Pogappoga...
By Sivasankari
()
About this ebook
She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.
As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.
'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Read more from Sivasankari
Mookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Aairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsAndhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Thavam Rating: 5 out of 5 stars5/5Vetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 5 out of 5 stars5/5Suriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Amma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPaalangal Rating: 0 out of 5 stars0 ratingsPayirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Overdose Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsAvargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Vimochanam Rating: 4 out of 5 stars4/5Shantha Yen Azhugiral? Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsKuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Singam Muyalagirathu Rating: 4 out of 5 stars4/5
Related to Pogappoga...
Related ebooks
Kadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu Ethuvarai? Rating: 0 out of 5 stars0 ratingsAval Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsDhanam Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Nandriyudan… Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Thoduvaana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsMalargale Malarungal Rating: 5 out of 5 stars5/5Asaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Poyin Rating: 0 out of 5 stars0 ratingsMom From India Rating: 0 out of 5 stars0 ratingsKannethiril Thondrum Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsInba Kaatru Veesattum... Rating: 5 out of 5 stars5/5Pachonthigal Rating: 0 out of 5 stars0 ratingsNijangal Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsThunaivi Rating: 2 out of 5 stars2/5Penmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Thirakkatha Jannalgal Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Maaya Manam Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Uyire Rating: 5 out of 5 stars5/5Pathinooravathu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsIndru Nee Nalai Nee Endrum Nee Rating: 0 out of 5 stars0 ratingsEnakkendru Nee Rating: 5 out of 5 stars5/5Innoruthi + Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsNijangal Nizhalahumpothu… Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Pogappoga...
0 ratings0 reviews
Book preview
Pogappoga... - Sivasankari
http://www.pustaka.co.in
போகப்போக...
Pogappoga
Author :
சிவசங்கரி
Sivasankari
For other books
http://www.pustaka.co.in/home/author/sivasankari
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
போகப்போக...
சிவசங்கரி
1
லிஃப்ட் மூன்றாம் மாடியில் குலுக்கல் இல்லாமல் நின்று சமர்த்தாக வாயைத் திறக்க,அருண் நிதானமாக வெளியில் வந்தான்.
இவன் வருவதை எதிர்பார்க்கும் தினுசில் ஃபிளாட்டின் வாசக்கதவைத் திறந்துவைத்துக்கொண்டு காத்திருந்த தாமு, கால்களை அகலஅகலமாக வைத்து அருகில் வந்து,ப்ரீஃப்கேஸை கையில் வாங்கிக்கொண்டான்.
வாங்க தம்பி... நல்லாயிருக்கீங்களா? என்ன இப்படி இளைச்சுப்போயிட்டீங்க!
இளைச்சிட்டேனா? நானா! ஹா! இந்த சுப்தானே வேணாங்கறது, தாமு! ரெண்டு மாசமா டென்னிஸ் ஒழுங்கா விளையாடாம தொந்தி விழுந்துபோயிட்டதுல, பேன்ட்டைஒரு இஞ்ச் பிரிச்சுவிடச் சொல்லணும்னு நா நினைச்சிட்டிருக்கேன்... நீ என்னடான்னாசும்மா கதை அளக்கறியே!
நா சும்மா சொல்லலை, தம்பி... நீங்க வேணா அம்மா வந்தா கேட்டுப்பாருங்க...
அம்மாவா? அவங்களாவது, நா பெருத்திருக்கேன்னு ஒத்துக்கறதாவது! நீயும் அம்மாவும் என்னிக்கும் ஒரே கட்சிதானே!
சிரித்துக்கொண்டே அருண் வீட்டினுள் நுழைந்து, கோட்டைக் கழட்டி தாமுவிடம் நீட்டிவிட்டு, கைகளை மேலே தூக்கி சின்னதாக சோம்பல் முறித்தபடி சோபாவில்உட்கார்ந்தான்.
ம்ம்... ஸோ? நீ எப்படியிருக்கே, தாமு?
நல்லாயிருக்கேங்க...
பதில் சொன்னவன், பெட்டிகளோடு உள்ளே வந்த கார் டிரைவரிடம், முன்னறைல வெச்சிடு, தாமஸ்...
