Seethobadesam
()
About this ebook
Read more from Bakkiyam Ramasamy
Marumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsMamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Come on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Africa Azhagiyum Rating: 5 out of 5 stars5/5Appusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal Rating: 5 out of 5 stars5/5Appusamy Padam Edukkirar Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratings'Ink'eetham Therinthavara Neegal? Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsOffice Payanin Antharanga Report Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAppusamikkul Kuppusami Rating: 0 out of 5 stars0 ratingsEnnakinaru! Rating: 0 out of 5 stars0 ratingsAayirathoru Appusamy Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyum Bharathi Naarkaaliyum Rating: 0 out of 5 stars0 ratingsPaper Padikkum Erumbu Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsSinthikkiraar Pragaspathi Rating: 0 out of 5 stars0 ratingsAugust Thiyagi Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAadhaar Attaiyum Appusamiyum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Seethobadesam
Related ebooks
Vithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Kavithavin Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Koondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsSirungaara Naatham Rating: 0 out of 5 stars0 ratingsNee En Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsManakadhavai Thiranthu Vidu Rating: 5 out of 5 stars5/5Velicha Poove Vaa… Rating: 0 out of 5 stars0 ratingsOlindhirukkiren Rating: 0 out of 5 stars0 ratingsIlamai Kaatru Rating: 5 out of 5 stars5/5Kumari Penne! Kuyilaale! Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Sivasamiyin Sabatham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Kangal Rating: 5 out of 5 stars5/5Devathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5சீதைக்கு ராமன் சித்தப்பா Rating: 0 out of 5 stars0 ratingsNinaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Thodarum... Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum, Velicham Varum Rating: 0 out of 5 stars0 ratingsAaram Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsVanakkathukkuriya Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyai Thediya Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsUyir Nee..! Udal Naan..! Rating: 0 out of 5 stars0 ratingsManthira Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsUyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Pothum Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Seethobadesam
0 ratings0 reviews
Book preview
Seethobadesam - Bakkiyam Ramasamy
http://www.pustaka.co.in
சீதோபதேசம்
Seethobadesam
Author:
பாக்கியம் ராமசாமி
Bakkiyam Ramasamy
For more books
http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
1
பா.மு.கவில் (பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தில்) சில கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் சில வாரங்களாகக் கழகக் கூட்டம் பிரசிடெண்ட் சீதாப் பாட்டியின் வீட்டு மாடியில்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
உறுப்பினர்களுக்கு காபி, டிபன், அவ்வப்பொழுது ஸ்னாக்ஸ், இரவு டின்னர் ஆகியவை தயாரிக்கும் பொறுப்பை ஒரு பிரபல கேடரர் ஏற்றுக்கொண்டிருந்தார்.
அப்புசாமியின் அறையும் மாடியிலேயே இருந்ததால் அவரால் விதவிதமான வாசனை பிடிக்க முடிந்தது. வெளிச்சத்துக்கு வந்த பெருச்சாளி மாதிரி பம்முவதும் பாதி தெரிவதும் பாதி ஒளிவதுமாக இப்படியும் அப்படியும் அவர் நடை பயின்று கொண்டிருந்தார்.
கேடரிங் ஆசாமியிடம் என்னண்ணா, சாயந்தரம் என்ன டிபன்?
என்று விசாரிப்பார். நான் வேணும்னா பஜ்ஜிக்கு வாழைக்காய் சீவித் தரட்டுமா?
என்று உள் நோக்கத்துடன் உதவிக்கரம் நீட்டுவார்.
இரண்டொரு வாழைக்காயை அவருக்கு ட்ரையல் ரன்னாக கேடரிங் அண்ணா கொடுத்துப் பார்த்தார்.
கோணல் மாணலாகவும் மெல்லிசாகவும் தடிமனாகவும் அவர் சீவியதால் நீட்டிய உதவிக் கரத்தை மடக்கிக் கொள்ள கேடரிங் சொல்லிவிட்டது.
இன்றைய ஸ்பெஷல் என்னவாயிருக்கும் என்று மாலை நேர சிந்தனையில் தனக்குத் தானே ஒரு க்விஸ் மாஸ்டராகவும் விடை சொல்கிறவராகவும் மாடியில் அவர் நடை பயின்று கொண்டிருந்த அதே நேரத்தில் சீதாப்பாட்டியும் கீழே தனது ஸ்டடியில் இன்றைய ஸ்பெஷல் என்ன என்பதை யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் யோசித்த அயிட்டங்கள், அப்புசாமி யோசித்துக் கொண்டிருந்ததிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தன.
இன்றைய ஸ்பெஷல் - கீதையா, குறளா, திவ்யப்ரபந்தமா, திருவாசகமா, திருவருட்பாவா, நாராயணீயமா, பைபிளா, குரானா...
