Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dhanam
Dhanam
Dhanam
Ebook235 pages1 hour

Dhanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002978
Dhanam

Read more from Anuradha Ramanan

Related to Dhanam

Related ebooks

Reviews for Dhanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dhanam - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    தனம்

    Dhanam

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தனம்

    அறிந்தும் அறியாமலும்

    முற்றும் துறந்தவன்

    மலரே பேச வா...

    மலரோடு தனியாக....

    முகவுரை

    வாசகர்களுக்கு வணக்கம்!

    எழுத்துக்கள் எல்லாம் காலத்தால் அழியாத நவமணிகள்.

    ‘தனம்’ எனும் தனலட்சுமி ஒரு வித்தியாசமான பாத்திரம்தான். போதிய பணம் பெற்றிருந்தும், உற்ற துணையின்றி ஒதுங்கி நின்றவள். தனிமரம், ஆம்!

    பெயருக்கேற்றவாறு லட்சுமியாகக் காணப்பட்டாலும், நிறத்திலும் உருவத்திலும்’தேவி’யாகக் காட்சியளிக்கும் இவள் தனியே வாழ்ந்து உற்றார் உறவினரின்றி அநாதையாகச் சாகின்றாள்.

    உதவிப் பொறியாளராகப் பணியாற்றிக் கைநிறைய ஊதியம் பெறும் இவளுக்குப் பணத்தைப் பெருக்கும் நோக்கில் வட்டி வியாபாரம் வேறு அலுவலகத்தில்.

    இளநிலைப் பொறியாளர் செபஸ்டீன் அவளை ஓர் நாள்,’ஒரு கல்யாணமில்லே....... குழந்தையில்லே....... காட்டுமரம் மாதிர வளர்ந்திருக்கீங்களே தவிர குடும்பஸ்தங்களோட அவஸ்தை எதுனாச்சும் தெரியுமா’ன்னு கேட்டப்போ,.... ஒரு மாதிரி ஆனவள், தன்னிடம் வாங்கிய பணத்திற்குக் கடைசித் தவணை வட்டியைச் செலுத்த வீடு தேடிச் சென்ற, உடன் பணியாற்றும் அருணகிரியிடம், ‘எனக்கும் குடும்பத்துல இருக்கற கஷ்ட நஷ்டமெல்லாம் தெரியும்.... நானும் பெரிய குடும்பத்துல இருந்து வந்தவதான்... ஆனா, என் போதாத காலம் பாருங்க..... கண்டவனும் என்னைப் பத்தி....! என்று கூறி சரீரம் குலுங்க அழுத்து, கல்லில் வடித்த காளிசிலை அழுததைப் போன்றிருந்தது.

    இரக்கத்தைக் காட்டி எண்ணிச் சென்ற அருணகிரி அன்று முதல் தனிமரமாக நின்ற தனலட்சுமிக்கு துணைமரமாக நின்றான்.

    அருணகிரியின் வாழ்வில் வசந்தம் வீசத்தான் செய்தது,’அவள்’ கோமாவில் கண்ணை மூடும் வரை.

    மனித மனத்தின் ஆசைகள், பலவீனங்கள் என அனைத்தையும் நடுத்தர வர்க்கத்தின் குடும்பப் பின்னணியில் இக்கதையை வடித்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

    ‘அறிந்தும் அறியாமலும்’ கதையில் வரும் அன்னத்தின் மூலமாக எதை மனத்தால் உணர முடியாதோ, ஆனால் எதனால் மனம் உணரப்பெறுகிறதோ அதுவே பிரம்மம் என்பது உணர்த்தப்படுகிறது.

    ‘முற்றும் துறந்தவன்’ கதையில் இடம்பெறும் நாயகன் ரகுவினுள்ளும் ஆசை.... காதல்.... மோகம் எல்லாம் இருக்கிறது. அது ஒன்றும் தப்பில்லையே....

    ‘மலரே பேசவா’ கதையில் பங்கு பெறும் கண்ணன் – கார்த்தியின் எண்ணக் கோலங்கள் புதுமையாகவே உள்ளது.

    ‘மலரோடு தனியாக’ கதையில் பங்குபெறும் சிவகாமி ஒரு புரட்சிகர பார்த்திரப்படைப்பு.

    இவ்வாறு என்னுடைய குறுநாவல்கள் ஐந்தையும் தொகுத்து அழகானப் புத்தக வடிவில் கொண்டு வந்த பூம்புகார் பிரசுரத்தாருக்கு என் மனமார்ந்த நன்றி.....

    எழுத்தாளர்களுக்கு மிகச்சிறந்த தொண்டாற்றும்’பூம்புகார்’ மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

    இப்படிக்கு

    என்றும் அன்புடன்

    அனுராதா ரமணன்.