என்று சொல்லி அவன் பின்னாடி போய், தாமஸ் வெளியில் சென்றபிறகு வாசக்கதவை சாத்திவிட்டு, மீண்டும் அருணிடம் வந்தான்.
இந்த எடத்துக்கு நீங்க இப்பத்தான் மொத தடவையா வர்றீங்க, இல்லியா தம்பி?பெரியவருக்கு ரொம்பக் கவலை... இந்த ஃபிளாட் உங்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோனிட்டு! அந்த முன்னறையில உங்க பெட்டி வெச்சிருக்கேன்... சரிப்படலைன்னா, இந்தபெட்ரூமுக்கு மாத்திடலாம்...
ம்ம்... பாக்கலாம்... என்ன அவசரம்! மொதல்ல எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு கப்காஃபி, சக்கரை போடாம...
இதோ கொண்டுவரேங்க...
தாமு அவசரமாய் திரும்பி சமையல்கட்டைப் பார்க்க நடந்தான்.
லேசாக வழுக்கை விழுந்த தலை, ஒருபக்கமாய் சாய்ந்து நடக்கும் நடை... தாமு அப்படியேதான் இருக்கிறான். கொஞ்சம்கூட மாறவில்லை. எத்தனை வயசிருக்கும்இவனுக்கு? ஐம்பத்தைந்து? ஓ... ஈஸி!
அருணுக்கு நினைவு தெரிந்த நாளாய் தாமு அவர்களோடுதான் இருக்கிறான்.
கொடைக்கானல் குளிருக்குக் கொஞ்சமும் அஞ்ச மாட்டான். மங்குமங்கென்று விடியலிலிருந்து இரவுவரை உழைப்பான். இதைச் செய், அதைச் செய் என்று சொல்லவேவேண்டாம்... இழுத்துப் போட்டுக்கொண்டு அத்தனையும் செய்வான்.
இவனுக்கு நம்மை விட்டால் யார் என்ற எண்ணுத்தில் அருணின் தாய் ஈஸ்வரி,தாமுவுக்கு ஏற்ற பெண்ணாய் தேடிப்பிடித்து கல்யாணம் பண்ணிக்கூட வைத்தாள். ஆனால்,அந்தப்பெண் முழுசாய் ஆறு மாசம் போவதற்குள், 'ஐயே, இவன் ஆம்பிளையே இல்லை'என்று பகிரங்கமாய் பழித்துவிட்டு, வேறு யாருடனோ ஓடிவிட்டது.
அது நடந்தும் இருக்கும், பதினெட்டு இருபது வருஷங்கள்.
தன் மணவாழ்க்கை இப்படிச் சீரழிந்துவிட்டதே என்ற குறையெல்லாம் தாமுவுக்கு இருந்ததாக யாரும் உணரவில்லை. சரியாகச் சொல்லவேண்டுமென்றால், விட்டது சனிஎன்ற நிம்மதியோடு அவன் வலம்வந்தமாதிரிகூடப் பட்டது.
தாமு அருமையாய் சமையல் செய்வான். பார்த்துப்பார்த்துப் பரிமாறுவான். அக்கறையுடன் கவனித்துக்கொள்வான். வீட்டில் பத்து ஆள் இருந்தாலும், ஒவ்வொன்றின்மேற்பார்வையும் தானே செய்தால்தான் அவனுக்குத் திருப்தி.
சென்னையில் அருண் தனியாகத் தங்குவது தீர்மானமான பிறகு, நம்பிக்கையான,பொறுப்பான ஆசாமி அவனை கவனிக்கத் தேவை என்று ராமசாமியும் ஈஸ்வரியும்நினைத்ததால், இப்போது தாமுவுக்கு சென்னை வாசம்.
அருண், முன்னாலிருந்த மேஜை மேல் காலைப் போட்டுக்கொண்டு சோபாவில் சரிந்து,பார்வையைச் சுழற்றினான்.
