Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mom From India
Mom From India
Mom From India
Ebook148 pages1 hour

Mom From India

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352852543
Mom From India

Read more from Anuradha Ramanan

Related to Mom From India

Related ebooks

Reviews for Mom From India

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mom From India - Anuradha Ramanan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மாம் ஃப்ரம் இண்டியா!

    Mom From India!

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    முன்னுரை

    அன்பிற்குரிய வாசகர்களுக்கு,

    வணக்கம். நலம், நலம்தானே…

    அன்றாட வாழ்க்கையில் சிரிப்பைத் தொலைக்காமல், நல்ல நகைச்சுவை உணர்வோடு இருந்தாலே, நலமாகத்தான் இருப்போம். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் எனத் தெரியாமலா பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்?

    சாதாரணமாக, பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்று ஆண்கள் சொல்வார்கள். அதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஆண்களை விடவும் பெண்களுக்கு அன்றாட வாழ்வில் சிரிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. சிரித்துக் கொண்டும் இருக்கிறோம்.

    தினசரி சின்னத்திரையில் சீரியல்கள் பார்க்காதப் பெண்கள் நிறையவே சிரிக்கிறார்கள். (இது என் ஆராய்ச்சி)

    எனக்கு சிரிக்கப் பிடிக்கும். நான் வளர்ந்தவிதம் அப்படி. வாழ்க்கையில் எத்தனையோ இடர்பாடுகளும், துயரங்களும் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். பிரச்னைகள் தீர்ந்த பிறகுதான் சிரிப்பது என்றால் ஆயுசு முடிய சிரிக்க வாய்ப்பே கிடைக்காது. சந்தடி சாக்கில் கொஞ்சம் சிரித்தால் என்ன குடி முழுகிவிடப் போகிறது…

    இப்படியொரு எண்ணம் என்னிடம் நிறையவே உண்டு. எதையுமே ‘பாஸிடிவ்’வாகப் பார்ப்பதினாலோ என்னவோ… எதற்காகவும் நான் ரொம்பவும் இடிந்துப் போனதில்லை.

    கல்கி ஆசிரியர் திருமதி. சீதா ரவி அவர்கள், என்னிடம் நல்ல நகைச்சுவையுடன் கூடிய தொடர்கதை ஒன்றை கல்கிக்காக கேட்டார். சம்மதித்தேன். ‘மாம் ஃப்ரம் இண்டியா’ உருவானது.

    ஒரு இந்தியத் தாய், தன் மகளின் பிரசவத்துக்காக அமெரிக்கா போய், அங்கே ஓர் அமெரிக்க இளைஞனால் ‘கிட்நாப்’ செய்யப்படுகிறாள். அந்த இளைஞன் எதற்காக இப்படி செய்தான்… நமது கதாநாயகியான சுகந்தாவின் அனுபவங்கள் என்ன… அவளை ஒரு கணமும் விட்டுப் பிரியாத அவளது கணவர் பரமேஸ்வரன் எப்படியெல்லாம் தன் அருமை மனைவிக்காக உருகுகிறார் என்பதுதான் கதை…

    நான், என் இரண்டாவதுப் பெண்ணின் இரு பிரசவத்துக்கும் அமெரிக்கா போய் வந்திருக்கிறேன். என்னைப் போல, பல அம்மாக்கள், தங்களது செல்வங்களுக்காக தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் பேசி, எப்படியோ கடல் தாண்டிப் பறப்பதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

    ‘இப்படிப் போகிற அம்மாக்களில் யாராவது எக்குத்தப்பாக எவனிடமாவது மாட்டினால் என்ன ஆகும்…’

    கொஞ்சம் விபரீதக் கற்பனைதான். ஆனாலும் படிக்கிறவர்களை மிரட்டாது. வாய்விட்டுச் சிரிக்க வைக்கும்.

    எப்பொழுதுமே ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்கிற வள்ளுவர் வாக்குப்படி, நகைச்சுவையாக எழுதும்போது எனக்கு இடைஞ்சல்கள் வரும் அல்லது ஏதாவது உடல்நலக் குறைவோ, பிரச்னையோ ஏற்படும்போது எனக்கு நகைச்சுவை உணர்வு பிய்த்துக் கொண்டு கிளம்பும்.

    கல்கியில் தொடர் ஆரம்பித்தபோதுகூட, என் அன்பிற்குரிய வாசகர்களில் சிலர், காஞ்சி மடாதிபதி வஷ்யமாய் நான் கொடுத்திருந்த அறிக்கையில் வெகுண்டு, கல்கியில் இத்தொடரை வெளியிடக் கூடாது என்றெல்லாம் கடிதங்கள் எழுதினார்கள்.

    திருமதி சீதா ரவி, ஒருபக்கம் என் கதையையும் வெளியிட்டு, இன்னொருபக்கம் இவர்களின் விமர்சனங்களையும் வெளியிட்டிருந்தார்.

    அது, அவர்வரையில் தர்மமாக இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு இது மிகப்பெரிய சவாலாகவே இருந்தது.

    வழுக்கு மரத்தில் ஏறி, மர உச்சியில் இருக்கும் பரிசை எட்டிப் பறிக்க இடையூறாக அவன்மீது எண்ணெயையும், தண்ணீரையும் விசிறுவார்களே… அதுபோல…

    இரண்டாம், மூன்றாம் வாரத்தில் எல்லாம் தொடர்கதையைத் தொடருவதா வேண்டாமா என்றுகூட யோசித்தேன்.

    அப்புறம்தான் தீர்மானமாய் எழுதத் தொடங்கினேன்.