    ***

    தனம்

    1

    சார்... ஏ.இ. மேடத்தை ஆஸ்பிடல்லே அட்மிட் பண்ணியிருக்கு.. இப்பத்தான் தகவல் வந்தது. நிலைமை ஒண்ணும் சரியில்லையாம்.. ஆபீஸ் ஸ்டாஃப் முழுக்க, மத்தியானம் போய் பார்க்கப் போறது...

    பியூன் சாமிக்கண்ணு சொல்ல,’திக்’கென்றாகிவிட்டது அருணகிரிக்கு.

    ஏய்... என்ன சொல்றே...

    மெய்யாலுமாத்தான் சார்... காலையில் பால் பாக்கெட் எடுக்கறதுக்காக வாசலுக்கு வந்திருக்காங்க... தலை சுத்திச்சோ என்னவோ..’மடேல்’னு விழுந்துட்டாங்களாம். அப்புறம் பேச்சு மூச்சில்லே. அக்கம் பக்கத்துல இருக்கறவங்க ஓடி வந்து, ஆஸ்பிடலுக்கு எடுத்திட்டுப் போயிருக்காங்க. ஆபீசுக்கும் அவங்கதான் போன் செஞ்சு, சொன்னாப்பல...

    ..............

    நல்ல வேளை சார். காலையில் வாசக்கதவைத் திறந்து வச்சிட்டு விழுந்திருக்காங்க. ராவோட ராவா எதுனாச்சும் ஆகியிருந்தா, யாருக்கு என்னா தெரியும்... என்னாவோ கதவு திறக்கலையேன்னு நினைச்சுப்பாங்க... அப்படியே உசிர் போயிருந்தா...

    இதைச் சொல்லி விட்டு, அருணகிரியை ஓரப் பார்வை பார்த்தபடி, உடம்பைச் சிலிர்த்துக் கொண்டான் சாமிக்கண்ணு...

    ஒண்டிப் பொம்பிளை.. உறவுமுறையின்னு சொல்லிட்டு ஒருத்தர் வந்து நான் பார்த்ததில்லே. போன வருசமே வி.ஆர்.எஸ் வாங்கப் போறதாச் சொல்லிட்டு இருந்தாங்க... பணத்தைச் சேர்த்து வச்சு யாருக்குக் கொடுக்கணுமாம்...

    மறுபடியும் அதே ஓரப்பார்வை. அருணகிரி அதற்கு மேல் அங்கே நிற்காமல் நகர்ந்து விட்டான்.

    தனலட்சுமி.........

    முதல் நாள் மாலை ஏழு மணி சுமாருக்கு அவனோடு சேர்ந்து, சென்னை சில்க்ஸ்ஸிலும், போத்தீஸ்ஸிலும் ஏதோ ஒரு கலர் கலவையை மனசில் கற்பனை செய்து கொண்டு அலசித்தீர்த்திருக்கிறாள்.

    இது ரொம்ப’டார்க்’கா இல்லே.... இதுலேயே இன்னும் கொஞ்சம் லைட் ஷேட்... பார்டர் கூட ஆயில் மஸ்டர்ட்டா இருந்தா நல்லாயிருக்கும்...

    சும்மா எடுங்கம்மா, உங்களுக்கு எல்லாக் கலருமே எடுப்பா இருக்கும்...

    கடைச் சிப்பந்தி, வியாபாரச் சாமர்த்தியத்துடன் பேச, அவன் அருணகிரியைப் பார்த்த பார்வை...

    இப்பொழுதும் மனசுக்குள் அப்படியே இருக்கிறது.

    நேற்று நன்றாகத்தானே இருந்தாள்...

    உனக்கு எதைக் கட்டினாலும் நல்லாயிருக்கும் தனம்... இந்தக்கலர் உன் கிட்ட இல்லவே இல்லே...

    அவன் அப்பட்டமாய்ப் புளுகிய போது, அவளது பெரிய கறுத்த உதடுகளில் நெளிந்த புன்னகை...

    அருணகிரி எப்பொழுது அவளைப் புகழ்ந்தாலும் இப்படித்தான் கீற்றாகச் சிரிப்பாள். அவ்வளவுதான். அவள் வாய்விட்டுச் சிரித்து யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்.

    இந்தப் புன்னகை கூட அவனுக்கு மட்டும்தான். அவனது பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாய்ச் சிரிக்கிறாளா... அல்லது, அவன் பொய் சொல்வது தெரிந்துதான் சிரிக்கிறாளா... என்பது இன்றளவும் அவனுக்குத் தெரியாது.

