Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Office Payanin Antharanga Report
Office Payanin Antharanga Report
Office Payanin Antharanga Report
Ebook289 pages1 hour

Office Payanin Antharanga Report

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580112304637
Office Payanin Antharanga Report

Read more from Bakkiyam Ramasamy

Related to Office Payanin Antharanga Report

Related ebooks

Related categories

Reviews for Office Payanin Antharanga Report

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Office Payanin Antharanga Report - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    ஆபீஸ் பையனின் அந்தரங்க ரிப்போர்ட்

    Office Payanin Antharanga Report

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    (1998'ல் 'சாவி' இதழில் வெளிவந்த கட்டுகரை)

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    1

    குன்னக்குடி வைத்தியநாதன் போன் செய்து ஆசிரியரைப் பிடிக்கப் பார்த்தார்.

    ஆசிரியர் அப்போது அவரது அறையில் இல்லை. மத்தியானம் இரண்டு மணி சுமாருக்கு அவசரமாக எங்கோ புறப்பட்டுச் சென்றார்.

    நான்தான் போனை எடுத்தேன். என்னை உதவி ஆசிரியர் என்று வயலின்காரர் நினைத்து விட்டார் போலும்.

    சென்ற இதழில் வெளிவந்த புகைப்பட ஆல்பம் நன்றாயிருப்பதாக குன்னக்குடியார் சொல்லிவிட்டு பெரியவர் எப்போ வருவார்? என்று கேட்டார்.

    ஆசிரியரைத்தான் பெரியவர் என்று குறிப்பிட்டார் அவர். (இவர் ரொம்பச் சிறியவராக்கும். ஹிஹி!)

    ஆசிரியர் ஆர்.ஏ.புரத்தில் ஒரு சலூனில் கிராப் செய்து கொண்டு திரும்பினார். ஐந்து நிமிஷத்தில் முடித்து விட்டான். அவ்வளவு நேரம்தான் தர முடியும் என்றேன். அந்தக் குறுகிய நேரத்தில் கச்சிதமாக வெட்டி விட்டான். ஐம்பது ரூபாய்! என்று உதவி ஆசிரியரிடம் தன் நேரம் மிச்சமானதை மகிழ்ச்சியாகச் சொன்னது காதில் விழுந்தது.

    ஆஸ்தான ஓவியரான இளைஞர் இன்னொரு ஓவியரைக் கூட்டி வந்தார். வந்தவர் வேறு ஒரு பத்திரிகையில் (அது நின்று விட்டது) ஐந்து வருஷம் வேலை செய்தவராம். ஆசிரியர், ஒரு வாரம் பீஸ் ஒர்க்காக வேலை செய்யட்டும். திருப்தியாக இருந்தால் வைத்துக் கொள்ளலாம். என்றார்.

    வந்தவர் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்ற நினைப்பில் ஓவிய இலாகாவில் எட்டிப் பார்த்தால் அவரைக் காணோம்.

    பிரதம ஓவியரிடம், புது ஆர்ட்டிஸ்ட் எங்கே சார்? என்று கேட்டால், அவர் பீஸ் ஒர்க்கெல்லாம் பண்ணமாட்டேன்னு போய்விட்டார், என்று பதில் கிடைத்தது.

    ஆசிரிய இலாகாவில் இரண்டு உதவி ஆசிரியர்கள் வந்து ஒரே மாதிரியான கம்ப்ளெயிண்ட்டை ஆசிரியரிடம் கூறினார்கள்.

    முதுகுவலி!

    ‘பெண்டு கழற்றுறீங்க' என்பதை நயம்படச் சொல்கிறார்களாக்கும் என்று நினைத்தேன்.

    அசலாகவே அவர்களுக்கு முதுகு வலிக்கிறது என்று தெரிந்தது. புதிதாக, வாங்கிப் போட்ட விலையுயர்ந்த நாற்காலியில் முதுகு படிந்து உட்கார முடியவில்லையாம்.

    நாற்காலி நாகரிகமானதாகவும் விலை கூடுதலாகவும் இருக்கலாம். ஆனால் உட்காரச் செளகரியமில்லையே!

    மானேஜருக்கு ஆசிரியர் தகவல் கொடுக்க, பத்தாவது நிமிஷம் இரண்டு குஷன் திண்டுகள் உதவி ஆசிரியர்களின் நாற்காலிகளுக்குக் கிடைத்தன. முதுகுப் பக்கம் மெத்து மெத்தென்று சாய்ந்து கொள்ள இப்போது செளகரியமாயிருப்பதாக உதவி ஆசிரியர்கள் தெரிவித்தார்கள்.

    உதவி ஆசிரியர் ஒருவர் மத்தியானம் மோர் மட்டுமே சாப்பிடுகிறார். பிறகு ஃபுட்வோர்ல்ட் எள்ளுருண்டை!

    என்ன காம்பினேஷன்? எள்ளுருண்டையும், மோரும்! என் வயிற்றைக் கலக்குகிற மாதிரி இருந்தது. ஆனால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை.

