Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kurunkatturaigal Moolam En Vaazhkai Anubavangal
Kurunkatturaigal Moolam En Vaazhkai Anubavangal
Kurunkatturaigal Moolam En Vaazhkai Anubavangal
Ebook259 pages1 hour

Kurunkatturaigal Moolam En Vaazhkai Anubavangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303843
Kurunkatturaigal Moolam En Vaazhkai Anubavangal

Read more from Bakkiyam Ramasamy

Related to Kurunkatturaigal Moolam En Vaazhkai Anubavangal

Related ebooks

Reviews for Kurunkatturaigal Moolam En Vaazhkai Anubavangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kurunkatturaigal Moolam En Vaazhkai Anubavangal - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    குறுங்கட்டுரைகள் மூலம் என் வாழ்க்கை அனுபவங்கள்

    Kurunkatturaigal Moolam En Vaazhkai Anubavangal

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அந்த மஞ்சக் கிழங்கு

    அந்தத் தாய்க்கு என்ன பதில்?

    அது அவன் நான்

    இடைப்பாடி எங்கள் இளமைப்பாடி

    எழுதுவது சுலபம் பிரசுரமாவதுதான் கஷ்டம்

    கிரிஜாவின் டைவர்ஸ்

    ஹோம் தாத்தா

    இளக்க முடியாத இளங்கோ

    ஒரு இனாமியின் ஏக்கம்

    எனக்குத் தெரிந்த ஜனக மகாராஜா!

    காய்ம்

    கல்யாணமாகாத பெண்களே... உஷார்!

    கத்தும் குயிலோசை

    பாடாய்ப் படுத்துகிறார் குழந்தை டாக்டர்!

    மாறாதவர்கள்!

    மரத்தடியில் ஒரு மல்லர்!

    உண்மைச் சம்பவம்... மாயக் குரல்கள்!

    யார் அந்த மீளா அடிமை!

    நாணய மழை!

    நாயக்கர் கடை சோடா!

    ஆர்.கே. நாராயணும் நானும் ஒன்று! எப்படி?

    நிற்க ஒரு இடம்!

    நோட்டீஸ் வைக்கிறது

    ஆச்சரியப்படுத்தும் Obituaries!

    ஊர்

    பாவங்கள் சிறுகதையல்ல

    ரோஸ்ட் வாசனை

    ருசி

    சுதந்திர ஜாதி நான் என்றான்!

    சுந்தரக் குரல்

    சுண்ணாம்பு ராசி

    சுதந்திராவின் வயது!

    'தான்'

    மகாப் பெரிய தமிழ்வாணன்!

    தரையில் விழாத ஜோக்

    டோக்கன் சிந்தனை

    வலியில்லாத சுகப் பிரசவம்

    விவாத சுப முகூர்த்தங்கள்

    அந்த மஞ்சக் கிழங்கு

    அந்தப் பக்கம் போனால் சேட் மாணிக்சந்த்தைப் பார்க்காமல் நான் திரும்புகிற வழக்கமில்லை.

    தான் மார்வாரி, பணக்காரன், தொந்தியும் தொப்பையும் என்கிற காம்ப்ளெக்ஸ் சிறிதும் இல்லாதவன்.

    எம்.சிடி.எம். ஸ்கூலில் படிக்கும் போது தேசிக்காச்சாரியாரின் சந்து வீட்டிலே கணக்கு டியூஷனுக்குப் போனபோது பழக்கம்.

    அப்போவெல்லாம் அவன் வீட்டுக்கு நான் போனதில்லை.

    அவன் தங்கை கல்யாண சமயம் போயிருந்தேன். பத்து நாளைக்கு முன்னதாகவே ஸ்வீட் தயாரிப்பு அவன் வீட்டு மொட்டை மாடியில். ஒவ்வொரு ரசகுல்லாவின் சைஸும் பிரமையூட்டின.

    பலகாரங்களே பிரமிப்பு என்றால் கல்யாணத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. குதிரை மீது மாப்பிள்ளை கம்பீரமாக சவாரி செய்து வந்தபோது முன்புறத்தில் குதியாட்டம் போட்ட மார்வாரி இளைஞர்களோடு நானும் கும்மாளம் போட்டேன்.

    அப்படி டான்ஸ் ஆடியவர்களுக்கு ஆளுக்கு இரண்டு பவுன் சங்கிலி தந்து கௌரவப்படுத்தினார்கள். அதைத்தான் இன்னமும கழுத்தில் போட்டிருக்கிறேன்.