    ஆனால், அது போன்ற சந்தர்ப்பங்களில் தர்ம சங்கடமாய் உணர்வான் அவன்.

    ‘கல் மாதிரி இருந்தாளே.. என்ன ஆச்சு..

    அருணகிரி, மெளனமாய்த் தன் மேசையருகே போய்ச் சிறிது நேரம் மலைத்து நின்றான்.

    தனம்...

    முதல்நாள் மாலை தனக்கும், அருணகிரியின் மனைவிக்கும் புடவை வாங்கி, கீதாஞ்சலியில் முறுகல் தோசை சாப்பிட்டு, அருணகிரியின் குழந்தைகளுக்கு பீஸ் புலாவ் பார்சல் கட்டி வாங்கிக்கொண்டு, ஆட்டோவில் ஏறுமுன் பத்து ரூபாய்க்கு மல்லிகைப் பூவாங்கி, பூக்காரியையே பாதியாய்க் கிள்ளித் தரச் சொல்லி, ஒரு பாதியைத் தன் தலையில் வைத்துக் கொண்டு, மீதியை அவன் கையில் திணித்து...

    சுகுணா கிட்டக் கொடுங்க...

    அவளை அண்ணா நகரில் இறக்கிவிட்டு, அவன் வேளச்சேரிக்கு வந்தான்.

    இறங்கும்போது கூட, அவன் கையில் நூறு ரூபாயை அழுத்தினாள்.

    ஆட்டோவுக்கு வச்சுக்குங்க...

    உம்...

    நாளைக்கு லஞ்ச் வழக்கம் போல நானே கொண்டு வந்துடறேன்...

    தாங்க்ஸ்..

    போதுமே...

    மறுபடியும் கறுத்த இதழ்கள் விரிந்தன...

    ஆட்டோவிலிருந்து சற்றே சிரமப் பட்டுத்தான் இறங்கினாள்.

    வேறு வழியில்லை. பெரிய சரீரம்...ஐந்தடி பத்தங்குலம் உயரம். அத்தனை நேரம் ஆட்டோவுக்குள் உட்கார்ந்திருந்ததே பெரிய விஷயம்.

    எப்பொழுதுமே அப்படித்தான்... ஆட்டோவோ, காரோ... உள்ளே அமர்ந்திருக்கும் பொழுது அந்த உருவத்தின் விசுவரூபம் தெரியாது. இறங்கி நின்று, கசங்கிய புடவையைச் சரி செய்து, முதுகை நிமிர்த்தி நின்றாள் என்றால்...

    கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். ஆட்டோ டிரைவர் கூட மிரட்சியுடன்தான் பார்ப்பான்.

    நல்ல கறுப்பு வேறு.... அலுவலகத்துக்கு வரும் போது தனலட்சுமியைப் பார்க்க வேண்டும்.

    மஞ்சளை இழைத்து இழைத்துப் பூசியிருப்பாள்.

    ஏ.இ. மேடம் நாலு மணிக்கே எழுந்திருந்தாத்தான் குளிச்சு முடிச்சிட்டு ஆபீசுக்கு வர்றதுக்கு சரியா இருக்கும் - ஏன் மேடம், ஒரு நாளைக்கு ஒரு சோப்பு, அரை கிலோ மஞ்சக் கிழங்கு செல்வாகுமா...

    ஜே.இ. சபாஸ்டினின் கிண்டல் இது.

    அவள் எதையுமே பொருட்படுத்த மாட்டாள். யாருடைய விமரிசனத்துக்காகவும் தன்னை மாற்றிக் கொண்டதுமில்லை.

    மரத்தட்டு போல் பெரிய அகல முகம்... மஞ்சள் பூசிப் பூசி, கறுப்பு முகத்தில் ஒரு விதமான பச்சை பூத்திருந்தது. அந்த ஆகிருதிக்குத் தலைமுடி ரொம்பவும் குட்டை... சவுரி வைத்துப் பின்னியது உயிரில்லாத பாம்பு போலத் துவண்டிருக்கும். நெற்றியில் பெரிய வட்டமாய்ச் சாந்துப் பொட்டு... அத்துடன் பளீரென்ற திருநீறு... காதிலும், கழுத்திலும் நிறையவே நகை...

    மொத்தத்தில், ஒரு மளிகைக் கடை முதலாளியின் மனைவி போலத் தோற்றம்...

    ஆனால் அரசு மின் வாரியத்தில் உதவிப் பொறியாளர்... மற்றவர் கண்களில் விரலை விட்டு ஆட்டுகிற அதிகாரி... யாருக்கும், எதற்கும் வளையாதவள். முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், குரலை உயர்த்தாமல் அத்தனை பேரையும் தன் பிடிக்குள் வைத்திருப்பாள்.