சுவருக்குச் சுவர் தொட்டுக்கொண்டிருந்த புஸுபுஸு கார்பெட்; ஆளை விழுங்கும்வசதியான சோபாக்கள்; நடுநாயகமாகத் தொங்கும் அழகான ஷாண்டலியர்;விட்டத்துக்கும் தரைக்குமாய் ஆடிய கர்ட்டன்கள்; நடராஜர் சிலை, பாவை விளக்கு,ஓவியங்கள், பச்சைக் குரோடன்ஸ் தொட்டிகள்...
ம்ம்... பரவாயில்லையே! அப்பா பார்த்துப்பார்த்துதான் வீட்டைத் தயார்செய்திருக்கிறார்.
விசிலடித்தபடி எழுந்தவன், வலதுபக்கச் சுவரில் மாட்டியிருந்த மாடர்ன் ஓவியத்தைஒரு நிமிஷத்துக்கு ஊன்றிப் பார்த்தான்.
குதிரைகள்... புரிகிறது. தேர் மாதிரி ஏதோ ஒன்று... ம், புரிகிறது. அப்புறம், அதுஎன்ன? சிவப்பாய் ஒளிர்வது சூரியனா?
தலையைச் சாய்த்து இரண்டு தரம் கோணத்தை மாற்றிப் பார்த்தான்.
என்ன ஓவியம் இது?
கீதோபதேசமா?
இல்லை, வேறு ஏதாவது...?
ம்ஹூம், புரியவில்லை. தோள்களைக் குலுக்கி, படுக்கையறைப் பக்கம் போக எண்ணி இரண்டடி வைத்தபோது, போன் ஒலித்தது.
எடுத்து, ஹலோ...
என்றான்.
அருண், திஸ் ஈஸ் டாடி... ஸாரி, ஏர்போர்ட்டுக்கு வரமுடியலை. லாயர்கூட ஒருடிஸ்கஷன்ல உக்காந்திட்டிருக்கேன்...
அதனால என்னப்பா? நா என்ன குழந்தையா!
வீடு பாத்தியா? பிடிச்சிருக்கா?
இன்னும் பூரா பாக்கலை... ஆனா, ஐ திங்க் இட் லுக்ஸ் பியூட்டிஃபுல்!
ராமசாமி சிரித்தார். உனக்குப் பிடிக்குமென்று நான் அப்போதே சொன்னேனே என்ற பெருமை அதில் கலந்திருந்தது.
நீ கொஞ்சம் ரெஸ்ட்எடுத்துக்க, நா லஞ்சுக்கு வரேன். ரெண்டு மணிக்கு மேல ஃபாக்டரிக்குப் போலாம்... ஓகே?
எஸ், டாடி.
அ... மறந்திட்டேனே! உங்கம்மாகிட்ட பேசினியா? பேசிடு... அவளுக்கு நீ கொடைக்கானலுக்கு வந்து அவளோட ரெண்டு நாள்கூடத் தங்காம நேரா வேலைஒப்புத்துக்க வந்துட்டதுல வருத்தம்...
அருண் சிரித்தான்.
நா என்ன வெளிநாட்டுலேந்தா வரேன், டாடி? ரெண்டு மாச ட்ரெயினிங் முடிஞ்சு, பாம்பேலேந்துதானே வரேன்? பத்து நாள் கழிச்சு, இங்க வேலை கொஞ்சம்புரிபட்டப்பறம், ஒரு ட்ரிப் வந்து அம்மாவப் பாக்காமலா இருப்பேன்?
அதை உன் வாயால நீயே உங்கம்மாகிட்ட சொல்லிடு... அவ சந்தோஷப்படுவா!
சரியென்று சொல்லிவிட்டு அருண் தொடர்பைத் துண்டித்தான்.
தாமு நீட்டிய காபியைக் குடித்த பின், கொடைக்கானலுக்கு எஸ்.டீ.டி. போட்டுப் பார்த்தான். லைன் கிடைக்கவில்லை. நாலு தரம் முயற்சி பண்ணிய பிறகும் தொடர்புகிடைக்காமலிருக்க, அப்புறமாய் பார்த்துக்கொள்ளலாமென்ற முடிவோடு எழுந்தான்.
