Kurunkatturaigal Moolam En Aanmeega Anubavangal
()
About this ebook
Read more from Bakkiyam Ramasamy
Mamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Appusamyum Africa Azhagiyum Rating: 5 out of 5 stars5/5Appusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsCome on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsAakasavaniyil Appusamy Rating: 0 out of 5 stars0 ratings'Ink'eetham Therinthavara Neegal? Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Padam Edukkirar Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal Rating: 5 out of 5 stars5/5Aayirathoru Appusamy Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsAnnachi vs Annachi Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsSundakkai Sithar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAndha 37 Varudangal Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyum Bharathi Naarkaaliyum Rating: 0 out of 5 stars0 ratingsAugust Thiyagi Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAadhaar Attaiyum Appusamiyum Rating: 0 out of 5 stars0 ratingsMaanavar Thalaivar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Arputha Vilakkum Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Divorce Ketkirar Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kurunkatturaigal Moolam En Aanmeega Anubavangal
Related ebooks
Kandavar Vindilar! Vindavar Kandilar!! Rating: 0 out of 5 stars0 ratingsAdhu Mattum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMukkoodal Rating: 0 out of 5 stars0 ratingsSiddhargalin Sorga Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsMoovidathu Vanaratham Rating: 3 out of 5 stars3/5Ellaam Penne Unnaale Rating: 5 out of 5 stars5/5Rangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsKannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Raajiyin Pillai Rating: 0 out of 5 stars0 ratingsSivasamiyin Sabatham Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsSath Sarithiram Kaattum Paathai Rating: 0 out of 5 stars0 ratingsArupathu Moovar Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsDevahuti! Rating: 0 out of 5 stars0 ratingsDhvani Rating: 0 out of 5 stars0 ratingsOru Kavirajanin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsTagore Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Ullathu Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsSorgam Naduvile Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Paalaivanathil Pannir! Rating: 4 out of 5 stars4/5Vellai Nizhal! Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Kavithai Rating: 5 out of 5 stars5/5Panch Dwaraka Rating: 0 out of 5 stars0 ratingsOru Paravai Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsChirithu Chirithai... Perithu Perithai... Rating: 0 out of 5 stars0 ratingsPallava Sundari Rating: 0 out of 5 stars0 ratingsKumari Penne! Kuyilaale! Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kanda Mahangalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsShshsh… Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kurunkatturaigal Moolam En Aanmeega Anubavangal
0 ratings0 reviews
Book preview
Kurunkatturaigal Moolam En Aanmeega Anubavangal - Bakkiyam Ramasamy
http://www.pustaka.co.in
குறுங்கட்டுரைகள் மூலம் என் ஆன்மீக அனுபவங்கள்
Kurunkatturaigal Moolam En Aanmeega Anubavangal
Author:
பாக்கியம் ராமசாமி
Bakkiyam Ramasamy
For more books
http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அப்பாவைத் தேடி
அர்த்தநாரீஸ்வரரும் ரேடியோக்காரர் கொடுத்த வேட்டியும்
அயோத்தி ராமருடன் ஓர் அவசர சந்திப்பு!
தெய்வம் நின்று கொல்லாது!
எங்க பெரியாண்டவன்
குரு
இந்திரா, அதோ பார் எறும்பு!
ஜெப மாலை
கால்
கல்லும் நானும் ஒண்ணு!
கூடவே வந்த சாயி!
கோவிலில் மடப்பள்ளி எதற்கு?
மாணிக்கவாசகர் ஆங்கிலம் அறிந்தவரா?
நடுவில் நின்ற நடு
நடுவில் யாரும் தேவையில்லை
நானும், என் அரை செங்கல்லும்
பக்குவம்!
ராமநாமம்
பகவான் ரமணரைத் தொந்தரவு செய்தார்கள்!
சீடர்களின் மருத்துவமும் குருவின் மறுத்துவமும்
சிக்கிக்கொண்டாள் சீதை
தர்ப்பைக் கட்டு
திருவடிகளைப் பற்றிக் கொள்ளுங்கள், தீர்ந்துவிடும் உங்கள் துயரம்!
