Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Berovin Pinnal
Berovin Pinnal
Berovin Pinnal
Ebook209 pages3 hours

Berovin Pinnal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580112301991
Berovin Pinnal

Read more from Bakkiyam Ramasamy

Related to Berovin Pinnal

Related ebooks

Related categories

Reviews for Berovin Pinnal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Berovin Pinnal - Bakkiyam Ramasamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பீரோவின் பின்னால்

    Berovin Pinnal

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    வாழ்வை ஒட்டிய நகைச்சுவை

    சிரிப்பே சிந்தனை

    எங்க வீட்டு யந்திரங்கள்

    கொசுவிடமிருந்து தப்பிப்பது எப்படி?

    கந்தர் ‘சிஸ்ட’ கவசம்!

    ஆனியன் ரவாவும் மெனுதர்ம சாத்திரமும்…

    கணவனின் மூக்கு மனைவிக்கே!

    மனிதனுக்கு எத்தனை கண்கள்?

    பீரோவின் பின்னால்…

    சங்கீதமா... சந்தேகமா...

    முப்பதே நாளில் நீங்கள் டான்ஸ் மாஸ்டர் ஆகலாம்!

    தூக்கத்துக்கு கால் இல்லை!

    கவலை பூஷண்

    பெரியவர்கள் என்றொரு இனமுண்டு!

    பிச்சை விருந்தா? இச்சை விருந்தா?

    பல்லாண்டு வாழ்க

    ப்ளஸ் டூ தியாகிகள்!

    ஜலகண்ட புராணம்!

    என் ஓட்டு வாழைப்பழத்துக்கே!

    நாம பணக்காரங்க ஆயிட்டோம்!

    தலிபானும் ஒரு டெலிபோனும்!

    பர்த்டே பைத்தியம்

    மரங்களோடு ஒரு யுத்தம்!

    இயற்கை உணவாம்... ஹி ஹ் ஹி ஹ் ஹீ...!

    அக்(மார்க்) ஞானியுடன் ஒரு சந்திப்பு

    என்னுரை

    நகைச்சுவைக் கதைகள் எழுதுவதைவிட அந்தச் சுவையில் கட்டுரை எழுதவே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    ஒரு சங்கீத வித்துவானுக்கு ஆலாபனையில் ஏற்படும் குஷி நகைச்சுவை எழுத்தாளனுக்குக் கட்டுரை எழுதும்போது ஏற்படுகிறது. சஞ்சார சுதந்திரம் கொஞ்சம் அதிகம்.

    ‘சிரிப்பாரை சிரிப்பாரே காமுறுவர்’ என்னும் பழமொழிக்கு ஏற்ப, இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் ஆனந்த விகடன் இதழில் தொடர்ச்சியாக வெளிவந்தவை.

    என்னிடமுள்ள நன்றியுணர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான முற்றிய, கனிந்த நன்றியுணர்வுகளை விகடன் ஆசிரியருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    (விகடனில் வந்த படங்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்ததற்கு ஒரு குட்டன்றி - இலவச இணைப்பாக)

    என் மண்டையை உடைத்துக்கொண்டோ, அல்லது அதற்குள்ளே இருப்பதாகக் கருதப்படும் மூளையைக் கசக்கிக் கொண்டோ இவற்றை நான் எழுதவில்லை.

    சுகமாக எழுதினேன். ஆகவே வாசகர்களுக்கும் அந்த சுகம் ஏற்படக்கூடும். ஒரொரு கட்டுரைக்கும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பின்புலம் இருக்கத்தான் செய்கிறது. ஆகவே இவை முழுக்க முழுக்க என் கற்பனை அல்ல.

    இந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதித் தந்திருக்கும் சாருகேசி அவர்களும் ஜே.எஸ். ராகவன் அவர்களும் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர்கள்.

    அவர்கள் முன்னுரை எழுதுவதிலும் கைதேர்ந்தவர்கள் என்பதை அவர்களது சிறப்பான முன்னுரைகள் எனக்குத் தெரிவித்தன. முன்னுரை என்பது உள்ளே உள்ள விஷயங்களில் சுருக்கம் அல்ல, என்பதை நன்கு உணர்ந்தவர்கள்.

    ஆகவே முன்னுரையை மட்டும் படித்துவிட்டு வாசகர்கள் இந்தப் புத்தகத்தையே படித்துவிட்டதாக யாரிடமும் சொல்லிக்கொள்ள இயலாது!

    - பாக்கியம் ராமசாமி

    47, ஹாரிங்டன் ரோடு,

    சேத்துப்பட்டு,

    சென்னை-31.