படுக்கையறைகள், சாப்பாட்டுக் கூடம் எல்லாம் தனிப்பட்ட அழகோடு சிங்காரிக்கப்பட்டிருப்பதை ரசித்துக்கொண்டே, பால்கனிக்கு வந்து நின்றான்.
வெளிர் நீல ஆகாயத்தில் வெள்ளை நாய்க்குடையாய் மேகங்கள் இங்குமங்கும்முளைத்திருந்தன.
டிசம்பர் மாசத்து வெயில் உடம்புக்கு இதமாக இருந்தது.
குனிந்து கீழே பார்த்தபோது, பச்சைப் புல்வெளிக்கு நடுவில் பீன்ஸ் விதைnவடிவிலிருந்த அந்த நீச்சல்குளம் பளிச்சென்று துத்தநாக நீலமாய் தெரிந்தது.
ஓ, இதுதானா!
இந்த ஸ்விம்மில் பூல்தானா!
அந்த போயஸ் கார்டன் வீட்டை உனக்குப் பிடிக்கும்னே நினைக்கறேன்... கொயட் அண்ட் பாஷ் பிளேஸ்! எண்ணி பன்னெண்டுஃபிளாட்ஸ்... வசவசன்னு கூட்டமில்ல!ஒருபக்கம் நாலு பெட்ரூம் கொண்ட நாலு ஃபிளாட், இந்தப் பக்கம் ரெண்டு பெட்ரூம் ஃபிளாடுஸ் எட்டு... அவ்வளவுதான்! தனி காம்பவுண்டு, லான், லிஃப்டு, எட்ஸெட்ரா,எட்ஸெட்ரா! ஜெனரேட்டர் இருக்கறதால, எலெக்ட்ரிசிடி போயிடுமோன்ற பயம் வேணாம்!அக்கம்பக்கத்துல கன்னாபின்னா ஆள்கள் இல்லாம, அத்தனை பேரும் ஊர்ல பெரியமனுஷங்க! அ, மறந்துட்டேனே... அந்தக் கட்டடத்துக்கு சொந்தமா ஒரு அழகானஸ்விம்மிங் பூல்கூட இருக்கு, அருண்...
அப்பா அன்று கண்களை விரித்துக்கொண்டு ஓஹோவென்று சிலாகித்துப் பேசியநீச்சல்குளமும் புல்வெளியும் இவைதானா!
பரவாயில்லையே!
அருண் திரும்பி உள்ளே வந்து தன்னறையில் நுழைந்தான்.
உடைகளைக் களைந்துகொண்டே பாத்டப்பில் வெதுவெதுப்பான நீரைநிரப்பினான். இறங்கி, காலை நீட்டி உட்கார்ந்தான்.
முதல் நாள் இரவு சரியான தூக்கம் இல்லை. போய்வருகிறேன் என்று தெரிந்தவர்களிடம் சொல்லிக்கொள்ள அலைந்த அலைச்சல்... அப்புறம், ராத்திரி விடியவிடிய நண்பர்கள் கொடுத்த ஃபேர்வெல் பார்ட்டி...
கண்களை மூடி சில நிமிஷங்களுக்கு நீர் உடம்பைப் பிடித்துவிட்டதை அனுபவித்தபோது, அப்பா தன்னைத் திருப்தி செய்வதில் எத்தனை முனைப்பாக இருக்கிறார் என்றநினைப்பு எட்டிப்பார்க்க, இறுகியிருந்த உதடுகளை உட்பக்கமாய் ஒரு முறுவல் கீறியது.
ஐ.ஐ.டி.யில் படித்த கடைசி வருஷத்தில், 'மேலே எம்.எஸ். அல்லது எம்.பி.ஏ. பண்ணஅமெரிக்காவுக்குப் போக விரும்புகிறேன்' என்று அருண் சொன்ன நாளிலிருந்து, அப்பாவுக்குள்ளும் அம்மாவுக்குள்ளும் பூதமாய் ஒரு பயம் ஏறி உட்கார்ந்துகொண்டுவிட்டது.
