Vithiyin Kaigal Maaruma?
()
About this ebook
திருநாவுக்கரசுவிற்கு அவன் பெற்றோர் ஒரு பெண்ணைப் பேசி முடித்து திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர். திருமணத்திற்கு முந்திய தினம் அப்பெண் தன் காதலனுடன் ஓடி விடுகின்றது. சில நாட்களுக்குப் பிறகு வேறொரு பெண்ணைப் பார்த்து ஏற்பாடுகளைச் செய்ய, அந்த வரனும் திருமணம் வரை வந்து நின்று போய் விடுகின்றது.
அவன் ஜாதகத்தை அவன் பெற்றோர் கொண்டு போய் ஜோதிடரிடம் காட்ட, அவன் ஜாதகப்படி அவன் ஜாதகத்தை எந்தப் பெண் ஜாதகத்தோடு வைத்துப் பொருத்தம் பார்த்தாலும் அந்தப் பெண் ஜாதகத்திற்கு உடனடியாக மாங்கல்ய யோகம் வரும், என்றும், ஆனால் அது திருநாவுக்கரசுவுடன் அமையாது! என்று கூறுகின்றார்.
மேலும், இதே யோகமுள்ள பெண் ஜாதகம் இருந்தால் இரண்டும் பொருந்தும் என்கிறார் ஜோதிடர்.
அப்படியொரு ஜாதகம் வந்ததா?...
திருநாவுக்கரசுவிற்கு திருமணம் நடந்ததா?.
கதையைப் படியுங்கள்.
Read more from Mukil Dinakaran
Paaraikkul Panneer Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Ennil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsUyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Kaathirupu! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsJeevan Oyum Munney! Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Enbathu Poithane? Rating: 0 out of 5 stars0 ratingsCylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsThoorigai Erigindra Poothu…! Rating: 0 out of 5 stars0 ratingsInnarkku Innarendru! Rating: 4 out of 5 stars4/5Ootha Colouru Helmet! Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthal! Rating: 5 out of 5 stars5/5Uyirgalidathu Anbu Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku... Un Uyir! Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Ullathu Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsNaalellam Pournami Rating: 0 out of 5 stars0 ratingsPanthaya Purakkal Rating: 0 out of 5 stars0 ratingsAasaiye Alai Polea...! Rating: 0 out of 5 stars0 ratingsOru Panthu... Aaru Run... Oru Aavi Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Porkaalam Rating: 0 out of 5 stars0 ratingsPoochuduthe En Vaalibam! Rating: 0 out of 5 stars0 ratingsPoovizhi Vaasalile! Rating: 0 out of 5 stars0 ratingsPetraalthan Magala? Rating: 0 out of 5 stars0 ratingsIthuve Iruthi Aagattum...! Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vithiyin Kaigal Maaruma?
Related ebooks
Nesa Veli Rating: 4 out of 5 stars4/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Uyir Painkili Rating: 0 out of 5 stars0 ratingsNin Uchithanai Muharnthaal... Rating: 5 out of 5 stars5/5Kozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsKanavennai Kalavaduthey...! Rating: 0 out of 5 stars0 ratingsSeenupayal Rating: 0 out of 5 stars0 ratingsKan Ketta Pin Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Niram Maarathu Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi Rating: 0 out of 5 stars0 ratingsபுரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்... Rating: 0 out of 5 stars0 ratingsNeerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsஉயிரே உன்னை அழைக்கிறேன்..! Rating: 0 out of 5 stars0 ratingsEnnulle Nirainthai Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Iravu Rating: 0 out of 5 stars0 ratingsKiligalai Parakka Vidungal Rating: 0 out of 5 stars0 ratings‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratingsSamsaram Enbathu Veenai! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Cylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsEppadiyum Jeikka Vendum Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa… Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Pookal Rating: 5 out of 5 stars5/5Saraiyu Kaathirukkiral Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Ingey! Rating: 0 out of 5 stars0 ratingsTwist Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Nandhini En Nandhini Rating: 5 out of 5 stars5/5Ennuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vithiyin Kaigal Maaruma?
