Indha Nila Sudum
()
About this ebook
இந்த நிலா சுடும் கதையில் வரும் கவிதா உலகம் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே புழுங்கிக் கிடந்தவள், எப்படி வெளி உலகிற்கு வருகிறாள்? தன் காது கேளாத பெண் குழந்தையை குடும்பத்தார் துணையின்றி எப்படி குணப்படுத்துகிறாள்? சமுதாயத்தில் தன்னை எப்படி தகுதியுள்ளவளாக்கிக் கொள்கிறாள்? தன்னுடைய அனுபவங்களின் மூலம் தன்னைப்போல் கஷ்டப்படும் தாய்மார்களுக்கு எப்படி ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறாள்? தன் குழந்தையை வளர்க்க அவள் அனுபவிக்கும் மனப்போராட்டங்களையும், தன்னை உதாசீனப்படுத்திய கணவருக்கு எப்படிப் பாடம் கற்பித்தாள் என்பதையும் தனக்கே உரிய நடையில் எழுதி இருக்கிறார். வாசிப்போம் வாருங்கள்...
Read more from Anuradha Ramanan
Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Nanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Ulley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsVaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsPuthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Poovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsVettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsPournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Anna Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsSonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Chinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Mogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsNila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Mundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Uravu Ondru Vendum Rating: 5 out of 5 stars5/5Kaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsSalanam Rating: 0 out of 5 stars0 ratingsNadippu Suthesikal... Rating: 5 out of 5 stars5/5Unnaruge Ullaval Rating: 0 out of 5 stars0 ratingsVera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Anuradha Ramananin Sirukathaigal Part - 1 Rating: 5 out of 5 stars5/5
Related to Indha Nila Sudum
Related ebooks
Vilaikku Vaangiya Kanavan Rating: 0 out of 5 stars0 ratingsSaatharana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsKoottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsIndha Ithazhil Arambamagirathu Rating: 0 out of 5 stars0 ratingsMeeravin Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppuden Uravu Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyathai Sol Kiliye..! Rating: 0 out of 5 stars0 ratingsIni Oru Piriva Rating: 0 out of 5 stars0 ratingsEppodhum Nee! Rating: 2 out of 5 stars2/5Naalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethaney Rating: 0 out of 5 stars0 ratingsIvale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Saathaga Paravai Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsNaveena Navarasa Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsOru Nimisham Please Rating: 0 out of 5 stars0 ratingsOomai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Neruppu Malar Rating: 5 out of 5 stars5/5Kathi, Thupakki, Kanneer Rating: 5 out of 5 stars5/5Pon Veenai Rating: 0 out of 5 stars0 ratingsIvarthan, Konjam Kavani... Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Kaadhal Rating: 5 out of 5 stars5/5Natchathira Iravil Rating: 0 out of 5 stars0 ratingsVaralama Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Illatha Iravu Rating: 0 out of 5 stars0 ratingsPaavam, Malukutti Rating: 0 out of 5 stars0 ratingsNaal Muzhukka Naadagam Rating: 0 out of 5 stars0 ratingsMazhaikaala Malligaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kaithi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Indha Nila Sudum
0 ratings0 reviews
Book preview
Indha Nila Sudum - Anuradha Ramanan
https://www.pustaka.co.in
இந்த நிலா சுடும்
Indha Nila Sudum
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarajan
For more books
https://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
முன்னுரை
அனும்மாவும் நானும் இந்தக் கதைகளும்...
அனுராதா ரமணனின் கதைகளை, அவருடைய முத்துமுத்தான கையெழுத்தில், அச்சில் ஏறுவதற்கு முன் சுடச்சுட படித்து அனுபவித்த பாக்கியசாலி நான்.
முன்னுரை எழுதுவதற்காக, மீண்டும் படிக்க சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி.
இந்த நிலா சுடும்:
இந்தக் கதை தொலைகாட்சியிலும் தொடராக வந்து பாராட்டுதல்களைப் பெற்றது.
