Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naanaa Ponathum Thaanaa Vandhathum
Naanaa Ponathum Thaanaa Vandhathum
Naanaa Ponathum Thaanaa Vandhathum
Ebook166 pages53 minutes

Naanaa Ponathum Thaanaa Vandhathum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303447
Naanaa Ponathum Thaanaa Vandhathum

Read more from Bakkiyam Ramasamy

Related to Naanaa Ponathum Thaanaa Vandhathum

Related ebooks

Related categories

Reviews for Naanaa Ponathum Thaanaa Vandhathum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naanaa Ponathum Thaanaa Vandhathum - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    நானா போனதும் தானா வந்ததும்

    Naanaa Ponathum Thaanaa Vandhathum

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஈரமெத்தை

    2. சிமெண்ட் பிழைத்தது!

    3. மூக்கு போச்சே!

    4. போடு கையெழுத்து!

    5. கரடி மந்திரம்!

    6. புது வகை திராட்சை!

    7. ராசியில்லாத தயிர் வடை!

    8. நம்ம சாவித்திரி அப்படிச் செய்யமாட்டாள்!

    9. வாடகை தராத பாம்புகள்!

    10. பட்டம் பறக்க விடுவது எப்படி?

    11. ப்ரூஃப் படித்த பூனை!

    12. பிடி சாபம்! பிச்சைக்காரனாகக் கடவது!

    13. கிராப்பைக் கலைக்க இருநூறு ரூபாயா?

    14. நீங்கள் செடியாபிமானியா?

    15. பாம்பு கற்ற பாடம்!

    16. எதையும் வீணாக்காதவர்!

    17.வாரிச வாய்வு!

    18. ப்ளஸ்ஸா, மைனஸா?

    19. ஸடன் சந்திப்புகள்!

    20. அல்வா கடத்தல்!

    21. என்ன பேரு வைக்கலாம், எப்படி அழைக்கலாம்?

    22. இங்கே 'ச்' கிடையாது!

    23.சில்லரை என்பது சில்லரை அல்ல!

    23. இவ்விடம் காதல் கடிதம் எழுதித் தரப்படும்!

    24. இன்ஸ்பெக்க்ஷன் புக்!

    25. கிராப் அமைவதெல்லாம்...

    26. எடிட்டர் பராக்!

    27. மொய் மார்க்கெட்!

    28. சொந்தப் பதிப்பகம்!

    29. ஸ்டிரிக்ட்லி ஃபார் அடல்ட்ஸ் ஒன்லி!

    30. வீட்டாண்ட வாங்க சாமி!

    31. தொட்டால் தெரியும் சேதி!

    32. முன் ஜாக்கிரதை!

    33. தூங்காத கண் என்ன கண்ணே!

    34. ஆபீசில் தேங்காய்!

    35. தூங்கினார் கெடுவதில்லை!

    36. உயரத்தின் துயரம்!

    37. மூன்று பேர்!

    என்னுரை

    எனது நகைச்சுவைக்கு இடமளித்து எனக்கு நல்லாதரவு காட்டி வரும் 'தினமலர்' வாரமலருக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.

    நகைச்சுவை என்பதை நவீன தமிழகத்துக்கு அறிமுகம் செய்துவைத்த பேராசிரியர் கல்கி அவர்களின் எழுத்துக்கு இன்றளவும் அடிமையாயிருக்கும் லட்சோப லட்சம் வாசகர்களில் ஒருத்தனாக இருந்து வந்துள்ளேன். என் ஜென்மம் புனிதமடைந்தது இன்று. திரு. கல்கி அவர்களின் வாரிசு எனது கட்டுரைத் தொகுப்புக்கு அற்புதமானதொரு முன்னுரை தந்துள்ளார்கள். அந்தக் காலத்துத் தமிழ்ப் பண்ணை வெளியீடான கல்கி அவர்களின் 'ஓ மாம்பழமே' யில் ஊறிய எனது நகைச்சுவை உணர்வுக்கு ஒரு மகுடம் சூட்டி விட்டார் இளைய கல்கியார். அவருக்கு எனது நன்றி.