0 ratings0 reviews
Book preview
Vithiyin Kaigal Maaruma? - Mukil Dinakaran
https://www.pustaka.co.in
விதியின் கைகள் மாறுமா?
Vithiyin Kaigal Maaruma?
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 1
வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து, உடற்பயிற்சி மையத்திற்கு சென்று விட்டு, செந்நிற மேனியெங்கும் மொட்டு மொட்டாய் வியர்வைத் துளிகள் வடிய, வீடு வந்து சேர்ந்தான் திருநாவுக்கரசு. இருபத்தி ஒன்பது வயது வாலிபன். முறுக்கேறும் தேகம். துடிப்பூறும் ரத்த ஓட்டம். ஆள் கொஞ்சம் கருப்பாயிருந்தாலும் ஆண்மையின் சின்னமாய் இருப்பவன்.
வாசலிலேயே நின்றிருந்த அவன் தாய் சூடாமணியோ வந்ததும் வராததுமாய் அவனைத் திட்ட ஆரம்பித்தாள்.. ஏண்டா... உனக்கு மண்டைல மூளைன்னு ஒண்ணு இருக்கா?... இல்லையா?... கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கு!... இங்க வேலைகள் தலைக்கு மேலே கிடக்கு!... அதுகளைச் செய்யாம நீ பாட்டுக்கு காலங்காத்தால எந்திரிச்சு... தண்டால்... பஸ்கி... ன்னு போயிட்டா எப்படிடா?... நீ மாப்பிள்ளை என்பதற்காக எந்த வேலையும் செய்யக் கூடாது!ன்னு ஏதாவது சட்டமா என்ன?... கல்யாணம் முடியற வரைக்கும் அந்த ஜிம்முக்குப் போகாட்டித்தான் என்ன?
அம்மா... சின்ன வயசிலிருந்தே நான் காலைல எந்திரிச்சு ஜிம்முக்குப் போய்ப் பழகிட்டேன்... அதை விட முடியலைம்மா!... ஒரு நாளைக்குப் போய் உடற்பயிற்சி பண்ணலேன்னா என்னமோ மாதிரி இருக்குதும்மா!
கைகளை முறுக்கிக் காட்டிச் சொன்ன திருநாவுக்கரசு, சரி... எனக்கு என்னென்ன வேலைன்னு சொல்லு!... செய்ய நான் தயாராயிருக்கேன்!
தாயின் அருகே வந்து அவள் தோளைத் தொட்டுக் கேட்டான் திருநாவுக்கரசு.
அப்போது, வாசலில் செருப்புச் சத்தம் கேட்க,
உங்கப்பாதான் வந்திட்டார் போலிருக்கு!... அவர்தான் உன்னைக் கேட்டுக்கிட்டிருந்தார்!... அதனால அவர்கிட்டேயே போய்க் கேளு... உனக்கு என்னென்ன வேலை?ன்னு!...
என்றாள் சூடாமணி.
ஓ.கே..
என்றபடி தந்தையிடம் வந்தான் திருநாவுக்கரசு. அப்பா... என்னைத் தேடிக்கிட்டு இருந்தீங்களாம்?... அம்மா சொன்னாங்க!... என்ன விஷயம்?
ஆமாம்டா!... பிரஸ்காரன் போன் பண்ணி...
கல்யாண இன்விடேஷன் ரெடி ஆயிடுச்சு... வந்து வாங்கிக்கங்க!ன்னு சொன்னான்!... என்னால இந்த வெயில்ல போக முடியலை!... அதான் நீ போய் வாங்கிட்டு நேரா இங்க கொண்டு வந்துடு!... வந்ததும்... .அதுல பாதியை இங்க எடுத்து வெச்சுக்கிட்டு... மீதீயை நீயே கொண்டு போய் பொண்ணு வீட்டிலேயும் குடுத்திட்டு வந்திடு!
என்றார் பெரியசாமி.
சரிப்பா... .
என்றபடி பாத்ரூமை நோக்கி சந்தோஷமாய் ஓடினான். அவன் வேகத்தையும், துள்ளலையும் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார் பெரியசாமி.
