Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marumagal Rajyathil...
Marumagal Rajyathil...
Marumagal Rajyathil...
Ebook134 pages1 hour

Marumagal Rajyathil...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580112304448
Marumagal Rajyathil...

Read more from Bakkiyam Ramasamy

Related authors

Related to Marumagal Rajyathil...

Related ebooks

Related categories

Reviews for Marumagal Rajyathil...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marumagal Rajyathil... - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    மருமகள் ராஜ்ஜியத்தில்...

    Marumagal Rajyathil…

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    (1994'ல் 'வாசுகி' இதழில் வெளிவந்த நகைச்சுவைத் தொடர்கதை)

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    அம்மாகிட்டே போய்ட்டு வர்றோம்னு சொல்லிக் கொண்டாயா? இந்த வீட்டிலே அம்மாதான் தெய்வம்.

    இதோ போய்ச் சொல்லிக்கொண்டு வந்துடறேன். அம்மா பம்ப் அடிச்சிட்டிருக்காங்க போலிருக்கு.

    கெடுத்தியே காரியத்தை! ஓடு ஓடு ஓடு.

    பாபுவும், இந்திராவும் புறக்கடைக்கு விரைந்தனர்.

    இந்திரா ஓடிவந்து மாமியாரின் கைலிருந்த தண்ணீர் வாளியைத் தான் வாங்கிக் கொண்டாள். நான் கொண்டு வர்றேம்மா.

    பாபு, ஏம்மா, நான் எதுக்குத்தான் இருக்கேன்? மீதி நாளிலேதான் ஒத்தாசை பண்ண முடியலை. ஞாயித்துக்கிழமை ஒரு நாளாவது நான் உதவக் கூடாதா? என்று அம்மாவை விலகச் சொல்லி குழாயை அடித்தான். அது முற்றிய அஜீரணக்காரன் மாதிரி ஒலி எழுப்பிக் கொண்டு தண்ணீர் சிந்த ஆரம்பித்தது.

    ஏம்மா இதை சமையல் உள்ளுக்குக் கொண்டு போய்க் கொட்டணுமா? புழக்கடையிலே கையலம்புகிற தொட்டியிலா?

    இந்திரா, மாமியாரிடம் வலது கையில் வாளித் தண்ணீரைத் தூக்கியவாறு இடது கையால் புடவை நுனியைச் சற்றுத் தூக்கித் தன் சந்தன நிற இடுப்பில் செருகிக்கொண்டு –

    அரைத்தொப்புள் கண் சிமிட்டுகிற மாதிரி தெரிந்தது. 'எப்படி இவ்வளவு கச்சிதமாகப் புடவையை அங்கே நிறுத்த முடிகிறது?' மருமகளின் அழகும், நாகரிகமும் அன்னபூர்ணிக்கு ரொம்பப் பிடித்திருந்தது. 'மருமகள் நல்ல சிவப்பு நிறம். மத்தியான வெயிலின் உறைப்பில் பசலைக்கீரை மாதிரி துவளுகிறாளே, கையில் வாளியுடன்' என்று நெகிழ்ந்து நீ ஏம்மா டிரெஸ்ஸெல்லாம் கசக்கிக் கொண்டு? ஒரே ஒரு பக்கெட் தண்ணீர்தான் அடித்தேன். அதுவும் நீங்கள்ளாம் புறப்பட்டாச்சேன்னு நினைத்து... ஏண்டா பாபு இத்தனை அமர்க்களப்படுத்தறே? நான் வேணுமானால் உங்க அப்பா வந்தால் அடிச்சுத் தரச் சொல்லிக்கிறேன். உங்களுக்கு நேரமாகலையா?

    பாபு அலுத்துக் கொண்டான். என்னவோ ஒரு கண்றாவிப் படம். இவளுக்கும் இஷ்டமில்லை. எனக்கும் இஷ்டமில்லை. அந்த ஆசிரியர் இருக்காரே அது ஒரு கிராக்.

    எந்த ஆசிரியரைச் சொல்றே?

    விண்மீன்தான்.

    பாபு, கல்யாணம் ஆன புதுசு. நீதான் இன்னும் இரண்டு மாசத்துக்குச் சினிமாவுக்கெல்லாம் போக வேண்டும். மனைவியோடு போ. சினிமா பார்த்த சந்தோஷமும் ஏற்படும். விமர்சனம் எழுதப் பழகின மாதிரியும் இருக்கும் என்று தலையிலே ரெண்டு டிக்கெட்டைக் கட்டிட்டார்.

    உன்னைக் கூட்டிட்டுப் போலாம்னா உன்னால் நடக்க முடியாது. மூட்டுவலி. அப்பாவைத் தள்ளிகிட்டுப் போகலாம்னா, அவர் மிருதங்க ரிப்பேருக்காகக் காலையிலே போனவர் இன்னும் காணோம்.

    மிருதங்கத்துக்கும் வயசாயிற்று. அவருக்கும் ஆச்சு. ஆனால் விட்டுத் தொலைக்க மாட்டேங்கறார். சரி சரி நீங்க புறப்படுங்க. ஆரம்பிச்சுடப் போறான்.

    ஆமாமாம், பெரிய காவியம். போற கண்றாவி கொஞ்சம் போனாத்தான் போகட்டுமே... என்னத்தைக் கதை, என்னத்தை நடிப்பு. திருப்பித் திருப்பி அடி தடி பாட்டு. தமிழ் சினிமா ரொம்ப முன்னேறணும்.

    நீ முதலிலே முன்னேறு. புறப்படுங்க...

    இந்திரா வாளியை வைக்க பாபு மறுபடி அடுத்த வாளிக்கான தண்ணீரை அடிக்கத் தொடங்கினான்.