    குழந்தை எழுத்தாளராக நான் இருந்த அந்தக் காலத்திலிருந்து தாத்தா எழுத்தாளராக மாறியுள்ள இந்தக் காலம்வரை என் நகைச்சுவையை ரசிக்கும் பதிப்பகப் பெரியவர் திரு. வானதி திருநாவுக்கரசு அய்யா அவர் களுக்கு எனது விசேஷ மரியாதையைப் பிரியத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்னுடைய நகைச்சுவைக் கதைகளுக்கு சவரன் இந்த விலை விற்கிறபோது ஏராளமான நகைகளை மாட்டி Showroom-ல் வைத்து வாசகர்களை எல்லாம் டாக்டர் சுந்தர் எனக்காக கவருவதற்கு முயற்சி செய்திருக்கிறார் உண்மையில் அவை கவரிங் நகையா அல்லது அசல் நகையா என்பது உங்கள் தீர்ப்பில்தான் இருக்கிறது.

    என்னுடைய நன்றியினை டாக்டர் சுந்தர் அவர்களுக்கு எவ்வளவு தெரிவித்தாலும் தகும். அவர் எனக்குக் கொடுத்துள்ள டானிக்கும் ஏற்றியுள்ள Drips-ம் இன்னும் பல வருடங்களுக்கு நான் குதூகலமும் குறும்பும் கொப்பளிக்க எழுதுவேன் என்ற நம்பிக்கையை ஊட்டு கிறது. மீண்டும் அவருக்கு நன்றி.

    கட்டுரைகளுக்கு நகைச்சுவை மிளிரும் சித்திரங்களை வரைந்த ஓவியர் திரு. சேகருக்கு நன்றி உரித்தாகுக.

    நானா போனதும் தானா வந்ததும்

    நகைச்சுவைக்கு ஓர் இயல்பு உண்டு. அது, தானாகவும் வரும், நாமாகவும் தேடிச் செல்வோம். தன்னுடைய பத்திரிகைத் துறை வாழ்க்கையில் நேர்ந்த, சில சுவையான விஷயங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், 'குமுதம்' இதழின் ஆசிரியர் குழுவில் நீண்ட நெடுங்காலம் பணியாற்றிய பாக்கியம் ராமசாமி.

    1. ஈரமெத்தை

    நான் ஒரு குடியிருப்பில் வசித்த போது, எதிர் வீட்டுக்காரர், ஈவு இரக்கமில்லாமல் தங்கள் வீட்டு ஈர மெத்தையைப் படிக்கட்டு பக்கவாட்டுச் சுவரில் தினமும் உலர்த்தி விடுவார்.

    வெயிலில் காய வைத்தால் சாயம் போய்விடும் என்று மெத்தையைப் படிக்கட்டு ஓரமாகவே போட்டிருப்பார்.

    மெத்தையிலிருந்து வடியும் தண்ணீர், படிக்கட்டில் விழுந்து, ஏறுகிறவர்களையும், இறங்குகிறவர்களையும் சறுக்கிவிட்டு விழச் செய்யும் அபாயம் எல்லாரையும் நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.

    ஆனால், அந்த நடுக்கத்தைக் காட்டிலும், அந்தக் குடித்தனக்காரரிடம் பேசுவதற்கு அதிகமான நடுக்கம். அவர் ஒரு முரடர்.

    நான்தான் அதிகம் பாதிக்கப்பட்டவன். ஏனெனில், படுக்கையிலிருந்து சொட்டும் தண்ணீர், படி வழியே இறங்கி, என் வீட்டுக்குள் வந்து எட்டிப் பார்க்கும்.

    எதிர்வீட்டில் இருந்த அந்த முரடரின் தகப்பனாருக்கு, 'ஹார்ட் அட்டாக்' வந்தது; ஒரு நர்சிங்ஹோமில் அட்மிட் ஆகியிருந்தார்.

    ஈர மெத்தையை எதிர்வீட்டுக்காரர் வழக்கம்போல் உலர்த்திக் கொண்டிருந்தபோது, நான் அவரிடம் துக்கமான குரலில், 'என்னவோ, நீங்க கொடுத்து வைச்சது அவ்வளவு தான்...!' என்றேன்.

    எதிர்வீட்டுக்காரர் அதிர்ச்சியடைந்து 'என்ன சொல்றீங்க?' என்றார்.

    நான் வருத்தத்துடன், 'என்ன செய்வது... நீங்க வெகு நன்றாக சிரத்தையாகத்தான் செலவழித்துப் பார்த்துக் கொண்டீர்கள். ஆனால், ஆயுசு எவ்வளவு என்று ஆண்டவன் போட்டிருக்கிறானோ, அவ்வளவு காலம் தானே இருக்க முடியும்...' என்றேன்.