பொண்ணு வீட்டுப் போகணும்!னு சொன்னதும் பயலுக்கு உற்சாகம் பொத்துக்கிடுச்சு!...
அது செரி... அந்த வயசுல நீங்களும் அப்படித்தானே இருந்தீங்க?
அவரது உள் மனம் சொல்ல, கப்பென்று அமைதியானார்.
ஒரு முறைக்கு இரு முறை சோப்பு போட்டு, அவசர அவசரமாய்க் குளித்து முடித்து, தன்னிடம் இருப்பதிலேயே சிறப்பானதாய்த் தோன்றும் உடையை அணிந்து கொண்டு, எப்போதோ வாங்கி வைத்திருந்த பர்ஃப்யூமை பீய்ச்சிக் கொண்டு, தலையைக் கலைத்துக் கலைத்து இருபது முறை சீவி விட்டு, சமையலறைக்குள் நுழைந்தவன்,
அம்மா... வயிறு
கப... கபன்னு எரியுது... சீக்கிரம் சாப்பிட ஏதாச்சும் குடும்மா
ஆலாய்ப் பறந்தான். தாயார் நிதானமாய்ப் பரிமாறிய மல்லிகைப்பூ இட்லிகளை வேகவேகமாய் உள்ளே தள்ளியவனைப் பார்த்து க்ளுக்
கென்று சிரித்தாள் சூடாமணி.
விருட்
டென்று தலையைத் தூக்கி அவள் சிரிப்பதைப் பார்த்தவன், வாயில் இருந்தவற்றை நிதானமாய் விழுங்கி விட்டு, ஏம்மா சிரிக்கறே?
கேட்டான்.
பின்னே... வீட்டு வேலை ஏதாச்சும் குடுத்தா மூஞ்சிய மூஞ்சிய காட்டுவே... செய்ய மாட்டேன்!னு அலப்பரை பண்ணுவே!... .இப்ப வருங்கால மாமனார் வீட்டுக்குப் போகணும்!ன்னு சொன்னதும் சும்மா
பர... பரன்னு கிளம்பறியே?... டேய்ய்ய்ய்ய்... இப்பவே இப்படிப் பண்றவன் நாளைக்குப் பொண்டாட்டி வந்ததும் என்னென்ன ஆட்டம் போடப் போறியோ?... பொண்டாட்டி தாசனாய் மாறி என்னை என்னென்ன கேள்வி கேட்கப் போறியோ?
மகனை வாரினாள் சூடாமணி.
அடப் போம்மா... கிண்டல் பண்ணாதம்மா!
சிணுங்கலாய்ச் சொல்லியவாறே எழுந்து வாஷ்பேசினருகே சென்று கைகளைக் கழுவியவன், பொண்டாட்டி வந்தாலும் சரி... கொழந்தை குட்டிக நாலஞ்சு வந்தாலும் சரி... எனக்கு நீ அம்மாதான்... உனக்கு நான் செல்ல மகன்தான்?
என்றான்.
ஹும்... இப்ப இப்படிச் சொல்றே?... நாளைக்கு அவ வந்து தலையணை மந்திரம் ஓதிய பிறகு... இதே பேச்சு எப்படியெல்லாம் மாறப் போகுதோ?... எல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!
என்று சொன்ன தாயின் அருகில் வந்து, செல்லமாய் அவள் தலையில் ஒரு குட்டு குட்டி விட்டு,
பிரஸ்ஸுக்குப் போயிட்டு வந்து உன்னைய கவனிச்சுக்கறேன்
சொல்லி விட்டு வெளியேறினான். அவன் மீதிருந்து வீசிய பர்ஃப்யூம் வாசனையை ஆழ இழுத்து, முகத்தைச் சுளித்தவள்,
த்தூ... என்ன செண்ட் இது... நாறுது
என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
வாசலருகே சென்றவனை கூடத்தில் அமர்ந்திருந்த பெரியசாமி, டேய் பயலே... இன்விடேஷனை வாங்கிட்டு நேரா மேக்கால பீடம்பள்ளிக்கு வருங்கால மாமனார் வீட்டுக்குப் போயிடாதே... .இங்க வா
என்றார்.