    வாழ்வை ஒட்டிய நகைச்சுவை

    உள்ளதை உள்ளபடி, எதார்த்தமாக, எழுதினால் அதில் நகைச்சுவை இருக்கும் என்று காமு கூறியிருப்பதாக நினைவு. காமு என்றால் ஏதோ காமுப்பாட்டி அல்ல.

    ஆல்பர்ட் காமு. நுனி நாக்கில் பேசுபவர்கள் வட்டாரத்தில் காம்யு என்பார்களே, அவரேதான்.

    ஆனால் எதார்த்தம் எப்படிச் சிரிப்பை வரவழைக்கும் என்று கேட்பவர்களை, அதிகம் மிரட்டாமல், எஸ்.வி.வியின் எழுத்துக்களைப் படிக்கச் சொன்னால் போதும். வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான எல்லா நிகழ்வுகளிலும் இயற்கையான நகைச்சுவை இழையோடிக் கொண்டிருப்பதை அவர் பல கதைகளிலும், கட்டுரைகளிலும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

    வாழ்க்கையில் எத்தனையோ எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் இருக்கும். இவற்றை எல்லாம் சமாளிக்க, நகைச்சுவையைவிடச் சிறந்த டானிக் இருக்க முடியாது.

    தி. ஜானகிராமனின் ‘மாப்பிளைத் தோழன்’ சிறுகதையில் வருகிற சமையல்காரரின் பேச்சுத்தான் நினைவுக்கு வருகிறது: எல்லோரும் சந்தோஷமா இருக்கணும். எல்லோரும் திருப்தியா இருக்கணும். எத்தனையோ கிடைக்கும். கிடைக்காமலிருக்கும். எத்தனையோ வரும். எத்தனையோ போகும். அதற்காக சந்தோஷமாக இருக்கிறதை விடப்படாது. முயற்சி பண்ணி சந்தோஷமா இருக்கக் கத்துக்கணும். பிடிவாதமா சிரிக்கணும். சிரிக்காம மட்டும் இருக்கப்படாது என்கிற ரீதியில் ஒரு சொற்பொழிவே நிகழ்த்துவார்.

    திரு. பாக்கியம் ராமசாமி, தினசரி வாழ்க்கையின் நகைச்சுவை அம்சங்களை, ‘எங்க வீட்டு யந்திரங்கள்’, ‘ஆனியன் ரவாவும் மெனுதர்ம சாஸ்திரமும்’, ‘கணவனின் மூக்கு மனைவிக்கே’, ‘பீரோவின் பின்னால்’, ‘கவலை பூஷண்’, பெரியவர்கள் என்றொரு இனமுண்டு என்ற கட்டுரைகளில் நமக்குத் தெரிந்த மனிதர்களையும் மனுஷிகளையும், நாம் கண்டு அனுபவிக்கிற நிகழ்ச்சிகளையும் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்.

    கிண்டலில் கிடைக்கிற நகைச்சுவை ரகம் ‘கந்தர் சிஸ்ட கவசம்’, ‘கொசுவிடமிருந்து தப்பிப்பது எப்படி?’, ‘சங்கீதமா, சந்தேகமா?’, ‘முப்பதே நாளில் நீங்கள் டான்ஸ் மாஸ்டர் ஆகலாம்’ ஆகிய கட்டுரைகளில் துல்லியமாகத் தெரிகிறது.

    ‘தமிழில் நகைச்சுவையோ சிறுகதையோ, தமிழர் வாழ்வுடன், அதன் தேவைகளுடன் இணைந்து - பிணைந்து வெளிப்படுகிறது’ என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சுஜாதா. இந்த நகைச்சுவைக் கட்டுரைத் தொகுதிக்கு என்றே எழுதிய மாதிரி இருக்கின்றன சுஜாதாவின் வரிகள்.

    படித்துக்கொண்டே சிரிப்பதற்கும், சிரித்துக் கொண்டே படிப்பதற்கும் பாக்கியம் ராமசாமியின் எழுத்துக்கள் நமக்கு நூறு சதவிகித காரன்டி தருகின்றன.

    நமக்கு ஒரு ஜெரோம் கே. ஜெரோம் இல்லையென்றால் என்ன? ஒரு ரிச்சர்ட் கார்டன் இல்லாவிட்டால் என்ன? அட, ஆர்ட் புக்வால்ட் இல்லாமல் போனால்தான் என்ன? நமக்கு ஒரு பாக்கியம் ராமசாமி இருக்கிறாரே, அதுபோதும்.

    - சாருகேசி,

    18, அபிராமபுரம் முதல் தெரு,

    சென்னை - 18.