பெண்ணால் சாதிக்க முடியும் என்பதை அனும்மா தன் கதைகளின் மூலம் சொல்லிக்கொண்டே இருப்பார். நிலா சுடும் கதையில் வரும் கவிதாவும் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. உலகம் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே புழுங்கிக்கிடந்த அவள் எப்படி வெளி உலகிற்கு வருகிறாள்? தன் காது கேளாத பெண் குழந்தையை குடும்பத்தார் துணையின்றி எப்படி குணப்படுத்துகிறாள்? சமுதாயத்தில் தன்னை எப்படி தகுதியுள்ளவளாக்கிக் கொள்கிறாள்? தன்னுடைய அனுபவங்களின் மூலம் தன்னைப் போல் கஷ்டப்படும் தாய்மார்களுக்கு எப்படி ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறாள்?
தன் குழந்தையை வளர்க்க அவள் அனுபவிக்கும் மனப் போராட்டங்களையும், தன்னை உதாசீனப்படுத்திய கணவருக்கு எப்படிப் பாடம் கற்பித்தாள் என்பதையும் தனக்கே உரிய நடையில் எழுதியிருக்கிறார் அனும்மா...
காது கேளாதவர்களுக்கான பள்ளியில் எப்படி குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கிறார்கள் என்பது பற்றி எழுதும்போது, வந்துவிழும் வார்த்தைகளைப் பாருங்கள்...
‘சின்னஞ்சிறு உலகம் ஒவ்வொரு குழந்தையும் ஒரு போராளிக்கே இருக்கக்கூடிய விடாமுயற்சியுடன் தினம்தினமும் தங்களது குறையை விரட்டியடிக்க - கையில் வாள் ஏந்தாத குறையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் குழந்தைப் போராளிகளின், பக்கத்தில் அமர்ந்து பயிற்சியளிக்கும் ஒவ்வொரு பெண்ணும் வீரசிவாஜிக்கு ஊக்கமளித்ததாய் ஜீஜீ பாய்க்கு சமமானவர்கள். பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு, இந்த வரிகள் வீறிட்டு எழத் தூண்டுகோலாக இருக்கும்...’
அனும்மாவின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், நமக்கு மிகவும் பரிச்சயமான, நம்மிடையே உலாவும் சக மனிதர்கள். அவர்களின் சந்தோஷங்கள், வருத்தங்கள், சோகங்கள், அவர்கள் வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சனைகள், போராட்டங்கள்... அந்த போராட்டங்களிலிருந்து அவர்களுக்கு தீர்வு கிடைக்க என்ன வழி? இந்த ரீதியில்தான் அனும்மாவின் கதைகள் இருக்கும்.
மனித உறவுகளை, அவர்களின் போராட்டங்களை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா என்று பல நேரங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
வெகு நாட்களுக்குப் பிறகு திரும்பப் படிக்கும்போது 30 வருடங்களுக்கு முன்னால் அனும்மாவுடன் சேர்ந்து ஒரு நடைப் பயணம் போய் வந்த சிலிர்ப்பான திருப்தி கிடைத்தது.
அன்புடன்,
ஜெயந்தி சுரேஷ்
1
மாடியில் இரைச்சல் சற்று ஓய்ந்திருந்தது. அப்படியும் கூட ஒரு பெண்ணின் சிரிப்பு தனியாக... இருட்டு சமையற்கட்டில் பூனை பாத்திரங்களை உருட்டிவிட்டாற்போல...
கவிதா வெற்றுச் சுவரை வெறித்தபடி படுத்திருந்தாள். பக்கத்தில் பாப்பு மட்டும், கட்டைவிரலை சூப்பியபடி தாயின் மார்பில் முகம் புதைத்து - ஆழ்ந்த தூக்கத்தில்...
ஒவ்வொரு சனிக்கிழமையும் இப்படித்தான்... இரவு முழுக்க தூங்காமல் படுத்திருப்பாள் கவிதா... மாடியிலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் அவள் கணவன் ரவி கூப்பிடுவான். பேச்சுவார்த்தை எல்லாமே வீட்டுக்குள்ளேயே அமைந்திருக்கும் ‘இன்டர்காம்’ தொலைபேசியின் மூலம்தான்.