கண்ணா, வந்து இந்தத் துரும்பைத் தூக்கு!
வைத்தியநாத சாமிக்கு ஓர் அந்தரங்கக் கடிதம்
வாரியாருடன் இரண்டு நாட்கள்...
சுவாமிகளை விசாரிப்பது எப்படி?
அப்பாவைத் தேடி
அறுபது ஆண்டுகளுக்கு முன் இறந்த எனது தந்தை மேல் உலகில் இப்போதும் இருப்பாரா?
அவரது மகனாகிய நான் இந்தப் பூமியில் இருந்துகொண்டு அவருக்கு சாஸ்திரப்படி வைதீகர்களின் துணையுடன் வருடா வருடம் திதி கொடுத்து வருகிறேன்.
எனக்கு வயது இப்போது 80. எனக்கு ஓர் ஆசை. நான் இறந்து மேலுலகம் போனால் எனது அப்பாவைச் சந்திக்கலாம் என்ற ஆசை.
இந்த ஆசை நிறைவேறுமா? நானே யோசித்துப் பார்த்ததில் பல சந்தேகங்கள் தோன்றுகின்றன.
ஒரு ஆசாமி இந்தப் பூமண்டலத்தில் உள்ளபோதே காணாமல் போய் 60 வருடம் கழிந்து போனால் அவரைத் தேடிக் கண்டுபிடிப்பது மகா கடினம்.
பூமியின் பரப்பளவு மனிதனால் கடக்கக்கூடிய அளவுதான். ஆனால் மேலுலகமோ அளவிறந்த பரப்பு கொண்டது.
அங்கு போய் எப்படி நான் என் அப்பாவைத் தேடுவது? அதுவும் 60 வருடம் கழிந்து.
அங்குள்ளவர்களிடம், ''ஐயன்மீர், மேச்சேரி ராமஸ்வாமி அய்யர் என்பவர் உங்களோடு 60 வருடமாக வசித்து வருகிறாரா? கொஞ்சம் உயரமாக, சதைப் பிடிப்பாய், சிவப்பாக முகத்தில் நல்ல தேஜஸுடன் இருப்பார்'' என்று அங்க அடையாளம் அங்கே சொல்ல முடியுமா? சொல்லிக் கேட்டேன்.
அவர்கள் சிரித்தார்கள். ''அறுபது வருஷ சரித்திரம் எங்களுக்கு எப்படித் தெரியும்? நாங்கள் சமீபத்தில் வந்தவர்கள். பூமியில் நாங்கள் செய்த நற்காரியங்களால் எங்களுக்குக் கிடைத்த புண்ணியம் காரணமாக இங்கே நாங்கள் இருந்து சுகத்தை அனுபவித்து வருகிறோம். அந்தப் புண்ணியம் தீர்ந்தவுடன் பூமியில் மீண்டும் பிறப்பதற்கு அனுப்பி வைக்கப்படுவோம். சிலர் வசதியுள்ள மானிடர் வீட்டில், சிலர் ஞானவான்கள் இல்லத்தில், சிலர் பிராணிகளாக, பறவைகளாக, இப்படி அவரவர் நல்வினை தீவினைக்கு ஒப்பப் பிறப்பிக்கப்படுவார்கள்.
''பூலோகத்தில் நீங்கள் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். 'எப்படி ஒரு மகான் வெகு சின்ன வயதில் ஆயிரக் கணக்கான பக்திப் பாடல்கள் பாடுகிறார் (ஞானசம்பந்தர்). எப்படி இந்த இள வயதில் மதத்தின் பெருமையை உலகத்தவர்களுக்கு இவரால் நாட்ட முடிந்தது (விவேகானந்தர்). நூல் எதும் கல்லாமலே, உலகை வியக்க வைக்கும் ஆசார்யர்களை (ராமகிருஷ்ணர்) கண்டு ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்.