    ..........முழங்கை உயர டம்ளரில் நுரை பொங்கும் ஸ்வீட் லஸ்ஸி வந்தது. மேலே போட்டிருந்த ஸ்பெஷல் பாலேட்டை ரசித்து ருசித்து அதைக் கடந்த லஸ்ஸியை உறிஞ்சிக் கொண்டே பிரமாதம்... என்றேன். இரண்டு நாளைக்கு வயிறு நிரம்பி விட்டதுய்யா மாணிக்...

    வயசுப் பிள்ளைகளாக இருக்கையில் 'டா' போட்டுக் கொள்வோம்.

    இப்போ மாணிக்சந்த் ஜெயினும் நானும் ஐம்பது வயசுகளில் இருந்தோம். என் சிறிய அச்சகத்தின் மீது ஐம்பதாயிரம் ரூபாய் அவனால் கடன் தர முடியுமா என்ற பிஸினஸுக்காக அவனிடம் சென்றேன்.

    டி.டி.பி., கணினி, கிராஃபிக்ஸ, பேஜ் மேக்கர் என்று நவீனங்கள் புகுந்தபின் என்னுடைய அம்பாள் மாடர்ன் பிரின்டிங் பிஸினஸ் அதல பாதாளத்துக்குப் போய்விட்டது.

    கல்யாண, கருமாந்தர ஜாப் கூட அபூர்வமாகவே கிடைத்தன. பைண்டிங் செக்‌ஷன் கொஞ்சம் உயிர் தந்து கொண்டிருந்தது, ஸ்கூல் சீஸனில்.

    சௌமித்ரிக்கு இருபத்தாறு வயதாயிற்று. ஆட்டோக்களின் பின்புறம் பார்த்தால் என் வயிற்றைக் கலக்கும். பெண்ணின் திருமண வயது 21 என்று கதறிக் கொண்டு அதுகள் ஓடின.

    என் பட்ஜெட் ஒண்ணேகால் லட்சம். முக்கால் லட்சம் திரட்டியாயிற்று. இன்னும் அரை லட்சம் புரட்டியாக வேண்டும்.

    நூறு பேர்கிட்டே கடன்காரன் ஆகிறதுக்கு ஒரே பேர்வழிகிட்டே கடனாளியாக இருக்கலாம்.

    சௌமித்ரியைத் தட்டிவிட்டால் பிரச்னை இல்லை.

    வாங்கப் போகிற ஐம்பதாயிரம் ரூபாயை எப்படித் திருப்பிக் கட்டுவேன்? அதுவும் வட்டியோடு!

    ஊரிலே இரண்டு ஏக்கர் புஞ்சை இருக்கிறது. விவசாயி தொந்தரவு கொடுக்காமலிருந்தால் அதை எழுபதாயிரம் ரூபாய்க்கு விற்கலாம்.

    ஆனால்... ஆனால்... நான் இப்படியெல்லாம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அலைய வேண்டிய ஆளா? தலையெழுத்து!

    மூத்த பையன் ரமணி கலிபோர்னியாவில் மாசம் பத்தாயிரம் டாலர் சம்பாதிக்கிறான். நான் இங்கே பிரஸ்ஸை அடகு வைக்க நண்பனிடம் வந்திருக்கிறேன்.

    ப்ரதர், இன்னொரு டம்ளர் என்று உபசரித்தான் மாணிக்சந்த்.

    நோ... நோ... என்று மறுத்தேன். அது சமயம் அடகுக்கடை வாசலில் மிக ஏழைமைப்பட்ட ஓர் ஆசாமி நிழல் காட்டினான்.

    ஏழையை விவரிக்க வேண்டுமா என்ன?

    சைக்கிள் ரிக்‌ஷாவின் துருப்பிடித்த 'க்ர்ரீச்' சற்று முன் இவன் ஏற்படுத்தியதாகத்தானிருக்கும்.

    வாய்யா நாய்க்கரே! மாணிக்சந்த் வரவேற்றான். சும்மா உள்ளே வா... நம்ம பிரண்டுதான்...

    எனக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு டெஸ்க் முன் உட்கார்ந்தான்.

    என்ன நாய்க்கரோ தெரியலை... சைக்கிள் ரிக்‌ஷாக்காரன் என்பது தெரிந்தது. கையில் ஒரு பட்டை.

