுரேஷ்: அப்பா, நீங்க சொன்னதை நான் ரொம்ப அப்ஜெக்ட் பண்றேன். பெண் பார்க்கறது ஒரு பிசினஸ்னு சொல்லாதீங்க. அவர்கள் மட்டமாக நினைப்பாங்க. நான் இனிமேல் பெண் பார்க்கத் தேவை இருக்காதுன்னு நெனைக்கிறேன். ஹ! ஹ! ஹ!

    ராமபத்ரன்: (அவசரமாக) ஈஸ்வர சங்கல்பம்னு ஒண்ணு இருக்கே. யார் யாருக்கு எங்கே முடிச்சுப் போட்டிருக்கோ?

    சுரேஷ்: என்னப்பா பேத்தறீங்க? எல்லாருக்கும் கழுத்திலேதான் முடிச்சுப் போடுவாங்க. பின்னே மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்குமா முடிச்சுப் போடுவாங்க!

    மகாதேவன்: (மனசுக்குள்) தாலியைப் பத்திப் பேசறப்போ மொட்டைத் தலை, தட்டைத் தலைன்னு இவன் உளர்றானே. (வெளிப்படையாக) ராகு காலத்துக்குள்ளே...

    சுரேஷ்: ஹஹ! பொண்ணு பார்க்கற எந்த நேரமுமே ராகுகாலம்தான்னு என் அபிப்பிராயம்! ஹஹஹ!

    மகாதேவன்: டைம் ஆறதே.

    சுரேஷ்: டைம்னு இருந்தால் அது ஆகித்தான் தீரும். ஹஹ! உங்க வீட்டுக் கடியாரத்தை தினமும் கொஞ்சம் ஓடச் சொல்லுங்க, இல்லாட்டா வெயிட் போட்டுடும்!

    மகாதேவன்: ஹிஹி! திடீர் திடீர்னு நின்னு போயிடறது. தினமும் நினைச்சிக்கிறது, சர்வீசுக்குக் கொடுக்கணும்னு.

    சுரேஷ்: நீங்க ஓடறப்போ நினைச்சிக்குவீங்களாக்கும்? ஆமாம், தினமும் நீங்களாவது ஓடறீங்க இல்லையா? (அப்பாவின் காதோடு ஏதோ சொல்கிறான்)

    மகாதேவன்: பையன் என்ன சொல்லுகிறார்?

    சுரேஷ்: இலக்கணப்படி நீங்க சொல்றது தப்பு. ஒண்ணு, பையன் என்ன சொல்றான்னு சொல்லியிருக்கணும், இல்லாட்டா பையர் என்ன சொல்றார்னு சொல்லியிருக்கணும், ஹஹஹ!

    மகாதேவன்: (சமாளித்து) ஹிஹி! எனக்குத் தமிழ் இலக்கணமெல்லாம் அவ்வளவு தெரியாது.

    சுரேஷ்: இங்கிலீஷ் இலக்கணத்திலே ராஷ்டிராபா ஷாவோ, ப்ரவீணோ பாஸ் பண்ணியிருக்கீங்களாக்கும்? ஹஹஹ!

    மகாதேவன்: (மனசில்) சரியான பிசாசாக இருக்கானே. சம்பந்தமில்லாமல் உளர்றான். (வெளிப்படையாக) சும்மா ஒரு இதுக்குச் சொன்னேன். பொண்ணை நமஸ்காரம் பண்ணச் சொல்லலாமா?

    சுரேஷ்: உங்க பொண்ணு ஃபன்ட்டாஸ்ட்டிக்கா: இருக்கிறாள். ரொம்ப அழகு. கோபுலு படம் மாதிரி கண்ணு ஒண்ணே போதும்!

    ராமபத்ரன்: (அவசரமாக) ஸீரியசாப் பேசுடா கழுதை! பெரியவா நாங்கள்ளாம் இருக்கறப்போ ஃபன்ட்டாஸ்டிக், பியூட்டிஃபுல் அது இதுன்னு உளறாதே.

    சுரேஷ்: பொண்ணு அழகா மனசைக் கொள்ளை கொள்ற மாதிரி இருக்கா. பழைய காலம் மாதிரி ஊருக்குப் போய்க் கடுதாசி போடறோம்னு சொல்லணும்கறியா? பஸ் ஓடற லட்சணத்துலே ஊருக்குப்போய்ச் சேர்றதே இந்தக்காலத்திலே சந்தேகம். டமால்னு எவனாவது இன்னொரு பல்லவனோ வல்லவனோ வந்து மோதிட்டன்னா, கர்மாந்தரக் கடுதாசிதான் வந்து சேரும். ஹஹஹ! மிஸ் வசந்தி, நான் சொல்றது சரிதானே?

    வசந்தி: அப்பா, அவரை என்னோடு நேராப் பேச வேண்டாம்னு சொல்லுங்க.

    சுரேஷ்: சரித்திரக் காலம் மாதிரி நடுவே பட்டுத்திரை போட்டுக் கொண்டுதான் பேசணுமா? பெரிய இளவரசின்னு நினைப்பா? பிரிட்டிஷ் இளவரசி மாதிரி இருந்து தொலைக்காமலிருந்தால் சரி.