''எல்லாவற்றுக்கும் காரணம் பூர்வ புண்ணியம். ஒரு சிலர் கடுமையான சோதனைகளுக்கு அடுத்தடுத்து ஆளாகி, ராஜ தண்டனை பெற்று கொலையுண்கிறார்கள். சிலர் பரம ஆஸ்திகர்களாக இருந்தாலும் உடுக்கவும் உண்ணவும் வசதியின்றித் துன்பமே எந்நாளும் என்று மரிக்கின்றனர்.
''இவையெல்லாம் கர்மவினை என்று நீங்கள் அறிவீர்கள். மேச்சேரி ராமசாமி அய்யர் என்பதான உங்கள் தந்தை தமது கர்ம வினைக்கு ஏற்ப இப்போது எங்கே பிறப்பிக்கப்பட்டுள்ளரோ அது தேவ ரகசியம்.
''நீர் அவரைப் பற்றி இத்தனை ஆண்டுகள் கழிந்து வந்து கேட்கிறீரே. என்ன செய்வது? 'நான் இப்போதுதான் இறந்தேன்,' என்ற நீர் சமாதானம் சொல்வீர். நியாயமான பதில்.
''உங்கள் தந்தையைப் பார்த்துப் பேசி அவரோடு மகிழ்ச்சியோடிருக்கலாம் என்று ஆசையுடன் வந்திருக்கிறீர்.
''இறந்த பிறகும் ஆசை உம்மை விடவில்லை.
''மண்ணுலகில் உள்ளவர்களுக்கு நீதி புகட்டிய கண்ணபிரான் கீதையில், 'சாகும் தருவாயிலாவது இறைவனை நினைப்பவனது சகல பாவங்களும் ஆசைகளும் தீயினில் தூசாக பஸ்மமாகி விடுகின்றன' என்று மானிடருக்கு கடைசி சந்தர்ப்பமும் கொடுத்துப் பேசியுள்ளார்.
''ஆனால் அந்த அறிவுரைப்படியும் உம்மால் நடக்க முடியவில்லை.
''அப்பாவைத் தரிசித்து மகிழலாம் என்ற ஆசையோடே இறந்தீர். இங்கு வந்துள்ளீர்.
''உமது தந்தை இந்த 60 வருடங்களில் என்னென்ன ஜென்மம் எடுத்து எங்கெங்கு இருந்துவிட்டு என்னென்ன பெயரில் இங்கு வந்தாரோ எந்த லோகத்தில் என்ன பிறவியாக இருக்கும்படி இப்போது இறைவன் விதித்திருக்கிறாரோ.
''ஒன்று நிச்சயம். இந்தப் புண்ணிய லோகத்துக்கு வருகிறவர்கள் விதவிதமான பெயருடன் வருகிறார்கள். தங்கள் தந்தையாரான மேச்சேரி ராமசாமி அய்யர், பம்பாய் மிஸ்ரா என்ற பெயரில் வந்திருக்கக்கூடும். மிஸ்ரா என்ற பெயரில் அவர் செய்த புண்ணியங்கள் தீர்ந்து அவர் பூமிக்கு அனுப்பப்பட்டிருப்பார். வேதாத்யானம் சிறப்பாகச் செய்யும் தஞ்சை நன்னிலத்தில் வேதியர் ஒருவர் இல்லத்தில் பிறந்து விவசாயத் தகராறு ஒன்றில் உயிரிழந்தார். அவர் இப்போது மண்ணுலகில் எந்தப் பிறப்பாக எங்கே இருக்கிறாரோ தெரியாது. சித்ரகுப்தனின் நட்பால் எனக்கு இந்த லோகத்தில் சில ரகசியங்கள் அவ்வப்போது தெரியும்.
''ஆகவே நீர் அப்பாவை இங்கு தேடுவதில் பலனில்லை,'' என்று கூறி முடித்தனர்.
''அடக் கடவுளே!'' என்று விம்மினேன். அந்த லோகத்தில் சும்மா கடவுளே என்றால்கூட உடனே கடவுள் தோன்றி விடுவார் என்பது எனக்குத் தெரியாது.