    அருணகிரி பத்து வருடங்களுக்கு முன் இந்த இடத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தான்.

    வாங்கிக் கொண்டுதான்..

    வருடக் கணக்கில் தண்ணீரில்லாக் காட்டிலும், பள்ளிக்கூடமில்லாத ஊர்களிலும், நல்ல ஆஸ்பத்திரி இல்லாத சபிக்கப்பட்ட பகுதிகளிலும் குப்பை கொட்டிவிட்டு மூன்று குழந்தைகளின் எதிர்காலத்துக்காக யார் யார் காலையோ பிடித்துக் கெஞ்சிக் கூத்தாடி இங்கே வந்தான்.

    இன்னொரு விஷயமும்...

    இவன் இப்படிச் சென்னைக்கு மாற்றல் வாங்காவிட்டால், குழந்தைகளுடன் பிறந்த வீட்டிலேயே போய் உட்கார்ந்து விடுவதாக அவன் மனைவி சுகுணா பயமுறுத்தினாள்...

    எது இல்லாவிட்டாலும் சமாளித்து விடுவான் அருணகிரி. மனைவியைப் பிரிந்து இருப்பதென்பது அவன் மரிப்பதற்குச் சமம்.

    இன்றைக்கும் கூட.. அருணகிரிக்கு நாற்பத்தியைந்து வயசாகிறது. சுகுணாவுக்கு நாற்பதாவது இருக்கும். குத்துவிளக்கில் ஏற்றி வைத்த சுடர் மாதிரி இருப்பாள். அந்த இடுப்பும், மார்பும் இருபது வயசுப் பெண் போல... வட்ட முகத்துக்கும், தளதள வென்ற உடம்புக்கும் எந்த நகையைப் போட்டாலும், எந்தப் புடவையைக் கட்டினாலும் கிறுகிறுக்க வைக்கும்...

    ஆனால், வாங்குகிற சம்பளத்தில் புடவை, நகை ஆசைக்கெல்லாம் இடமேயில்லை...

    எங்க அப்பாகிட்ட, அத்தை கெஞ்சினாங்க... சுகுணாவை என் மகனுக்குக் கட்டி வைடான்னு.... எங்கப்பாவுக்கு அறிவே கிடையாது. டாக்டர் மருமகனை வேணாம்னு ஒதுக்கிட்டு இன்ஜினீரு மாப்பிள்ளையைப் பிடிச்சாரு... எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணுமில்லே...

    சுகுணா, கணவனின் காதுபடவே சொல்லுவாள். அவன், அப்படியே குன்றிப் போவான்.

    ஏதாவது செய்து, நிறையச் சம்பாதித்து, இவள் வாயை அடைக்க வேண்டும்...’

    நினைத்துக் கொள்வானே தவிர, எப்படி என்பதுதான் விடை தெரியாத கேள்வியாக இருந்தது, நாலு வருடங்களுக்கு முன்பு வரையில்...

    தனலட்சுமியை,’சக ஊழியை’ என்கிற அளவில்தான் தெரியும் அருணகிரிக்கு. அவனோடு வேலை செய்பவர்கள், ஏன், கடை நிலை ஊழியர்கள் கூட தனலட்சுமியைப் பற்றி ஏளனமாய்ப் பேசும் போது, அவனும் கூடச் சேர்ந்து சிரித்திருக்கிறான்.

    "எதுக்குடீ இப்படி மஞ்சளைத் தேய்ச்சிட்டு வந்து பயமுறுத்துது?

    "அப்பவாவது கறுப்பு நிறம் மாறுமோன்னு பார்க்கறாங்களோ என்னமோ...’

    இந்த சைஸுக்கு மாப்பிள்ளை கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம் மீனாட்சி...

    ஐயோ... கரிசனத்தைப் பாரேன்... வேணுமானாச் சொல்லு. நான் பேசி முடிச்சு வைக்கிறேன்..."

    ஏம்மா, நான் நல்லாயிருக்கறது உனக்குப் பிடிக்கலையா...

    ஆமா.. வயசு என்ன இருக்கும்?

    அதிகமில்லே. நாற்பது.. இல்லே, நாற்பத்தியிரண்டுதான் இருக்கும்...

    ஒருத்தனும் மாட்டலையா?