    அவனுடைய கண்ணில் மட்டும் ஒளி. உடலின் மற்ற பாகங்கள் அவனுடைய சட்டை, லுங்கியை விட அதிகமாக நைந்திருந்தன.

    சிக்குலே வுயந்துட்டேன் மொதலாளி! அதுக்கும் சிக்கு! எடை குப்புன்னு குறைஞ்சுகிட்டே வந்துச்சா... டாக்டரு, படம், மீட்டரு எல்லாம் எடுக்கச் சொன்னாரு... ஊசி மருந்து டானிக் எழுதிக் குடுத்துட்டாரு... டி.பி.யாம்...

    சரி, சமாசாரத்தைச் சொல்லு...

    ஐந்நூறு ரூபாயாவது வேணும்... திருப்பிடறேன்...

    நான் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கேட்க வந்திருக்கிறேன். ரிக்‌ஷாக்கார நாய்க்கர் ஐந்நூறு ரூபாய் கேட்க வந்திருக்கிறான்.

    சரி... கொணாந்திருக்கியா? அவனை மாணிக்சந்த் கேட்டான்.

    ஊம்... என்றவாறு சட்டைக்குள்ளே பத்திரமாகத் துணி மேல் துணி சுற்றி வைத்திருந்த அதை எடுத்தான்.

    மாணிக்சந்த் பிரித்துப் பார்த்து விட்டு, மறுபடி அதே மாதிரி பத்திரமாக முடிச்சிட்டு இருப்புப் பெட்டகத்திலே வைத்தான்.

    ஐம்பது ரூபாய் நோட்டாக பத்து எண்ணித் தந்தான்.

    ரிக்‌ஷாக்காரன், அஞ்சு மாசத்துலே மூட்டுடறேன் என்று கும்பிடு போட்டு விட்டுப் போன பிறகு - மாணிக்சந்திடம் கேட்டேன், என்ன தாலியா?

    நீ பார்க்கணுமா அந்தத் தாலியை? என்று சிரித்தான். இரும்பு அலமாரியிலிருந்து அந்தப் பொட்டலத்தை ஜாக்கிரதையாக எடுத்து கண்ணாடி மேஜை மீது வைத்துப் பிரித்தான்.

    ஒரே ஓர் அழுக்கு மஞ்சள் கிழங்கு. ஒரு முரட்டு மஞ்சள் சரட்டில் அது கட்டப்பட்டிருந்தது.

    அதைத் தூக்கிக் காட்டினான். ஏழை வீட்டுத் தாலி!

    இது ஒண்ணுதான் அவன் கொடுத்தானா?" என்றேன் ஆச்சரியத்தோடு.

    ஆமாம்... இதுதான் அவுங்க வீட்டுத் தாலி. இதைத்தான் ஒவ்வொரு தரமும் அடகு வைப்பான். தங்கமெல்லாம் பொட்டுக் கூட கிடையாது. ஆனால் அவனைப் பொறுத்தவரை இது தங்கத் தாலி. இந்த ஆறு வருஷத்திலே பத்துப் பதினைந்து தடவை இதை அடகு வெச்சிருக்கான். தவறாமல் வட்டியோடு முதலைக் குடுத்துட்டு இந்த மஞ்சக் கிழங்கை மீட்டுகிட்டுப் போவான். நாணயஸ்தன்னா நாயக்கர் மாதிரி ஒருத்தர் இனித்தான் பிறக்கணும்...

    வெறும் ஒரு மஞ்சங்கிழங்கை நம்பி ஐந்நூறு ரூபாய் கடன் கொடுக்கறியா?

    சிரித்தான் சேட். எல்லாருக்கும் அப்படிக் கொடுத்துடுவேனா? வாக்கு சுத்தமானவங்க ஒரு துரும்பைக் கொண்டு வந்து தந்தாக்கூட அதன் மேலே கடன் கொடுத்துடுவேன். வாக்கு புரண்டவன் வைரத்தையே கொண்டு வந்து அடகு வெச்சாலும், வேண்டாம்னுடுவேன்... நம்ம தொழிலே நாணயத்தை வெச்சுத்தானே?

    நான் இன்னிக்கு இந்த பிரண்டு சேட்டுகிட்டே ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டு வரவேண்டிய ஆளா?

    சொந்தப் பிள்ளை மீது நம்பிக்கை வைக்கலை. அவன் வேலைக்குன்னு ஃபாரின் போனால் எனக்குப் பணம் அனுப்ப மாட்டான்னு, அவன் போறதுக்கு பிரஸ் மேலே கடன் வாங்கித் தர இஷ்டப்படலை. என் கடனை அவன் அடைக்க மாட்டான்னு அவநம்பிக்கை.