இந்தக் காலத்தில் பல பையன்கள் விஷயத்தில் சகஜமாக நடக்கிறதைப் போல, அருணும் வெளிநாட்டுக்குப் படிக்கப் போகிறேன் பேர்வழி என்று கிளம்பிப் போய், ஒருவெள்ளைக்காரியை மணந்து, அந்த நாட்டுச் சுகவாழ்க்கையை விட்டு வர மனமில்லாமல்அங்கேயே ஐக்கியமாகிவிடுவானோ என்ற பயம்...
ஒற்றைப் பிள்ளையை நம் நிழலிலேயே வைத்துக்கொள்ளாமல் பிரிந்துவிடுவோமோஎன்ற பயம்...
இத்தனை காசும் பணமும், நிலமும் நீச்சும், கோட்டைக் கோட்டையாய் வீடும்தொழிற்சாலையும், பிள்ளைக்கு லட்சியமில்லாமல் வீணாகிவிடுமோ என்ற பயம்...
இந்த பயங்கள் விரட்டிய விரட்டலில், அருண் தன் ஆசையை வெளியிட்டகையோடு, ராமசாமி தன் மனசில் இருப்பதையும் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்.
அமெரிக்கா என்ன பெரிய அமெரிக்கா! இங்க நம்ம ஊர்ல இல்லாத படிப்பா,அனுபவமா, செளகரியமா? என்ன இல்ல இங்க? இப்பல்லாம் மேல்படிப்புக்கு அமெரிக்காபோறதுன்றது ஒரு கிரேஸ்! உனக்கு எதுக்கு மேல்படிப்பு, அருண்? ஃபாக்டரிப்பொறுப்புக்கும் எஸ்டேட் வேலைக்கும், நீ படிச்ச படிப்பே அதிகம்! வேணுன்னா,பொறுப்பை ஏத்துக்கறதுக்கு முன்னால ஒரு தடவை வெளிநாடுங்களுக்கு ஜாலியாபோயிட்டு வா... அங்கங்க பேக்கேஜிங் இன்டஸ்ட்ரீஸ் எப்படி நடக்குதுன்னு பாக்கணும்னாபாரு... நா ஏற்பாடு பண்றேன். அதையெல்லாம் விட்டுட்டு, என்னப்பா நீ புதுசா ஒருபிரச்சினையக் கிளப்பறே...
இதுல புதுப் பிரச்சினை என்ன இருக்கு, டாடி? எனக்கு மேல படிக்கணும்னுஆசையா இருக்கு, அவ்வளவுதான்! தவிர, இப்ப வயசு எனக்கு இருவத்திமூணுகூடஆகலை... இதுக்குள்ள ஃபாக்டரி எம்.டி.யா பொறுப்பை ஏத்துக்க நா விரும்பலை...எனக்கு அனுபவம் வேணும்...
ராமசாமி இப்படியும் அப்படியும் நடந்தார்.
ஓகே, உடனே வேலைய ஒத்துக்க உனக்கு இஷ்டமில்லியா? ரைட்... வேணாம்.மேல படிக்கணும்னு ஆசையா இருக்கா? சரி. இண்டியாவுலயே எம்.பி.ஏ. பண்ணு... நாதடுக்கலை. ஆனா, அமெரிக்கா, அங்க, இங்கனு மட்டும் கிளம்பிடாதே... உங்கம்மாவாலஉன்னைப் பிரிஞ்சு கண்டிப்பா இருக்க முடியாது!
பெற்றவர்களுக்குத் தான் தேவைப்படுவது போல, தனக்கும் பெற்றவர்களின்நெருக்கம் வேண்டும், அதைப் பிரிந்து அதிக நாள் இருக்கமுடியாது என்பதை உணர்ந்தஅருண், மேலே வாதாடாமல், அகமதாபாத்தில் எம்.பி.ஏ. முடித்தான். இரண்டு மாசம்பம்பாய் பேக்கேஜிங் இன்டஸ்ட்ரீஸில் பயிற்சி எடுத்தான். இதோ... பொறுப்பேற்க வந்துவிட்டான்.
முரண்டிக்கொண்டு நிற்காமல் சட்டென்று அவர் வழிக்கு நான் வந்துவிட்டதில்தான்,அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எத்தனை சந்தோஷம்!