வசதிகள் பெருகிவிட்டால் பெண்டாட்டியும் புருஷனும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதுகூட குறைந்துவிடுகிறதே...
ரவி இளமையிலேயே அதிருஷ்ட தேவதையின் அரவணைப்புக்குள் வந்துவிட்டவன். படிப்பு ஒன்றும் அதிகமில்லை. ஆனால் தொட்டது துலங்கியது. சின்னதாய் ஆரம்பித்த இரும்புப் பட்டறை இன்று மலையாய் வளர்ந்து ‘ரவிராஜ் இரும்பு தொழிற்சாலை’யாக நிற்கிறது. எங்கேயோ ஆந்திரா பக்கம் மலையைப் பெயர்த்து எடுத்து வந்து, மழமழவெனப் பாலீஷ் போட்டு விற்றான்... இன்றைக்கு ‘ராஜ் கிரானைட்ஸ்’ என்கிற பெயருடன் அவன் அனுப்பும் கற்கள் உலகம் முழுக்கப் போய்கொண்டிருக்கிறது. சினேகிதன் எவனோ சொன்னான் என்பதற்காக சில லட்சங்களை சினிமாவில் போட்டான்... இன்றைக்கு இவன் பேனரில் நடிக்க சூப்பர் ஸ்டார் கூட யோசிக்காமல் கால்ஷீட் தருகிறார்.
எங்க பாட்டி அப்பவே சொல்லிச்சு... உத்திராடத்துல ஒரு பிள்ளையும், ஊர்கோடியில் துண்டு நிலமும் இருக்கிறவன் எதுக்கும் கவலைப்படவேண்டாம்னு... இவன் பொறந்ததுக்கு அப்புறம்தான் எங்க அப்பாவுக்கே அவரோட சித்தப்பாவோடப் பிள்ளையில்லாதச் சொத்து அஞ்சுவேலி நிலமும், ஒரு தென்னந்தோப்பும் வந்து சேர்ந்தது. அவன் கைப்பட்டா விளங்காதப் பொருளே கிடையாது. அப்படியொரு ராசி...
இப்படி தன் தம்பியின் பெருமையை ஓயாது சொல்லிக் கொண்டிருக்கும் அம்மாவிடம், ஒருமுறையாவது இப்படி கேட்க வேண்டுமென்கிற ஆசை கவிதாவுக்கு.
அதுசரி... மாமா தொட்டது எல்லாம் துலங்கிச்சே... நான் மாத்திரம் ஏம்மா இப்படி... எனக்கும், என் பொண்ணுக்கும் மட்டும் ஏன் அந்த அதிர்ஷ்டம் இல்லவே இல்லை...
கவிதா படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள்...
‘பேசாமல் வாத்தியார் அய்யா பிள்ளையக் கட்டிட்டு, கிராமத்தோட இருந்திருக்கலாம்... இந்த நேரத்துக்கு கிராமத்து வீடாயிருந்தா... எத்தனை நிம்மதியாத் தூங்கிட்டிருப்பேன்...’
ஒருகணம் மானசீகமாய் நினைத்துப் பார்க்கிறாள்.
வாத்தியார் அய்யா வீட்டில் கட்டில் - அதுவும் இதுபோல பத்து கவிதா படுக்கக்கூடிய அளவுக்கு கட்டில் எல்லாம் கிடையாது. வாத்தியார் வீட்டில்தான் என்றில்லை... அனேகமாக கிராமத்து வீடுகளில் கயிற்று கட்டில்களும், நாடாக் கட்டில்களும்தான் அதிகம். மாலை மங்கி - இரவு ஒரு பக்கம் கிராமத்துக்குள் நுழையும்போதே - வீட்டு ஆண்கள் இந்தக் கயிற்று நாடாக் கட்டில்களை வாசலுக்கு கொண்டு வந்து போட்டுவிடுவார்கள். பெண்கள் குடிக்க தண்ணீரும், விசிறியுமாய், பிள்ளை குட்டிகளுடன் கட்டிலைச் சுற்றி