சரிப்பா... சரிப்பா
என்று வெட்கத்துடன் சொல்லி விட்டு, வேகமாய் வெளியேறியவன் பாக்கெட்டிலிருந்த மொபைல் அதிர, எடுத்துப் பார்த்தான்.
அவன் நண்பன் லட்சுமணன் அழைத்திருந்தான். சொல்லுடா லட்சுமணா
கத்தினான்.
என்ன திரு... .ஆளே கண்ணுக்குப் பட மாட்டேங்கறே?... ரொம்ப பிஸியா?... இல்லை எங்களையெல்லாம் மறந்திட்டியா?
லட்சுமணன் கேட்க,
சேச்சே... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை!..கல்யாண வேலை... அதான் எங்கேயும் வர முடியலை!... இப்பக் கூட ஒரு அவசர வேலையா வெளிய போயிட்டிருக்கேன்... ஈவினிங் வந்து நானே கூப்பிடறேன்
சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டு வெளியேறியவன், வாசலில் நின்று கொண்டிருந்த தன்னுடைய ஹீரோ ஹோண்டாவை ஒரே உதையில் உசுப்பி, பறந்தான். உதடுகள் அவனையுமறியாமல் விசிலடித்தன.
வாசுகி அச்சகம்
வாசலில் பைக்கை நிறுத்திய போது, பிச்சைக்காக கையை நீட்டிக் கொண்டு வந்த மூதாட்டிக்கு ஐம்பது ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினான் திருநாவுக்கரசு.
அதை வாங்கிக் கொள்ள வேகமாய் முன் வந்த கையை, படக்
கென்று பின்னுக்கு இழுத்துக் கொண்டாள் அந்தப் பிச்சைக்காரி.
வாங்கிக்கம்மா... உனக்குத்தான்
என்றான் திருநாவுக்கரசு.
அப்போதும் அவள் நம்பிக்கையில்லாமல் விழிக்க, ஐம்பது ரூபாயும் உனக்குத்தான்... வாங்கிட்டுப் போய் திவ்யமாய் மதிய சாப்பாடு சாப்பிடு
என்றான். மதிய சாப்பாடு என்ற வார்த்தை அந்தப் பிச்சைக்காரியின் முகத்தில் பிரகாசத்தை வரவழைக்க, வாங்கிக் கொண்டாள்.
நீங்க பொண்டாட்டி... பிள்ளைகளோட மகராசனாய் இருக்கணும் சாமி
வாழ்த்தினாள்.
பொண்டாட்டியே இனிமேல்தான் வரப் போறா
என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு, அச்சகத்தினுள் நுழைந்த திருநாவுக்கரசை, வாங்க மாப்ள... வாங்க
என்று வரவேற்றார் அச்சக உரிமையாளர் கண்ணன். அசப்பில் நடிகர் எஸ்.வி.சேகரைப் போலிருந்தவரின் பேச்சிலும் அதே நக்கல், கிண்டல்.
இன்விடேஷன் ரெடியாயிடுச்சு
ன்னு அப்பா சொன்னார்" பார்வையால் அந்த அச்சகத்தை நோட்டமிட்டவாறே சொன்னான் திருநாவுக்கரசு.
அதோ பண்டல் கட்டித் தயாரா வெச்சிருக்கேன் பாருங்கோ
என்று சொல்லி ஒரு பண்டலைக் காட்டியவர், தானே எழுந்து போய் அதை எடுத்து வந்து திருநாவுக்கரசிடம் தந்தார்.
புதுக் காகித மணம் அவனுக்குப் பிடித்திருந்தது. பண்டலின் மேல் பகுதியில், கயிற்றுக்குக் கீழே செருகப்பட்டிருந்த சாம்பிள் இன்விடேஷனை திருநாவுக்கரசு எடுக்க, பிரிச்சுப் பாருங்க தம்பி
என்றார் பிரஸ்காரர்.