    அவன் கோபிச்சுகிட்டு, தன் காலிலே தானே நிற்கிறேன்னு தன் புரொஃபசரோட ஹாண்டிகாப்ட் பொண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டு அவர் செலவிலே அமெரிக்கா போனான். அங்கே இப்போ மாசம் பத்தாயிரம் டாலர் சம்பளம். மாமனார் மாமியாரையும் அங்கேயே வரவழைச்சுக் கொண்டுட்டான். எனக்குக் கடுதாசிகூட எழுதறதில்லை.

    'உன் வீடும் நீயும் சவுக்யமா?'ன்னு ஒருமுறை எழுதியிருந்தான். அப்புறம் அதுவும் இல்லை!

    கோடீஸ்வரனாக இருக்கிறானாம். மாமனாருக்கொரு காராம். மாமியாருக்கொரு காராம். பெண்டாட்டிக்கு ஒண்ணாம். இவனுக்கு ஒண்ணாம். எஸ்டேட் வாங்கியிருக்கிறானாம். பேரனும், பேத்தியும் அத்தனை சூட்டிகையாம்.

    கலிபோர்னியா போய் வந்தவங்க என் காதிலே போடறாங்க.

    தங்கை கல்யாணத்துக்கு அவன் மனசு வைத்தால் ஐம்பது லட்சம் ரூபாய் கூட அனுப்பலாம்.

    நான் அவன் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்கிற காரணத்தினால் அவனுக்கு என் மேலே குரோதம். என்னை எதிரி மாதிரி நினைச்சினுட்டான். தங்கை கல்யாணத்தைப் பத்தி இருபதுக்கும் அதிகமா ஏரோகிராம் எழுதியிருப்பேன். பதிலில்லை.

    சந்த் கடை இருபது வருஷத்துக்கு முன்னே சின்ன சந்துலே வாடகைக்கு இருந்தது. இப்போ மெயின் ரோடுலே சொந்தமா மூணு அடுக்கு மாளிகையிலே இருக்கான். கீழே மட்டும் கடை.

    அந்த மஞ்சக் கிழங்கைக் கொஞ்சம் இப்படிக் காட்டு என்றேன்.

    ஆச்சரியத்தோடு பிரித்துக் காட்டினான். அந்தக் கிழங்கை புனிதத் தாலி என்று ரிக்‌ஷாக்காரன் வைத்திருக்கும் நம்பிக்கை... அதை நம்பிக் கடன் கொடுக்கும் மாணிக்சந்த்தின் நம்பிக்கை...

    தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டேன். இன்னொரு முறை பண விஷயம் பேசிக்கலாமென்று புறப்பட்டு விட்டேன்.

    உலகம் நம்பிக்கையில்தான் நடக்கிறது.

    'நம்பாதவன் நாசமாகிறான். நம்பாதவனுக்கு இந்த உலகம் இல்லை. இந்த உலகம் இல்லைன்னா மேல் உலகத்தைப் பத்திப் பேச்சே இல்லை' என்ற பொருள்படும் கீதை வரிகள் அவனது மேஜைக் கண்ணாடியின் அடியில் இருந்தன.

    சம்சயாத்மா வினச்யதி

    நாயம் லோ கோஸ்தி நபர:

    நஸுகம் ஸம்சயாத்மன:

    *****

    அந்தத் தாய்க்கு என்ன பதில்?

    இதுவே கேள்வி. ஆட்டோவில் ஏறினாலும் இருமலுக்காக இருபத்தைந்து ரூபாய் கொடுத்து மருந்து வாங்கி வரச் சொல்லி அனுப்பினாலும், இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளுங்கள் என கரண்டியில் சாதத்தை மனைவி அள்ளிப் போடும்போதும், தயிரைக் கரண்டி கரண்டியாக ஊற்றும்போதும் அதே கேள்வி - அந்தத் தாய்க்கு என்ன பதில்?