    "ஊம்ஹும். சொந்த ஃபிளாட் இருக்கு. தனிப்பொம்பிளை. மாசம் இருபதாயிரம் பக்கம் சம்பளம். லோன் எதுவுமில்லே. வாங்கற சம்பளத்துலேயே பாதிய வட்டிக்கு விடறாப்பல.. மீதியில் தினமும் பிரியாணிதான், சுறாப்புட்டுதான். லஞ்ச் டயத்துல பார்க்கணும். வாசனை’கும்’முனு தூக்கும்.

    ‘களுக்’கெனச் சோழிகளைக் குலுக்கிப் போட்டாற் போலச் சிரிப்பு. தனலட்சுமியின் தலையைக் கண்டதும் அப்படியே அமுங்கும்.

    சீஃப் இன்ஜினீயரின் அறைக்கோ, அல்லது வேறு விஷயமாகவோ, அவள் தனது நாற்காலியிலிருந்து எழுந்து போகும் போதும், திரும்ப வந்து அமரும்போதும் அலுவலகத்தின் அந்தப் பெரிய ஹாலை ஒரு முறை விழிகளைச் சுழற்றிப் பார்ப்பாள்.

    க்கும்... மகாராணியின்னு நினைப்பு...

    இந்த மூஞ்சிக்கே இத்தனை ராங்கி...

    இப்படிப் பேசுபவர்கள் எல்லாரும், பணமுடை என்றால் மட்டும் இவளிடம்தான் வருவார்கள். வட்டி அதிகம்தான். சொன்னால் சொன்ன தேதியில் திருப்பித் தர வேண்டும். ஆனால் எப்பொழுது கேட்டாலும் கிடைக்கும்.

    ‘சீஃப்’ கூட, அவரது மகளின் திருமணத்துக்கு இவளிடம் இரண்டு லட்சம் வாங்கியிருப்பதாய்ப் பேச்சு.

    அருணகிரிக்கு அவசரத் தேவை வந்த போது, சாமிக் கண்ணுதான் இவளிடம் பேசி, பணம் வாங்கித் தந்திருக்கிறான்...

    இரண்டு தடவை.....

    மூன்றாம்முறை வாங்கிய கடனுக்கான வட்டி, தனலட்சுமியின் வீட்டுக் கட்டிலில் வைத்து, கணக்குத் தீர்க்கப் பட்டது!

    ***

    2

    தீவிர சிகிச்சைப் பிரிவில், கட்டில் கொள்ளாமல் கிடந்தாள் தனம்.

    கண்ணாடிக் கதவின் வழியாகத்தான் எல்லாரும் பார்த்தார்கள்.

    முகம் சரிவரத் தெரியவில்லை. பெரிய பாதங்கள், கட்டிலைத் தாண்டி, துருத்திக் கொண்டிருந்தன. மேட்டு வயிறு ஏறி இறங்கும் போது மட்டும் முகம் அவ்வப்பொழுது தெரிந்து மறைந்தது..

    அருணகிரியும், கண்ணாடிக் கதவின் வழியாகத்தான் பார்த்தான். அவன் பக்கத்திலேயே உரசியபடி சாமிக்கண்ணு...

    உள்ளாரப் போய்ப் பார்க்கறியா சார்?

    அவன் கேள்வியில் திடுக்கிட்டான் அருணகிரி. சாமிக்கண்ணுவை எரிப்பதுப் போலப் பார்த்து விட்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டான் அவன்...

    ஒருவனின் பலஹீனம் மட்டும் தெரிந்துவிட்டால், கொசு சுடக் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கடிக்கும் போல...

    தனலட்சுமிக்கும், தனக்கும் இடையே உள்ள நெருக்கம்... உறவு...

    ‘நெருக்கமா.. உறவா..’

    ‘சட்... ஏதோ ஒன்று...’

    அந்த ‘ஏதோ ஒன்று’ - இந்தப் பியூன் சாமிக்கண்ணுவுக்கும் தெரிந்ததினால்தானே இப்படிக் கேட்கிறான்...

    மற்றவர்கள் யாரிடமாவது இத்தனைக் கரிசனமாகக் கேட்டானா...

    அருணகிரி, வியர்வை வெள்ளமாய் பெருக தீவிர சிகிச்சைப் பிரிவை விட்டு நகர்ந்தான்.

    சாமிக்கண்ணுவும்தான்...

    அந்த அம்மாவுக்கு என்னா சார் உடம்புக்கு?

    என்னைக் கேட்டா... நானா டாக்டர்?

    ‘சுள்’ளென எரிந்து விழுந்தான் அவன். பிறகுதான் தான் அப்படி ஆத்திரப் பட்டிருக்கக் கூடாது என்பது உரைத்தது.

    ஆனால், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், சீஃப் இன்ஜினியரிடம் பேசப்

    Enjoying the preview?
    Page 1 of 1