    என் அன்பு வாசகர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையில் ஆயிரம் சம்பவங்கள், மற்ற மனிதர்களைப் போலவே நடந்திருக்கலாம். ஒரு சிலவற்றை அவன் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் வந்திருக்கலாம். அது வேறு. எழுத்து வேறு.

    நல்ல பாடகி, விஸ்தாரமாய் ஆலாபனை செய்துக் கொண்டிருக்கும்போது, ‘இவள் இந்த சபையில் பாடலாமா, வேண்டாமா’ என்று இன்னொருபக்கம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தால் அவளால் எப்படி கச்சேரியைத் தொடர முடியும்…

    ஆனாலும் நான் தொடர்ந்தேன். காரணம் எழுத்துதான் என் சுவாசம். சாப்பிடாமல் பட்டினி கிடக்க முடியும். எழுதாமல் ஒருநாள் இருந்தாலும் ஏங்கிப் போய்விடுவேன். அந்த சமயத்தில் திருமதி. சீதா ரவியும் எப்படிப்பட்ட சோதனைகளைச் சந்தித்தாரோ…

    எல்லாம்… எல்லாமே கதையின் ஓட்டத்தில், யதார்த்தமான சம்பவங்களில் மறைந்தே போயிற்று. தொடர்கதை முடிந்தவுடன் எனக்கு வந்த ஏராளமானக் கடிதங்களின் உற்சாக வரிகளும், தொலைபேசி பாராட்டுகளும் என்னைத் தெம்பாக நிமிர்ந்து உட்கார வைத்தன. கல்கியிலேயே கதையைப் பாராட்டி வந்த கடிதங்களைப் பார்த்து கண் நிறைந்துப் போயிற்று எனக்கு…

    அப்பாடா… எத்தனை கருத்து வேறுபாடு அனுராதா என்கிற மனுவியிடம் இருந்தாலும், வாசகர்கள் அனுராதாவின் எழுத்தை வெறுக்கவில்லை. இது எப்பேர்பட்ட உன்னதமான விஷயம்…

    இதோ… இப்பொழுது இதை எழுதும் போதுகூட, அந்த நன்றியில் மனம் கசிந்து எழுதுகிறேன்.

    உங்களது ரசனைக்கேற்ப, ருசிக்கேற்ப, அது நகைச்சுவையோ, சமூகக் கதையோ, காதல் கதையோ, இன்னும் ஹாரிபாட்டர் போல மாயா ஜாலங்கள் நிறைந்த கதையோ… என்னிடமிருந்து நீங்கள் எதை எதிர்பார்த்தாலும் எனக்கு எழுதுங்கள்… உங்களது விருப்பப்படி எழுதச் சித்தமாக இருக்கிறேன். (என்ன… என் எழுத்தில் வன்முறையையும், முகம் சுளிக்க வைக்கிற வர்ணனைகளையும் எதிர்பார்க்க முடியாது. சில ஸ்வீட் ஸ்டால்களில் எழுதியிருக்குமே… இங்கு தரமான நெய்யினால் தயாரிக்கப்பட்ட பண்டங்கள் மட்டுமே விற்கப்படும் என்று… அது போல என் எழுத்திலும் தரம் மட்டுமே நிரந்தரம் என நினைப்பவள் நான்.)

    மற்றபடி…

    என்னைச் சோர்ந்துபோய் விடாதபடி உற்சாகப்படுத்தி எழுத வைத்த என் உதவியாளர் திரு. சர்ச்சில் பாண்டியன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

    மீண்டும் மீண்டும் சந்திப்போம்.

    இப்படிக்கு அன்புடன்,

    அனுராதா ரமணன்.

    1

    சுகந்தா அமெரிக்காவுக்குப் போகப் போகிறாள்… இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது…

    நினைக்க நினைக்க மலைப்பாக இருக்கிறது…

    சின்ன வயசில், அவள் கையைப் பார்த்து பலன் சொன்ன சுப்பாமணி வாத்தியார்கூட, இவளை கடல் தாண்டிப் போவாள் என்று சொல்லவில்லை!

    சுப்பாமணி எது சொன்னாலும் பலிக்கும்…

    இவளுக்கு வரன் தேடி தஞ்சாவூருக்கும், குடவாசலுக்கும் இவள் அப்பா அலையாய் அலைந்தபோதுகூட ‘நறுக்’கெனச் சொன்னாரே…

    ஏண்டா கவலைப்படறே… உன் பொண்ணுக்கென்ன குறைச்சல்… இந்த ஐப்பசிக்குள்ள கல்யாணம்… கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை… நீ வேண்டாம், வேண்டாம்னாகூட கொத்திண்டுப் போயிடப் போறான்… பார்த்துண்டே இரு…

    அவர் சொன்னபடியேதான் நடந்தது… மஞ்சள் கலந்த சிவப்பாய், பப்பாளிப் பழம் மாதிரி பரமேஸ்வரன்… கோடி வீட்டு விசாலியைப் பெண் பார்க்க வந்துவிட்டு, சகுனம் சரியில்லை என்று, கொஞ்சநேரம் இவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து, ஒரு சொம்பு தண்ணீரை வாங்கி மாப்பிள்ளையின் தாய்மாமன் குடிக்க…

    தண்ணீர் கொண்டு வந்து தந்த சுகந்தாவை பரமேஸ்வரனுக்குப் பிடித்துப் போக…

    பெருமூச்செறிந்தாள் சுகந்தா…

    "என்ன பெருமூச்சு… மொத்தமே ரெண்டு சூட்கேஸ்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1