    புரூஃப் ரீடருக்கு ஊரிலிருந்து ஏதோ தந்தி வந்தது. அவர் புறப்பட்டுப் போய் மூன்று நாளாகிறது.

    ஆசிரியர் தனது கேள்வி - பதில் பகுதி புரூஃபை ஒரு தடவைக்கு இரண்டு மூன்று தடவையாகப் படித்து போட்டோடைப் செட்டிங்குக்கு அனுப்பினார்.

    ஆபரணச் சிறப்பிதழுக்கு வந்த கட்டுரைகளைப் பிரித்து அடுக்கித் தரும் வேலை பெரிய வேலையாயிருந்தது எனக்கு.

    அச்சகத்திலிருந்து வந்த மூர்த்தியிடம் ஆசிரியர் கடுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். ஸ்கிரீன் மார்க் பண்ணாத இடத்திலே ஸ்கிரீன் ஏன் வந்தது?

    அச்சுக்காரர் மொணமொணவென்று வழக்கம் போல ஏதோ காரணம் சொன்னார்.

    ஆசிரியருக்கு வாங்கி வந்து வைத்த காப்பியை அவர் குடிக்க மறந்து விட்டார். ஆறிப்போன பிறகுதான் கவனித்தார். நீ சொல்றதில்லையா! என்றார் என்னிடம் கோபமாக.

    நீங்க ப்ரஸ் மூர்த்தியைச் சண்டை பிடிச்சுகிட்டிருந்தீங்க சார்... என்றேன்.

    சண்டை பிடிச்சால் அன்றைக்கு ஆறின காப்பி சாப்பிடணுமாக்கும்? என்றார் ஆசிரியர். எடுத்திட்டுப் போ இதை!

    வீணாக்குவானேன் என்று காப்பியை எடுத்துக் கொண்டுபோய் நானே குடித்து விட்டேன்.

    *****

    2

    ஆபரணச் சிறப்பிதழைத் தொடர்ந்து பொங்கல் சிறப்பிதழ் வந்து விட்டதால் எக்கச்சக்க வேலை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்தால்தான் பாரம் முடியும் என்று ஆசிரியர் சொல்கிறார். அதனால் வருகிற ஞாயிறு ஆபீஸ் கட்டாயம் உண்டு, என்றார் ஒரு உதவி ஆசிரியர்.

    பிரகஸ்பதியான இன்னொரு உதவி ஆசிரியர் அவர்கிட்டே சொன்னார்: இன்றைக்குத்தான் புதன்கிழமை. ஞாயிற்றுக் கிழமை ஆபீஸ் இருக்கும் என்கிற தகவலை ஏன் இன்னைக்கே சொல்கிறீர்? படுகிற கவலையைக் கொஞ்சம் லேட்டாகத்தான் படக்கூடாதா?

    'உதவி ஆசிரியர்கள் என்பவர்கள் எதையாவது தொலைப்பதற்கென்றே இருக்கிறார்கள்' என்பது என் தாழ்மையான கருத்து.

    ஓர் உதவி ஆசிரியர் ஒரு புரூஃபை எங்கோ வைத்து விட்டு கம்போசிங்கிலே கேளு, லே-அவுட்டிலே கேளு, புரூஃப் ரீடரைக் கேளு, என்று விதவிதமாக என்னை விரட்டினார். ஊஹூம் கிடைக்கவில்லை.

    திருத்தி முடிச்சு உன்கிட்டேதான் கொடுத்தேன். நல்லா ஞாபகமிருக்கு என்றார் கடைசியில்.

    சார், நேற்று பூரா நான் எடிட்டோரியல் ரூமுக்கே வரவில்லை சார், என்று நான் போட்டேன் ஒரு போடு.

    அப்படி வா வழிக்கு. ஒரு நாள் முழுவதும் இப்படி எட்டிப் பார்க்காமலிருந்திருக்கிறே? அதை உன் வாயாலேயே ஒப்புக்கொண்டு விட்டே. நீ வேலை செய்யறது ரொம்ப அழகுதான்! என்று உதவி ஆசிரியர் திருப்பிக் கொண்டு விட்டார். நாம தடுக்கிலே பாய்ந்தால் அவர் கோலத்திலே பாயறார்.

    ஒரு தாத்தா சார் ஆசிரியரைப் பார்க்க வந்திருந்தார். நாற்காலியில் ராஜா மாதிரி காலை மேலுக்குப் போட்டு உட்கார்ந்து உற்சாகமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்.

    எண்பது வயசுக்கு மேலிருக்கும். சிவப்பு நிறம். பொக்கை வாய், நெற்றியில் திருநீறு. வழுக்கைத் தலை. உதவி ஆசிரியர்களெல்லாம் அவரை மொய்க்கிற மாதிரி அருகில் நின்று அவர் பேசுகிறதை ஆசையாகக் கேட்டு கொண்டிருந்தார்கள்.