சாதாரணமாக ஸிட்டியில் ஓரொரு வருடம் நடைபெறும் புத்தகக் கண்காட்சி முடிந்ததும், சீதாப்பாட்டியின் படுக்கை அறைப் புத்தக அலமாரி பிதுங்கி வழியும்.
இந்தத் தடவை காற்றாட இருந்த காரணம் மாமூலான ஃபிக்ஷன்கள், ஸெல்ஃப் இம்ப்ரூவ்மெண்ட்புத்தகங்கள், ஆட்டோ பயாக்ரபிகள் எல்லாவற்றையும் மேலே அப்புசாமியின் அறைக்கு பேக் செய்து அனுப்பி விட்டு ஸெலக்டட் ஆக சில அலமாரிகளை மட்டும் தன் ஸ்டடியில் வைத்துக் கொண்டிருந்தாள்.
தாயுமானவரா, மாணிக்கவாசகரா, ஆழ்வாரா, அபிராமிபட்டரா, பாரதியாரா, ராமாயணமா, மகா பாரதமா, பாகவதமா, பகவத்கீதையா, உபநிஷத்துக்களா....
இந்த மாதிரி நூல்களே சீதாப்பாட்டியின் ஸ்டடியில் காணப்பட்டன.
அவளுடைய மேஜைக்கு மேல் பிரத்தியேக விளக்குகள் போடப்பட்டிருந்தன.
படுத்துக்கொண்டு, உட்கார்ந்துகொண்டு பாதி படுத்து மீதிஉட்கார்ந்துகொண்டு, நடந்துகொண்டு, அவள் "எந்த' கொண்டுவில் இருந்துகொண்டிருந்தாலும் பளீர் என்று படிக்க வசதியாக ஸ்பெஷல் லைட்டிங் ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள்.
அது தவிர, மேஜை மீது புத்தக அடுக்கின் அருகே வயசாளிகள் படிப்பதற்கு வசதியான பிரத்தியேகக் கண்ணாடியும் இருந்தது
சீதே! இன்னிக்கென்ன ஸ்பெஷல்?
என்று அப்பு சாமி கேட்டவாறு சோபாவில் உட்கார்ந்து கொண்டார். கேடரிங் ரமேஷ் கண்ணிலேயே படலை. என்னாச்சு இன்னிக்கு?
சீதாப்பாட்டி தடிமனான திருவாசக உரையைக் கீழே வைத்துவிட்டு இன்றைக்கு ஸ்பெஷல் விருந்து!
என்றாள்.
அட்றா அட்றா நாக்கு மூக்கு! நாக்கு மூக்கு!
என்று அப்புசாமி தனது நாக்கையும் மூக்கையும் உற்சாகப்படுத்தி ஒரு குட்டி டான்ஸ் ஆடிவிட்டு, ஸ்வீட்டு போளிபோடச் சொல்லேன். சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. கிழவிகளுக்கும் சாப்பிட மிருதுவாகத் தோதாக இருக்கும். போளியையும் பரிமாறி, அதன் தலையிலே முறுகலா நெய்யைக் காய்ச்சி சொய்ங்குனு ஊற்றினால் சுகமோ சுகம்! கேடரர் ரமேஷ் வந்தால் நானே சொல்லிடட்டுமா?
சீதாப்பாட்டி கையிலிருந்த தடிமனான புத்தகத்தைக் காட்டி அவரிடம், இதைக் கொஞ்சம் அட்லீஸ்ட்முகர்ந்தாவது பாருங்க. இன்னிக்கு விருந்து திருவாசக விருந்து! அட அட! கொல்றார் பாருங்க. கோத்தும்பியை வைத்துப் பாடறார். மை டியர் தும்பி! நீ அலைந்து அலைந்து தினைத்தனை பூவில் சென்று தேன் உண்ணும் சிரமத்தை ஏன் படறே?
...
புரிகிறது புரிகிறது?
என்றார் அப்புசாமி உற்சாகமாக. அவள்கிட்டேயும் இவள்கிட்டேயும் போய் சில்லறை கேட்டுப் பல் இளிக்காதேடா அப்பு! நேராகச் சென்று ஒருத்திகிட்டே வந்து பல்லை இளித்தால் அவளே நோட்டு நோட்டாக கொடுத்துடுவாள் என்கிறே. ஹிஹி! ஆமாம், கோத்தும்பின்னா?