அதை வெளிப்படுத்தும் தினுசில், என்னெல்லாம் செய்து என்னை குஷிப்படுத்தமுயல்கிறார்!
லட்சக்கணுக்காய் பணத்தைக் கொட்டி, போயஸ் கார்டனில் ஒரு ஃபிளாடு...
இங்கு அங்கு போக ஒரு டாட்ஸன் வண்டி...
தயங்காமல் எடுத்துச் செலவழிக்க ஏக பணம்...
ஷவரில் முகத்தைக் காட்டி, பன்னீர்த் துளிகளாக விழுந்த அந்த நீரை அனுபவித்தவாறேஅருண் குளித்து முடித்தான்.
வெளியில் போக உடை உடுத்தி, மில்லியனேர் பெர்ஃப்யூம் வாசனையுடன்பால்கனியில் நின்று நீச்சல்குளத்தைப் பராக்குப் பார்த்தபோது, ராமசாமி வந்தார்.
பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.
இரண்டரை மணி சுமாருக்குப் புறப்பட்டு, வேளச்சேரி தொழிற்சாலை, மவுண்ட் ரோடு ஆபீஸ் எல்லாம் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, முக்கியமான அறிமுகங்களை முடித்துக்கொண்டு திரும்பி வந்தபோது, மணி ஐந்தரை என்றது.
வண்டியிலிருந்து இறங்கிய நிமிஷத்தில், கட்டடத்தின் சகக் குடித்தனக்காரர்களைப்பற்றி ராமசாமி பேசினார்.
நாலாவது மாடில 'பி' ஃபிளாட்ல மிஸ்டர் அண்ட் மிசஸ் குப்தா இருக்காங்க...நைஸ் கப்பிள். அப்பறம், மொதல் மாடில மிஸ்டர் சதாசிவம், எம்.எம். இன்டர்நாஷனலின்சேர்மன், இருக்கார். பெரிய மனுஷர்... ரொம்ப நல்லவர். எனக்கு நல்ல சினேகிதர். இப்படெல்லிக்கு வேலையா போயிருக்கார், ரெண்டு நாள்ல வருவார். வேணும்னா, அவங்கவீட்டுல உன்னை அறிமுகப்படுத்திவிடறேன், வர்றியா?
அருண் முகம் சுளித்தான்.
வேணாம்பா... இப்ப வேணாம். மிஸ்டர் சதாசிவம் வந்தப்பறம் நானே போய் அறிமுகப்படுத்திக்கறேனே...
பிள்ளையின் அதிகம் பழகாத சுபாவத்தை அறிந்த ராமசாமி, அவனை வற்புறுத்தவில்லை.
மேலே வந்தார்கள். தாமுவை காபி கொண்டுவரச் சொல்லிவிட்டு, சோபாவில் அமர்ந்து மகனுக்குத் தெரியவேண்டிய விவரங்களைப்பற்றி ராமசாமி நீளமாகப் பேசினார்.
அப்பாவின் பேச்சைக் கேட்டபடி கையில் காபிக் கோப்பையுடன் எழுந்து நடந்த அருண், பால்கனிக்குச் சென்று நின்றுகொண்டான்.
பார்வை இயல்பாகக் கீழே படர்ந்தது.
வாவ்!
மை காட்!
யாரிவள்?
'நம்பர் டென்' படத்தில் 'போ டெரிக்' அணிந்த நீச்சலுடைப் பாணியில் பின்பக்கம் இ...றங்கி ஒன்றுமேயில்லாமல் மறைந்து, முன்பக்கம் திட்டமாய் வளைந்து... வாவ்! இரண்டுபக்கமும் துள்ளும் போனிடெய்ல்கள்... குறையவேண்டிய இடங்களில் குறைந்து, நிறையவேண்டிய இடங்களில் நிறையும் உடல்... யார்?
வா...வ்...!
ஜெயராஜ் படத்துக்கு உயிர் கொடுத்து, நடமாடி, நீந்தும் இந்தக் கடல்கன்னி யார்?