    வசந்தி: (ரகசியமான குரலில் அப்பாவிடம்) அப்பா அவர் ரொம்பப் போர் அடிக்கிறார். ஆயுளுக்கும் குதறிட்டே இருப்பார் போலிருக்கு.

    ராமபத்ரன்: குழந்தை என்ன சொல்றாள்?

    சுரேஷ்: இன்னும் எங்களுக்குக் கல்யாணமே ஆகலை. அதற்குள் என்ன குழந்தை கிழந்தைன்னு ஹஹ! சும்மா ஒரு தமாஷுக்குச் சொன்னேன்.

    வசந்தி: மிஸ்டர் சுரேஷ் யு ஆர் கட்டிங் வல்கர் ஜோக்ஸ்.

    சுரேஷ்: வல்கரா? இங்கே ஸ்டார் டிவியில எம்.டி.வி சானலா போட்டுக் காட்டறேன். வாட் டூ யூ மீன்?

    வசந்தி: ஐ மீன் எரால் மீன்! உங்க ஜோக்கும் முகரைக் கட்டையும்!

    சுரேஷ்: நீங்க வல்கர்னீங்களே! திஸ் இஸ் வல்கர். உங்க முகரைக்கட்டையும் நீங்களும் என்கிற வார்த்தை சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடின புருஷனைப் பார்த்து மனைவி சொல்ல வேண்டிய வார்த்தைகள். நான் என்னவோ உனக்கு உரிமையாகி விட்ட மாதிரி திட்டறியே?

    வசந்தி: உனக்கு கினக்குன்னு மரியாதைக் குறைவாப் பேச வேண்டாம். நீங்க பேசறதை எங்க அப்பாகூடப் பேசிக்குங்க.

    சுரேஷ்: இடியட் மாதிரி பேசாதே. நான் உங்க அப்பனையா கல்யாணம் பண்ணிக்கப்போறேன். ஒரு மாதுளம் பழம் ஆறு ரூபாய். தெரியுமா உனக்கு?

    வசந்தி: கத்திரிக்காய் கிலோ பன்னிரண்டு ரூபாய், அதற்கென்ன இப்போ? பேச்சிலே ஒரு கோஜென்சியே! இல்லை.

    சுரேஷ்: ஐக்யூ இவ்வளவு மட்டமா இருக்கே உனக்கு. ஒரு மாதுளம்பழம் ஆறு ரூபாய்னு நாலு மாதுளை வாங்கிட்டு வந்திருக்கோம். அது வேஸ்ட்டாகிடப் போகிறதேன்னு சொன்னேன். அப்பா சொன்ன மாதிரி சீப்பா ஒரு சீப்பு வாழைப்பழமே வாங்கி வந்திருக்கலாம்னு சொன்னேன். சுத்த மடச்சியா இருக்கியே.

    வசந்தி: பழத்து விலையெல்லாமா எங்கிட்ட சொல்லணும்? எப்படிப் பேசணும்னே உங்களுக்கு உங்க அப்பா கற்றுத் தரலை. உங்க கோத்திரமே மட கோத்திரமோ என்னவோ? இல்லையானால் உங்களைப் பெற்ற பேர்வழி மட்டுமாவது மடையனா இருக்கணும்.

    ராமபத்ரன்: ஏம்மா என் தலையை உருட்டறே?

    வசந்தி: நான் உருட்டணுமா, தனியா உட்கார்ந்திட்டு. அதுதான் பொங்கலுக்கு வைக்கற வெண்கலப்பானை மாதிரி இருக்கே. ஆமாம். கேட்கணும்னு நினைச்சேன். கொஞ்சம் டில்ட ஆன மாதிரி கோணலா, சில டிகிரி சாய்ஞ்சாப்பலே இருக்கே! உங்க பிள்ளைக்கும் கொஞ்சம் சாஞ்சு இருக்கு.

    சுரேஷ்: என் தலை சில டிகிரி சாஞ்சாப்பலேயிருக்கறதுக்குக் காரணம் வந்ததிலிருந்து உன் பக்கமே பார்த்திட்டிருக்கிறேனா இல்லையா ஹஹஹ! வச்சு, நிஜம்மா நீ ரொம்ப அழகு.

    ராமபத்ரன்: இங்கே யார்ரா வச்சு?

    வசந்தி: அவர் என்னைத்தான் அத்துமீறிக் கொஞ்சலா அப்படிக் கூப்பிடறார். வசந்தியை வச்சுன்னு கூப்பிடறார்.

    சுரேஷ்: இதை வச்சு இவளை எனக்குப் பிடிச்சிட்டுதுன்னு நேயர்களுக்குப் புரிஞ்சிருக்குமே! ஹஹஹ! நீ என்னடி சொல்றே வச்சு?

    ராமபத்ரன்: சிவ சிவா! இந்தக் காலத்துப் பசங்களை நம்மாலே கண்ட்ரோல் பண்ணவே முடியலை. இவன் கன்னா பின்னான்னு பேத்தறான்னு நினைச்சிக்காதீங்கோ. ஸாரி மிஸ்ட்டர் வெங்கட்ராமன்.

    மகாதேவன்: ஓய்! என் பேரு மகாதேவன்.

    சுரேஷ்: அவர்

    Enjoying the preview?
    Page 1 of 1