இறைவன் தோன்றி ''உயிரே, ஏன் கூப்பிட்டாய்?'' என்றதும் ''பிரபு, என்னை உடனே மண்ணுலகத்தில் பிறப்பித்து விடுங்கள். என் அப்பாவை அங்கேயே தேடிக்கொள்கிறேன்'' என்றேன்.
கடகடவென்று கடவுள் சிரித்தார். ''குழந்தாய்! கணக்குப் பார்க்காமல் அவசர முடிவு எடுக்கக்கூடாது. முதலில் உன்னை மண்ணுலகுக்கு அனுப்புவதா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. உன்னுடைய பாவ புண்ணிய கணக்கைப் பார்த்தபோது நீ இங்கே உன் புண்ணியத்துக்குத் தக்கவாறு சில மணி நேரம்தான் தங்க முடியும்.
''ஆனாலும் தந்தையிடம் உனக்குள்ள அக்கறையையும், மரியாதையையும், பாசத்தையும் மனத்தில் கொண்டு இந்தப் புண்ணிய லோகத்தில் நீ மேலும் இரண்டு நாள் தங்கலாம்.
''இரண்டு நாள் ஆனதும் நீ நரகத்துக்கு அனுப்பப்படுவாய்.''
''பிரபு! நரகத்துக்கா? மீண்டும் மண்ணுலகத்துக்கு என்னை அனுப்பலாகாதா? என் அப்பாவை நான் அங்கேதானே தேட முடியும்?''
''குழந்தாய்! பாசம் உன் கண்ணை மறைக்கிறது. உன் தந்தை, பிறவியில்லாத சொர்க்கத்துக்கு 'சொர்க்கஸ்ரீ விருது' தரப்பட்டு அனுப்பப்பட்டுவிட்டதாக சற்றுமுன் வந்த தகவல்கள் கூறுகின்றன. ஆகவே அவரை இனி நீ மண்ணுலகில் தேட முடியாது.
''உனது புண்ணியம் தீர்ந்தவுடன் உன் கர்ம வினைக்குத் தக்கபடி மீண்டும் நீ மண்ணில் பிறக்கக்கூடும். என்ன பிறவி என்பதை உனக்கு நான் சொல்ல இயலாது. அது ரகசியம்.''
''அப்படியானால் என் அப்பாவை நான் மீண்டும் சந்திக்கவே முடியாதா? அவருக்குப் பிரியமாக சேவை செய்ய முடியாதா?''
கடவுள் சிரித்தார். ''தும்பை விட்டு வாலைப் பிடிப்பது இதுதான்.''
''சுவாமி! காளைக் கன்றின் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணி ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்பார்களே அதைச் சொல்லுகிறீர்களா பிரபு?''
பிரபு மீண்டும் சிரித்தார். ''தந்தை தன்னுடன் மண்ணுலகில் இருக்கும்போதே அவருக்கு சேவை செய்வதை விட்டு விட்டு அவர் இறந்த பிறகு அவருக்கு என்னென்ன செய்யலாம் என்று பலர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்களே அதைக் குறிப்பிட்டேன். புரிகிறதா? நன்றி. ஆசிகள்.''
நான் சட்டென்று விழித்துக்கொண்டேன். எந்த உலகத்துக்கும் நான் போகவில்லை. கட்டிலில்தான் கிடந்தேன். அப்பாவின் புகைப்படம் சுவரில் புன்னகைத்துக்கொண்டிருந்தது. விடிந்தால் சிரார்த்தம்.
*****
அர்த்தநாரீஸ்வரரும் ரேடியோக்காரர் கொடுத்த வேட்டியும்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவிலை சில கிண்டல்காரர்கள் 'புல்மிகு', 'பாம்புமிகு' அர்த்தநாரீஸ்வரர் கோவில் என்பார்கள்.
சிதிலமாகிக் கொண்டிருக்கும் எத்தனையோ கோவில்களில் அது ஒன்று. எப்போதாவது பிரகாரத்திலுள்ள செடிகொடி, முள்ளைப் பிடுங்கிப் போட்டுக் களையெடுக்க திடீர் பக்த கோஷ்டி எங்கிருந்தாவது 'கர் சேவா' செய்ய துணி பானரில் நீல நிறத்தில் தங்கள் மண்டலியின் பெயரை அச்சடித்துக் கொண்டு வந்து சேரும்.