    சிரிப்பே சிந்தனை

    சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பவர்கள் சிலரே என்றால், சிரிக்க வைப்பதிலேயே சிந்தனையாக உள்ளவர்கள் அதனிலும் அபூர்வம். அச்சிந்தனையாளர்களிலே தலைசிறந்த பாக்கியம் ராமசாமி அவர்கள் வாசகர்களை அழவைப்பதிலும் வல்லவர்.

    சிரிப்பு பொத்துக்கொண்டு சப்த ஜாலங்களுடன் தொடர்ந்தால், கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரும் ஒரு வகைச் சிறப்பு அழுகையின் ஆனந்த வெளிப்பாடுதானே? இவ்விஷயத்தில் இந்தச் சிரிப்பலைச் சமுத்திர மகாராஜன் மெகா சீரியல் கிளிசரின் நாயகிகளின் எதிர்மறை!

    சிரிப்புக்காகச் செலவிடும் நேரம் சிவனுக்காகச் செலவழிப்பதற்குச் சமம் - என்பது ஒரு ஜப்பானியப் பழமொழியின் தமிழ் வடிவம். சிரிப்பு என்கிற ஜன்னலை ஒரு மனிதன் திறந்தவுடன் ‘விர்’ரென்று வெளியே பறப்பவை கவலை எனும் கரிய வெளவால்கள் என்ற ஃபிராய்டின் சொற்படி, அந்த ஜன்னலை இறுக்க மூடிப் புழுங்குபவர்களை ரட்சிக்க, ஜன்னலை விட்டுவிட்டு கதவு என்கிற பெரிய சிரிப்பைத் தட்டித் திறக்க வைக்கும் சக்தி, பாக்கியம் ராமசாமி அவர்களின் விரல்களில் தவழும் பேனாவுக்கு உண்டு என்று உணரும்போது, காலம் காலமாக அவ்விரல்கள் செய்திருக்கும் சாதகமும் சாதனையும் புலனாகிறது.

    ஜி.கே. செஸ்டர்டன், ராபர்ட் லின்ட், ஈ.வி. லூகாஸ், மார்க்ஸ் பீர்பம் போன்ற ஆங்கிலக் கட்டுரையாளர்களுக்கு இணையாக தமிழில் ‘பஞ்ச்’சுடன் எழுதிவரும் இவர் தமிழ் கூறும் நல்லுலகின் ‘பாக்கியம்’.

    நகைச்சுவை நளனைப் பற்றி மேலும் நான் எழுதிக்கொண்டு போவது ‘மெனு’ தர்ம சாஸ்திரப்படி தயாரிக்கப்பட்ட சிரிப்பு - புஃபேயைச் சுவைக்க ஆர்வத்துடன் கமகமக்கும் டைனிங் ஹாலுக்கு விரையும் (சிரிப்புப்) பசி மிகுந்தவர்களை திசைதிருப்பச் செய்யும் அசட்டுத்தனத்திற்கு ஒப்பாகும் என்பதால் நகைச்சுவை பீரோவின் பின்னால் சட்டென்று புகுந்து கொள்வோம்!

    - ஜே.எஸ். ராகவன்,

    11 & 12, ஸ்ரீ வித்யா அபார்ட்மெண்ட்,

    9, பாலகிருஷ்ண முதலி தெரு,

    மேற்கு மாம்பலம்,

    சென்னை - 33.

    ***

    இது பெருமையடித்துக் கொள்கிற தம்பட்ட கட்டுரையோ அல்லது எங்கள் வீட்டில் உள்ள யந்திர சாதனங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் கட்டுரையோ அல்ல.

    சில மனிதர்களுக்கு விசேஷ குணாதிசயங்கள் இருப்பதுபோல எங்கள் வீட்டு யந்திரங்களுக்கும் உண்டு என்பதை நான் கவனிக்க நேர்ந்து ஆச்சரியப்பட்டதன் விளைவே இந்தக் கட்டுரை.

    - பாக்கியம் ராமசாமி.

    எங்க வீட்டு யந்திரங்கள்

    வாஷிங் மெஷின்!

    இதனிடம் ஒரு கெட்ட குணம் உண்டு. ஹாலில் விருந்தாளிகளுடன் நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, தானும் ஏதோ விஷயம் தெரிந்தது போல காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அபிப்பிராயம் அடிக்கடி இதுக்கு ஏற்பட்டுவிடும்.