    எதிர்வீட்டுக்காரர் குழம்பிப் போய், 'என்ன சொல்றீங்க?' என்றார்.

    'உங்க அப்பா எத்தனை மணிக்கு காலமானார்? அவர் இறந்தபோது, மருத்துவமனையில் கூட இருந்தீர்களா? பாடி இங்கு வரவில்லையா?' என்றேன்.

    எதிர்வீட்டுக்காரர் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, 'சார்... எங்க அப்பா உயிரோடுதானே இருக்கிறார், என்னென்னவோ உளறுகிறீர்களே...' என்றார் கோபமாக.

    'சாரி.. நான் தப்பாக நினைத்து விட்டேன். மெத்தையையெல்லாம், நனைத்து உலர்த்தினால், அதில் படுத்திருந்தவர் இறந்து விட்டார் என்று தான் அர்த்தம். சில பேர் அந்த மாதிரி மெத்தையைக் குப்பைத் தொட்டியிலேயே போட்டு விடுவர். சிலர், நனைத்து உலர்த்தி உபயோகப்படுத்தி விடுவர். அதனால்தான் கேட்டேன்...' என்றேன்.

    மறுதினம் முதல், எதிர்வீட்டுக்காரர் ஈர மெத்தையைப் படிக்கட்டில் உலர்த்துவதை நிறுத்திவிட்டார். மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று யாருக்கும் தொந்தரவு இல்லாத முறையில் உலர வைத்துக் கொண்டார்.

    தினமும் அவர் வீட்டு மெத்தை ஈரமாவதற்குக் காரணம், அவரது ஏழு வயது பையன் தான்.

    2. சிமெண்ட் பிழைத்தது!

    ஒரு சமூக சேவை கிளப்பில் பேசுவதற்குச் சென்றிருந்தேன். கிளப் காரியதரிசி கவலையோடு காணப்பட்டார். கூட்டம் நடந்த ஹாலுக்கு இரண்டு வழிகள் இருந்தன. நுழைவதற்கு ஒரு வழியும், திரும்பிச் செல்வதற்கு ஒரு வழியுமாக.

    காரியதரிசியைக் கேட்டேன். 'ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்?'

    'கூட்டம் முடியும்போது என்ன ஆகுமோ என்று கவலையாயிருக்கிறது...' என்றார்.

    "ஏன்... என்ன பிரச்னை?' என்று கேட்டேன்.

    வெளியே போகும் வழியைச் சுட்டிக் காட்டினார் காரியதரிசி.

    நான் அதிர்ச்சியுடன், 'என்னை வெளியே போகச் சொல்கிறீர்களா?' என்றேன்.

    காரியதரிசி பதற்றத்துடன், 'அய்யோ... நான் அப்படிச் சொல்லவில்லை. வெளியே செல்லும் வழி சற்று நேரத்தில் ரணகளம் ஆகப் போகிறது. இரண்டு மூட்டை சிமெண்ட் வாங்கிப் போடப்பட்ட தரையெல்லாம் மிதி பட்டு வீணாகப் போகிறது. அந்த வாசல் வழியே செல்ல வேண்டாம். இப்போதுதான் சிமெண்ட் போட்டிருக்கிறது...' என்று சொன்னாலும் அந்தப் பக்கம் போகிறவர்கள் மிதித்தவாறே போய்க் கொண்டுதான் இருக்கின்றனர். நம்ம ஆளுகளுக்கு பொறுப்புணர்ச்சியே கிடையாது...' என்று அங்கலாய்த்தார்.

    நான் ஒரு யோசனை சொன்னேன். அன்று நடந்த கூட்டம். ரத்ததானம் பற்றியது. "ஒரு அட்டையில் நான் சொல்கிறபடி எழுதி வெளியே செல்லும் வழியில் மாட்டி விடுங்கள்...' என்றேன்.

    'என்ன எழுதுவது?' காரியதரிசி கேட்டார்.

    நான் சொன்னேன்... 'ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள், தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள இந்த வழி செல்லவும்...' என்பதே அட்டையில் எழுதப்பட வேண்டிய வாக்கியம்.

    Enjoying the preview?
    Page 1 of 1