என்ன அருண், நாம்பாட்டுக்குப் பேசிட்டுப்போறேன்... நீ கேக்கறியா இல்லியா?அருண்...
அருண் சட்டென்று திரும்பினான்.
என்ன இது! அப்பா பேசுவதை, கூப்பிடுவதைக் கவனிக்கமுடியாதபடி இந்தப் பெண் என் கவனத்தை ஈர்க்கிறாள்!
காது மடல்கள் சிவந்துபோகுமளவுக்கு உள்ளுக்குள் சின்னதாக வெட்கம் எட்டிப் பார்க்க, அப்பா தன் அவஸ்தையை உணருமுன் அவன் அவசரமாக பால்கனியை விட்டுநகர்ந்தான்.
2
இரண்டாம் நாள் காலையில் ராமசாமி ஊருக்குக் கிளம்பிவிட்டார்.
கொடைக்கானலில் பிறந்து வளர்ந்து வாழ்பவராதலால், ஒரே சமயத்தில் இரண்டு நாள்களுக்கு மேல் சென்னையைத் தாக்குப்பிடிப்பதென்பது அவருக்கு முடியாத காரியம்.
அசையாமல் உட்கார்ந்திருந்தால்கூட பசபசவென்று பெருகும் வியர்வை, புழுக்கம்... 'ச்சே... என்ன கிளைமேடு இது! மனுஷனின் சக்தியை அடியோடு உறிஞ்சிவிடுகிறதே!'என்று வந்து இறங்கின அரைமணிக்கெல்லாம் முணுமுணுக்கத் தொடங்குபவர், வேலைநிமித்தம் நிமிஷங்களை எண்ணிக்கொண்டு இருந்துவிட்டு, முதல் சந்தர்ப்பத்தில் கிளம்பிவிடுவார்.
உருளை வெட்டற சீஸனாச்சே... கிழங்குகளுக்கு திட்டமா கலர் போடறதுக்கு நாகிட்டவே நிக்கணுமே!
என்பார்.
பண்ணைக்காகு எஸ்டேட்ல ஏலக்கா செடிகள்ல பூச்சி விழுந்திருக்கு... மருந்துசரியா அடிச்சாங்களோ, இல்லியோ! போய்ப் பாக்கணும்...
என்பார்.
காபிக்கொட்டை பறிக்கற நேரமில்லியா? இப்ப இங்க அதிக நாள் தங்கமுடியுமா?
என்பார்.
எந்தக் காரணுமும் அகப்படாவிடுடால், ஈஸ்வரி தனியா இருக்கா... நாபோகணும்...
என்று சொல்லிக்கொண்டாவது கிளம்பிவிடுவார்.
பேக்கேஜிங் இண்டஸ்ட்ரி, மத்த ஏஜென்சி விஷயமா இனிமே மாசம் ரெண்டுதடவை ஓடிவர வேணாம்ன்றதை நினைக்கறப்பவே அப்பாடின்னு இருக்கு, அருண்... அந்தநினைப்பே நிம்மதியா இருக்கு! நீ இருக்கே எல்லாத்தையும் பாத்துக்க... அப்பறம் எனக்குஎன்ன கவலை!
என்று சொல்லியபடி அன்று காலை அவர் காரில் புறப்பட்டுப் போனதும்,குளித்து காலைச் சிற்றுண்டி சாப்பிட்டு, ஒன்பது மணி அளவில் அருண் தானும்ஆபீஸுக்குக் கிளம்பினான்.
லிஃப்டில் இறங்கி வாசலை நோக்கிச் சென்றபோது, மாடிப்படிகளில் வேகமாகஇறங்கி, துள்ளல் நடையில் ஒரு பெண் வாசலுக்கு ஓடினாள்.
அவளா?
இரண்டு நாள்களுக்கு முன் நீச்சல்குளத்தில் காணப்பட்ட அந்தக் கடல்கன்னியா?
ஆமாம்... அவளேதான்!
படிகளைக் கடந்து தயாராக நின்ற அம்பாசிடர் காரில் ஏறிக்கொண்டதும், வண்டி புறப்பட்டுப் போனது.
