Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nizhal Vazhkai
Nizhal Vazhkai
Nizhal Vazhkai
Ebook94 pages30 minutes

Nizhal Vazhkai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்புள்ள வாசகர்களுக்கு, வணக்கம். நலம்தானே....

'நிழல் வாழ்க்கை “ - மதுரா... சில சமயங்களில் வைரத்தோடுகளை, குளிக்கப் போகும் அவசரத்தில் காற்று, பெருங்காய டப்பாவிலோ, அஞ்சறைப் பெட்டியிலோ பெண்கள் போட்டு விட்டுப் போவார்களே... அது போன்றதொரு வாழ்க்கை இவளுக்கு அமைந்து விட்டது. இவள் ஜாதி வைரம். இவளை, இவளதுப் பெற்றோர் போட்டது பிரேம் என்கிற தகர டப்பாவில்.

ஆனால், நமது கதாநாயகன் சூர்யாவின் தந்தை ராகவன் இருக்கிறாரே. அவர்தான் இவளை சரியான சமயத்தில் பார்த்து எடுத்து, வெல்வெட் பெட்டி போன்ற தனது இல்லத்தில் வைக்கிறார்.

‘ராகவன்' போன்ற புத்திசாலியானப் 'பெரிசு'களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்... உங்களுக்கு?

படியுங்கள். மறுபடி அடுத்த நாவலில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு அன்புடன், அனுராதா ரமணன்...

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110003601
Nizhal Vazhkai

Read more from Anuradha Ramanan

Related to Nizhal Vazhkai

Related ebooks

Reviews for Nizhal Vazhkai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nizhal Vazhkai - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    நிழல் வாழ்க்கை

    Nizhal Vazhkai

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    இது தனி சுகம்தான்…

    மதுரா, தனக்குள் புன்னகைத்துக் கொள்கிறாள்.

    விடிகிற ஒவ்வொரு நாளிலும் - இத்தனை அழகும், இனிமையும் இருக்கிறதா என்ன…

    இத்தனை வருஷங்களும் இது தெரியாமலே போய் விட்டதே... எப்படி

    அவள் ஜன்னல் திரையை விலக்கிவிட்டு தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள் - குழந்தையின் சிணுங்கல் கேட்டு, திரும்பிப் பார்க்கிறாள்.

    அதே சமயத்தில் கட்டிலில் படுத்திருந்த சூர்யா, குழந்தையை தன் போர்வைக்குள் இழுத்து அணைத்துக் கொள்கிறான். நிமிஷமாய் சிணுங்கல் அடங்குகிறது.

    அது என்னமோ குழந்தை தீபிகா - சூர்யாவிடம் ஒட்டிக் கொண்டு விட்டாள்.

    தகப்பனிடம், மகள் ஒட்டிக் கொள்வதில் என்ன அதிசயம் என்று கேட்கலாம்.

    தகப்பனிடம் - சரி.

    தகப்பனில்லாத, தன் அம்மாவின் கணவனிடம் குழந்தையால் நேசம் பாராட்ட முடியுமோ?

    தீபிகா பிறந்து, ஆறாம் மாதத்திலிருந்தே - அவளுக்கு அப்பாவாக அறிமுகப்படுத்தப்பட்டவன். இந்த சூர்யாதான்.

    உண்மையான அப்பா பிரேம் - இப்பொழுது நரகத்தில் வசித்துக் கொண்டிருப்பானாயிருக்கும்.

    இறந்த பின் - சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்கள், மேலுலகில், இந்த ஆத்மாக்களுக்காக காத்திருப்பது உண்மையானால் -

    பிரேம் கண்டிப்பாக நரகத்தில்தான் இருப்பான்.

    மதுரா, பழைய நினைவுசுளை உதறிக் கொண்டு படுக்கையறைக் கதவைத் திறந்து, சமையலறைக்குள் நுழைய…

    அங்கே அவளுக்கும் முன்னாலேயே சூர்யாவின் தந்தை ராகவன். தொள தொளத்த நைட் டிரஸ்ஸுடன் - அவர் பாட்டுக்கு சுறுசுறுப்பாய் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.