    புடவைத் தலைப்பைப் பற்றி பேயாக இழுத்தவாறு குச்சிக் காலில் தொளதொள சட்டையுடன் உறுதியாகத் தாயை கோபத்துடன் பின்தொடர்ந்து அவளது நைந்த புடவைவை ஆத்திரமாக இழுத்து, கையைக் காலை உதறி அழுது, அவள் தன் இடுப்பிலுள்ள இன்னொரு குழந்தையைச் சரிசெய்தவாறு இடுப்பு முடிச்சில் செருகியிருந்த பத்துப் பைசாவையோ ஐந்து பைசாவையோ எடுத்துத் தருவாள். அத்துடன் திருப்தியடையாது அவளை மேலும் தொந்தரவு செய்ததைப் பொருட்படுத்தாது அந்தத் தாய் தன் இடுப்புக் குழந்தையுடன் நடந்தவாறிருக்கிறாள்.

    தலைபூராச் சடைசடையாக மயிர் காய்ந்துத் தொங்கும் புளியம்பழம்போல. இடுப்புக் குழந்தையின் தலையிலும் மெல்லிசாகச் சடை பிடித்திருந்தது. அந்தத் தாய் அவளது குழந்தைகளை வைத்துக்கொண்டு ராத்திரி என்ன சாப்பிடுவாள்.

    குழந்தை அடம்பிடித்து அழும்போது, அவளால் மறுபடி காசு தரமுடியுமா? அவளுக்கு யாராவது தந்தால் அவள் நிச்சயம் தருவாள்.

    அவளது கணவன் அப்படி ஒன்றும் பொறுப்பாகத் தருகிறவன் போல் அவன் தோற்றம் இல்லை.

    பெற்றதுகளை அவளே பொறுப்பாகக் காக்கவேண்டிய நிலை. ராத்திரி பசிக்கும்போது அவள் எதை வைத்து சமைப்பாள்? குடியிருப்பது எங்கே?

    முடிச்சிலுள்ள காசு தீர்ந்து போய்விட்டால் அவள் என்ன செய்வாள். அந்த ஒல்லி கொள்ளி பசியுடன் முரட்டுத்தனமாய் பிடுங்கி எடுக்குமே? என்ன செய்வாள்?

    குழந்தைகளுக்குப் பசிக்கும்போது அவள் என்ன தருவாள்? பிச்சை எடுப்பாளா? எந்த வீட்டிலாவது வேலை செய்பவளாக இருக்கலாம். கூலிக்காரியாக இருக்கக்கூடும்.

    கிடைத்த கூலியில் குடும்பம் நடத்துபவளாக இருப்பாள். புருஷன் தன் வருமானத்தை குடித்தோ, ஓட்டலில் தன் வயிறை மட்டும் நிரப்பிக் கொண்டோ, சந்தோஷமாக இருந்துவிடுவான். மனைவி என்பவளை அவன் சுகமாக வைத்துக்கொள்ள நினைக்காதவனோ, அல்லது அவன் வேலை வெட்டி கிடைக்காத துரதிருஷ்டசாலியோ. இதோ செல்லுகிற இந்தப் பூஞ்சையான தரித்திர லட்சுமிதான் அவன் வீட்டின் சர்வாதிகாரியாகக் கூட இருக்கலாம்.

    காசு சம்பாதிக்க இவள் விபசாரம் செய்பவளாகத் தெரியவில்லை. இது பட்டினியிலேயே பழுத்த பத்தினி உருவம். எலும்புக்குள்ளே கற்பு ஓடுகிறது. துரத்தும் பிசாசுகளான குழந்தைகளை அவன் அறையலாம், அணைக்கலாம். ஆனால் அவற்றை அவள் விட மாட்டாள். தனது தேகத்தில் தோன்றிய சிரங்குகளில் ஒன்றாகவாவது அவற்றை நினைத்து அவற்றுக்கு மருந்து போடுவது போல சோறிடுவாள்.

    அவளுக்கு எதிரே கையில் சிறுமியைப் பிடித்து நடத்தியவாறு ஒரு செல்வச் சீமாட்டி நாகரிக உடையில் வருகிறாள். அந்தச் சிறுமி மனசில் நினைப்பதையெல்லாம் அந்த தாயார் வாங்கித் தரமுடியும். ஆனால் இந்த ஏழைக் குழந்தை சடை பிடித்த அரிப்புத் தலையுடன் உள்ள குழந்தை - ஒரு சுகமும் இல்லாமலேயே அழுக்கு, அவலம், பசி, நோய் இவைகளுடனேயே வாழப் போகிறது.

    இதற்கு எங்கே பள்ளி கட்டி வைத்திருக்கிறார்களோ, அந்த இலவசப் பள்ளிக்கு இது இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கல்வி பயில - இலவச சோறு சாப்பிடச்

    Enjoying the preview?
    Page 1 of 1