அருண் கொஞ்சம் நிதானித்தான்.
கருநீல 'ராங்லர்' ஜீன்ஸ், ச்சீஸ் காட்டன் பிளவுஸ், கோலாபுரி செருப்புகள்...அப்புறம், இரண்டு பக்கமும் துள்ளிய போனிடெய்ல்கள்...
அவள் தோன்றி, நடந்து, மறைந்த சில கணங்களில், இவற்றை மட்டுமே நன்றாகப் பார்க்கமுடிய, மனசு திடுமென்று 'வாவ்!' என்றது.
உள்ளுக்குள் என்னவோ ஜிலுஜிலுப்பு...
முகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், அந்த உயரமும், அந்தத் துள்ளலும், அந்தச் சுறுசுறுப்பும்...
கடவுளே!
அவள் முகத்தைப் பார்க்க வேண்டுமே!
எப்படி இருக்கும் அந்த முகம்?
கையையும் காலையும் பார்க்கையில், நல்ல வெளுப்பு மாதிரிதான் தோன்றுகிறது.
அதோடு, நல்ல உயரம் வேறு!
என்ன உயரமிருப்பாள்? ஐந்தடி ஏழங்குலம்?
ம்ம்... சீக்கிரம் அந்த முகத்தைப் பார்க்கவேண்டும்... கிட்டத்தில்...
யோசனை மாறாமலேயே டாட்ஸனைச் செலுத்தினாலும், மவுண்ட் ரோடு அலுவலகத்துள் நுழைந்து, தன்னறைக்குச் சென்று இருக்கையில் அமர்ந்தபின், அவன்கவனம் சுத்தமாய் மாறிப்போனது.
பர்ச்சேஸ் மானேஜர், அக்கவுண்டண்ட், ஜெனரல் மானேஜர்களோடு பேசி, ஃபைல்கள் படித்து, லெட்ஜர்கள் பார்த்து, இதை, அதைச் செய்து, தொழிற்சாலைபற்றிநிறைய தெரிந்துகொள்ள முனைந்ததில் பொழுது ஓடிப்போக, மாலை ஐந்தரைக்குஒவ்வொருவராக வீட்டுக்குக் கிளம்பியதும், தானும் புறப்பட்டான்.
வீட்டுக்கு வந்து காரை நிறுத்திவிட்டு லிஃப்டில் ஏறியபோது, கூப்பிடாமல் ஓடிவரும்நாய்க்குட்டி மாதிரி அந்தப்பெண்ணின் நினைப்பு நெஞ்சுக்குள் ஓடிவந்தது.
இதுநாழிகை அவளை நினைக்காமல் எப்படி இருக்கமுடிந்தது என்றுஆச்சர்யப்பட்டுக்கொண்டே மேலே போனான்.
காபி கொண்டுவரட்டுமா, தம்பி?
என்ற தாமுவிடம் வேண்டாமென்றுசொல்லிவிட்டு, நேரே பால்கனிக்குச் சென்று எட்டிப் பார்த்தான்.
குண்டாய், ரொம்ப குண்டாய், அழித்தால் சாதாரணு சைஸில் நாலு பேர் பண்ணக்கூடிய கனமாய்... ஒரு நடுத்தர வயசுப் பெண்மணி; குஞ்சும் குளுவானுமாய் நாலைந்துபொடிசுகள், ரப்பர் டியூபை மாட்டிக்கொண்டு, காச்காச்சென்று கத்திக்கொண்டு...
ம்ஹூம், அவளைக் காணோம்.
நேற்று வராத மாதிரி இன்றும் நீச்சலடிக்க வராமல் இருந்துவிடுவாளோ?
முகத்தைக்கூட நன்றாகப் பார்க்காத பெண்ணுக்காக தான் இப்படித் தவிப்பது வேடிக்கையாய் இருந்தது.
அருண் தன்னறைக்குச் சென்று குளித்தான். ஜீன்ஸும் குர்தாவும் அணிந்து ஹாலுக்குவந்து, தாமு...
என்று குரல்கொடுத்தான்.
என்ன தம்பி?
"சோடா