    சொன்னாக் கேட்கணும். ரெண்டு பேரும் டிரெஸ் பண்ணிட்டுக் கிளம்பியாச்சு. எல்லாத்தையும் கசக்கிக் கொண்டு... ஏண்டா பாபு இப்படி அமர்க்களம் பண்றே? இந்து, நீயானும் என் சொல்படி கேளடியம்மா.

    சினிமாவுக்கு நான் போலேம்மா. உள்ளே போய் டிரெஸ்ஸை அவிழ்த்து வெச்சுடறேன், ராத்திரிக்கு அப்பாவும் நீங்களும் பலகாரம்தானே? அரிசி உப்புமாவுக்கு அரிசியை உடைச்சுடறேன்.

    சொன்னாக் கேளும்மா... என்றாள் அன்னபூர்ணி. அவசரமாக நீ வந்துகூட டிபன் பண்ணிக்கலாம். ராத்திரி பலகாரத்துக்கு இப்பவே என்ன அவசரம். புறப்பட்டுப் போம்மா. ஆசையா அவனும் கூப்பிடறான்.

    அம்மா! அம்மா! நீ தப்பாச் சொல்றே! நான் ஒண்ணும் ஆசையாக் கூப்பிடலை. துன்பத்தைப் பகிர்ந்து கொள்றதுக்கு ஆள் வேணுமேன்னு கூப்பிட்டேன். அவள் வரலைன்னா உனக்கு ஹெல்ப்ஃபுல்லா இங்கேயே இருக்கட்டும். நான் மட்டும் போயிட்டு வர்றேன். கடமையாச்சே.

    ரொம்ப லட்சணம்டா. என் கண்ணே பட்டுடுத்து போலிருக்கு. சரி சரி, கிளம்புங்க முன்னே. அப்புறம் நான் கோவிச்சுப்பேன். இந்திரா, சமத்தோல்லியோ, கிளம்பு.

    சரிம்மா... சீக்கிரமாவே வந்துடறோம்.

    படம் போரடிச்சால் உடனே வந்துடுவோம்.

    அப்புறம் விமர்சனம் எப்படி, எழுதுவே?

    மற்றப் பத்திரிகைங்களிலே வந்திருக்கிறதை வெச்சு எழுதிட்டாப் போவுது.

    அதெல்லாம் தப்பு. ஆசிரியர் உன்கிட்டே பிரியமா ஒப்படைச்ச வேலையை ஒழுங்காச் செய்யணும்.

    முதலிலே சினிமா ஒழுங்காக்கும்? என்ன இந்து நாம புறப்படலாமா?

    என்னவோ காட்டுக்குப் போறாப்பல கசந்துக்கறியே சந்தோஷமாப் போடா...

    போயிட்டு வர்றோம்மா. நான் வந்து உங்களுக்கும் அப்பாவுக்கும் பலகாரம் பண்றேன்.

    சரிம்மா... முடிஞ்சா வர்றப்போ எங்கயானும் பார்த்தா ஃப்ரெஷ்ஷா இருந்தால் கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் ஒரு ரூபாய்க்கு வாங்கிண்டு வா. முடிஞ்சால்.

    வாங்கிட்டு வர்றேம்மா... ஏதாவது காய் நல்லாயிருந்தாலும் வாங்கிட்டு வரட்டுமா?

    அதெல்லாம் காய்க்காரியே நாளைக்கு வருவாள். இது ராத்திரி உப்புமாவுக்காக.

    சரிம்மா போய்ட்டு வர்றோம்.

    அம்மா, கதவைப் பத்திரமாத் தாழ்ப்பாள் போட்டுக்கோ. கண்ட கழுதைங்க வந்து கதவைத் தட்டினாப் பூராக் கதவும் திறக்காதே.

    உங்கப்பாதான் வரணும், வேறு யார் வரப்போறா!

    ஊர்லே பட்டப்பகலிலே தைரியமா வீட்டிலே புகுந்து கொள்ளை அடிக்கிறானுங்க மடப்பசங்க. உன்னைத் தனியா விட்டுட்டுப் போறதுக்கே இஷ்டமில்லே.

    சரிடா! என்னை எந்தக் காக்காயும் தூக்கிட்டுப் போயிடாது புறப்படுங்கோ.

    அவர்கள் போனதும் கதவைத் தாழிட்ட அன்னபூர்ணியால் தாள முடியவில்லை.

    அவள் கண்ணிலிருந்து நீர் கொட்டியது. முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

    அது ஆனந்த அழுகை. அவளுக்கு ரத்த அழுத்த வியாதி உண்டு. உணர்ச்சிவயப்பட்டால் துக்கமோ, சந்தோஷமோ எது எற்பட்டாலும் அழுகை வந்து விடும்.

    தேடித் தேடிக் கடைசியில் நல்ல மருமகளாக அவளால் பிடிக்க முடிந்ததே. மருமகளுக்கு எவ்வளவு பொறுப்பு. அழகுக்கு அழகு. குணத்துக்கு குணம், குடும்பப் பாங்கு. பெரியவர்களை மதிக்கிற குணம். இன்னொண்ணாயிருந்தால், பலகாரமா அதுவென்ன காரம்னு கேட்கும். பேச்சோடு பேச்சாக எப்பவோ சொன்னது சனிக்கிழமையில் நானும் அவரும் பலகாரம்னு.

    ஞாபகம் வெச்சுட்டுக் கரெக்டாக் கேட்டுட்டாளே, 'அம்மா. பலகாரமா உங்களுக்கும் அப்பாவுக்கும்?'னு வந்து தானே செய்யறதாகவும் குழந்தை சொல்லிவிட்டுப் போகிறதுன்னா மனசுலே அதற்கு எவ்வளவு பாசம். அசல் வீட்டுப்

    Enjoying the preview?
    Page 1 of 1