    குட்மார்னிங் மருமகளே!

    குட்மார்னிங் படி நீங்க எதுக்காக சிரமப்படணும்... நான்தான் வந்திட்டேனில்லே?

    ராகவன், கோல்கேட் பற்பசை விளம்பரக் கிழவர் மாதிரி சிரிக்கிறார்.

    காபி போடறது ஒரு சிரமமா. இந்த வீட்டுல இருபத்தஞ்சு வருஷமா நான் செய்யற வேலைதானேம்மா இது

    இத்தனை வருஷமா செஞ்சது வேற. இப்ப மருமகள் வந்ததுக்கு அப்புறமாகவும் செஞ்சீங்கன்னா, என்னோட காபி பிடிக்கலேயின்னு அர்த்தம்

    தப்பும்மா... முன்னாடி ஏனோதானேன்னு ஒரு காபி கலந்து குடிச்சிட்டிருந்தவன், இப்பத்தான் மருமகள் வாயாலே 'வெரிகுட்' வாங்கணுமேயின்னு அக்கறையோட காபி கல்க்கறேன்.

    மதுரா சிரிக்க, அவர் - தான் கலந்த காபியை மதுராவிடம் கொடுத்துவிட்டு, தனக்கும் ஒரு கப் காபியை எடுத்துக் கொண்டு ஹால் பக்கம் நகருகிறார்.

    "வாயேன் - இன்னிக்கு 'ஸண்டே’ தானே… மெதுவா சமைக்கலாம். உட்கார்ந்து நிதானமா, காபியை ரசிச்சுகி குடி... அப்புறம், 'ஸண்டே ஸ்பெஷலா' என்ன சமைக்கலாம்னு யோசிக்கலாம்.

    அவர், வாசற்பக்க கதவில் செருகியிருந்த நியூஸ் பேப்பரை எடுக்கும் போதே - கீழ் போர்ஷனிலிருந்து சிவகாமியின் குரல் ஒலிக்கிறது.

    காபியா இது? கழுநீர் தண்ணி மாதிரி... ஏங்க இத்தனை வருஷக் குடித்தனத்துல ஒரு காபி போடத்துப்பில்லே. நான் மாத்திரம் உடம்பு நேரா இருந்தேன்னா, உங்களை எல்லாம் ஏவக் கூடியவளா நான்? ஐயோ கடவுளே.. எனக்கு ஏன் ஆறு குழந்தைகளையும் படைச்சு வியாதியையும் படைச்சே...!

    ராகவன், மதுராவைப் பார்த்துப் புன்னகைக்கிறார்.

    இவ இப்படிக் கேட்கறதுக்குப் பதிலா. ‘என்னையே ஏன் படைச்சே’ யின்னு கடவுளைக் கேட்கலாம். இவளுக்கு என்ன வியாதின்னு உனக்குத் தெரியுமோ?

    மதுராவுக்கும் சிரிப்பு வருகிறது.

    சிவகாமிக்கு உடம்பில் ஒரு வியாதியுமில்லை. நல்ல சரீரம் அளந்து பார்க்க இஞ்ச் டேப் போதாது. இவளது கணவன் சிவராமன். ஒல்லியாக ஒட்டடைக்குச்சி மாதிரி.. பெரிய கம்பெனி ஒன்றில் நல்ல வேலை. ஆபீசுக்கு இவரை அழைத்துப் போக, கம்பெனி கார் வரும். இவரது ஃபைல்களை உதவியாளர் ஒருவர் சுமந்து வருவார்.

    ஆனால் வீட்டில்..

    சகலமும் அவர்தான்.

    சமையலுக்கு ஆள் வைத்துக்கொள்ள சிவகாமிக்குப் பிடிக்காது.

    "நான்

    Enjoying the preview?
    Page 1 of 1