அரைகுறை ஷேவிங் மாதிரி ஏதோ செதுக்கிவிட்டுப் போவார்கள். சொல்லிக் குற்றமில்லை. பூராவையும் மழுங்கச் சிரைத்துச் சீர்ப்படுத்தி, போனது வந்ததுகளைப் பார்த்து, உள் பிராகாரத்திலுள்ள இருண்ட காராகிரகப் பகுதிகளிலுள்ள வௌவால் கூட்டங்களை எவிக்ட் செய்ய வைத்து, டியூப் லைட்டோ சாதா லைட்டோ மாட்டி, பெயிண்ட் கியிண்ட் அடித்து, இத்தனையும் செய்துவிட்டு குட முழுக்கு செய்விக்காமல் விடலாமா?
அதையும் செய்து முடிக்க எல்லாமாகக் கணக்குப் போட்டால் பதினாறு லட்ச ரூபாய் பட்ஜெட்!
பத்துப் பைசா கற்பூரத்துக்கே நாதி இல்லாத கோவில். விளக்குக்கு எண்ணெய் கேட்டுப் பிச்சைக்கு வருவார் பிச்சைக் குருக்கள். யாராவது சிலர், 'எல்லாம் அய்யிரு ஊட்டுக்குப் போகுது?' என்று எரிச்சலுடன் அரை ஆழாக்கு எண்ணெயை அவரது அழுக்கு வடியும் அலுமினியத் தூக்கில் ஊற்றினால் அர்த்தநாரீஸ்வரர் மாலை வேலைகளில் புன்னகை பாலிப்பது கொஞ்ச நேரத்துக்காவது தெரியும்.
பிச்சை குருக்கள் பிச்சைக்காரக் கடவுளை ரொம்ப வேண்டிக் கொள்வார். தனக்காகவும் ஸ்வாமிக்காகவும்.
கோவிலில் சாமியின் தலையில் தண்ணீரை மொண்டு மொண்டு ஊற்றி அபிஷேகம் செய்துவிட்டு, துடைப்பதற்கு மாற்று வஸ்திரம் இல்லாததால், கழற்றிய பழைய வஸ்திரத்திலேயே சுவாமியைத் துடைத்து அதையே கட்டி விடும்போது தாயுமான ஸ்வாமி பாடல் ஒன்றை மாமூலாகப் பாடுவார்.
இல்லை உண்டு என்று எவர் பக்கமாயினும்
சொல்லவோ அறியாத தொழும்பன்யான்
செல்ல வேறொரு திக்கு அறியேன் எல்லாம்
வல்ல நீ என்னை வாழ்விக்க வேண்டுமே.
எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே.
என்று வரும் பாடலில், 'செல்ல வேறொரு திக்கு அறியேன்' என்று வரும் அடியைப் பாடும்போது அவருக்குத் தொண்டை கரகரத்துவிடும்.
குருக்களுக்குச் செல்வதற்கு எந்தத் திக்கும் கிடையாது. வறுமைக் கோட்டுக்குக் கீழே சுமார் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் அவர் புதைந்து கிடந்தார்.
......சமீபத்திய வரலாறில் பிச்சை குருக்களுக்கு ஓர் அதிருஷ்டம் அடித்தது. பஞ்சாயத்து எலெக்ஷன்போது அந்த ஊரில் பிரபல சுயேச்சை வேட்பாளர் அவர் கையில் பத்து ரூபாய் வைத்து அழுத்தி 'யோவ் அய்யிரு! ரேடியோவை மறந்துடாதே. ஆமாம், உங்க சாமிகிட்டயும் சொல்லி வை' என்று சொல்லிவிட்டு (மிரட்டிவிட்டு)ப் போனார்.
'அர்த்தநாரீஸ்வரா... அடிக்கடி பஞ்சாயத்துத் தேர்தல் வரக்கூடாதா' என்று பிச்சை