கோத்தும்பிக்குச் சரியான டெஃபனிஷன் சொல்லணும்னா, ஐ மீன் ஐ மீன்
சீதாப்பாட்டி. சற்று யோசித்தாள். மானார்க் பட்டர்ஃப்ளைன்னு சொல்லலாம். அது ஒரு வகை ராஜ பட்டாம்பூச்சி யு நோ. கனடாவி லிருந்து கீழே மெக்ஸிகோ வரையிலும், அது நான்ஸ்டாப்பாகப் பறந்து வரக்கூடியது. நம்ம வேடந்தாங்கல் பேர்டு சாங்சுவரியில் சீசனுக்குப் பறவைகள் வந்து கூடுகிறதில்லையா... அது மாதிரி மெக்ஸிகோவிலே உலகப் பட்டாம்பூச்சிகள் பல திசைகளிலிருந்தும் வந்து ஒரே மரத்தில் பேஸ்ட் பண்ணின மாதிரி ஒட்டிக் கொண்டு ஒரு சீஸன் பூரா இருக்கும். கோத்தும்பிக்குமுதலிடம்!
நம்ம பாட்டுக்கார ஆசாமி அந்த ராஜ பட்டாம்பூச்சியை எங்கே போய்ப் பிடிச்சார்?
என்றார் அப்புசாமி.
தலைவரை வைத்துப் பாடறதுதான் கவிஞர்களுக்குச் சிறப்பு. இப்போ சப்போஸிங் நம்ம வீட்டுக்கே ஒரு புலவர் வரார்னு வைச்சுக்கோங்க. அவர் நம்மை வாழ்த்தி ஒரு பெரிய கவிதை பாடறார்னா என்னை வைத்துத்தான் பாடுவாரே தவிர உங்களை வைத்துப் பாடமாட்டார். 'அம்மா, நீங்க ரொம்ப கெட்டிக்காரர். அம்மா, நீங்க சிறந்த நிர்வாகி, அம்மா நீங்க ரொம்பக் கருணை உள்ளவர். அம்மா, நீங்க நல்லாப் பேசறவர். அம்மா, நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுகிறவர். அம்மா நீங்க அப்பழுக்கு மாசுமறு இல்லாதவர்...' என்று என்னைப் பத்தித்தானே பாடுவார். அண்டர் ஸ்டாண்ட்?
என்று புன்னகைத்தாள். "பை த வே உங்களுடைய ஸோல் சர்ச்சிங் கேள்விகளுக்கு பதில் சொல்லிடறேன். இல்லாட்டா நீங்க இங்கேயே ஹால்ட் பண்ணிக்கிட்டு இருப்பீங்க.
இன்னையிலிருந்து கேடரர் தன் மெஸ்ஸிலேயே எல்லா அயிட்டத்தையும் ப்ரிபேர் பண்ணிக்கொண்டு வந்துவிடுகிறாராம். ஏதோ வெஹிகிள் சத்தம் கேட்கிறது வாசல்ல. போய்ப் பாருங்கள்
என்றாள்.
அப்புசாமி வாசலுக்கு விரைந்ததும் சீதாப்பாட்டியின் ஸ்டடி ரூம் கதவு டமாரென்று சாத்தப்பட்டது.
வாசலில் கேடரரின் வண்டி ஏதும் வரவில்லை. தன்னை வெளியேற்றவே மனைவி அப்படிக் கூறியிருக்கிறாள் என்று அறியாமல் அப்புசாமி அப்பாவித்தனமாய்க் காத்திருந்தார்.
சீதாப்பாட்டி திடும் என்று ஏன் ஆன்மிகத்துக்கு மாறினாள் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா?
2
'எல்லாக் கிழவிகளும் சாயந்தரமானால் எங்கே தொலையறாங்க. நகரில் வேறு எந்த லேடீஸ் க்ளப்புக்காவது சேஞ்ஜோவர் ஆகிவிட்டார்களோ' என்று கவலைப்பட்டவாறு தன் கவலையை தலைவியிடம் சாவகாச மாகப் பங்கிட்டுக்கொள்ள சீதாப்பாட்டியின் வீட்டுக்குப் புறப்பட்ட காரியதரிசி அகல்யா சந்தானம், வழக்கமாகச் சந்திக்க வருமுன் டெலிபோன் செய்வதைப்போல் மொபைலை பிரஸ் செய்தாள்.
சீதாப்பாட்டி கிடைக்கவில்லை. 'நீங்கள் டயல் செய்யும் எண், ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து சற்று நேரம் கழித்து...' தான் கிடைத்தது.
இரவு ஒன்பது மணிக்கு சீதாப்பாட்டியே அகல்யா சந்தானத்தைக் கூப்பிட்டாள். ஸாரி அகல்யா. விட்டல் தாஸ் போயிருந்தேன். நீ வந்திருந்தாயானால் உன்னால் ரெஃப்ரைன் பண்ணிக்கொண்டிருக்கவே முடியாது. அம்மாடி! அந்த ஹ்யூஜ் கிரவுட் பூராவும் எழுந்து நின்று 'விட்டல் விட்டல்'ன்னு கையைத் தட்டிக்கொண்டு ஆடியது... ரியலி ஹார்ட் த்ராபிங். பிரமாதம்
என்றாள்.
அகல்யா