    அலசுகிறவரை பொறுமையாக இருக்கும். உலர வைக்கும் கட்டத்துக்கு வந்ததும் ‘உய்ய்ங் டர்ர்ர்ங்’ என்று பிரமாதமாகச் சத்தம் போட்டவாறு பாத்ரூமிலிருந்து கிளம்பி, ஹாலுக்கே வந்து நம்மோடு அதுவும் ஒரு மனுஷர் மாதிரி நின்றுகொண்டுவிடும்.

    சரி, வந்ததுதான் வந்தது. சத்தம் போடாமல் நின்று கொண்டிருக்கலாமல்லவா? யாரோ அதை அடித்துக் கொலை செய்வது போல பல வகைகளில் கத்திக் கூவும். அருள் வந்த காளி கோயில் பூசாரி மாதிரி உடம்பை ஆட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யும்!

    பல விருந்தாளிகள் அடிக்கடி என்னைக் கேட்கும் முதல் கேள்வி: வாஷிங் மெஷின் செளக்கியமா?

    வீட்டிலே வயசான என் மாமியார் இருக்கிறாள். சாகற வயசில் மாமனார் இருக்கிறார். நானே இருமிக் கொண்டு கிடக்கிறேன். என்னைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ ஒரு விசாரணை கிடையாது… நாலுபேர் வந்திருக்கும்போது ஏன் இது உள்ளேயே இருக்கக்கூடாது? தன்னைப் பற்றி மற்றவர்கள் விசாரிக்க வேண்டுமென்று ஒரு அல்ப ஆசைதானே?

    ***

    29 அங்குல டி.வி.!

    காலனியில் உள்ள அத்தனை வீடுகளிலும் இல்லாத சைஸுக்குப் பெரிய டி.வியாக நாற்பதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியாச்சு. அதற்கு ஒரு அழிச்சாட்டியம் பாருங்கள். ரொம்ப ‘கன்னிங்’ ரகம்.

    கியாரண்டி பீரியட் என்று அதனுடைய பிறந்தகத்தில் போட்டுத் தந்த அந்த ஒருவருட காலத்துக்கு மட்டும் சமர்த்தாக இருந்தது.

    அது முடிந்த மறுநாளே அதற்குத் தெரிந்துவிட்டது. இனி நாம் சுதந்திரமடைந்துட்டோம். ஆடுவோமே, பள்ளு பாடுவமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று, சுதந்திரமாக இருக்கத் தொடங்கிவிட்டது. கியாரண்டி முடிந்தபிறகு ஒரு நாள் ‘படம் சற்று மசமசவென்று தெரியறாப்பலே இருக்கே’ என்று லேசாகத்தான் பேசிக்கொண்டோம்.

    அதற்கு பாம்புச் செவி, கேட்டதும் என்ன ரோஷம் ஏறியதோ டபக்கென்று அணைந்து போய்விட்டது. உடனே ரிமோட்டைத் தட்டி டி.வியின் தலையையும் தட்டி என்னென்னவோ பண்ணியும் பிக்சரைக் காட்ட முடியாது என்று அடம்பிடித்தது.

    ‘சரி விட்டுப் பிடிக்கலாம்’ என்று ஆன் பண்ணிவிட்டுக் கொஞ்சநேரம் சும்மா இருந்தோம்…

    பதினைந்து நிமிஷமானதும் டி.வி. பெட்டிக்கு எங்கள்மேல் இரக்கம் ஏற்பட்டது. தடாலென்று படம் தெரிந்தது. பாட்டு கேட்டது.

    அப்போது நான் வாயை வைத்துக் கொண்டு சும்மாயிருந்திருக்கக் கூடாதோ? ‘சனியனுக்கு என்னாச்சு! அப்ப ஒண்ணும் தெரியலை. தடால்னு இப்ப தெரியறது?’ என்று சொல்லிவிட்டேன்.

    டபுக்கென்று அணைந்துவிட்டது.

    சரி. விடக்கூடாது இதை என்று சுவிட்சைப் போட்டே வைத்துவிட்டு, மறுபடி எப்போ படம் வரும் பார்க்கலாம் என்று பொறுமையாயிருந்தோம். சரியாக மூன்றரை மணி நேரம் கழித்துப் படம் வந்தது.

    அதாவது, அதை ஒரு தரம் நிறுத்திவிட்டு மறுபடி சுவிட்ச் போட்டால் எவ்வளவு நேரம் கழித்து அதிலே படம் தெரியும் என்று சொல்ல முடியாது. குறைந்தபட்சம் மூன்றரை மணி நேரமாகும்.

    இரவு ஒன்பது மணிக்கு ஏதாவது முக்கிய நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டுமென்று குடும்பத்தினர் ஆசைப்பட்டால்,

    Enjoying the preview?
    Page 1 of 1