    நானும் ஏதோ மேஜையை ஒழுங்கு செய்கிறவன் மாதிரி அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். செம்பை வைத்தியநாத அய்யராமே. அவர் சிம்லாவுக்கு யார் வீட்டுக்கோ வந்து நடுநடுங்குகிற குளிரிலே எண்ணெய் தேய்த்துக் குளித்த அழகை விவரித்தார். எல்லோரும் சிரியோ சிரி.

    ஆசிரியர் என்னைப் பார்த்து, மேலே போய் அம்மாகிட்டே சொல்லி இரண்டு காப்பி ஸ்பெஷலாக வாங்கிக் கொண்டு வா என்றார்.

    மேலேதான் ஆசிரியரின் வீடு. வாங்கி வந்தேன். தாத்தா சார் காப்பி டம்ளரைப் பார்த்து விட்டு, இவ்வளவு பெரிய டம்ளர்களிலெல்லாம் இப்போ யாரும் காப்பி தர்ரதில்லை, என்று சொல்லிச் சிரித்தார். அடேங்கப்பா! எத்தனை டமாஸ் அவர் பேச்சிலே.

    நான் வெளியில் வந்து ஒரு உதவி ஆசிரியரிடம், அவரு யார் சார், ஆசிரியரிடம் பேசிக் கொண்டிக்கிறவர்? என்று கேட்டேன்.

    உதவி ஆசிரியர், அவரைத் தெரியாதா? அட மண்டு! அவர்தாண்டா இசை விமரிசனப் புலி சுப்புடு! என்றார்.

    பேட்டிக்குப் போயிருந்த நிருபரிடமிருந்து இரவு எட்டு மணி வரைக்கும் தகவல் இல்லை. மேட்டர் வரணுமே என்று உதவி ஆசிரியர்கள் கவலைப்பட்டனர்.

    ஆசிரியர் சொன்னார்: பதட்டப்பட வேண்டாம். எப்போ இவ்வளவு நேரமாயிட்டுதோ, அப்போ காரியத்தை முடித்து விட்டார் என்று அர்த்தம். கொஞ்ச நேரத்திலே பேட்டியை முடித்து எடுத்திட்டு வருவார் பாருங்கள் என்றார்.

    ஆசிரியர் சொல்லி முடித்தார். வாசலில் ஸ்கூட்டர் சத்தம். நிருபர் வந்தாயிற்று. ஏழு மணிக்கே பேட்டி முடித்தாயிற்று. மழை பிடித்துக் கொண்டது. டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு என்று நெரிசல் பற்றியும் மோசமான ரோடு பற்றியும் வெலாவாரியாக நிருபர் சொல்ல ஆரம்பித்தார். பேட்டி எப்படி வந்திருக்கிறது? அதைப் பற்றிப் பேசிவிட்டு நடுநடுவே ரோடு பற்றிப் பேசலாமே? ரோடு எங்கே ஓடிடப்போகிறது? என்றார் ஆசிரியர்.

    யார் வேணும்னா யார் நாற்காலியில் வேணும்னா உட்கார்ந்து கொள்றாங்க. பிரஸ்ஸிலேயிருந்து அட்டைப் படம் அச்சடித்துக் கொண்டு வருகிறவரைப் பார்த்தால் டெஸ்பாட்ச் கிளார்க்கின் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

    விளம்பர இலாகாக்காரர் ரிசப்ஷனிஸ்ட் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு டெலிபோன் பேசிக் கொண்டிருக்கிறார். வர்ர புகைப்படக்காரங்க ஆர்ட்டிஸ்ட் ரூமிலே ஜேஜேன்னு ஆளுக்கொரு நாற்காலி பிடிச்சு உட்கார்ந்துடறாங்க. என் கஷ்டம் என்னன்னா எனக்கு ஒரு நாற்காலி அங்கே கிடைக்க மாட்டேங்குது. (நானும் அப்பப்ப ஏதாவது படம் கிடம்போட்டுப் பழகுவேன்... ஹிஹி!)

    *****

    3

    பாட்டி இறந்து விட்டாள்னு டெஸ்பாட்ச் அஸிஸ்டெண்ட் லீவு போட்டாரு. நாலு நாள் கழிச்சு வந்தாரு. ரெண்டு நாள் ஆனதும் மறுபடி அவரைக் காணலை. ரிசப்ஷன் மேடம் சொன்னாங்க, அவரோட பாட்டி இறந்துட்டாராம்னு இப்பத்தானே பாட்டி இறந்தார்னு போயிட்டு வந்தாருன்னேன்.

    இது இன்னொரு பாட்டியாம்னாரு அந்த மேடம்.

    ஐயோ பாவம், அவருக்குச் சீக்கிரம் சீக்கிரம் பாட்டிங்க சாவறாங்களேன்னு நினைச்சு வருத்தப்பட்டேன்.

    முந்தாநாள் அவர் வந்து ஆசிரியரைக்

    Enjoying the preview?
    Page 1 of 1